Category: கவிதை
சிங்கப்பூரில் வாழும் சத்திக்கண்ணனால் எழுதப்பட்ட கவிதைப் புத்தகம். பெரும்பாலானவை வசனக்கவிதைகள். ஒரு சில முத்தாய்ப்பான கவிதைகளும் உண்டு. உதாரணமாக மனைவியைப்பற்றிய கவிடையொன்றில் எல்லாவற்றையும் தூரமாகத்தெரிந்தால் அழகென்றிருந்த எனக்கு அருகில் மலர் நீ இருக்கும் போது என்ன செய்ய? என்னும் கவிதை அழகு. வானவில், கனவு போன்றவை நான் ரசித்த கவிதைகள். நான் ரசிக்காதது முன்னுரை எழுதியிருப்பவர்…
வழுக்கைத் தலைகளைப் பார்க்கும்போதெல்லாம் நாளைய நானாகத் தெரிகிறார்கள் அவர்கள்! ஒருவேளை அவர்களுக்கு நேற்றைய அவர்களாகத் தெரியலாம் நான்!
பிறந்த வீட்டைவிட புகுந்த வீட்டில் செழிப்பாய் இருக்கிறாள் - தமிழ்மகள்
பயம் உடுத்தும் ஆடை – தைரியம்
அடைமொழிக்கு ஆசைப்படும் மனிதாஅறிவாயா? இறந்தபின் உன் பெயரே உனதில்லை,பிணமென்பார்.
இறைவன் வரைந்த கவிதையின் முற்றுப்புள்ளி,என்னவளின் முகத்தில் மச்சம்.