| |

ஆசானுக்கு

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு

இந்த‌க்கடிதத்தினை தங்களுக்கு இன்னும் சில நாட்கள் கழித்தே எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். இருப்பினும் முன்னரே எழுதினால் தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பதில் எழுதுவீர்கள் என்று நம்பியே இப்பொழுதே எழுதுகிறேன். முதலில் சந்திரசேகர் அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த வருத்தங்கள். எனக்கு அவரைப்பற்றி தெரியாது. தங்களின் மூலமே தெரியும். இருந்தாலும் சரியான தூக்கம் மிக அவசியம் என்ற ஒற்றை சொல் எனக்கு மிக முக்கியமானதாகப் பட்டது. சரியான அளவில் திட்டமிட்டு நாட்களை கடத்தும் எனக்கு கடந்த சில வாரங்களாக நான் திட்டமிட்டபடி தூக்கம் அமையவில்லை. அதனையே வழக்கமாக்கிக் கொள்ளலாம் என்ற நிலை வந்த தருணத்தில், அந்த வார்த்தை எனக்கு மிக முக்கியமான ஒன்று. ஒரு சிறிய திருப்பம். அது சிறியதே என்றாலும் சற்றே காலம் கடந்த பின்னர் இந்த விலக்கம் எத்துனை பெரிய மாற்றமாக இருக்குமென என்னால் உணரமுடிகிறது. அதற்கு நன்றி.

மற்றொன்று, நேற்று வெளியான தீர்ப்பு. நேற்று முழுவதும் சமூக வலைத்தளங்களில் இதனைப் பற்றியே பொங்கினார்கள். இருந்தாலும் இன்றைய அதிகார அடுக்கு நன்கு அறியும் இந்த ஃபேஸ்புக், ட்விட்டர் கும்பல் கடல் நுரை போல, பயங்கரமாக பொங்கும், ஆனால் ஒன்றும் இராது என. அவர்களும் இன்றும் நாளையும் இதனை வைத்து சில‌ ஒற்றை வரி கருத்துக்களை தெரிவித்து விட்டு அடுத்த செய்திக்கு போய்விடுவார்கள்.

ஆனால் என்னால் சற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதெப்படி இத்துனை விவரமாக நிருபிக்கப்பட்டும், அடுத்த தீர்ப்பில் முற்றிலுமாக இல்லையென்றாகி விட்டது? 100 லிருந்து 0. நம் தேசம் அத்தனை கீழ்த்தரமாக ஆகிவிட்டதா? அதிகாரமும் பணமும் உள்ளவர்களுக்கு சட்ட‌மென்பதே இல்லையா? அவர்கள் அதிலிருந்து விலக்கு பெற்றவர்களா? கண்டிப்பாக இந்த தீர்ப்புக்கு முன்னதாக நடைபெற்ற உள் வேலைகள் நமக்குத் தெரியாதுதான். இருந்தாலும் ஐந்து வருடத்தில் இரண்டு கோடியில் இருந்து 66 கோடியான சொத்து, எப்படி சேர்க்கப்பட்டிருக்கலாம் என்பதை சிறு குழந்தை கூட அறியுமே. என்னுடைய கேள்வியெல்லாம் நாங்கள் அப்படித்தான் தீர்ப்பு வழங்குவோம்? என்ன செய்ய முடியும் உங்களால் என்று இத்துனை வெளிப்படையாக நம் முகத்தில் காறி உமிழ்கிறார்களே? நம்மால் ஒன்றுமே செய்ய முடியாதா? என்ன செய்வது நாம்? எல்லாவற்றையும் மறந்துவிட்டு மீண்டும் ஊழல்வாதிகளுக்கே வாக்களீக்க வேண்டுமா? இது தொடர்பாக என்னால் யாரிடமும் விவாதிக்க முடியவில்லை. எல்லோரும் நேற்றைய இன்றைய செய்தித்தாள், சமூக ஊடக செய்திகளை மட்டுமே பேசுகிறார்கள். அதற்கு மேல் எதுவும் அவர்களால் பேச முடிவதில்லை. என் தேசத்தினைப் பற்றிய பெருமையே கொண்டிருந்த என் முகத்தில் இந்த தீர்ப்பு காறி உமிழ்கிறது. தங்கள் கருத்தினை அறியும் ஆர்வத்தில் இதை எழுதியிருக்கிறேன். நன்றி.

Similar Posts

  • | |

    தேர்வு முடிவுகள்

    பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் வெளிவந்திருக்கின்றன. இந்த வருடம் வழக்கத்தைவிட அதிகமாக தேர்ச்சி விகிதம், மதிப்பெண்கள் பெற்றுள்ளதை தேர்வு முடிவுகள் காட்டுகின்றன. அனைவரையும் வாழ்த்தும் அதே வேளையில் இந்த தேர்வு முடிவுகளின் உண்மை நிலையை நாம் விவாதிக்க வேண்டியுள்ளது. முதலாவது தமிழகத்தைப் பொறுத்த வரையில் தேர்ச்சி விழுக்காடு என்பதனை பெரும்பாலும் கடந்த ஆண்டின் தேர்ச்சி விழுக்காட்டிலிருந்து அதிகபட்சம் ஐந்து விழுக்காட்டிற்குள் அதிகமாகவோ குறைவாகவோ இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்கள். கடந்த ஆண்டுகளின் தேர்ச்சி விகிதத்தை…

  • இசையும் பாடலும்

    நம் மனநிலையை மாற்றும் சக்தி இசைக்கும் பாடலுக்கும் எப்போதுமே உண்டு. இசையும் பாடலும் ஆரம்ப காலம் தொட்டே நம்மோடு இணைந்து வருகிறது. முற்றிலும் படிப்பறிவில்லாத காலகட்டத்திலும் கூட நாட்டுப்புற பாடல்களை பாடியபடியே கிராம மக்கள் வேலை செய்ததை இலக்கியங்களில் காணலாம். இன்றும் சில கிராமங்களில் வேலை நேரங்களின் போது வேலையாட்கள் பாடுவதைக் கேட்கலாம். நன்கு உற்று கவனித்தால் அவர்கள் முதியவர்களாக இருப்பார்கள். ஆனால் இசை என்பது உயர்குடி மக்களுக்கு மட்டுமே என்ற நிலையை பிற்கால உயர்குடி மக்கள்…

  • கழுதையும் உருளைக்கிழங்கும்

    ஒரு சமயம் பெர்னாட்ஷா ஒரு தட்டு நிறைய அவித்த உருளைக்கிழங்குகளை வைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.அப்போது அவருடைய நண்பர் ஒருவர் அவரைப் பார்க்க வந்தார். பெர்னாட்ஷா அவரை வரவேற்று “வாருங்கள்! உருளைக்கிழங்கு சாப்பிடுங்கள்” என்றார்.அதற்கு நண்பர் “உருளைக்கிழங்குகளா? நோ! நோ! எனக்கு அறவே பிடிக்காது. அதை எப்படித்தான் ரசித்து ருசித்து சாப்பிடுகிறீர்களோ தெரியவில்லை?” என்றார். பெர்னாட்ஷா சிரித்தபடி ஒரு உருளைக்கிழங்கை எடுத்தார். அப்போது அது தவறி கீழே விழுந்து தோட்டத்தின் பக்கம் உருண்டு ஓடியது.அப்போது அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஓர்…

  • | | |

    முதல் உலகப்போர் மருதன்

    முதல் உலக‌ப்போர் (1914‍-1918). 1 கோடியே 70 லட்சம் பேர் மரணம்.2 கோடி பேர் காயம். இந்த உலகையே முதல் உலகப்போருக்கு முன் பின் என பிரிக்கும் அளவுக்கு உலக நாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்திய ஓர் போர். பீரங்கி, நச்சு வாயுக்கள் போன்ற உத்திகளைப் பயன்படுத்தி கொத்துக் கொத்தாக மனித உயிர்கள் பறிக்கப்பட்ட முதல் பெரும் போர். ஓரிரு நாட்களில் அல்ல‌து மாதங்களில் முடிந்துவிடும் என்ற எண்ணத்தில்தான் உலக‌ப்போர் தொடங்கியது. ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. 4 ஆண்டுகள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.