பேரும் புகழும் – எசு.எசு.அருணகிரிநாதர்

perum_puhalumஎசு.எசு.அருணகிரி நாதர் என்பவரால் 2007 ல் எழுதப்பெற்ற அறிவுரை நூல். பெரும்பாலும் வெளிப்படையான அறிவுரைகளின் தொகுப்பு. ஆசிரியரைப்பற்றி எனக்கு தெரியவில்லை. ஆனால் தன்னுடைய வயதான காலகட்டத்தில் எழுதியிருப்பதாகவே நூல் அமைப்பு உள்ளது. பொறாமை, அன்பு,காமம் போன்ற பல்வேறு தலைப்புகளில் மனிதர்களுக்கு அறிவுறை கூறுகின்றார். பெரும்பாலான அறிவுரைகளில் ஓ மனிதனே! என ஒட்டுமொத்த மனிதகுலம் நோக்கி தன்னுடைய அனுபவத்தை அறிவுரையாகத் தருகிறார். இதனை நாம் வயது முதிர்ந்த பல்வேறு பெரியவர்களிடம் கேட்கலாம். அப்பெரியவர்களின் சொற்கள் நூலாகியிருக்கிறது. ஒட்டுமொத்தமும் வெளிப்படையான ஒற்றைப்படை அறிவுரை நூல் என்பதனால் சிறுவர்களுக்கு ஆரம்பகால ஒழுக்கத்தினை வளர்க்கும் பொருட்டு வாசிக்கத் தரலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.