முதல்வருக்கு ஒரு கடிதம்

மதிப்பிற்குறிய தமிழக முதல்வர் அவர்களுக்கு

இவன் புதிய தொழில்நுட்பங்களையும், மென்பொருட்களையும் கற்றுக்கொள்ள விழையும் தமிழன். தமிழின்பால் கொண்ட அன்பால் தன்னால் முடிந்தவரை தொழில்நுட்ப நூல்களையும், மென்பொருள்களையும் தமிழில் மொழி மாற்றம் செய்ய விழைபவன்.

சிங்கப்பூரிலும் சரி, உலகின் மற்ற நாடுகளிலும் சரி மிகப்பெரிய நிறுவனங்கள் அனைத்திலும் தமிழர்கள் இருக்கிறார்கள் என்பது தாங்கள் அறிந்ததே. அதோடு உலகம் சுருங்கி வருவதன் விளைவாக இன்று அனைத்து தொழில்நுட்பங்களும், மென்பொருள்களும் அனைத்து மொழிகளையும் தாங்கி வருகின்றன.

உதாரணமாக IBM போன்ற பெரிய நிறுவனங்கள் வெளியிடக்கூடிய அனைத்து மென்பொருட்களிலும் (Software,Servers, Operating Systems, Middle ware Technologies, VMWare, etc) பன்மொழி அமைப்பு உள்ளது (Multilanguage Support). அதனால் ஆங்கிலம் தெரியாத ஒரு சீனர் அவருடைய தாய்மொழியான சீனத்தில் அந்த தொழில் நுட்பத்தை அறிந்து கொள்ள முடிகிறது. காரணம் அந்த மென்பொருளில் சீனமொழியும் நிறுவப்பட்டிருக்கிறது. இதேபோல பல மொழிகளோடு தற்போது மென்பொருட்கள் வெளிவருகின்றன.

ஆனால் அந்த மொழிகளில் தமிழ் இல்லை. அதற்கு பெரிய நிறுவனங்கள் கூறும் காரணம் தமிழுக்கென்று முறையான அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த எழுத்து முறை இல்லை என்பதுதான். அதனால் தமிழைத் தவிர்க்கிறார்கள்.

அவர்கள் கூறுவதும் உண்மையே. நான் கற்ற தொழில்நுட்ப நூல்களைத் தமிழில் மொழி பெயர்க்கும் போது நான் பட்ட சிரமங்களும் அதுவே. ஒரிடத்தில் தமிழில் எழுதி விட்டு, மற்றோர் இடத்தில Copy , Paste செய்தால் கட்டம், கட்டமாகத் தெரியும். காரணம் அங்கே பின்பற்றப்படும் தமிழ் எழுத்து முறை வேறு, இங்கே  பின்பற்றப்படும் தமிழ் எழுத்து முறை வேறு.

ஆனால் ஆங்கிலத்தில் அப்படி இல்லை. எங்கு எழுதினாலும், Cut,Copy, Paste செய்தாலும் ஒரே மாதிரிதான் இருக்கும். அது மட்டுமில்லாமல் ஆங்கிலத்தில் எழுத்துக்களை எளிதாக விதவிதமாக மாற்றிக்கொள்ளலாம்.ஆனால் தமிழில் நாம் எந்த அந்த எழுத்து முறையைப் பின்பற்றுகிறோமோ அதே எழுத்து முறைக்கான எழுத்துக்களை மட்டுமே உபயோகப்படுத்த‌ இயலும். இருப்பினும் காலத்தேவையின் காரணமாக சில இணையதளங்கள்  தமிழைப் பின்பற்றுகின்றன. உதாரணம் தமிழ் செய்தித் தளங்கள், விக்கீபீடியா.

ஒரு சில மென்பொருட்கள் வாயிலாகத் தமிழ் எழுத்துக்களை அழகு படுத்த இயலும் என்றாலும் கூட அவற்றை ஆங்கில எழுத்துக்களைப் போல எளிதில் மாற்ற இயலவில்லை.

கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் போது கணினித்தமிழுக்கான ஒருங்கிணைந்த எழுத்து முறை உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டதும் உளமார மகிழ்ந்த தமிழன் நான்.ஆனால் நான் அறிந்த வரையில் அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

நம் தமிழை வெறும் பேச்சு மொழியாக மட்டுமே அல்லாமல் அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்ல இணையத்திலும், தொழில்நுட்பத்திலும் தமிழின் பங்கை உறுதி செய்ய வேண்டியது நம் கடமை. சமீபத்தில் கூகுள் வெளியிட்ட மொழி உள்ளீட்டுக் கருவியிலும்கூட தமிழுக்கு ஆறு வகையான எழுத்து முறைகள் தரப்பட்டுள்ளன். ஒரே எழுத்துக்கு ஆறு விதமான உள்ளீட்டு முறைகள். தமிழைத் தவிர்க்க இயலாத‌தால் அனைத்து உள்ளீட்டு முறைகளையும் குறிப்பிட்டுள்ளனர்.

ஆக நாம் தங்களிடம் வேண்டுவது யாதெனில், கணினித் தமிழிற்கான ஒருங்கிணைந்த எழுத்து முறை தமிழக அரசால் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருந்தால் அதனை அனைவரும் அறியும் வண்ணம் வெளியிடவும், அவ்வாறு இல்லையெனில் ஒருங்கிணைந்த தமிழ் எழுத்து முறையை உருவாக்கவும் ஆவண செய்யுங்கள் என்பதே.

நன்றி.

Similar Posts

  • உலகாளும் ஒரு மொழி

    உலகமெங்கும் மக்களால் ஒரே மொழிதான் பேசப்படப்போகிறது, எழுதப்படப்போகிறது. இதனைச் சிலர் மறுத்தும் சிலர் ஏற்றும் பேசலாம். ஆனால் அதுதான் நடைபெறுகிறது. எந்த ஒரு மொழியும் அதன் வாழும் காலத்தை அதன் மாற்றங்களைக் கொண்டே நிர்ணயம் செய்து கொள்கிறது. காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டே, புதுப்பித்துக்கொண்டே வரக்கூடிய மொழிகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன,எஞ்சியிருக்கும். இன்றைய நிலையில் உலகம் முழுவது ஏறத்தாழ 7000 மொழிகள் பேசப்படுகின்றன. ஆனால் அவற்றுள் உலக மக்கள் தொகையில் ஒரு விழுக்காட்டுக்கு மேற்பட்ட மக்களால் பேசப்படும் மொழிகள் 20…

  • அந்நிய நேரடி முதலீடு என்ன செய்யும்?

    சில்லறை வர்த்தக அந்நிய நேரடி முதலீடு என்ன செய்யும்? இந்தியச் சந்தையில் அந்நிய முதலீட்டிற்கான பல்வேறு விதிகளையும், உச்ச வரம்பையும் மத்திய அரசு தளர்த்தியிருக்கின்றது. அதில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு அனைத்து மாநில ஒப்புதலோடுதான் நிறைவேற்றப்படும் என மத்திய அரசு அறிவித்து அதன் காரணமாக எழுந்த கொந்தளிப்புகளை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டது. இது தற்காலிகம்தான்.  விரைவில் அரசு அதையும் அறிவிக்கும். அந்நிய முதலீட்டாளர்கள் சில்லறை வணிகத்தில் முதலீடு செய்வதால் நன்மை என்ன? தீமை என்ன? இந்தியாவில்…

  • கழுதையும் உருளைக்கிழங்கும்

    ஒரு சமயம் பெர்னாட்ஷா ஒரு தட்டு நிறைய அவித்த உருளைக்கிழங்குகளை வைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.அப்போது அவருடைய நண்பர் ஒருவர் அவரைப் பார்க்க வந்தார். பெர்னாட்ஷா அவரை வரவேற்று “வாருங்கள்! உருளைக்கிழங்கு சாப்பிடுங்கள்” என்றார்.அதற்கு நண்பர் “உருளைக்கிழங்குகளா? நோ! நோ! எனக்கு அறவே பிடிக்காது. அதை எப்படித்தான் ரசித்து ருசித்து சாப்பிடுகிறீர்களோ தெரியவில்லை?” என்றார். பெர்னாட்ஷா சிரித்தபடி ஒரு உருளைக்கிழங்கை எடுத்தார். அப்போது அது தவறி கீழே விழுந்து தோட்டத்தின் பக்கம் உருண்டு ஓடியது.அப்போது அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஓர்…

  • காந்தியும் காமமும்

    மகாத்மா காந்தி குறித்த பொதுவான பல தவறான‌ அபிப்ராயங்கள் நம்மில் பலருக்கு உண்டு. குறிப்பாக அவரது ஒழுக்கம் மற்றும் பெண்கள் தொடர்பான செயல்பாடுகள். அவற்றைப்பற்றி முழுமையான ஆய்வுகளோ, புரிதலோ இல்லாமல் அங்கொன்றும், இங்கொன்றுமாக நாம் கேட்ட, கண்ட, படித்த தகவல்களின் கழிவே அது. காந்தியின் காமம் குறித்த அணுகுமுறைகள் தொடர்பாக எழுத்தாளர் ஜெயமோகனின் கட்டுரைகள், தெளிவானதொரு புரிதலுக்கு தொடக்கமாக‌ இருக்குமென கருதுகிறேன். காந்தியும் காமமும் 1 காந்தியும் காமமும் 2 காந்தியும் காமமும் 3 காந்தியும் காமமும்…

  • | |

    பேரும் புகழும் – எசு.எசு.அருணகிரிநாதர்

    எசு.எசு.அருணகிரி நாதர் என்பவரால் 2007 ல் எழுதப்பெற்ற அறிவுரை நூல். பெரும்பாலும் வெளிப்படையான அறிவுரைகளின் தொகுப்பு. ஆசிரியரைப்பற்றி எனக்கு தெரியவில்லை. ஆனால் தன்னுடைய வயதான காலகட்டத்தில் எழுதியிருப்பதாகவே நூல் அமைப்பு உள்ளது. பொறாமை, அன்பு,காமம் போன்ற பல்வேறு தலைப்புகளில் மனிதர்களுக்கு அறிவுறை கூறுகின்றார். பெரும்பாலான அறிவுரைகளில் ஓ மனிதனே! என ஒட்டுமொத்த மனிதகுலம் நோக்கி தன்னுடைய அனுபவத்தை அறிவுரையாகத் தருகிறார். இதனை நாம் வயது முதிர்ந்த பல்வேறு பெரியவர்களிடம் கேட்கலாம். அப்பெரியவர்களின் சொற்கள் நூலாகியிருக்கிறது. ஒட்டுமொத்தமும் வெளிப்படையான…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.