ஆசானிடமிருந்து

அன்புள்ள ராஜேஷ்

இப்போது உணர்ச்சிவசப்பட்டு நீதி எங்கே என்பவர்கள் தினகரன் வழக்கோ, தா கிருஷ்ணன் கொலை வழக்கோ என்னாயிற்று என்று கேட்கமாட்டார்கள். சன் டிவி மீது வழக்குப்பதியவே ஏன் இத்தனை நாட்களாயிற்று என்று கேட்கமாட்டார்கள். இப்போது நீதி வென்றது என்பவர்கள் நாளை திமுக காரர்கள் விடுதலைசெய்யப்படும்போது நீதி தேவதை அருள்புரிந்தாள் என்பார்கள். கட்சிசார்பான உணர்ச்சிக்கொந்தளிப்புகளுக்கு உண்மையில் ஒரு பொருளும் இல்லை. அதற்கு அப்பால் சென்று யோசிப்பதே ஒரு சமநிலையை அளிக்கும் .ஆகவேதான் நான் குன்ஹா தீர்ப்பிலும் ஒன்றும் சொல்லவில்லை

இந்தியாவில் மக்கள் கவனிக்கும் எந்த ஒரு வழக்கிலும் கீழ்நீதிமன்றம் வழக்கத்தை மீறியே கடும் தண்டனை அளிக்கும். உயர்நீதிமன்றம் விடுதலைசெய்யும். எல்லா வழக்கிலும். ஒரு வழக்குகூட விதிவிலக்கு இல்லை. இந்திராகாந்தி முதல் ஜெயலலிதா வரை

ஜெ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.