எங்கே விவசாயம்?

blog_post_2இந்த கேள்விகளுக்கு பதிலளியுங்கள்.

உங்கள் தொழில் எது?
உங்கள் தந்தையின் தொழில் எது?
உங்கள் தாத்தாவின் தொழில் எது?

முதல் கேள்விக்கான‌ பதில் விவசாயம் என 5% பேரிடம் இருந்தால் ஆச்சர்யம்.
இரண்டாம் கேள்விக்கான் பதில் விவசாயம் என 50% ற்க்கும் அதிகமானோர் கூறுவோம்.
மூன்றாம் கேள்விக்கான பதில் விவசாயம் என கண்டிப்பாக 90% ற்க்கும் அதிகமானோர் கூறுவோம். இதுதான் இன்றைய விவசாயத்தின் நிலை.

இரண்டே தலைமுறையில் விவசாயத்தை 85% அழித்துவிட்டு விலைவாசி உயருகிறது என்று கூறக்கூடிய உரிமை விவசாயித்தைத் தவிர எவருக்குமில்லை.

ஏன், எவ்வாறு?

விவசாயம் அழிந்ததற்கு தனிப்பட்ட ஒரு விசயத்தை நாம் காரணமாக கூறிவிட முடியாது. அது ஒரு கூட்டு செயல்பாடு. நான், நீங்கள், அரசு ஏன் விவசாயியே கூட சேர்ந்துதான் அழித்தோம்.

அரசு:

விவசாய அழிவில் முக்கியப்பங்கு ஆற்றியது நமது அரசு.விவசாயத்தை பெருக்குவது என்பது அரசைப் பொறுத்தமட்டில் விவசாயக்கடனை அதிகரிப்பது. அதோடு முடிந்து போகிறது அரசின் கடமை. வருட பட்ஜெட்டில் கடைசியாக இவ்வாறு கூறி விடுவார்கள். “சென்ற ஆண்டை விட இந்த ஆண்டில் 1000 கோடி ரூபாய் அதிகமாக கடன் வழங்கப்பட்டுள்ளது”. ஆனால் இந்த வருடம் மேலும் 1000 கோடிக்கு விவசாயிகளைக் கடனாளிகளாக்கி இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. விவசாயி தன் சுய வருமானத்தில் விவசாயம் செய்ய முடியாத நிலையில் விவசாயத்தை சீரழித்த பாக்கியத்தின் பெரும் பங்கு அரசுக்கே.

சரி அரசு அளிக்கும் அந்த கடன் தொகை எந்த சிறு விவசாயிக்கு போனது? பெரிய பண்ணை முதலாளிகளுக்குத்தானே அது உதவுகிறது.

இது மட்டுமில்லாது,வேறொரு நாட்டில் மலிவாக கிடைக்கும் பொருளை இற்க்குமதி செய்து, அதனை சந்தையில் குறைந்த விலையில் விற்று விவசாயிகளை அழித்ததும் இந்த அரசுதான்.

இதுதான் நடந்தது வட இந்தியாவில். வெளிநாட்டில் இருந்து பருத்தி இறக்குமதி செய்யப்பட்டது. கூறப்பட்ட காரணம் “தேவையான அளவி பருத்தி உற்பத்தி இல்லை, இந்தியாவில்”. உற்பத்தியை அதிகரிக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளோ, உற்பத்தி குறைவுக்கான காரணத்தை சேகரிக்கவோ செய்யவில்லை. மாறாக தேவைக்கு மேல் இறக்குமதி செய்தார்கள். மலிவு விலையில் பருத்தி கிடைத்தது சந்தையில். விவசாயிகளால் அவ்வளவு குறைவான விலைக்கு விற்க முடியாது. வேறு வழியில்லை, விற்றார்கள் நட்டத்திற்காக. விளைவு. விவசாயிககள் தற்கொலை செய்து கொண்டார்கள். அரசு வேடிக்கை பார்த்தது.

வெளிநாடுகளில் பருத்தியின் உற்பத்திச் செலவு குறைவாக இருந்தது.அப்படிப்பட்ட சூழ்நிலை அவர்களுக்கு. அதனால் குறைந்த விலைக்கு ஏற்றுமதி செய்தார்கள்.

அப்படிப்பட்ட சூழ்நிலையை இந்தியாவில் விவசாயிக்கு ஏற்படுத்தி இருக்க வேண்டும் அரசு. சரி அதுதான் இல்லை. இந்திய பருத்தியின் உற்பத்தி விலைக்கேற்ப அதனை கொள்முதல் செய்து மானியத்தின் மூலமாக குறைந்த விலைக்கு சந்தையில் விட்டிருக்க வேண்டும். இருந்த விவசாயிகளையாவது காப்பாற்றியிருக்க முடியும்.

ஆனால் இறக்குமதி செய்த விலையைக்கொண்டு இந்திய பருத்தி மதிப்பிடப்பட்டது. குறைந்த விலையே நிர்ணயம் செய்யப்பட்டது. விளைவு, விவசாயிககள் மரணம்.

கார்ப்பரேட் நிறுவனங்கள்:

அரசோடு கார்ப்பரேட் நிறுவனங்களும் அழித்தன‌ விவசாயத்தை தன் பங்கிற்கு. நகரை ஒட்டியுள்ள விவசாய நிலங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களாலும், ரியல் எஸ்டேட் நிறுவனங்களாலும் வாங்கப்பட்டன. 20 வருடம் விளைந்தால் கிடைப்பதை விட பல மடங்கு பணம் கிடைக்கும் என விவசாயிக்கு காட்டப்பட்டது. ஏற்கனவே பசியிலும் கடனிலும் இருந்த விவசாயி நிலத்தை விற்றான். விற்காத ஒரு சில விவசாயிகளையும் சுற்றியிருந்த நிலங்களையெல்லாம் வளைத்து விற்கும் நிலைக்கு தள்ளினார்கள். சமீபத்தில் அரசு சில சட்ட வரைவுகளை கடுமையாக்கியிருக்கிறது, விவசாய நிலங்கள் விற்கப்படாமல் இருப்பதற்காக. தும்பை விட்டாச்சு, வாலைப் பிடித்து என்ன செய்ய?

படித்தவர்கள்:

படித்தவர்கள் மத்தியில் பள்ளிப்பருவம் தொட்டே விவசாயம் என்பது வேறு வழியே இல்லையென்றால் செய்யப்படும் தொழில் என்ற மனப்பாங்கே விதைக்கப்பட்டு விட்டது. படித்து மாநில மாவட்ட அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்கள் கூறுவதெல்லாம் தான் டாக்டர் ஆவேன் என்பதும், இன்ஜினியர் ஆவேன் என்பதும் தான். இதனால் இதனை கேட்கும் ஒரு விவசாயின் மகன் கூட விவசாயம் என்பது ஒரு மதிப்பில்லாத ஒரு தொழிலாக மனதில் பதிய வைத்துக்கொள்கிறான்.

இடைத்தரகர்கள்:

உலகில் தான் உற்பத்தி செய்யும் பொருளுக்கு விலை நிர்ணயம் செய்யும் அதிகாரம் இல்லாத ஒருவன் விவசாயியே! வேறு எந்த தொழிலிலும் அவ்வாறு இல்லை. இந்த நிலையை நீண்டகாலமாகவே மாற்றாமல் வைத்திருப்பதில் பெரும்பங்கு இடைத்தரகர்களையே சாரும். விவசாய பொருள் தேவைப்படும் நிறுவனங்கள் பாதி விலைக்கு கேட்டால், கால் விலைக்கு விவசாயியிடம் வாங்கி விடுகிறான் இடைத்தரகன். வரண்டு விடுகிறான் விவசாயி.

விவசாயி:

அவரவர்க்கு விவசாயத்தை அழித்ததில் பங்கு உள்ளதைப்போல விவசாயிக்கும் பங்கு உண்டு. “நாந்தான் வயல்ல கெடந்து கஸ்டப்படுறேன், நீயாவது படிச்சு நல்ல வேலைக்கு போப்பா” என்று கூறும் விவசாயி சிறு வயதிலே தன் மகனிடம், விவசாயம் சரியான வேலை இல்லை எனப் பதிய வைத்து விடுகிறான். அதற்கு அவன் சந்தித்த பிரச்சினைகளும், ஏமாற்றங்களும் காரணமாய் இருக்கலாம். அவன் மகனும் விவசாயத்தை தான் செய்யப் போவதில்லை என்ற மனப்பாங்குடனே வளர்கிறான்.

இது மட்டுமல்ல, இன்னும் பலப்பல விசயங்கள் விவசாயத்தை அழித்தன. அழிக்கின்றன. நாம் என்ன செய்யலாம்? குறைந்த பட்சம் நாம் நினைவில் கொள்ளலாம் இவற்றை.

1. உலகின் முதல் குடிமகன் விவசாயியே.!

2. வருமானத்தால் வேலையை தரம் பிரிக்கமாட்டேன்.!

3. விவசாயி மகனாகப் பிறந்த நான் மரணிக்கும் வேலையில் விவசாயியாய் மரணிப்பேன்.!

Similar Posts

  • | | |

    BackStage – Montek Singh Ahluwalia

    மான்டெக் சிங் அலுவாலியா அவர்களால் எழுதப்பெற்று 1990 களில் இந்தியா மேற்கொண்ட பொருளாதாரா சீர்திருத்தங்களைப் ப‌ற்றி விரிவாக விவரிக்கும் புத்தகம். இந்திய வரலாற்றையும், பொருளாதாரத்தையும் அறிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நூல். பெரும்பாலும் தனி நபர் நினைவிலிருந்து எழுதக்கூடிய புத்தகங்கள் எல்லாம் அவர்களைப் பற்றிய மற்றும் அவர்களைச் சுற்றி நடைபெற்ற‌ நிகழ்வுகளின் தொகுப்பாகவே இருக்கும். அத்தகைய ஒரு புத்தகத்தினை எழுதுவதில் தனக்கு உடன்பாடு இல்லை எனக்கூறிவிட்டே புத்தகத்தினை தொடங்குகிறார் அலுவாலியா. இந்த புத்தக்கத்தினை வாசித்து…

  • உலகத்தொழிலாளர்களே! (ஆசானிடமிருந்து)

    உலகத்தொழிலாளர்களே என்ற தலைப்பில் மே தினத்தினையொட்டி ஆசான் 2011 ல் எழுதிய கட்டுரை. எத்துனை அடர்த்தியான கட்டுரை. அவர் ஆசானாக இருப்பதில் வியப்பேதுமில்லை. நன்றி: ஜெயமோகன் http://www.jeyamohan.in/16732#.VUbd7_mqqko மே மாதம் ஒன்றாம் தேதி, ஒலிபரப்புவதற்காக ஒரு பண்பலை வானொலியில் இருந்து தொலைபேசிப் பேட்டி எடுத்தார்கள். ஓரிரு சொற்கள், அதில் பாட்டுகளில் ஊடாக ஒலிக்கும் என நினைக்கிறேன்! அப்போது மனதில் பட்டதைச் சொன்னாலும் அதன்பின் அச்சிந்தனைகளை தொகுத்துக் கொள்ளலாம் என்று தோன்றியது. இன்று உழைப்பாளிகளின் நிலைமை எப்படி இருக்கிறது,…

  • | | |

    இந்திய உளவுத்துறை RAW எவ்வாறு இயங்குகிறது – குகன்

    ஒவ்வொரு நாட்டிற்கும் ராணுவ பாதுகாப்பு எத்தனை முக்கியமானதோ அந்த அளவிற்கு உளவு நிறுவனமும் முக்கியமானது. உளவு நிறுவனங்களின் தேவை முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களுக்குப் பின்னர் அதீத முக்கியத்துவம் பெற்றதனை குறைந்தபட்ச வரலாற்று அறிதல் கொண்ட எவரும் உணர முடியும். அத்தகைய பணியை செய்யும் இந்திய அரசின் அதிகாரப்பூர்வ ஓர் அமைப்பே ரா. ஐபி எனப்படும் உளவு அமைப்பு ஆங்கிலேயர் காலம் முதல் இந்தியாவில் இருந்து வந்தது. சுதந்திர இந்தியாவிலும் அதுவே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உளவுப்…

  • மாற்றத்தின் மாற்றம்

    எத்தகைய மாற்றத்தின் மீதும் மீண்டும் மாற்றம் ஏற்படும் என்பது மீண்டும் நிருபணம் ஆகியிருக்கின்றது. Facebook ஒட்டுமொத்த இணைய உலகை ஆட்சி செய்துகொண்டிருக்கும் வேளையில் அதனுடைய ஒரு பகுதி சேவையை மட்டுமே தன் முழு சேவையாகக் கொண்டு கோலோச்சுகின்றது WhatsApp. See the slides below for details.

  • சிங்கப்பூரில் ரமலான்

    சிங்கப்பூர் மக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று ரமலான். வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். பெரும்பாலான முஸ்லீம் மக்கள் மலே இனத்தவரகாவே இருக்கின்றனர். இந்திய முஸ்லீம்களும், சீன முஸ்லீம்களும் குறைந்த அளவிலேயே இருக்கின்றனர். நம் ஊரைப்போலவே இங்கும் பண்டிகைக்கால சந்தைகள் உண்டு. ஆனால் இங்கு முப்பது நாட்களுக்கு மேலாக சந்தைகளை நடத்துகின்றனர். இந்நாட்டு மக்களின் பழக்க வ‌ழக்கங்களை அறிந்து கொள்வதற்காக‌ சந்தைக்கு நானும் சென்றேன். பல நாட்டு உணவு வகைகள், பானங்கள், அலங்காரப் பொருட்கள், ஆடைகள்,மெத்தை விரிப்புகள்,  விளையாட்டுப் பொருட்கள்,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.