Author: மகிழ்நன்
Written by Eric Windmill. As the name describes, this book is about Google’s open source hybrid framework which can be used to develop mobile applications for the android and iOS platforms. If you are a back end/front end/full stack developer,…
ஜெயமோகன் எழுதிக்கொண்டிருக்கும் மகாபாரதமாகிய வெண்முரசுவில் வரும் பரசுராமன் தொடர்பான அத்தியாயங்களைத் திரட்டி ஒரு சிறிய நூலாக வெளியிட்டிருக்கிறார்கள். ஜெயமோகன் கூறியது போல இது வெண்முரசில் நுழைய ஒரு வழி. பரசுராமனி பிறப்பிற்கான காரணம் முதல் பிருகுகுல பிராமணர்களிற்கும், யாதவ குடிகளுக்கும் பல தலைமுறைகள் நடந்த போரினைப் பற்றி சுருக்கமாக விளக்கும் நாவல். வாசிக்க வேண்டிய புத்தகம்.
லக்ஷ்மி சரவணகுமாரால் எழுதப்பெற்ற பத்து சிறுகதைகளின் தொகுப்பு. உயிர்மை பதிப்பக வெளியீடு. அஜ்ஜி மயான காண்டம் ஜீஸசின் முத்தம் ஒரு துண்டு வானம் டெய்ஸி Fake அப்பாவும் அம்மாவும் காதலிக்காத கதை கப்பல்காரர் வீடு ஒரு அவசர கடிதம் வள்ளி திருமணம் இவையே அக்கதைகள். மனித வாழ்வின் வெவ்வேறு நிலைகளை வெவ்வேறு மனிதர்களின் வெவ்வேறு நிலைகளில்…
ஜெயகாந்தன் அவர்களால் 1979 ஆம் ஆண்டில் எழுதப்பெற்ற குறு நாவல். ஊருக்கு வெளியேயுள்ள கரும்பு ஆலைக்கு அருகில் பலகாரக்கடை நடத்தி வரும் பாப்பாத்தியம்மாளின் பார்வையில் கதை சொல்லப்படுகிறது. அவள் ஓர் அனாதை. அவளுக்கென்ற இப்போது யாரும் இல்லை. அங்கு வரும் அனாதை எவரையும் தன்னோடு வைத்துக்கொள்கிறாள். அவர்கள் சில நாட்கள் இருந்த பின்னர் ஏதேதோ காரணங்களுக்காக…
1951 ஆம் ஆண்டில் தாராசங்கர் பந்த்யோபாத்யாய அவர்களால் வங்க மொழியில் எழுதப்பெற்ற நாவல். பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலை தமிழில் த.நா.குமாரசாமி அவர்கள் 1972 ல் மொழிபெயர்த்துள்ளார். இந்திய அரசின் சாகித்திய அகாதெமி மற்றும் மேற்கு வங்க அரசின் ரபீந்திர புரஷ்கார் விருதுகளை வென்ற நாவல். இந்நாவல் ஜீவன் மாஷாய் என்னும் வைத்தியரின் நினைவோட்டத்தின் வாயிலாக…
இந்த ஆண்டில் 1. 52 புத்தகங்களை வாசிப்பது2. வாசித்த புத்தகங்களுக்கான அறிமுகத்தை தமிழில் காணொளியாக இணையத்தில் பதிவேற்றுவது3. தெலுங்கு மொழியினை சரளமாக பேசவும்,எழுதவும்,வாசிக்கவும் கற்றுக்கொள்வது என மூன்று செயல்களைத் திட்டமிடுகிறேன். சென்ற ஆண்டில் 50 புத்தகங்களை வாசிக்கத்திட்டமிட்டு 7 புத்தகங்களை மட்டுமே முழுமையாக வாசித்தேன். எந்த விதமான காரணம் கூறிக்கொண்டாலும் திட்டமிட்டதனை அடய முடியவில்லை என்பதே…
2019 ஆண்டில் மூன்று செயல்பாடுகளை திட்டமிட்டிருந்தேன். அதனை என்னுடைய தளத்திலும் பதிவிட்டும் இருந்தேன் (http://www.mahiznan.com/2019/01/06/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e2%80%8d-2019/) . வெளிப்படையாக பதிவிட்டதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று, வருட இறுதியில் அவ்வாண்டில் திட்டமிட்டவற்றில் எவ்வளவை முடிக்க முடிந்திருக்கிறது, திட்டமிடுதலுக்கும் அடைவதற்குமான இடைவெளி எவ்வளவு இருக்கிறது என்பதனை துல்லியமாக அறிந்துகொள்ள வேண்டும் என்பதுதான். 2019 ல் திட்டமிடப்பட்ட மூன்று செயல்பாடுகள். 50…
This books follows the popular book ‘The Sapiens’ from the same author Yuval Noah Harari. If you have not read the book ‘The Sapiens’ it should be read first. So that it will give better picture on understanding this book….
ம. தவசி அவர்களால் எழுதப்பெற்ற சிறுகதைத் தொகுப்பு. காவ்யா பதிப்பகம் வெளியீடு. மிகவும் வித்தியாசமான சிறுகதைகள். சராசரியான வார இதழ் சிறுகதைகளை வாசிக்கும் ஒருவர் இக்கதைகளைக் கண்டிப்பாக வாசிக்க வேண்டும். சராசரி சிறுகதைகளில் காட்சிகளின் சித்தரிப்பு, உறவுகளின் சித்தரிப்பு இறுதியில் ஒரு திருப்பம் இப்படியாகத்தான் அமைப்பு இருக்கும். ஆனால் இதிலுள்ள ஒவ்வோர் கதையும் அத்தகைய எந்த…
வெ. இறையன்பு அவர்களால் சுட்டி விகடனில் எழுதப்பெற்று தொடராக வெளிவந்த சுயமுன்னேற்றத் தொடர். சுட்டி விகடனில் வெளிவந்ததால் முற்றிலும் குழந்தைகளை நோக்கி எழுதப்பட்ட கட்டுரைகள். பெரும்பாலும் நீதி போதனைக் கட்டுரைகள். அத்தோடு அந்தந்த காலகட்டத்தின் நிகழ்வுகளை ஒட்டி எழுதப்பட்டவை. உதாரணமாக தேர்வு சமயத்தில் வெளிவந்த இதழில் தேர்வு தொடர்பான சில அறிவுரைகள், விடுமுறைக்கால இதழில் விடுமுறை…