மனுஷ்யபுத்திரனின் பசித்த பொழுது

மனுஷ்யபுத்திரனின் கவிதைத்தொகுப்பு – பசித்த பொழுது.

படிக்கும் பொழுது “இதெல்லாம் கவிதைதானா? வெற்று வசனங்கள்தானே ?” என கேட்கத்தூண்டும் வண்ணம் பல கவிதைகள் இருக்கிறது. ஒருவேளை அவைதான் சரியான கவிதைகளோ? நமக்குத்தான் அதற்கா ஞானம் வரவில்லையோ என்ற எண்ணமும் இப்போது வரை உண்டு. உங்களுக்கும் தோன்றினால் நீங்களும் என் இனமே.

 பெரும்பாலும் தன் வாழ்வின் நிகழ்வுகளைத்தான் கவிதைகளாக வடித்திருக்கிறார். சமூக பொருளாதார சித்தாந்தங்களெல்லாம் ஒன்றுமில்லை. ஒன்றுமேயில்லை எனலாம்.

மொத்தம் உள்ள 236 கவிதைகளில் 99% கவிதைகளை காமம், மழை, பூனை, அம்மு, அப்பு என ஐந்தே வகைக்குள் கொண்டு வந்து விடலாம். அம்மு, அப்பு அவர் குழந்தைகள் என நினைக்கிறேன். அவர்கள் தொடர்பாக பல கவிதைகள். நூல் தலைப்புக்கான் கவிதையே அப்புவை சுற்றித்தான். ஒருவேளை அவர்கள் அவரது குழந்தைகளாக இல்லாது இருந்து அவர் உருவாக்கிய கதாபாத்திரங்களாக இருப்பின் அதனை நயம்பட, உணர்வுப்பூர்வமாக தந்தமைக்காகவே பாராட்டலாம்.

பல கவிதைகள் தான் செய்த தவறுக்கான‌ விளக்கம் கொடுத்து அது சரியெனக் காட்டிக்கொள்வதாகவே அமைந்திருக்கின்றன. அந்த விதத்தில் எதிர்மறையையும் பெருமையாய்க் கூறிக்கொள்கின்றன பல கவிதைகள்.

இவ‌ற்றையெல்லாம் விடுத்து முத்தாய்ப்பாய் சில கவிதைகளும் உண்டு. உதாரணமாக அவள் தன்னை விட்டுப் பிரிந்ததை இப்படிக் கூறுகிறார்.

 நான் இல்லாத போது என் குரல் கேட்காத

ஒரு வாழ்க்கைக்குச் சென்று விட்டாள்”

மிகச்சிறப்பு.

மற்ற சில நெஞ்சைத் தொட்ட கவிதைகள்.

முதியவர்களின் முகங்களில்”

எனக்கு முன்னால் இங்கே இருந்தவர்கள்”

நன்றி.

Similar Posts

  • உபபாண்டவம் – எஸ்.ராமகிருஷ்ணன்

    மகாபாரதக் கதாபாத்திரங்களை அக்காலக் கட்டத்தில் அவர்களின் ஊடே பயணிக்கும் ஒருவன் விளக்குவதைப் போல விவரிக்கும் நூல். மகாபாரதத்தின் மீதான ஆர்வம் தணியாததால் இந்த நூலை வாசித்தேன். மகாபாரதக் கதை நிகழ்ந்த இடங்களுக்கு பயணம் செய்து அதன் விளைவாக தான் உணர்ந்தவற்றை கதாபாத்திரங்களின் ஊடே பயணம் செல்வது போல் விளக்கியிருக்கின்றார் ராமகிருஷ்ணன். படித்து முடிக்கும் பொழுது மகாபாரதத்தினை நம் கண்முன்னே கண்டதுபோல, அந்தக் காலக் கட்டத்திலே வாழ்ந்தது போல ஒரு உணர்வை ஏற்படுத்துவதே இந்நூலின் வெற்றி. இப்படியெல்லாம் மகாபாரதத்தினை…

  • Adolf Hitler: A Life From Beginning to End

    ஹிட்லரின் இளமைக்காலம், முதலாம் உலகப்போரில் அவருடைய பங்கு, இரண்டாம் உலகப்போர் மற்றும் அதன் தொடக்கத்திற்கான‌ காரணங்கள், முடிவு போன்ற நிகழ்வுகளின் தொகுப்பே இந்நூல். ஹிட்லரின் மனதில் சிறுவயதிலேயே எப்படி யூதர்கள் மீதான வெறுப்பு உண்டானது என்பது ஆச்சரியமான ஒன்று. முதலாம் உலகப்போரின் போது இருந்த மற்ற ஜெர்மானியக் கட்சிகள் யூதர்களே ஜெர்மனியின் தோல்விக்கும், ஜெர்மனியின் வளர்ச்சிக்குத் தடையெனவும் முழங்கினர். அது அவர்களின் கட்சி வளர்ச்சிக்கு அவசியமான ஒன்றாக இருந்தது. அது ஹிட்லரின் மனதில் ஆழப்பதிந்ததன் தாக்கத்தினை பின்னாளில்…

  • |

    Rich Dad Poor Dad – Robert Kiyosaki

    Robert Kiyosaki ஆல் எழுதப்பெற்று 1997 ஆம் ஆண்டில் வெளிவந்தது. வாழ்வில் பொருளாதார தன்னிறைவு அடைவதற்கு தனி மனித நுண்ணறிவு எத்தகைய முக்கியமான ஒன்று என்பதனை விவரிக்கும் நூல். 50 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலகம் முழுவதும் 30 மில்லியனுக்கும் அதிகமாக விற்பனையான நூல். இந்நூல் வாசிப்பவர்கள் பொருளாதார தன்னிறைவினை அடைந்தார்கள் என்பதனை விட‌ Robert Kiyosaki கண்டிப்பாக இப்புத்தகத்தினால் பொருளாதார நிறைவினை அடைந்திருப்பார் என்பது நிதர்சனம். இப்புத்தகத்தினை பத்து தனி அத்தியாயங்களாக‌ Robert Kiyosaki…

  • |

    அர்த்தமுள்ள இந்து மதம் – கண்ணதாசன்

    கண்ணதாசன் அவர்களால் எழுதப்பெற்ற பத்து தனித்தனி பாகங்களின் மொத்த தொகுப்பு. தன் அனுபவத்தினைக் கொண்டு அதன் மூலம் இந்து மதத்தினை மனித வாழ்வின் செயல்களுக்கும், விளைவுகளுக்கும் விளக்கம் தருகிறார். ஒருவேளை இப்புத்தகத்தினை ஆரம்ப கால வாசகர்களும், ஆன்மீக வாசகர்களும் பெரிதும் விரும்பலாம். ஆனால் தீவிர இலக்கிய வாசிப்புக் கொண்டவர்கள் சலிப்படையவைக்கும் தட்டையான எழுத்து. சாதரணமாக வயதில் மூத்தவர்கள் கூறும் அறிவுரைகளின் தொகுப்பு எனக்கூறலாம், மற்றபடி இது இந்து மதத்தினை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும் என்றெல்லாம் கிடையாது….

  • |

    ஏறுவெயில் – பெருமாள் முருகன்

    எழுத்தாளர் பெருமாள் முருகனால் எழுதப்பெற்று 1991 ஆம் ஆண்டில் வெளிவந்த நாவல். இது அவருடைய முதல் நாவல். நகரமயமாதலின் பொருட்டு தன்னுடைய பூர்விக நிலத்தைவிட்டு செல்லும் ஒரு கிராமத்து குடும்பத்தின் கதை. கதைக்களம் நிகழ்வது 1980 களில். பொன்னையாவின் தாத்தாவிற்கு மூன்று மகன்கள். நிலத்தினை அரசாங்கம் எடுத்துக்கொள்வதன் பொருட்டு நிலத்தை விற்றுவிட்டு அக்காசை மூன்று மகன்களுக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டு தன் மனைவியோடு அருகில் ஏரிக்கு பக்கத்தில் தங்கிவிடுகிறார் தாத்தா. இரண்டு மகன்கள் அவர்களின் மாமனார் வீட்டோடு சென்றுவிட…

  • | | |

    ரஷ்யப் புரட்சி மருதன்

    ரஷ்யப்புரட்சி முதல் உலகப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் நடைபெற்றது. ஜார் மன்னரின் தவறான அணுகுமுறைகளால் ரஷ்யாவின் மக்கள் பாதிக்கப்படுவதாக கூறி லெனின் அவர்களால் முன்னெடுக்கப்பட்டது. லெனின் ஆதரவாளர்கள் போல்ஷ்விக்குகள் எனப்பட்டனர். அவர்களின் எதிர்த்தரப்பிலிருந்த மற்றோர் புரட்சியாளர்கள் மென்ஷ்விக்குகள் எனப்பட்டனர். ஏற்கனவே ரஷ்யா போரில் பெருமளவு சேதமடைந்திருந்த சமயத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தால் அரசால் முழு வீச்சோடு புரட்சியினை அடக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் மென்ஷ்விக்குகள் ஆட்சியை ஜார் மன்னரிடமிருந்து பெற்றுக்கொண்டனர். பின்னர் அவர்களிடமிருந்து லெனின் புரட்சி மூலம் ஆட்சியினைக்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.