சிம்ம சொப்பனம் – மருதன்

மருதன் அவர்களால் எழுதப்பெற்ற புத்தகம். கியூபாவினுடைய‌ பிதாமகரான பிடல் காஸ்ட்ரோவினுடய வாழ்க்கை வரலாறு. கியூபா எதற்காக அமெரிக்காவிற்கு முக்கியமான ஒரு நாடு. இன்றுவரை அமெரிக்காவினால் கபளீகரம் செய்யப்படாமல் இந்த தேசம் இருப்பதற்கான காரணங்கள் என்னென்ன‌ என பலவற்றை இப்புத்தகம் விவரிக்கிறது.

புத்தகம் பிடல் காஸ்ட்ரோவினுடைய தந்தையின் காலத்தில் இருந்து தொடங்கி இன்றைய பிடல் காஸ்ட்ரோ வரை வருகிறது. ஸ்பெயினினுடைய ஆதிக்கம், பின்னர் ஸ்பெயினின் ஆதிக்கம் தளர்ந்து அமெரிக்காவின் கை ஓங்குதல் என பல்வேறு காலகட்டங்களையும், அதனுள் எவ்வாறு பிடல் காஸ்ட்ரோ இழுக்கப்பட்டார், எதற்காக ஒரு மிகப்பெரும் நிலச்சுவான் தாரருடைய மகன் தன் வசதிகளை ஒதுக்கி விட்டு மக்களுடைய சுதந்திரத்திற்காக போராடினார் எனப் பலவற்றை விவரிக்கிறது இப்புத்தகம் . கியூபாவைப்பற்றியும், பிடல் காஸ்ட்ரோவைப் பற்றியும் ஒர் ஆரம்ப நிலைப் புரிதல் கொள்ள இந்த புத்தகத்தினை வாசிக்கலாம்.

2 thoughts on “சிம்ம சொப்பனம் – மருதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.