அதென்ன நடப்பு கணக்கு பற்றாக்குறை?

blog_post_7சமீபத்திய நாட்களில் ஊடகத்தின் உச்சத்தை தொட்ட செய்தி இதுதான்.

“அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி”

இதற்கு நமது அரசு கூறும் காரணம்,நடப்புக் கணக்குப் பற்றாக்குறையும், அளவுக்கதிகமான தங்க இறக்குமதியும் என்று.அதென்ன நடப்பு கணக்கு பற்றாக்குறை(Current Account Deficit)? அது எப்படி இந்திய ரூபாயின் மதிப்பை நிர்ணயம் செய்கிறது? கீழே படியுங்கள், விளங்கும்.

நாட்டின் மொத்த ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் உள்ள வித்தியாசமே நடப்பு கணக்கு வேறுபாடு. இது பற்றாக்குறையாகவோ உபரியாகவோ இருக்கலாம். அதாவது 100 ரூபாய்க்கு ஏற்றுமதி செய்து, 100 ரூபாய்க்கு இறக்குமதி செய்தால் நடப்பு கணக்கு வேறுபாடு 0. அதாவது பற்றாக்குறையும் இல்லை, உபரியும் இல்லை.
அதுவே, ஏற்றுமதி 100 ரூபாய்க்கும் இறக்குமதி 110 ரூபாய்க்கும் செய்தால் அது பற்றாக்குறை. (Deficit)
ஏற்றுமதி 110 ரூபாய்க்கும் இறக்குமதி 100 ரூபாய்க்கும் செய்தால் அது உபரி. (Surplus). இப்பொழுது நமது நாட்டின் பிரச்சினை பற்றாக்குறை. அதாவது இறக்குமதி ஏற்றுமதியை விட அதிகமாக இருக்கிறது.

ஏற்றுமதி இறக்குமதி என்பதனை பொருள்களை அனுப்புவது பெறுவது என்று மட்டும் கொள்ளாதீர்கள். அனைத்து வித அந்நிய வரவுகளும் ஏற்றுமதி, அனைத்து அந்நிய செலவுகளும் இறக்குமதி எனக்கொள்ளுங்கள்.

நடப்பு கணக்கின் வேறுபாட்டை நிர்ணயிக்கும் நான்கு காரணிகள் இவை.

1. பொருள்கள்
2. சேவைகள்
3. வருமானம்
4. நடப்பு பரிமாற்றங்கள்

1. பொருள்கள்: என்ணெய், தங்கம், உணவுப் பொருள்கள், உதிரி பாகங்கள் போன்றவை.

2. சேவைகள்: சுற்றுலா,உரிமம் போன்றவற்றின் மூலம் வரக்கூடிய அல்லது செலவளிக்கக் கூடிய பணம்

3. வருமானம்: அந்நிய முதலீடு போன்றவை.

4. நடப்பு பரிமாற்றங்கள்: வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் அனுப்பும் பணம், வெளிநாடுகளில் இருந்து வரும் நிதி உதவி போன்றவை.

இந்த நான்கிலும் ஏற்படக்கூடிய உபரியும் பற்றாக்குறையுமே நடப்புக்கணக்கை நிர்ணயம் செய்கின்றன.

சரி,இந்த வேறுபாட்டிற்கும் பண மதிப்பிற்கும் என்ன சம்பந்தம்? எளிது.

இந்தியாவில் நடைபெறும் வர்த்தகத்தில் 90 விழுக்காட்டிற்கு மேல் அமெரிக்க டாலரின் அடிப்படையில்தான் நடைபெறுகிறது. அதாவது வாங்குபவரும் விற்பவரும் அமெரிக்க பணத்தில்தான் பரிமாற்றம் செய்து கொள்வார்கள்.

அதனால் நாம் 100 அமெரிக்க டாலரை ஏற்றுமதியின் மூலம் பெற்றால் இறக்குமதி செய்யும் பொழுது 100 டாலர் வரை பிரச்சினை இல்லை. இருப்பதைக் கொடுத்துவிடலாம். ஆனால் அதற்குமேலான தொகைக்கு இறக்குமதி செய்யும்பொழுது, நமக்குத்தேவையான டாலரை நாம் வெளிச்சந்தையில் வாங்கவேண்டியுள்ளது. எனவே 50 ரூபாய் கொடுத்து ஒர் டாலர் வாங்கும் நாம் தேவை அதிகமாக அதிகமாக 51 ரூபாய், 52 ரூபாய் கொடுத்து ஒரு டாலரை வாங்குகிறோம். இந்திய பண மதிப்பு வீழ்ச்சி அடைகின்றது.

நடப்பு கணக்கு பற்றாக்குறை என்பது இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஒரு மோசமான விசயமல்ல. அது குறுகிய கால பற்றாக்குறையாக இருக்கும் வரை. உதாரணமாக நாம் உதிரி பாகங்களை ஒரு நாட்டிலிருந்து இறக்குமதி செய்து முழுப்பொருளாக மாற்றி ஏற்றுமதி செய்வதாக வைத்துக் கொள்வோம்.

அப்பொழுது நாம் அதிகமாக இறக்குமதி செய்வதால் நடப்பு கணக்கில் பற்றாக்குறை (Deficit) ஏற்படும்தான். ஆனால் பின்னாளில் நாம் ஏற்றுமதி செய்யும் பொழுது அது நடப்புக்கணக்கில் உபரியை (Surplus) ஏற்படுத்தி சரி செய்து விடும். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உகந்த‌து.

அதனால் தான் குறுகிய காலப் பற்றாக்குறை என்பது சரி. நீண்ட காலப் பற்றாக்குறை என்பது சரியன்று. இந்தியாவில் இப்பொழுது நீண்டகாலப் பற்றாக்குறை. இந்த நீண்ட கால நடப்பு கணக்கு பற்றாக்குறை என்பது மேலும் மேலும் பற்றாக்குறையை ஏற்படுத்தும். அந்நிய முதலிட்டாளர்கள் இந்த பற்றாக்குறையினால் மேலும் மேலும் முதலீடு செய்ய தயங்குவார்கள். அந்நிய வரத்து மேலும் குறையும். நடப்பு கணக்கு பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும்.

அரசு என்ன செய்கிறது?

இந்தியாவில் எண்ணெய்க்கு அடுத்து அதிகம் இறக்குமதியாவது தங்கம்தான். எண்ணெய் வணிகத்திற்கு அத்தியாவசியமாக இருப்பதால் ஏதாவது ஒரு வழியில் பொருளாதாரத்தோடு கலந்து விடுகிறது. ஆனால் தங்கம் மேலும் பெருக்கப்படாமல் வீடுகளில் அடைபடுகிறது. இதுதான் இந்திய அரசின் கவலை. அதனால் தான் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 4%, 6% என இப்பொழுது 8% ஆக நிர்ணயித்திருக்கிறார்கள். மேலும் மக்கள் தங்கத்தில் முத்லீடு செய்யாமல், மற்றவற்றில் முத்லீடு செய்வதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இது போன்ற சமயங்களில் அரசு இறக்குமதி வரியை அதிகரிப்பது, வட்டியை அதிகரிப்பது போன்ற செயல்பாடுகளினால் நிலைமயை ஓரளவு சமாளிக்கிறது. ஆனால் சரியான தீர்வு என்பது GDP (Gross Domestic Product) எனப்படும் உள்நாட்டு உற்பத்தியை பெறுக்குவதே ஆகும். ஆனால் இது உடனடியாக சாத்தியமில்லாத்தால் அரசு மற்ற வழிகளில் இறங்கி பற்றாக்குறையை சரி செய்ய முயல்கிறது.

இதன் மூலம் நீங்கள் இன்னொன்றும் அறியலாம். பொதுத்துறை நிறுவனங்களிலும், சில்லறை வர்த்தகத்திலும் அந்நிய முதலீட்டை அனுமதிக்க அரசு விரைவாக முயல்வதன் காரணம் இதுதான். ஏற்கனவே கைபேசித் துறையில் அந்நிய முதலீட்டை 70% அனுமதித்து விட்டார்கள். இப்போது அதை 100% ஆக்கப் போகிறார்கள். இது போன்ற செயல்பாடுகளால் அந்நிய வரவுகளை உறுதி செய்து நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை கட்டுக்குள் வைக்கவே அரசு விரும்புகிறது. மற்றபடி குறைந்த விலையில் கிடைக்கும், விலைவாசி உயராது என்பதெல்லாம் மக்களுக்காகவும், ஊடகங்களுக்காகவும் தேடிக் கண்டுபிடிக்கும் விசயங்கள்.

Similar Posts

  • காந்தியும் காமமும்

    மகாத்மா காந்தி குறித்த பொதுவான பல தவறான‌ அபிப்ராயங்கள் நம்மில் பலருக்கு உண்டு. குறிப்பாக அவரது ஒழுக்கம் மற்றும் பெண்கள் தொடர்பான செயல்பாடுகள். அவற்றைப்பற்றி முழுமையான ஆய்வுகளோ, புரிதலோ இல்லாமல் அங்கொன்றும், இங்கொன்றுமாக நாம் கேட்ட, கண்ட, படித்த தகவல்களின் கழிவே அது. காந்தியின் காமம் குறித்த அணுகுமுறைகள் தொடர்பாக எழுத்தாளர் ஜெயமோகனின் கட்டுரைகள், தெளிவானதொரு புரிதலுக்கு தொடக்கமாக‌ இருக்குமென கருதுகிறேன். காந்தியும் காமமும் 1 காந்தியும் காமமும் 2 காந்தியும் காமமும் 3 காந்தியும் காமமும்…

  • தொடர்பெனும் சிக்கல்

    மனித குலத்தின் கடந்த கால வரலாற்றினை ஓரளவிற்கு வாசித்தால் நாம் ஒரு மிகப்பெரிய‌ மாற்றத்தினை உணரலாம். முன் காலங்களில் மிகப்பெரும் விஷயமாக இருந்த ஒன்று இன்று முற்றிலும் மாறிவிட்டிருக்கிறது. அது தொடர்பு. பழைய காலங்களில் ஒரு நாட்டிலிருந்து புதியதோர் நாட்டிற்குச் செல்வதென்பது மிகப்பெரிய‌ செயல்பாடாக இருந்திருக்கிறது, ஆறு மாத காலப்பயணம், 1 வருடப்பயணம் ஏன் திரும்பி வருவதென்பதே சாத்தியமில்லாத பயணம் என . ஆனால் இன்று ஒட்டுமொத்த உலகத்தினையும் சில மணி நேரங்களில் கடந்துவிட முடியும். காரணம்…

  • |

    அழகானவர்கள்

    சிவப்பாய் இருப்பவர்களே அழகானவர்கள், கருப்பு நிறத்தவர்கள் சற்று கீழே என கடந்த 30 ஆண்டுகளாகவே ஒருவகை மனநிலை நமக்குள் திணிக்கப்படுகிறது. இருபத்தைந்து விழுக்காடு சிவப்பு நிறத்தவர்கள்  இருந்தால் சற்றே ஆச்சரியம் அளிக்கக்கூடிய இந்த தமிழகத்தில் இந்த மனநிலை எப்படி நம‌க்குள் வந்திருக்கலாம்? ஒரு சில நண்பர்கள் இல்லை என மறுத்துப் பேசினாலும் உள்ளுக்குள் அவர்களுக்கும் அந்த எண்ணம் இருப்பதை பலமுறை அவர்களுடைய பேச்சுக்களில் உணர்ந்திருக்கிறேன். கிட்டத்தட்ட கருப்பென்றாலே அழகு குறைவு என்ற மனநிலை நம் அனைவருக்குமே. ‘கருப்பா…

  • | |

    பேரும் புகழும் – எசு.எசு.அருணகிரிநாதர்

    எசு.எசு.அருணகிரி நாதர் என்பவரால் 2007 ல் எழுதப்பெற்ற அறிவுரை நூல். பெரும்பாலும் வெளிப்படையான அறிவுரைகளின் தொகுப்பு. ஆசிரியரைப்பற்றி எனக்கு தெரியவில்லை. ஆனால் தன்னுடைய வயதான காலகட்டத்தில் எழுதியிருப்பதாகவே நூல் அமைப்பு உள்ளது. பொறாமை, அன்பு,காமம் போன்ற பல்வேறு தலைப்புகளில் மனிதர்களுக்கு அறிவுறை கூறுகின்றார். பெரும்பாலான அறிவுரைகளில் ஓ மனிதனே! என ஒட்டுமொத்த மனிதகுலம் நோக்கி தன்னுடைய அனுபவத்தை அறிவுரையாகத் தருகிறார். இதனை நாம் வயது முதிர்ந்த பல்வேறு பெரியவர்களிடம் கேட்கலாம். அப்பெரியவர்களின் சொற்கள் நூலாகியிருக்கிறது. ஒட்டுமொத்தமும் வெளிப்படையான…

  • எளிய அழகிய இஸ்லாம்

    அனைவரிடத்தில் இஸ்லாம் மதத்தினைப் பற்றிய ஒரு தவறான அபிப்ராயத்தினை ஏற்படுத்தி இருக்கும் ஒரு சாரர்கள் மறந்த இஸ்லாமின் ஒர் அழகிய‌ பக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.