| |

இந்திய சினிமா 100

இந்திய சினிமா தனது நூறாவது ஆண்டைக் கொண்டாடிவிட்டது. விழாவும் எடுத்தாயிற்று. இந்த நூறாண்டுகளில் இந்திய சினிமா இந்திய சமூகத்திற்காக செய்தவை என்று எண்ணினால் ஏமாற்றமே. சினிமா தொடர்பான துறையில் இருப்பவர்கள் வேண்டுமானால் சினிமாவைப் பற்றிப் புள்ளிவிபரங்களை அடுக்கி அதனை நியாயப்படுத்த முயன்றாலும் அவர்களுக்கே தெரியும் உண்மை எதுவென்று. அவர்களுக்கு வேறு வழியில்லை. சினிமாவில் உள்ளவர்கள் தங்களைத் தாங்களே உயரத்தூக்கிக் கொள்வார்கள். அதற்கென்றே உள்ளது இன்றைய ஊடகத்துறை.

இயல் இசை நாடகத்தின் பரிணாம வளர்ச்சியாக வந்த சினிமா ஆரம்பகாலங்களில் நாடகத்தினைப் போலவே செயல்பட்டு, ஒரு சராசரிக் குடிமகனை உன்னத நிலை நோக்கி நகர்த்தும் பணியை செய்தது. ஒரு நிலையில் கேளிக்கைக்காக சேர்க்கப்பட்ட ஒரு துணுக்கு மிகப்பெரிய வணிக வெற்றியடைய அன்று முதல் இன்று வரை அந்த துணுக்குகளாலேயே படம் நிறைக்கப்படுகிறது. விதி விலக்குகள் உண்டு என்றாலும் சினிமா சீரழித்த அளவுடன் ஒப்பிடும் பொழுது அதனை புறக்கணித்துவிடலாம்.

இன்றைய சினிமாவிற்கு லட்சியமெல்லாம் எதுவும் கிடையாது. அதிகம் பேருக்கு ஒரு நடிகையின் தொடையைப் பார்க்க பிடிக்கிறதென்றால் எந்த இயக்குநர் முதலில் அந்த நடிகையின் தொடையைக் காட்டுகின்ற காட்சியை வைக்கிறானோ அவனுக்கு வசூல். அவ்வளவுதான். இங்கே எந்த தர்மமும் தேவையில்லை.

சாதனையாளர்களைக் காட்டிய சினிமா பின்னர் சாமானியனைக் காட்டுகின்றேன் என்ற பெயரில் ஒரு சாமானியன் செய்யும் அனைத்து செயல்களுக்கும் நியாயம் கற்பிக்கத் தொடங்கியது. அதன் விளைவாக அனைவரும் தன் செயல்களுக்கு நியாயம் கற்பிக்கத் தொடங்கினர். சினிமா மோகம் உண்டாயிற்று. கதாநாயகர்களைக் கொண்டாடத் தொடங்கினார்கள். ஆரம்பகாலத்தில் வில்லனின் கெட்டெண்ணத்தை காட்டுவதற்காக வைக்கப்பட்ட குத்துப்பாடல்கள், கவர்ச்சி காட்சிகள் நாளடைவில் கட்டாயமாக்கப்பட்டது. படத்தின் மையக் கதாபாத்திரமே குத்துபாடல்களிலும், நீச்சல் காட்சிகளும் கதாநாயகியோடு கட்டிப் புரண்டார்கள்.

அப்பா அன்று சிலுக்கைப் பார்த்தார். பையன் இன்று மும்தாஜைப் பார்க்கிறான். அவ்வளவுதான் வித்தியாசம்.

அது மட்டுமில்லாமல் நடிகைகளை வட இந்தியா, மற்ற நாடுகள் எனக்  கொண்டுவந்து தமிழ் நாட்டில் இருக்கும் கருப்பான பெண்கள் எல்லோரும் அழகற்றவர்கள் என்ற எண்ணத்தினை இயல்பாகவே அனைவர் மனதிலும் பதியவைத்து விட்டார்கள். 75 விழுக்காட்டிற்குமேல் கருப்பு நிறம் உள்ளவர்கள் வாழுமிடத்தில் அனைத்து இளைஞர்களும் சிவப்பு நிற பெண்ணை விரும்புகின்ற அவலம் இங்கு மட்டுமே.

சினிமா கலை என்கிற‌ காலம் மலையேறிவிட்டது. இன்றைய சினிமா என்பது முற்றிலும் வணிகம் மட்டுமே. இதில் பணம் வருமென்றால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். எவருக்கும் எந்த அக்கறையும் கிடையாது. வேண்டுமானால் இன்றே சென்சார் போர்டை நீக்கிவிட்டு அனைவரும் தத்தம் மனசாட்சிப்படி திரைப்படம் எடுத்து வெளியிடலாம் என்று அறிவிக்கட்டும் பாருங்கள். பத்தே வருடங்களில் அனைத்து தமிழ் சினிமாவுமே பார்ன் சினிமாவாய் மாறியிருக்கும்.

Similar Posts

  • |

    रंग दे बसंती

    நான் இந்த வாரம் ரங்க் தே பசந்தி என்ற இந்தி திரைப்படத்தினைப் பார்த்தேன். 2006 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இயக்கம் ராகேஷ் ஒம்பிரகாஷ் மெஹ்ரா. லண்டனில் திரைப்படக் கல்லூரியில் படிக்கும் சூ மெக்கின்லி தன்னுடைய தாத்தாவினுடைய டைரி ஒன்றைக் கண்டுபிடிக்கிறாள். அவளுடையா தாத்தா 1930களில் இந்தியாவில் பிரிட்டீஸ் ஆட்சிக்காலத்தில் கர்னல் ஆக இருந்தவர். அவர் அந்த டைரியில் மூன்று இந்தியப்போராட்ட வீரர்களின் கைது மற்றும் அவர்களுடைய மரணதண்டனை பற்றியும், அவர்களுடைய மன உறுதியைப்பற்றியும் எழுதியிருக்கிறார். அதனால்…

  • ஆசானிடமிருந்து

    அன்புள்ள ராஜேஷ் இப்போது உணர்ச்சிவசப்பட்டு நீதி எங்கே என்பவர்கள் தினகரன் வழக்கோ, தா கிருஷ்ணன் கொலை வழக்கோ என்னாயிற்று என்று கேட்கமாட்டார்கள். சன் டிவி மீது வழக்குப்பதியவே ஏன் இத்தனை நாட்களாயிற்று என்று கேட்கமாட்டார்கள். இப்போது நீதி வென்றது என்பவர்கள் நாளை திமுக காரர்கள் விடுதலைசெய்யப்படும்போது நீதி தேவதை அருள்புரிந்தாள் என்பார்கள். கட்சிசார்பான உணர்ச்சிக்கொந்தளிப்புகளுக்கு உண்மையில் ஒரு பொருளும் இல்லை. அதற்கு அப்பால் சென்று யோசிப்பதே ஒரு சமநிலையை அளிக்கும் .ஆகவேதான் நான் குன்ஹா தீர்ப்பிலும் ஒன்றும்…

  • |

    அர்த்தமுள்ள இந்து மதம் – கண்ணதாசன்

    கண்ணதாசன் அவர்களால் எழுதப்பெற்ற பத்து தனித்தனி பாகங்களின் மொத்த தொகுப்பு. தன் அனுபவத்தினைக் கொண்டு அதன் மூலம் இந்து மதத்தினை மனித வாழ்வின் செயல்களுக்கும், விளைவுகளுக்கும் விளக்கம் தருகிறார். ஒருவேளை இப்புத்தகத்தினை ஆரம்ப கால வாசகர்களும், ஆன்மீக வாசகர்களும் பெரிதும் விரும்பலாம். ஆனால் தீவிர இலக்கிய வாசிப்புக் கொண்டவர்கள் சலிப்படையவைக்கும் தட்டையான எழுத்து. சாதரணமாக வயதில் மூத்தவர்கள் கூறும் அறிவுரைகளின் தொகுப்பு எனக்கூறலாம், மற்றபடி இது இந்து மதத்தினை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும் என்றெல்லாம் கிடையாது….

  • |

    உப்பு வேலி – ராய் மாக்சிம் (தமிழில் சிறில் அலெக்ஸ்)

    இந்தியாவின் குறுக்கே உப்பின்மீது சுங்கம் வசூலிப்பதற்காக ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட வேலியைப் பற்றி அறிந்துகொள்ளும் ஓர் ஆய்வாளர் அதனைத் தேடி தன்னுடைய பயணத்தை தொடங்குகிறார். ஆரம்ப ஆண்டுகளில் கண்டறிய முடியாமல் தன்னுடைய மூன்றாவது பயணத்தின் போது அதனைக் கண்டடைகிறார். அவருடைய அந்த ஒட்டு மொத்த பயணமும், அந்த வேலிக்குப் பின்னர் இருந்த ஆங்கிலேய வரலாற்று நிகழ்வுகளுமே இந்த உப்பு வேலி. இது ஓர் வரலாற்று நிகழ்வினை ஆவணப்படுத்தும் நாவல். கண்டிப்பாக இது வரை இது பற்றிய நாவலோ, ஆவணமோ…

  • |

    கன்னி நிலம் – ஜெயமோகன்

    ஜெயமோகன் அவர்களால் எழுதப்பட்டது. மணிப்பூர் மாநில எல்லைப்பகுதியில் பணியாற்றும் ராணுவ அதிகாரி நெல்லையப்பனின் கதை, ஜெயமோகனுக்கே உரிய சொல்லாடல்களுடன். நெல்லையப்பன் மணிப்பூர் எல்லையில் பணியாற்றும் ராணுவத் தலைமை அதிகாரி. அவர்கள் ஒருநாள் தங்களுடைய வழக்கமான பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுது காட்டுப்பகுதியில் ஒரு போராளிப்பெண்ணை கைது செய்கிறார்கள். அப்பெண்ணை கைது செய்து ராணுவ முகாமுக்கு கொண்டு வரும் வழியில் போராளிக்குழுக்களின் தாக்குதலுக்கு ஆளாகி, அவர்களில் சிலர் இறந்து விடுகின்றனர். இன்னும் சிலர் அவர்களிடம் கைதியாக மாட்டிக்கொள்கின்றனர். மீதமுள்ளவர்கள் ராணுவ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.