| |

லஜ்ஜா – அவமானம்

1993 ஆம் ஆண்டு வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் அவர்களால் எழுதப்பட்ட நாவல். 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு வங்கதேசத்தில் நடைபெற்ற கலவரங்களின் போது ஒரு இந்து குடும்பத்தின் நிலையே நாவல். அந்தக்குடும்ப நபர்கள் கற்பனை எனக் கூறப்பட்டிருந்தாலும் விவரிக்கப்படும் சம்பவ‌ங்கள் அனைத்தும் உண்மை சம்பவங்களே. இதற்காக  சம்பவங்களை ஆதாரத்தோடு விளக்கியுள்ளார்.

கதை இதுதான்.

பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் சுதந்திரம் பெறுவதற்கான போராட்டங்களில் பங்கு பெற்ற பல இந்துக்களில் சுதாமயும் ஒருவர். பாகிஸ்தானிலிருந்து சுதந்திரம் பெற்ற 1972 க்குப் பின்னர் ஆறு ஆண்டுகள் கழித்து வங்கதேசத்தின் அரசியல் சாசன‌ம் மாற்றி இஸ்லாமிய தேசமாக அறிவிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இந்துக்கள் மீது பல்வேறு விதமான அடக்குமுறைகள் ஏவப்படுகின்றன. பல லட்சம் இந்துக்கள் தன் தாய் நாட்டை விட்டு இந்தியாவுக்கு அகதிகளாக செல்கின்றனர். ஆனால் சுதாமய் எக்காரணம் கொண்டும் தன் தாய் நாட்டை விட்டு போக மறுத்து அங்கேயே வாழ்கிறார்.

சுதாமய் ஒரு டாக்டராக இருந்தவர். வயதாகி விட்டதால் வீட்டிலிருந்த படியே சிலருக்கு வைத்தியம் பார்த்து சம்பாதிக்கிறார். அவர் இந்து என்பதால் அதிகம் பேர் வருவதில்லை. அவருடைய மனைவி கிரண்மயிக்கு வீடே உலகம். எந்நேரமும் தன் மகள், மகனுக்கு ஏதும் நேர்ந்துவிடக்கூடாது என்ற பதைபதைப்போடு வாழ்பவர். மகன் சுரஞ்சன் முப்பது வயது இளைஞன், வேலையில்லாமல் ஊரில் நடைபெறும் கலவரங்களைக் கண்டு ஒன்றும் செய்யமுடியவில்லை என விரக்தியில் வாழ்பவன். அவன் தங்கை மாயா அமைதியாக, கலவரமின்றி வாழ விரும்புபவள், அதற்காக அவள் ஒரு முஸ்லிம் இளைஞனைக் காதலித்தாள். தன்னை ஒரு முஸ்லிம் போலக் காட்டிக்கொள்ளக் கூடியவள்.

இந்நிலையில் 1992 டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் வங்க தேசத்தில் இருக்கும் இந்துக்கள் மீது வெறித்தனமான தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்துக்களின் கடைகள், இந்துப் பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் தாக்கப்படுகின்றனன‌ர். இந்துக்கள் மீதான தாக்குதல் தீவிரமாகிறது. உறவினர்கள் எல்லோரும் வற்புறுத்தியும், மனைவி, மகள் கெஞ்சியும் சுதாமய் இந்தியாவுக்கு செல்ல மறுத்து தன் தேசம் என உரிமை கொண்டாடுகிறார். இந்நிலையில் அனைவரும் பிரச்சினை சீராகும் வரை முஸ்லிம் நண்பர்கள் வீட்டில் ஒளிந்து கொள்ளும்படி கூறும் யோசனையையும் நிராகரிக்கிறார்.

இந்நிலையில் அவருக்கு பக்கவாதம் வந்து விடுகிறது. சுரஞ்சன் எந்த பொறுப்புமில்லாமல் வீதிகளில் விரக்தியோடு சுற்றித் திரிகிறான். எங்கும் தாக்குதல்கள். இந்நிலையில் ஒரு கும்பல் சுதாமய் வீட்டுக்குள் புகுந்து வீட்டை அடித்து நொறுக்கி விட்டு மாயாவைத் தூக்கிச் சென்றுவிடுகிறது. யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. விஷயம் அறிந்து சுரஞ்சன் முழு நகரமும் நண்பர்கள் உத‌வியோடு தேடுகிறான். கடைசி வரை மாயா கிடைக்காத நிலையில் வீடே அலங்கோலமாகிறது. சுரஞ்சனும் அளவின்றி குடிக்க ஆரம்பித்து விடுகிறான். இந்நிலையில் சுதாமய் வங்கதேசத்தை விட்டு புறப்படுவதாக நாவல் முடிகிறது.

இந்த நாவல் பங்களா தேசத்தில் தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்திற்காகத்தான் தஸ்லிமா நஸ்ரின் நாட்டை விட்டு வெளியேறினார்.

Similar Posts

  • |

    அம்மா வந்தாள் – தி.ஜானகிராமன்

    தி ஜானகிராமன் அவர்களால் எழுதப்பெற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் 1966ல் வெளிவந்த ஒர் நாவல். அப்பு வேதம் படிப்பதற்காக திருச்சிக்கு அனுப்பபடுகிறான். அங்கே பதினாறு வருடங்கள் வேதம் படித்தபின்னர் தன்னுடைய சொந்த ஊருக்குப் புறப்படத்தயாராகிறான். இன்னும் சில நாட்களில் கிளம்ப வேண்டும் என்ற நிலையில், அம்மடத்தினை நிர்வகிக்கும் பவானியம்மாளின் தம்பி மகள் இந்து தான் அப்புவை விரும்புவதாகக் கூறுகிறாள். இந்து ஏற்கனவே திருமணமாகி கணவனை இழந்தவள். தன் அத்தை பவானியம்மாளோடு வசிக்கிறாள். அவள் சிறுவயதிலிருந்தே அப்புவுடன் வளர்ந்தவள்….

  • பார்த்திபன் கனவு ‍- அம‌ரர் கல்கி

    அமரர் கல்கி அவர்களால் 1941 ஆம் ஆண்டு எழுதப்பெற்ற நூல், காவியம். சோழ நாடும், பல்லவ நாடுமே கதைக்களங்கள். பார்த்திப மன்னனின் கனவான சுத‌ந்திர தேசத்தை அவரது மகனான விக்கிரமன் நனவாக்குவதே கதை. இது காதல் காவியமோ என்ற எண்ணம் அடிக்கடி எழுந்துகொண்டே இருக்கிறது. எளிய கதை.மிகச் சிறந்த வர்ணனை. அந்த வர்ணனைகளுக்காகவே மறுபடியும் படிக்கலாம். பல்லவ மன்னன் நரசிம்ம பல்லவனின் மகளாகிய குந்தவி தேவியின் அழகை விவரிக்கும் அழகே அழகு. அவ்வளவு வசீகரமானவள்,அழகானவள். அந்த குந்தவி…

  • |

    செங்கிஸ்கான் – முகில்

    ஆங்காங்கே சிதறிக்கிடந்த மங்கோலிய இனக்குழுக்களை ஒன்றினைத்த மாவீரன் செங்கிஸ்கான். அலெக்ஸாண்டரின் பேரரசைவிட நான்கு மடங்கு பெரிய மங்கோலியப் பேரரசை நிறுவியவர். அவரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது முகிலின் செங்கிஸ்கான். இப்புத்தகம் செங்கிஸ்கானுடைய தாயார் மற்றோர் இனக்குழுவால் கவரப்படுவதிலிருந்து துவங்கி செங்கிஸ்கானுடைய வாரிசுகளால் எவ்வாறு மங்கோலிய பேரரசு பிரிக்கப்பட்டு, வலுவிழக்கத் தொடங்கியது என்பது வரை விவரிக்கப்பட்டுள்ளது. டெஜிமுன் என்னும் இயற்பெயர் கொண்ட செங்கிஸ்கான் அனைத்து மங்கோலிய இனங்களையும் வென்று, சீனாவையும் வென்ற பின்னரே செங்கிஸ்கான் என பட்டம் ஏற்றிருக்கிறார்….

  • | | |

    இந்திய உளவுத்துறை RAW எவ்வாறு இயங்குகிறது – குகன்

    ஒவ்வொரு நாட்டிற்கும் ராணுவ பாதுகாப்பு எத்தனை முக்கியமானதோ அந்த அளவிற்கு உளவு நிறுவனமும் முக்கியமானது. உளவு நிறுவனங்களின் தேவை முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களுக்குப் பின்னர் அதீத முக்கியத்துவம் பெற்றதனை குறைந்தபட்ச வரலாற்று அறிதல் கொண்ட எவரும் உணர முடியும். அத்தகைய பணியை செய்யும் இந்திய அரசின் அதிகாரப்பூர்வ ஓர் அமைப்பே ரா. ஐபி எனப்படும் உளவு அமைப்பு ஆங்கிலேயர் காலம் முதல் இந்தியாவில் இருந்து வந்தது. சுதந்திர இந்தியாவிலும் அதுவே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உளவுப்…

  • எக்சைல் – சாரு நிவேதிதா

    தன்னுடைய வாசகர் வட்டத்தில் சேர்வதற்கு குறைந்தபட்சம் தன்னுடைய எக்சைல் நாவலைப் படித்திருக்க வேண்டும் என்ற அவருடைய தகுதி வரையறையின் காரணமாகப் படித்த நாவல். வாசிப்பின் முடிவில் என் மனநிலை, இப்போதைக்கு சாருவின் வாசகர் வட்டத்தின் இணைய முயல வேண்டாம் என்பதே. ஒருவேளை இதற்குத்தான் அந்த நாவலை வாசிக்கச் சொல்லியிருப்பாரோ என்னவோ? நாவலின் கரு இதுதான். மற்ற ஒருவரின் மனைவியை காதலிக்கும், உறவுகொள்ளும் ஒருவனின் வாழ்வியல் நிகழ்வுகள். அக்காலக் கட்டத்தில் நிகழும் அனைத்து நிகழ்வுகளையும் நாவலாக்கியிருக்கிறார். சாரு இந்நாவலில்…

  • ஃபாரன்ஹீட் 451

    கதை எதிர்காலத்தில் நடைபெறுவது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. நாட்டில் போர் ஏற்படுவது போன்ற சூழல். ஆதலால் அரசாங்கம் யாரும் புத்தகங்களை வைத்திருப்பதையும், வாசிப்பதையும் தடை செய்கிறது. மோண்டாக் ஒரு தீயணைப்புத் தொழிலாளி. அவனுடைய மேலாளர் பியாட்டி. அவர்களது பணி யார் வீட்டிலெல்லாம் புத்தகங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறதோ அவற்றைக்கண்டுபிடித்து எரிக்க வேண்டும். அதுவே அவர்களுக்கு இடப்பட்ட ஆணை. மக்கள் பெரும்பாலானவர்கள் வாசிக்கும் பழக்கத்தையே விட்டுவிட்டவர்களாக இருக்கிறார்கள். அன்றைய தொலைக்காட்சிகள் பார்ப்பவர்களோடு உரையாடும் தொழில்நுட்பம் கொண்டவைகளாக இருக்கின்றன. எனவே எல்லோரும் முற்றிலும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.