| | |

தேர்தல்

நான் இந்த தேர்தலில் வாக்களிக்கும்பொழுது இவற்றை நினைவில் கொள்வேன்.

1. பெரிய கட்சிகள் என்ற காரணத்திற்காக மட்டும் ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்க மாட்டேன். ஏனெனில் அவர் தொகுதியின் பிரதிநிதியாக சட்டமன்றத்தில் செயல்படாமல் கட்சியின் பிரதிநிதியாக தொகுதியில் செயல்படும் வாய்ப்புகளே அதிகம்.

2. யார் வரவேண்டும் என நான் நினைக்கும் வேட்பாளருக்கு வாக்களிப்பேனேயன்றி யார் வரக்கூடாது என நினைக்கும் வேட்பாளரை வெல்லும் வாய்ப்புள்ளவருக்கு எக்காரணம் கொண்டு வாக்களிக்கமாட்டேன். ஏனெனில் நான் எந்த காரணத்திற்காக ஒரு வேட்பாளார் வரக்கூடாது என நினைக்கிறேனோ அதே காரணத்தினை அவரை வெல்லும் வாய்ப்பு உள்ளவர் அடுத்த தேர்தலில் அடையலாம். அதிமுக வேட்பாளரைத் தோற்கடிக்க நான் திமுக வேட்பாளருக்கு வாக்களித்தால் அடுத்த தேர்தலில் திமுக வேட்பாளரைத் தோற்கடிக்க அதிமுக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டியிருக்கும். ஆக ஒரு நாளும் நான் விரும்பும் ஓர் வேட்பாளர் வெற்றி பெற‌மாட்டார். அதற்குப் பதில் நான் வெற்றி பெற விரும்பும் வேட்பாளருக்கு வாக்களித்தால் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை நான் ஒரு ஓட்டு அதிகப்படுத்துகிறேன். மாற்றத்தை நானே தொடங்குவேன்.

3. தொகுதிக்கு நன்கு பரிச்சயமான அல்ல‌து தொகுதி மக்களின் பிரச்சினைகளுக்காக தேர்தல் காலம் அல்லாமல் மற்ற காலங்களிலும் போராடும் ஒருவர் தேர்தலில் நிற்கும் பொழுது அவருக்கு கண்டிப்பாக முன்னுரிமை அளிப்பேன்.

4. இன்றைய நிலையில் எந்த பத்திரிக்கையின் கருத்துக்கணிப்பையும் நம்பி அவர்கள் கூறும் வெற்றி வாய்ப்புள்ளவருக்கு வாக்களிக்க முடிவு செய்யமாட்டேன். அவர்களது கணிப்பினை ஒரு தரப்பாக மட்டுமே எடுத்துக்கொள்வேன். கட்சி சார்ந்த பத்திரிக்கை செய்திகளின் கணிப்புகளை முற்றிலுமாக புறந்தள்ளுவேன்.

5. நான் வாக்களிக்கும் வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்பதனால் அவருக்கு வாக்களிக்காமல் இருக்க மாட்டேன். நான், நான் வெற்றி பெற விரும்பும் வேட்பாளருக்கு வாக்களிப்பேனேயன்றி வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் வேட்பாளருக்கு வாக்களிக்க மாட்டேன். நான் வெற்றி பெற விரும்பும் வேட்பாளருக்கு நானே வாக்களிக்கவில்லையென்றால் வேறு யார் வாக்களிப்பார்?

6. என் தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் பற்றி அறிந்து கொள்ள முயல்வேன். நான் விரும்பும் ஒரு நல்ல வேட்பாளர் பொருளாதார காரணங்களால் பிரதான கட்சிகள் அளவிற்கு விளம்பரம் செய்ய முடியாதவராக இருக்கலாம். ஆனால் அதனையே நான் தகுதிக்குறைவாக எடுத்துக் கொள்ளமாட்டேன். மற்றவர்கள் 10 முறை பிரச்சாரத்திற்கு வந்தால் அந்த சுயமான வேட்பாளர் ஒருமுறை மட்டும் வரக்கூடியவராக இருப்பார். நான் அவரையும் அவரது திட்டங்களையும் முக்கியமாகக் கவனிப்பேன்.

7. நான் ஏற்றுக்கொள்ளக் கூடிய வேட்பாளர் இல்லாத பட்சத்தில் நான் NOTA விற்கே வாக்களிப்பேன். எக்காரணம் கொண்டும் வேறு ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்க மாட்டேன்.

Similar Posts

  • |

    அழகானவர்கள்

    சிவப்பாய் இருப்பவர்களே அழகானவர்கள், கருப்பு நிறத்தவர்கள் சற்று கீழே என கடந்த 30 ஆண்டுகளாகவே ஒருவகை மனநிலை நமக்குள் திணிக்கப்படுகிறது. இருபத்தைந்து விழுக்காடு சிவப்பு நிறத்தவர்கள்  இருந்தால் சற்றே ஆச்சரியம் அளிக்கக்கூடிய இந்த தமிழகத்தில் இந்த மனநிலை எப்படி நம‌க்குள் வந்திருக்கலாம்? ஒரு சில நண்பர்கள் இல்லை என மறுத்துப் பேசினாலும் உள்ளுக்குள் அவர்களுக்கும் அந்த எண்ணம் இருப்பதை பலமுறை அவர்களுடைய பேச்சுக்களில் உணர்ந்திருக்கிறேன். கிட்டத்தட்ட கருப்பென்றாலே அழகு குறைவு என்ற மனநிலை நம் அனைவருக்குமே. ‘கருப்பா…

  • உலகத்தொழிலாளர்களே! (ஆசானிடமிருந்து)

    உலகத்தொழிலாளர்களே என்ற தலைப்பில் மே தினத்தினையொட்டி ஆசான் 2011 ல் எழுதிய கட்டுரை. எத்துனை அடர்த்தியான கட்டுரை. அவர் ஆசானாக இருப்பதில் வியப்பேதுமில்லை. நன்றி: ஜெயமோகன் http://www.jeyamohan.in/16732#.VUbd7_mqqko மே மாதம் ஒன்றாம் தேதி, ஒலிபரப்புவதற்காக ஒரு பண்பலை வானொலியில் இருந்து தொலைபேசிப் பேட்டி எடுத்தார்கள். ஓரிரு சொற்கள், அதில் பாட்டுகளில் ஊடாக ஒலிக்கும் என நினைக்கிறேன்! அப்போது மனதில் பட்டதைச் சொன்னாலும் அதன்பின் அச்சிந்தனைகளை தொகுத்துக் கொள்ளலாம் என்று தோன்றியது. இன்று உழைப்பாளிகளின் நிலைமை எப்படி இருக்கிறது,…

  • | | | | |

    புதிய தலைமுறை வார இதழில்

    நான் எழுதிய இந்திய உளவுத்துறை எவ்வாறு செயல்படுகிறது புத்தக விமர்சனம் புதிய தலைமுறை 31 டிசம்பர் தேதியிட்ட வார இதழில் வெளிவந்துள்ளது. அக்கட்டுரை. ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண் என்பது வள்ளுவர் வாக்கு. அதாவது நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்திலேயே ஓர் அரசு சிறப்பாகச் செயல்பட முடியும். ஆம் இன்றும் அதுதான் நிலை. கடந்த 50 ஆண்டுகால வரலாற்றை…

  • Taxation and Human Evolution: Navigating the Challenges of a Globalised World

    The Evolutionary Pursuit of Improvement 🌟 Human history is a testament to our unyielding drive to improve and evolve. From primitive communities to modern societies, our quest for better living standards has shaped civilisations. 🌍 This inherent pursuit, deeply embedded in our nature, continues to influence societal development and aspirations in profound ways. Globalisation and…

  • | |

    தற்கொலைக் குறுங்கதைகள் – அராத்து

    அராத்து அவ்வப்போது ஃபேஸ்புக்கில் எழுதிய குறுங்கதைகளை உயிர்மை பதிப்பகம் நூலாக வெளியிட்டிருக்கிறார்கள். எதேச்சையாக கண்ணில் பட்ட நூல், இந்நூலின் வெளியீட்டு விழாவில் சாருவும், ஜெயமோகனும் கலந்துகொண்ட நினைவு. அதனால் இப்புத்தகத்தை வாசிக்கலாம் என நினைத்து எடுத்து வந்தேன். ஒட்டுமொத்த நாவலின் பெரும்பான்மை பேசுபொருள் உடலுறவு. காமம் அல்ல. இதற்கு பாலுறவுக் கதைகளாகவே வெளியிடப்படும் கதைகள் எவ்வளவோ பரவாயில்லை. அவர்கள் அவர்களுடைய கதைகளை உலகத்தர நாவல் என்றோ அல்லது தமிழின் முதல் ஃபோர்னோ நாவல் என்றோ இன்ன பிற…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.