ஃபாரன்ஹீட் 451

கதை எதிர்காலத்தில் நடைபெறுவது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. நாட்டில் போர் ஏற்படுவது போன்ற சூழல். ஆதலால் அரசாங்கம் யாரும் புத்தகங்களை வைத்திருப்பதையும், வாசிப்பதையும் தடை செய்கிறது.

மோண்டாக் ஒரு தீயணைப்புத் தொழிலாளி. அவனுடைய மேலாளர் பியாட்டி. அவர்களது பணி யார் வீட்டிலெல்லாம் புத்தகங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறதோ அவற்றைக்கண்டுபிடித்து எரிக்க வேண்டும். அதுவே அவர்களுக்கு இடப்பட்ட ஆணை. மக்கள் பெரும்பாலானவர்கள் வாசிக்கும் பழக்கத்தையே விட்டுவிட்டவர்களாக இருக்கிறார்கள். அன்றைய தொலைக்காட்சிகள் பார்ப்பவர்களோடு உரையாடும் தொழில்நுட்பம் கொண்டவைகளாக இருக்கின்றன. எனவே எல்லோரும் முற்றிலும் தொலைக்காட்சியிலே நேரத்தைக் கழிக்கிறார்கள்.

தனக்கு இட்ட பணியை செய்துகொண்டிருக்கும் மோண்டாக் சிலர் புத்தகங்களுக்காக தங்களுடைய உயிரையும் மாய்த்துக்கொள்வதைக் காண்கிறான். அதனால் அவனுக்கு அப்படி புத்தகங்களில் என்னதான் இருக்கிறது என ஆர்வமேற்பட்டு ஒவ்வொரு முறை தான் புத்தகங்களை எரிக்கும் போதும் ஒரு புத்தகத்தை மறைவாக யாருக்கும் தெரியாமல் எடுத்துக்கொண்டு வந்து வீட்டில் ஒளித்து வைத்து சேமிக்கிறான்.

அத்தோடு தான் வேலை முடிந்து வரும் வழியில் தினமும் ஒரு பெண்ணை சந்திக்கிறான். அவள் மிகவும் வித்தியாசமனவளாகவும், எல்லாவற்றையும் வியந்து நோக்கும் பார்வை கொண்டவளாகவும் இருக்கிறாள் என்பதனை அறிந்து மோண்டாக் வியக்கிறான். அவள் வாசிப்பவள் என்பதனையும் பின்னர் அறிந்து கொள்கிறான் மோன்டக்.

அதன் தொடர்ச்சியாக திடீரென்று ஒருநாள் அவள் இறந்து விட்டதாக அறிகிறான். இதனால் கடின மன உளைச்சலுக்கு ஆளாகும் மோண்டாக் தன் மனைவி மில்ட்ரெட்டிடம் அதனைப் பற்றி பேசுகிறான். அதன் தொடர்ச்சியாக தான் மறைத்து வைத்திருக்கும் புத்தகங்களை அவளுக்கு காண்பிக்கிறான். பின்னர் அந்த புத்தகங்களை வாசிக்கத் தொடங்குகிறான். இந்நிலையில் அவனுக்கு ஃபேபர் என்னும் முதியவரின் பழக்கம் கிடைக்கிறது. அவர் ஒர் இலக்கிய பேராசிரியராக இருந்தவர். அவர் மூலமாக அவன் மேலும் வாசிக்கிறான். இருவரும் சேர்ந்து மீதமிருக்கும் புத்தகங்களை ரகசியமாக பதிப்பிக்கலாம் எனத் திட்டமிடுகின்றனர். இதற்கிடையில் பியாட்டிக்கு மோன்டாக் நடவடிக்கைகள் மீது சந்தேகம் ஏற்படுகிறது.

பேபர் எந்நேரமும் மோன்டாக்குடன் தொடர்பில் இருப்பதற்காக காதில் பொருத்தக்கூடிய ஒரு சிறிய கருவியை அளிக்கிறார். அதன் மூலம் இருவரும் தாங்கள் படித்த புத்தகங்களை
விவாதிக்கின்றனர். இந்நிலையில் ஒருநாள் தன் மனைவி மில்ட்ரெட்டோடு அவளுடைய தோழிகள் இருவர் பேசிக்கொண்டிருப்பதைக் காண்கிறான் மோன்டாக். அவர்கள் வாசிக்கும் பழக்கம் முற்றிலும் அற்றவர்களாக இருப்பதை உணர்ந்து கொள்கிறான் மோன்டாக். அவர்களுடைய பேச்சு அவனை மேலும் எரிச்சலூட்டவே ஒரு புத்தகத்தை எடுத்து வந்து அவர்களுக்கு வாசித்துக் காட்டுகிறான். அதனால் குற்றவுணர்ச்சியடையும் அவர்கள் அவன் வீட்டை விட்டு சென்று விடுகின்றனர். தொடர்ந்து அவர்கள் பியாட்டிக்கும் தகவல் தந்து விடுகின்றனர். அதனால் தீயணைப்பு வாகனம் வருகிறது. மோன்டாகின் அனைத்து புத்தகங்களையும் கண்டுபிடித்து எரித்து விடுகிறார் பியாட்டி. அதனால் விரக்தியடைகிறான் மோன்டாக். அத்தோடு மோன்டாக்கின் காதில் இருக்கும் கருவியையும் பியாட்டி பார்த்து விடுகிறார். அதனால் ஒட்டுமொத்த வாசிப்பாளர்களும் மாட்டிக்கொள்வார்கள் என நினைக்கும் மோன்டாக் பியாட்டி மீது தீயணைப்பு வாகனத்தின் மண்ணெண்ணெயை பீய்ச்சி தீ மூட்டி விடுகிறான். பியாட்டி இறந்து விடுகிறார்.

அங்கிருந்து தப்பிக்கும் மோன்டாக் பேபர் வீட்டிற்கு செல்கிறான். அவர் அவனை ஊருக்கு வெளியே இருக்கும் காட்டிற்குள் இருக்கும் வாசிப்பாளர்களிடம் செல்லும்படி அறிவுறுத்துகிறார். ஆனால் அவன் செல்வதற்குள் போலிஸிடம் பிடிபடாமல் இருக்கவேண்டுமெனவும் கூறுகிறார். மிகவும் கடினப்பட்டு காட்டிற்குள் சென்றுவிடுகிறான் மோன்டாக். போலிஸ் தேடிவிட்டு வேறு ஒருவனை மோன்டாக் எனக்கூறி கொன்று விட்டு வழக்கை முடித்து விடுகின்றனர்.
காட்டிற்குள் சென்ற மோன்டாக் அங்கிருக்கும் பலரும் பல புத்தகங்களை நினைவில் வைத்திருப்பதை அறிகிறான், அதனை மற்றவர்களுக்கு கூறுவதே தங்கள் வேலை என்கின்றனர் அவர்கள். அவர்களோடு தானும் சேர்ந்து எதிர்காலத் தலைமுறைக்காக புத்தகங்களை நினைவில் வைத்து விவாதிக்கத் துவங்குகிறான் மோன்டாக்.

1953 ஆம் ஆன்டில் ரே பிரட்பெர்ரியால் எழுதப்பட்டது.

Similar Posts

  • |

    உன்னோடு ஒரு நிமிஷம் ‍ – வெ.இறையன்பு

    வெ. இறையன்பு அவர்களால் சுட்டி விகடனில் எழுதப்பெற்று தொடராக வெளிவந்த சுயமுன்னேற்றத் தொடர். சுட்டி விகடனில் வெளிவந்த‌தால் முற்றிலும் குழந்தைகளை நோக்கி எழுதப்பட்ட கட்டுரைகள். பெரும்பாலும் நீதி போதனைக் கட்டுரைகள். அத்தோடு அந்தந்த காலகட்டத்தின் நிகழ்வுகளை ஒட்டி எழுதப்பட்டவை. உதாரணமாக தேர்வு சமயத்தில் வெளிவந்த இதழில் தேர்வு தொடர்பான சில அறிவுரைகள், விடுமுறைக்கால இதழில் விடுமுறை தொடர்பான சில ஆலோசனைகள். அதனால் இக்கட்டுரைகளை ஒட்டுமொத்தமாகத் தொகுக்கும்போது ஒரு புத்தகத்திற்கான‌ ஒட்டுமொத்த வடிவம் இல்லை. ஆனால் இது போன்ற…

  • | | | | |

    புதிய தலைமுறை வார இதழில்

    நான் எழுதிய இந்திய உளவுத்துறை எவ்வாறு செயல்படுகிறது புத்தக விமர்சனம் புதிய தலைமுறை 31 டிசம்பர் தேதியிட்ட வார இதழில் வெளிவந்துள்ளது. அக்கட்டுரை. ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண் என்பது வள்ளுவர் வாக்கு. அதாவது நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்திலேயே ஓர் அரசு சிறப்பாகச் செயல்பட முடியும். ஆம் இன்றும் அதுதான் நிலை. கடந்த 50 ஆண்டுகால வரலாற்றை…

  • | |

    லஜ்ஜா – அவமானம்

    1993 ஆம் ஆண்டு வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் அவர்களால் எழுதப்பட்ட நாவல். 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு வங்கதேசத்தில் நடைபெற்ற கலவரங்களின் போது ஒரு இந்து குடும்பத்தின் நிலையே நாவல். அந்தக்குடும்ப நபர்கள் கற்பனை எனக் கூறப்பட்டிருந்தாலும் விவரிக்கப்படும் சம்பவ‌ங்கள் அனைத்தும் உண்மை சம்பவங்களே. இதற்காக  சம்பவங்களை ஆதாரத்தோடு விளக்கியுள்ளார். கதை இதுதான். பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் சுதந்திரம் பெறுவதற்கான போராட்டங்களில் பங்கு பெற்ற பல இந்துக்களில் சுதாமயும் ஒருவர். பாகிஸ்தானிலிருந்து…

  • |

    ஆயிரம் ஜன்னல் ‍‍- ஜக்கி வாசுதேவ்

    ஆனந்த விகடனில் தொடர்ச்சியாக வெளிவந்த ஜக்கி வாசுதேவ் அவர்கள் எழுதிய‌ கட்டுரைகளின் தொகுப்பு. எழுத்தாக்கம் சுபா. வாராந்திரக் கட்டுரை வடிவில் வெளிவந்ததனால் ஒட்டு மொத்த தொடர்ச்சி கிடையாது. ஒரு எளிய கட்டுரை அதனுள் ஒரு சிறு அறம். இப்படித்தான் பெரும்பாலானவை. இத்தொடர் வெளிவந்த காலகட்டத்திலேயே ஜக்கி வாசுதேவ் ஒரு புகழ்பெற்ற நபராக இருந்தமையால் அவர் சாதாரணமாகச் சொல்வதைக்கூட பிரமாண்டமாகவே எடுத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு வாசிப்பவர்கள் சென்றே ஆக வேண்டும். அப்படிப்பட்டவையே இக்கட்டுரைகள். வாராந்திர சஞ்சரிகைகளையும், தினசரி செய்திகளையும்…

  • |

    Rich Dad Poor Dad – Robert Kiyosaki

    Robert Kiyosaki ஆல் எழுதப்பெற்று 1997 ஆம் ஆண்டில் வெளிவந்தது. வாழ்வில் பொருளாதார தன்னிறைவு அடைவதற்கு தனி மனித நுண்ணறிவு எத்தகைய முக்கியமான ஒன்று என்பதனை விவரிக்கும் நூல். 50 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலகம் முழுவதும் 30 மில்லியனுக்கும் அதிகமாக விற்பனையான நூல். இந்நூல் வாசிப்பவர்கள் பொருளாதார தன்னிறைவினை அடைந்தார்கள் என்பதனை விட‌ Robert Kiyosaki கண்டிப்பாக இப்புத்தகத்தினால் பொருளாதார நிறைவினை அடைந்திருப்பார் என்பது நிதர்சனம். இப்புத்தகத்தினை பத்து தனி அத்தியாயங்களாக‌ Robert Kiyosaki…

  • இந்திய அரசியலமைப்பு – லக்ஷ்மிகாந்த்

    இந்திய அரசியலமைப்பு எவ்வாறு உருவாக்கப்பட்டது? அதிலுள்ள ஒவ்வோர் அம்சமும் என்ன? அவை தரும் உரிமைகள் எவை? அவை தரும் கட்டுப்பாடுகள் எவை? எந்தெந்த நாடுகளின் அரசியலமைப்பு சட்டங்களில் இருந்து அவை தருவிக்கப்பட்டன? இந்த நிலத்தை ஆளும் முறையை எவ்வாறு தீர்மானிப்பது? எதிர்காலாத்தில் ஏதேனும் ஓர் மாநிலம் தனி நாடு கோரினால் என்ன செய்வது? போன்ற அனைத்தையும் விளக்கும் அரசியலமைப்பு சட்டத்தினைப் பற்றி தெளிவாக விளக்கக் கூடிய ஓர் புத்தகம். நம் மனநிலையில் இந்தப் புத்தகம் ஓர் போட்டித்தேர்வுக்கான…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.