| |

லஜ்ஜா – அவமானம்

1993 ஆம் ஆண்டு வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் அவர்களால் எழுதப்பட்ட நாவல். 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு வங்கதேசத்தில் நடைபெற்ற கலவரங்களின் போது ஒரு இந்து குடும்பத்தின் நிலையே நாவல். அந்தக்குடும்ப நபர்கள் கற்பனை எனக் கூறப்பட்டிருந்தாலும் விவரிக்கப்படும் சம்பவ‌ங்கள் அனைத்தும் உண்மை சம்பவங்களே. இதற்காக  சம்பவங்களை ஆதாரத்தோடு விளக்கியுள்ளார்.

கதை இதுதான்.

பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் சுதந்திரம் பெறுவதற்கான போராட்டங்களில் பங்கு பெற்ற பல இந்துக்களில் சுதாமயும் ஒருவர். பாகிஸ்தானிலிருந்து சுதந்திரம் பெற்ற 1972 க்குப் பின்னர் ஆறு ஆண்டுகள் கழித்து வங்கதேசத்தின் அரசியல் சாசன‌ம் மாற்றி இஸ்லாமிய தேசமாக அறிவிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இந்துக்கள் மீது பல்வேறு விதமான அடக்குமுறைகள் ஏவப்படுகின்றன. பல லட்சம் இந்துக்கள் தன் தாய் நாட்டை விட்டு இந்தியாவுக்கு அகதிகளாக செல்கின்றனர். ஆனால் சுதாமய் எக்காரணம் கொண்டும் தன் தாய் நாட்டை விட்டு போக மறுத்து அங்கேயே வாழ்கிறார்.

சுதாமய் ஒரு டாக்டராக இருந்தவர். வயதாகி விட்டதால் வீட்டிலிருந்த படியே சிலருக்கு வைத்தியம் பார்த்து சம்பாதிக்கிறார். அவர் இந்து என்பதால் அதிகம் பேர் வருவதில்லை. அவருடைய மனைவி கிரண்மயிக்கு வீடே உலகம். எந்நேரமும் தன் மகள், மகனுக்கு ஏதும் நேர்ந்துவிடக்கூடாது என்ற பதைபதைப்போடு வாழ்பவர். மகன் சுரஞ்சன் முப்பது வயது இளைஞன், வேலையில்லாமல் ஊரில் நடைபெறும் கலவரங்களைக் கண்டு ஒன்றும் செய்யமுடியவில்லை என விரக்தியில் வாழ்பவன். அவன் தங்கை மாயா அமைதியாக, கலவரமின்றி வாழ விரும்புபவள், அதற்காக அவள் ஒரு முஸ்லிம் இளைஞனைக் காதலித்தாள். தன்னை ஒரு முஸ்லிம் போலக் காட்டிக்கொள்ளக் கூடியவள்.

இந்நிலையில் 1992 டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் வங்க தேசத்தில் இருக்கும் இந்துக்கள் மீது வெறித்தனமான தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்துக்களின் கடைகள், இந்துப் பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் தாக்கப்படுகின்றனன‌ர். இந்துக்கள் மீதான தாக்குதல் தீவிரமாகிறது. உறவினர்கள் எல்லோரும் வற்புறுத்தியும், மனைவி, மகள் கெஞ்சியும் சுதாமய் இந்தியாவுக்கு செல்ல மறுத்து தன் தேசம் என உரிமை கொண்டாடுகிறார். இந்நிலையில் அனைவரும் பிரச்சினை சீராகும் வரை முஸ்லிம் நண்பர்கள் வீட்டில் ஒளிந்து கொள்ளும்படி கூறும் யோசனையையும் நிராகரிக்கிறார்.

இந்நிலையில் அவருக்கு பக்கவாதம் வந்து விடுகிறது. சுரஞ்சன் எந்த பொறுப்புமில்லாமல் வீதிகளில் விரக்தியோடு சுற்றித் திரிகிறான். எங்கும் தாக்குதல்கள். இந்நிலையில் ஒரு கும்பல் சுதாமய் வீட்டுக்குள் புகுந்து வீட்டை அடித்து நொறுக்கி விட்டு மாயாவைத் தூக்கிச் சென்றுவிடுகிறது. யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. விஷயம் அறிந்து சுரஞ்சன் முழு நகரமும் நண்பர்கள் உத‌வியோடு தேடுகிறான். கடைசி வரை மாயா கிடைக்காத நிலையில் வீடே அலங்கோலமாகிறது. சுரஞ்சனும் அளவின்றி குடிக்க ஆரம்பித்து விடுகிறான். இந்நிலையில் சுதாமய் வங்கதேசத்தை விட்டு புறப்படுவதாக நாவல் முடிகிறது.

இந்த நாவல் பங்களா தேசத்தில் தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்திற்காகத்தான் தஸ்லிமா நஸ்ரின் நாட்டை விட்டு வெளியேறினார்.

Similar Posts

  • |

    ப்ளீஸ் இந்த புத்தகத்த வாங்காதீங்க – கோபிநாத்

    நீயா நானா கோபிநாத் அவர்களால் எழுதப்பெற்று 2008ல் வெளிவந்த சுயமுன்னேற்ற நூல். இந்தப் புத்தகத்தின் ஆரம்பத்திலேயே இதில் எதையும் தான் புதிதாக சொல்லிவிடவில்லை என்றும் தனக்கு சொல்லப்பட்டதை தான் சொல்வதாகவும் சொல்லி ஆரம்பிக்கிறார் கோபிநாத். எளிமையான கருத்துக்கள். நமக்கு நன்கு தெரிந்த பரீச்சயமான ஒருவர் கூறுவது போல்தான் ஒட்டு மொத்த புத்தகமுமே இருக்கிறது. எப்பொழுது வேண்டுமானாலும் எந்தப் பக்கத்திலிருந்து வேண்டுமானாலும் படிக்கலாம். இப்புத்தக வாசிப்பு கண்டிப்பாக வாசிப்பவருக்கு ஒரு புத்துணர்ச்சியை அளிக்கும், அவர் எத்துனை ஆழமான புத்தகங்களை…

  • |

    கன்னி நிலம் – ஜெயமோகன்

    ஜெயமோகன் அவர்களால் எழுதப்பட்டது. மணிப்பூர் மாநில எல்லைப்பகுதியில் பணியாற்றும் ராணுவ அதிகாரி நெல்லையப்பனின் கதை, ஜெயமோகனுக்கே உரிய சொல்லாடல்களுடன். நெல்லையப்பன் மணிப்பூர் எல்லையில் பணியாற்றும் ராணுவத் தலைமை அதிகாரி. அவர்கள் ஒருநாள் தங்களுடைய வழக்கமான பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுது காட்டுப்பகுதியில் ஒரு போராளிப்பெண்ணை கைது செய்கிறார்கள். அப்பெண்ணை கைது செய்து ராணுவ முகாமுக்கு கொண்டு வரும் வழியில் போராளிக்குழுக்களின் தாக்குதலுக்கு ஆளாகி, அவர்களில் சிலர் இறந்து விடுகின்றனர். இன்னும் சிலர் அவர்களிடம் கைதியாக மாட்டிக்கொள்கின்றனர். மீதமுள்ளவர்கள் ராணுவ…

  • | | |

    சட்டத்தை நிறைவேற்றுபவர்களின் ஆட்சி

    தமிழக,இந்திய‌ அரசியல் தொடர்பான எந்த ஒரு நிகழ்வையும் வரலாற்றுத்தகவல்களோடு அணுகவேண்டும், அன்றாட‌ வெற்று அரசியல் கூப்பாடுகளுக்கு செவி மடுக்கக்கூடாது என்ற நினைப்பு எனக்கு எப்பொழுதும் உண்டு. அதனால் பெரும்பாலான‌ நிகழ்கால அரசியல் விவாதங்களில் என்னுடைய கவனத்தை முற்றிலுமாக நான் தவிர்த்து விடுவதுண்டு. கடந்த ஒரு மாதங்களில் ஏதேனும் ஓர் ஊடகத்தில் வெளிவந்த விவாதங்களை ஒட்டுமொத்தமாக தொகுத்துப் பாருங்கள். அவையெல்லாம் வெற்றுக் குப்பைகள், அன்றன்றைய சொறிதலுக்கு மட்டுமேயானவை என்பது தெரியும். அதன் காரணமாகவே இந்த வெற்று நுரை கொப்புளிக்கும்…

  • | |

    புத்தகம் 1 : சூதாடி

    ரஷ்ய மொழியில் தஸ்தோயேவ்ஸ்கியால் எழுதப்பெற்று 1867 ல் வெளிவந்த‌ The Gambler நாவலின் தமிழாக்கம். தமிழாக்கம் ரா.கிருஷ்ணையா. இந்நாவலின் மையக் கதாபாத்திரம் Alexei Ivanovich, தன்னுடைய அனுபவங்களை கூறுவது போன்ற நாவல். ரஷ்ய ஜெனரலின் குழந்தைகளுக்கு பாடம் கற்றுத் தரும் ஆசிரியராக வேலை செய்கிறான் Alexei Ivanovich. அவன் ஒருதலையாக‌ ஜெனரலின் சகோதரர் மகள் Polina மீது காதல் கொள்கிறான். அவளுக்கு அவனுடைய காதல் தெரிந்தாலும் அதனை ஏற்காமலும் மறுக்காமலும் அவனுடன் பழகி வருகிறாள். அவளுடைய சிற்றப்பாவாகிய…

  • |

    கேள்வி பதில்

    மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, மிகப்பெரிய திட்டமிடலுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள். அதனால் தங்களை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யாமல் தூரத்து நிலவாகவே வைத்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். இருந்தாலும் இந்த கேள்வி சமீபத்திய நாட்களில் மிக அதிகமான முறை நினைவில் எழும்புவதால் இக்கடிதம். என்னுடைய வேலையும் என்னுடைய புத்தக வாசிப்பும் வேறு வேறு வழிகள். ஆனால் நான் வாசிக்கத் தொடங்கிய பின்னர் என் வேலையினை மிக எளிதாகமாற்றிக்கொண்டேன். வேலையின் அளவு ஐந்து மடங்கிற்கும் அதிகமாகி இருக்கிறது. மிக முக்கியமாக மகிழ்ச்சியாக இருக்கிறேன். எளிமையாக…

  • |

    புதிய இந்தியா

    16வது மக்களவைத்தேர்தல் சிறப்பாக முடிவடைந்திருக்கிறது. இந்த தேர்தலைப் பொறுத்தமட்டில் நாம் மிகப்பெரும் பெருமை கொள்ளத்தக்க செய்தி உலகின் எந்த ஒரு தேசமும் இத்தனை பெரிய ஜனநாயக வலிமை கொண்டிருக்கவில்லை என்பதுதான். என்னதான் ஜனநாயகம் என்று வெளிக்காட்டிக்கொண்டாலும் தன்னளவில் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ சர்வாதிகாரப்போக்குடையதாகவே இருந்திருக்கிறது, இருக்கிறது. நம்மில் பத்தில் ஒரு பங்கிற்கும் குறைவான நிலப்பரப்புள்ள தேசங்களிலும் சரி நம்மை சுற்றியுள்ள தேசங்களிலும் சரி ஜனநாயகம் சரிவர செயல்படுவதில்லை. உதாரணம் சிங்கப்பூர், உக்ரைன், பாகிஸ்தான், இலங்கை. உக்ரைனில் புதிய அரசு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.