| | |

இந்திய உளவுத்துறை RAW எவ்வாறு இயங்குகிறது – குகன்

ஒவ்வொரு நாட்டிற்கும் ராணுவ பாதுகாப்பு எத்தனை முக்கியமானதோ அந்த அளவிற்கு உளவு நிறுவனமும் முக்கியமானது. உளவு நிறுவனங்களின் தேவை முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களுக்குப் பின்னர் அதீத முக்கியத்துவம் பெற்றதனை குறைந்தபட்ச வரலாற்று அறிதல் கொண்ட எவரும் உணர முடியும். அத்தகைய பணியை செய்யும் இந்திய அரசின் அதிகாரப்பூர்வ ஓர் அமைப்பே ரா.

ஐபி எனப்படும் உளவு அமைப்பு ஆங்கிலேயர் காலம் முதல் இந்தியாவில் இருந்து வந்தது. சுதந்திர இந்தியாவிலும் அதுவே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உளவுப் பணிகளை மேற்கொண்டு வந்தது. 1962 ல் சீனா மற்றும் 1965 ல் பாகிஸ்தானுடனாக போர்களின் போது சரியான உளவுத்தகவல்களை ஐபியால் திரட்ட முடியாததால் அப்போர்களில் சில பின்னடைவுகள் ஏற்பட்டது.

அதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உளவு செயல்பாடுகளை பிரித்து தனி அமைப்பினை உருவாக்குவது என்று 1968 ஆம் ஆண்டு அன்றைய பிரதமரான இந்திரா காந்தி தலைமையிலான அரசால் முடிவு செய்யப்பட்டு ரா உதயமானது. அந்த ராவின் செயல்பாடுகள் முற்றிலும் ரகசியமானவை என்றாலும், அவற்றைப் பற்றிய கடந்த 47 ஆண்டுகால செய்திகளின் அடிப்படையில் ராவின் செயல்பாடுகள் மற்றும் முக்கியத்துவம் போன்றவற்றை இப்புத்தகத்தில் விளக்கியுள்ளார் குகன். இந்திய உளவு அமைப்பு மற்ற நாடுகளின் எந்தெந்த நடவடிக்கைகளைக் கவனிக்கிறது, அதற்கான உளவு ஆட்களை எவ்வாறு தேர்வு செய்கிறது, மற்ற நாடுகளின் உளவு நிறுவனங்களோடு எப்படிப்பட்ட உறவைப் பேணுகிறது எனப் பல விவரங்கள் இப்புத்தகத்தில் உள்ளன.

ஆழமான தகவல்கள் இல்லையென்றாலும் கடந்த கால அரசியல் நடவடிக்கைகள், வெளிநாட்டு உறவு, வெளிநாட்டு கொள்கைகள், எல்லைப் பாதுகாப்பு, பொருளாதாரம் போன்றவற்றில் ராவின் முக்கியத்துவத்தினை அறிந்து கொள்ள ஓர் ஆரம்பப்புள்ளியாக இப்புத்தகத்தை வாசிக்கலாம்.

Similar Posts

  • |

    ஆயிரம் கைகள் – ஜெயமோகன்

    ஜெயமோகன் எழுதிக்கொண்டிருக்கும் மகாபாரதமாகிய வெண்முரசுவில் வரும் பரசுராமன் தொடர்பான அத்தியாயங்களைத் திரட்டி ஒரு சிறிய நூலாக வெளியிட்டிருக்கிறார்கள். ஜெயமோகன் கூறியது போல இது வெண்முரசில் நுழைய ஒரு வழி. பரசுராமனி பிறப்பிற்கான காரணம் முதல் பிருகுகுல பிராமணர்களிற்கும், யாதவ குடிகளுக்கும் பல தலைமுறைகள் நடந்த போரினைப் பற்றி சுருக்கமாக விளக்கும் நாவல். வாசிக்க வேண்டிய புத்தகம்.

  • தொடர்பெனும் சிக்கல்

    மனித குலத்தின் கடந்த கால வரலாற்றினை ஓரளவிற்கு வாசித்தால் நாம் ஒரு மிகப்பெரிய‌ மாற்றத்தினை உணரலாம். முன் காலங்களில் மிகப்பெரும் விஷயமாக இருந்த ஒன்று இன்று முற்றிலும் மாறிவிட்டிருக்கிறது. அது தொடர்பு. பழைய காலங்களில் ஒரு நாட்டிலிருந்து புதியதோர் நாட்டிற்குச் செல்வதென்பது மிகப்பெரிய‌ செயல்பாடாக இருந்திருக்கிறது, ஆறு மாத காலப்பயணம், 1 வருடப்பயணம் ஏன் திரும்பி வருவதென்பதே சாத்தியமில்லாத பயணம் என . ஆனால் இன்று ஒட்டுமொத்த உலகத்தினையும் சில மணி நேரங்களில் கடந்துவிட முடியும். காரணம்…

  • | |

    காஷ்மீரும் ராணுவமும்

    காஷ்மீர் ராணுவத்தின் செயல்பாடுகள் பற்றிய விவாதங்கள் பற்றிய நேரத்தில் வாசித்த சிறந்ததொரு கட்டுரை. திருச்சி வே விஜயகிருஷ்ணன் அவர்களால். எனக்கு சாதாரணமாகவே ஒரு கட்டுகோப்பான இயக்கங்கள் மீது ஒரு தனி மரியாதை உண்டு. அது கம்யூனிசமானாலும் ஆர்எஸ்எஸ் ஆனாலும் சரி. அதுவே இராணுவம் என்றால் சற்று அதிக்கப்படியான மரியாதைதான். அவற்றின் அங்கத்தினர்கள் சாமான்ய மனிதர்களின் உந்துதள்களை மீறிய வாழ்வை வாழ்வதனாலேயே அவர்களுக்கு சற்று சலுகைகள் தேவை என்பதே என் எண்ணம். அதிலும் இராணுவம் போன்ற தன உயிரை…

  • குறும்படம் – புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்

    சமீபத்தில் இணையத்தில் ரசித்த ஒரு குறும்படம், புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம். காணொளி இங்கே.

  • சொர்க்கத்தின் குழந்தைகள்

    சொர்க்கத்தின் குழந்தைகள் (Children of Heaven). ஈரானியத்திரைப்படம். 1997 ல் வெளிவந்தது. மஜித் மஜித் இயக்கம். அலி, சாரா இருவரும் அண்ணன் தங்கை. மிக ஏழ்மையான குடும்பம். தந்தை வேலைக்கு செல்ல, தாய் உடல் நலமின்றி இருக்கிறார். ஒருநாள் தங்கையின் கிழிந்த ஷூவை தைத்துக்கொண்டு வரும் வழியில் அலி அதனை தவற விட்டு விடுகிறான். தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. தங்கையிடம் அதனை அம்மாவிடமும், அப்பாவிடமும் கூற வேண்டாம் எனக் கேட்கிறான். இரவு படிக்கும் பொழுது ரகசியமாக இருவரும் காகிதத்தில்…

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.