Category: புத்தகம்
India After Gandhi புத்தகத்தின் தமிழ்ப்பதிப்பின் இரண்டாம் பாகம். இப்புத்தகம் 1960 களிலிருந்து தொடங்குகிறது. 1964 ல் பிரதமர் நேருவின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், லால் பகதூர் சாஸ்திரி பிரதமரானது, அதனைத் தொடர்ந்து இந்திரா காந்தி பிரதமரானது, நேருவுக்கும் இந்திரா காந்திக்குமான முரண்பாடுகள், அதன் விளைவாக ஏற்பட்ட அவசரநிலைப் பிரகடனம், நிலையில்லாத ஆட்சிகள், மீண்டும்…
Benjamin Hulme-Cross என்பவரால் எழுதப்பட்டது. சாத்தான்களை ஓட்டும் கதை. சிறுகதை எனலாம். குழந்தைகள் மற்றும் ஆரம்பகால வாசிப்பு நிலைகளில் உள்ளவர்களின் வாசிக்கும் பழக்கத்தினை ஊக்குவிக்கக்கூடிய புத்தகம். அதற்காகவே புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறைவான வார்த்தைகள், பெரிய எழுத்துக்கள். ப்லட் சாத்தான்களை ஓட்டுபவர். அவருக்கு உதவக்கூடிய சிறுவர்கள் எட்ஜும் மேரியும்.ஒருமுறை அவர்கள் ஓரிடத்தைக் கடக்கும்பொழுது ஓர் கிராமம் அதீத வறுமையில்…
சுந்தர ராமசாமியால் எழுதப்பட்டது. 1981 ஆம் ஆண்டில் வெளிவந்தது. அக்காலகட்டத்தில் மிகப்பெரிய விவாதங்களை ஏற்படுத்திய நாவல். ஓர் இளம் எழுத்தாளன் தன்னுடைய ஆளுமையாக எண்ணும் ஓர் எழுத்தாளனைப் பற்றி எழுதும் குறிப்புகள், அதுவே நாவல்.மிகச்சிறந்த அங்கதம். சுந்தர ராமசாமி தன் வாழ்நாளில் சந்தித்த, பழகிய உண்மை நபர்களை வைத்தே நாவலை வடிவமைத்ததாக ஓர் விமர்சனம் உண்டு….
ராமச்சந்திர குஹாவால் எழுதப்பட்டது. ஆங்கிலத்தில் எழுதப்பெற்ற நூல் ஆர்.பி.சாரதியால் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிறந்த மொழியாக்கம். புத்தகம் இரு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. சரி, ஏற்கனவே இந்திய வரலாற்றினைப்பற்றி ஏராளமான புத்தகங்கள் வெளிவந்துள்ளனவே, அவற்றில் இல்லாத அப்படி என்ன சிறப்பு இந்தப்புத்தகத்திற்கு? இரண்டு முக்கியமான காரணங்கள். முதலாவது, இதுவரையான இந்திய வரலாற்று நூல்கள் இந்தியப் போராட்ட நிகழ்வுகளை…
ஒவ்வொரு நாட்டிற்கும் ராணுவ பாதுகாப்பு எத்தனை முக்கியமானதோ அந்த அளவிற்கு உளவு நிறுவனமும் முக்கியமானது. உளவு நிறுவனங்களின் தேவை முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களுக்குப் பின்னர் அதீத முக்கியத்துவம் பெற்றதனை குறைந்தபட்ச வரலாற்று அறிதல் கொண்ட எவரும் உணர முடியும். அத்தகைய பணியை செய்யும் இந்திய அரசின் அதிகாரப்பூர்வ ஓர் அமைப்பே ரா. ஐபி எனப்படும்…
ஆங்காங்கே சிதறிக்கிடந்த மங்கோலிய இனக்குழுக்களை ஒன்றினைத்த மாவீரன் செங்கிஸ்கான். அலெக்ஸாண்டரின் பேரரசைவிட நான்கு மடங்கு பெரிய மங்கோலியப் பேரரசை நிறுவியவர். அவரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது முகிலின் செங்கிஸ்கான். இப்புத்தகம் செங்கிஸ்கானுடைய தாயார் மற்றோர் இனக்குழுவால் கவரப்படுவதிலிருந்து துவங்கி செங்கிஸ்கானுடைய வாரிசுகளால் எவ்வாறு மங்கோலிய பேரரசு பிரிக்கப்பட்டு, வலுவிழக்கத் தொடங்கியது என்பது வரை விவரிக்கப்பட்டுள்ளது. டெஜிமுன்…
மருதன் அவர்களால் எழுதப்பெற்ற புத்தகம். கியூபாவினுடைய பிதாமகரான பிடல் காஸ்ட்ரோவினுடய வாழ்க்கை வரலாறு. கியூபா எதற்காக அமெரிக்காவிற்கு முக்கியமான ஒரு நாடு. இன்றுவரை அமெரிக்காவினால் கபளீகரம் செய்யப்படாமல் இந்த தேசம் இருப்பதற்கான காரணங்கள் என்னென்ன என பலவற்றை இப்புத்தகம் விவரிக்கிறது. புத்தகம் பிடல் காஸ்ட்ரோவினுடைய தந்தையின் காலத்தில் இருந்து தொடங்கி இன்றைய பிடல் காஸ்ட்ரோ வரை…
1950 களில் ப.சிங்காரம் அவர்களால் எழுதப்பெற்ற நாவல். இந்தோனேசியாவில் வாழும் தமிழ் மக்களுடைய வாழ்வியலே கதையின் கரு. இந்த நாவலே முதன்முதலாக ப.சிங்காரத்தால் எழுதப்பெற்ற நாவல். இந்நாவலின் தொடர்ச்சியாகவே புயலிலே ஒரு தோணியை எழுதினார். ஆதலால் இந்த நாவலுக்கும் புயலிலே ஒரு தோணிக்கும் ஓர் இணைப்பை உணரலாம். அதே கதை மாந்தர்கள், அதே காலகட்டம். ஆனால்…
1960 களில் ப.சிங்காரம் அவர்களால் எழுதப்பெற்ற நாவல். இந்தோனேசியாவில் வாழும் தமிழ் மக்களுடைய வாழ்வியலே கதையின் கரு. அத்தோடு கதை மாந்தர்களின் நினைவின் வழியாக இந்திய கிராமங்களினுடைய வாழ்வியலும் விவரிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் சிவகங்கை மற்றும் அதன் சுற்று வட்டாரக் கிரானங்கள். நாவல் பாண்டியன் என்னும் இளைஞனைச் சுற்றியே நகருகின்றது. பாண்டியன் பிழைப்பிற்காக இந்தோனேசியா சென்று, பின்னர்…
ரியான் பாபினக்ஸ் மற்றும் ஜான் க்ரும்போட்ஸ் என்ற இருவரால் எழுதப்பெற்ற சுய முன்னேற்ற புத்தகம் Fail Fast Fail Often. தற்போதைய அறிவியல் உலகின் செயல்பாடுகளின் தாரக மந்திரம் என்பது உடனடி செயல்பாடு, பின்னர் மேம்பாடு என்பதே. இதுவே கூகுள், ஃபேஸ்புக் போன்ற தலைசிறந்த நிறுவனங்களின் இன்றைய செயல்முறை. அதாவது முற்றிலும் திட்டமிட்டு அல்லது முழுமையாக…