முதல்வருக்கு ஒரு கடிதம்

மதிப்பிற்குறிய தமிழக முதல்வர் அவர்களுக்கு

இவன் புதிய தொழில்நுட்பங்களையும், மென்பொருட்களையும் கற்றுக்கொள்ள விழையும் தமிழன். தமிழின்பால் கொண்ட அன்பால் தன்னால் முடிந்தவரை தொழில்நுட்ப நூல்களையும், மென்பொருள்களையும் தமிழில் மொழி மாற்றம் செய்ய விழைபவன்.

சிங்கப்பூரிலும் சரி, உலகின் மற்ற நாடுகளிலும் சரி மிகப்பெரிய நிறுவனங்கள் அனைத்திலும் தமிழர்கள் இருக்கிறார்கள் என்பது தாங்கள் அறிந்ததே. அதோடு உலகம் சுருங்கி வருவதன் விளைவாக இன்று அனைத்து தொழில்நுட்பங்களும், மென்பொருள்களும் அனைத்து மொழிகளையும் தாங்கி வருகின்றன.

உதாரணமாக IBM போன்ற பெரிய நிறுவனங்கள் வெளியிடக்கூடிய அனைத்து மென்பொருட்களிலும் (Software,Servers, Operating Systems, Middle ware Technologies, VMWare, etc) பன்மொழி அமைப்பு உள்ளது (Multilanguage Support). அதனால் ஆங்கிலம் தெரியாத ஒரு சீனர் அவருடைய தாய்மொழியான சீனத்தில் அந்த தொழில் நுட்பத்தை அறிந்து கொள்ள முடிகிறது. காரணம் அந்த மென்பொருளில் சீனமொழியும் நிறுவப்பட்டிருக்கிறது. இதேபோல பல மொழிகளோடு தற்போது மென்பொருட்கள் வெளிவருகின்றன.

ஆனால் அந்த மொழிகளில் தமிழ் இல்லை. அதற்கு பெரிய நிறுவனங்கள் கூறும் காரணம் தமிழுக்கென்று முறையான அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த எழுத்து முறை இல்லை என்பதுதான். அதனால் தமிழைத் தவிர்க்கிறார்கள்.

அவர்கள் கூறுவதும் உண்மையே. நான் கற்ற தொழில்நுட்ப நூல்களைத் தமிழில் மொழி பெயர்க்கும் போது நான் பட்ட சிரமங்களும் அதுவே. ஒரிடத்தில் தமிழில் எழுதி விட்டு, மற்றோர் இடத்தில Copy , Paste செய்தால் கட்டம், கட்டமாகத் தெரியும். காரணம் அங்கே பின்பற்றப்படும் தமிழ் எழுத்து முறை வேறு, இங்கே  பின்பற்றப்படும் தமிழ் எழுத்து முறை வேறு.

ஆனால் ஆங்கிலத்தில் அப்படி இல்லை. எங்கு எழுதினாலும், Cut,Copy, Paste செய்தாலும் ஒரே மாதிரிதான் இருக்கும். அது மட்டுமில்லாமல் ஆங்கிலத்தில் எழுத்துக்களை எளிதாக விதவிதமாக மாற்றிக்கொள்ளலாம்.ஆனால் தமிழில் நாம் எந்த அந்த எழுத்து முறையைப் பின்பற்றுகிறோமோ அதே எழுத்து முறைக்கான எழுத்துக்களை மட்டுமே உபயோகப்படுத்த‌ இயலும். இருப்பினும் காலத்தேவையின் காரணமாக சில இணையதளங்கள்  தமிழைப் பின்பற்றுகின்றன. உதாரணம் தமிழ் செய்தித் தளங்கள், விக்கீபீடியா.

ஒரு சில மென்பொருட்கள் வாயிலாகத் தமிழ் எழுத்துக்களை அழகு படுத்த இயலும் என்றாலும் கூட அவற்றை ஆங்கில எழுத்துக்களைப் போல எளிதில் மாற்ற இயலவில்லை.

கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் போது கணினித்தமிழுக்கான ஒருங்கிணைந்த எழுத்து முறை உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டதும் உளமார மகிழ்ந்த தமிழன் நான்.ஆனால் நான் அறிந்த வரையில் அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

நம் தமிழை வெறும் பேச்சு மொழியாக மட்டுமே அல்லாமல் அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்ல இணையத்திலும், தொழில்நுட்பத்திலும் தமிழின் பங்கை உறுதி செய்ய வேண்டியது நம் கடமை. சமீபத்தில் கூகுள் வெளியிட்ட மொழி உள்ளீட்டுக் கருவியிலும்கூட தமிழுக்கு ஆறு வகையான எழுத்து முறைகள் தரப்பட்டுள்ளன். ஒரே எழுத்துக்கு ஆறு விதமான உள்ளீட்டு முறைகள். தமிழைத் தவிர்க்க இயலாத‌தால் அனைத்து உள்ளீட்டு முறைகளையும் குறிப்பிட்டுள்ளனர்.

ஆக நாம் தங்களிடம் வேண்டுவது யாதெனில், கணினித் தமிழிற்கான ஒருங்கிணைந்த எழுத்து முறை தமிழக அரசால் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருந்தால் அதனை அனைவரும் அறியும் வண்ணம் வெளியிடவும், அவ்வாறு இல்லையெனில் ஒருங்கிணைந்த தமிழ் எழுத்து முறையை உருவாக்கவும் ஆவண செய்யுங்கள் என்பதே.

நன்றி.

Similar Posts

  • ஜெயமோகன் அவர்களுக்கு

    மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு மகிழ்நன், சிங்கப்பூரிலிருந்து. சமூகம், கலாச்சாரம், தனி நபர் செயல்பாடுகள் போன்றவற்றின் மீதான தத்தம் கேள்விகளுக்கு உங்களின் பதிலில் விடை தேடும் வாசகர்களில் ஒருவனுடைய கேள்வியல்ல இது? உங்களைப் பற்றிய, உங்கள் பதிவுகளைப் பற்றிய கேள்வி, உங்களிடமே. எங்கோ எதையோ தேடி உங்கள் வலையை அடைந்தவர்களில் நானும் ஒருவன். சமீபகாலத்தில் நான் வசித்த வரையில் உங்களுடைய பதிவுகளிலும், பதில்களிலும் பல இடங்களில் யார் மீதாவது நீங்கள் கண்டனத்தையோ, வருத்தத்தையோ பதிவு செய்வதை உணர்கிறேன். உதாரணம்,…

  • நாம் சுரண்டப்படுகிறோம்

    சமீபத்தில் இந்த காணொளியை இணையத்தில் காண நேரிட்டது. அதிலிருந்து மீண்டும் நாம் தாரளமயமாக்கல், உலகமயமாக்கல் என்ற நவீன சித்தாந்தங்களின் வழியே சுரண்டப்படுகிறோம் என்ற எண்ணம் மேலும் வலுப்படுகிறது. காணொளி இங்கே.

  • நுகர்வு எனும் நோய்

    இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் குறித்த சுதந்திரத்திற்கு முந்தைய பிந்தைய நிகழ்வுகள், வனத்தைக் காத்தல் என்ற பெயரில் காட்டுவாசிகளை விரட்டி காட்டை வணிக நோக்கில் பயன்படுத்திய‌ செயல்பாடுகள்,அமெரிக்க வாழ்வினை போல வாழ முயலும் நம்முடைய நுகர்வு என‌ ஒட்டுமொத்த சூழலியல் பார்வையே how much a person should consume?. ராமச்சந்திர குஹா அவர்களால் ஆங்கிலத்தில்ல் எழுதப்பெற்ற‌ இந்நூல் தமிழில் போப்பு அவர்களால் நுகர்வெனும் பெரும்பசி எனும் பெய‌ரில் வெளிவந்துள்ளது.  தனிமனிதன் செய்யும் மனித குல அழிவிற்கான செயல்…

  • ராமரும் பாபரும்

    திசம்பர் 6, 1992. அயோத்தியிலிருந்த பாபர் மசூதி முற்றிலுமாக இடித்துத் தள்ளப்பட்ட நாள். 20 ஆண்டுகள் முழுமையாக முடிந்து விட்டது. அலகாபாத் உயர்நீதிமன்றமும் தனது இறுதித்தீர்ப்பை அறிவித்து விட்டது. (அதனை இரு தரப்பினரும் ஏற்கவில்லை என்பது வேறு.) இந்நிலையில் எஸ். சொக்கனால் தொகுக்கப்பட்டு இரண்டாம் பாகமாக வெளிவந்துள்ள நூல் அயோத்தி. முதல் பதிப்பில் பெற்ற வரவேற்பின் காரணமாக, இறுதித் தீர்ப்பு விவரங்களோடு, மேலும் பல விவரங்களையும் இணைத்து வெளிவந்துள்ள நூல்.  முதன் முதலாக பாபர் ஆப்கனிலிருந்து வந்து…

  • அதிக பணம் அச்சடித்தால் என்ன?

    பொருளாதாரம் பற்றி அறியத்துவங்கிய காலத்தின் ஆரம்பகாலக் கேள்விகளுள் ஒன்று. இந்தக் கேள்வியோடிருப்பவர் நீங்களென்றால் உங்களுக்கே இந்தப் பதிவு. இந்தியாவின் கடன் தொகை பல லட்சம் கோடிகளில். ரூபாய் மதிப்பு சரிவு. இதைச் சரிசெய்ய அதிக பணம் அச்சடித்தால் என்ன? அடிப்படைக்கேள்வி. அடிக்கலாம். என்ன நடக்கும்? அரசாங்கம் அதிக பணம் அச்சடிக்கும். அதை புழக்கத்தில் விடும். புழக்கத்தில் விட வேண்டுமென்றால் அரசு திட்டங்களுக்காக செலவிடலாம், அரசு ஊழியர்களுக்கு சம்பளமாக தரலாம் அல்லது மக்களுக்கு  மணியார்டர் செய்யலாம். எப்படியோ மக்களிடம்…

  • தேசியக்கட்சிகள் ஏன் மாநிலத்தை ஆளக்கூடாது?

    முந்தைய ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் முதலாவது ஆட்சிக்காலத்தின் இறுதியிலும், இரண்டாவது ஆட்சிக்காலத்தின் தொடக்கத்திலும் அப்போதைய அரசியல் தலைவர்களால் முன்வைக்கப்பட்ட ஒரு முக்கிய தகவல் கூட்டணி ஆட்சியாக இருப்பதனால் தங்களால் பல்வேறு மாற்றங்களை கொண்டுவரமுடியவில்லை என்பது. 2009 ல் நடைபெற்ற‌ தேர்தலில் 206 இடங்களில் காங்கிரஸ் பெரும்பான்மையைவிட 66 இடங்கள் குறைவாக வென்றிருந்தது. தாங்கள் பெரும்பான்மை பெறாத காரணத்தால் தன்னிச்சையாக எந்த ஒரு பெரிய முடிவையும் எடுக்க முடியவில்லை என‌ மன்மோகன் சிங்கே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.