| |

தற்கொலைக் குறுங்கதைகள் – அராத்து

அராத்து அவ்வப்போது ஃபேஸ்புக்கில் எழுதிய குறுங்கதைகளை உயிர்மை பதிப்பகம் நூலாக வெளியிட்டிருக்கிறார்கள். எதேச்சையாக கண்ணில் பட்ட நூல், இந்நூலின் வெளியீட்டு விழாவில் சாருவும், ஜெயமோகனும் கலந்துகொண்ட நினைவு. அதனால் இப்புத்தகத்தை வாசிக்கலாம் என நினைத்து எடுத்து வந்தேன்.

ஒட்டுமொத்த நாவலின் பெரும்பான்மை பேசுபொருள் உடலுறவு. காமம் அல்ல. இதற்கு பாலுறவுக் கதைகளாகவே வெளியிடப்படும் கதைகள் எவ்வளவோ பரவாயில்லை. அவர்கள் அவர்களுடைய கதைகளை உலகத்தர நாவல் என்றோ அல்லது தமிழின் முதல் ஃபோர்னோ நாவல் என்றோ இன்ன பிற என்றோ விளக்குவதில்லை, இந்நாவாலைப்போல். ஒரு ஒப்பீட்டுக்கு சொல்வதானால் நூற்றுக்கு ஐந்து மதிப்பெண்கள் தரலாம். அந்த ஐந்து மதிப்பெண்களும், ஆங்காங்கே விரவியிருக்கும் ஒரு சில வார்த்தை விளையாட்டுகளுக்காக. உதாரணமாக கதைசொல்லியே வாசகனாக வெளியே வந்துவிட்டு மீண்டும் உள்ளே செல்வது, எழுத்தாளர்களின் உலகிற்குள் பிரவேசிப்பது போன்றவை. ஆனால் அதிலுள்ள மற்றொரு பிரச்சினை அராத்து ஒரு தருணத்தில் இம்முறையைக் கண்டுகொள்கிறார். அதன் பின்னர் பெரும்பாலான கதைகளில் இதே டெம்ப்ளேட்கள்.

இதற்கெல்லாம் உச்சம், சாரு அவர்களது முன்னுரை. ஏன் இத்தனை அபத்தமான நூலுக்கு இத்தனை பெரிய முன்னுரை. அவரே கூறியிருக்கிறார் ஒருவர் மற்றவரை உயர்த்திப்பிடிக்க முடியாதென்று. உண்மை. அப்புறம் எதற்காக இந்த‌ நாவலுக்கு இத்தனை உயர்வான முன்னுரை.

எந்த எழுத்தும் நல்ல எழுத்தே, எந்த வாசிப்பும் நல்ல வாசிப்பே என கருதுபவன் நான். இந்நூல் அராத்து எதிர்காலத்தில் ஒரு சிறந்த நூலை எழுதுவதற்கான முயற்சியாக அமையட்டும். வாசகர்களுக்கு எப்படி ஒரு நூலை எழுதக்கூடாது என்பதற்கான அறிதலாக இருக்கட்டும்.

Similar Posts

  • மான்களுக்கும் கோபம் வரும் – மரபின் மைந்தன் முத்தையா

    மரபின் மைந்தன் முத்தையா அவர்களால் எழுதப்பெற்ற மற்றும் கவிதையரங்குகளில் வாசிக்கப்பெற்ற கவிதைகளின் தொகுப்பு. 2005 ஆம் ஆண்டு வெளிவந்தது. கற்பகம் புத்தகாலயம் வெளியீடு. இத்தொகுப்பில் என்னை ஈர்த்த கவிதை ‘புகார்கள் மற்றும் ஆலோசனைகள்’. ‘எந்தப்புகாரும் இல்லையென்றில்லைஎழுதும் தரமாய் இல்லையெம் புகார்கள்‘ ஏதேனும் நடைபெறுமிடத்திலேயே புகார் அளிக்க இயலும். ஆனால் இங்கே புகாரளிக்கும் அளவிற்கூ கூட செயல்கள் நடைபெறவில்லை என்பதன் அங்கதம் வெளிப்படும் தொணி என்னைக்கவர்ந்தது. அதே கவிதையில் ‘ஆனால் நண்பரே உம்மிடம் சொல்ல‌ஆலோசனைகள் உள்ளன எம்மிடம்கண்துடைப்புக்காக இங்கே…

  • |

    திருப்பம் – கேசவதேவ்

    மலையாளத்தில் வெளிவந்த கேசவதேவின் ஒரு குறுநாவலையும், மாதவிக்குட்டியின் ஒரு சிறுகதையையும் தமிழில் சுரா அவர்கள் மொழி பெயர்த்து வெளியிட்டிருக்கிறார். அவ்விரண்டுமே இப்புத்தகம். முதல் குறுநாவல் திருப்பம், அப்போதைய சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டத்தினை ஒட்டிய நாவல். கேரள ஈழவ சாதிகளுக்குள் நிகழும் ஏற்றத்தாழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது. மாலேத்து சாணார் வீட்டில் வேலை செய்கிறார் கண்டப்பன். அவர்கள் இடத்தில்தான் இவன் வீடு கட்டிக்குடியிருந்தான். அவர்கள் தரும் கூலியோடு அவர்கள் தரும் எச்சில் சாப்பாடும் அவர்களுக்கு கிடைக்கும். அவரோடு அவர் மகன்…

  • கழுதையும் உருளைக்கிழங்கும்

    ஒரு சமயம் பெர்னாட்ஷா ஒரு தட்டு நிறைய அவித்த உருளைக்கிழங்குகளை வைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.அப்போது அவருடைய நண்பர் ஒருவர் அவரைப் பார்க்க வந்தார். பெர்னாட்ஷா அவரை வரவேற்று “வாருங்கள்! உருளைக்கிழங்கு சாப்பிடுங்கள்” என்றார்.அதற்கு நண்பர் “உருளைக்கிழங்குகளா? நோ! நோ! எனக்கு அறவே பிடிக்காது. அதை எப்படித்தான் ரசித்து ருசித்து சாப்பிடுகிறீர்களோ தெரியவில்லை?” என்றார். பெர்னாட்ஷா சிரித்தபடி ஒரு உருளைக்கிழங்கை எடுத்தார். அப்போது அது தவறி கீழே விழுந்து தோட்டத்தின் பக்கம் உருண்டு ஓடியது.அப்போது அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஓர்…

  • |

    Rich Dad Poor Dad – Robert Kiyosaki

    Robert Kiyosaki ஆல் எழுதப்பெற்று 1997 ஆம் ஆண்டில் வெளிவந்தது. வாழ்வில் பொருளாதார தன்னிறைவு அடைவதற்கு தனி மனித நுண்ணறிவு எத்தகைய முக்கியமான ஒன்று என்பதனை விவரிக்கும் நூல். 50 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலகம் முழுவதும் 30 மில்லியனுக்கும் அதிகமாக விற்பனையான நூல். இந்நூல் வாசிப்பவர்கள் பொருளாதார தன்னிறைவினை அடைந்தார்கள் என்பதனை விட‌ Robert Kiyosaki கண்டிப்பாக இப்புத்தகத்தினால் பொருளாதார நிறைவினை அடைந்திருப்பார் என்பது நிதர்சனம். இப்புத்தகத்தினை பத்து தனி அத்தியாயங்களாக‌ Robert Kiyosaki…

  • | |

    மாங்கொட்ட சாமி – புகழ்

    எழுத்தாளர் புகழால் எழுதப்பெற்ற சிறுகதைகளின் தொகுப்பு. மொத்தம் 13 சிறுகதைகள். செட்டிக்குளம் என்னும் கிராமத்திலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் நடைபெறும் சம்பவங்களே ஒவ்வொரு சிறுகதையும். இந்தக் கதைகளின் சிறப்பம்சம் என நான் கருதும் ஒன்று இதில் கையாளப்பட்டிருக்கக்கூடிய மொழி வழக்கு. புகழ் இயல்பிலேயே கிராமத்து வாழ்விலிருந்தமையால் அவருக்கு மிக எளிதாக இந்நடை கூடி வந்திருக்கிறது. அத்தகைய கிராம சூழ்நிலைகளிலிருந்து வளர்ந்து வந்த எவர் ஒருவரும் தன்னை மிக நெருக்கமாக இந்தக் கதைக்களத்திற்குள் இணைத்துக்கொள்ள முடியும். அத்தனை இயல்பான…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.