எங்கே விவசாயம்?

blog_post_2இந்த கேள்விகளுக்கு பதிலளியுங்கள்.

உங்கள் தொழில் எது?
உங்கள் தந்தையின் தொழில் எது?
உங்கள் தாத்தாவின் தொழில் எது?

முதல் கேள்விக்கான‌ பதில் விவசாயம் என 5% பேரிடம் இருந்தால் ஆச்சர்யம்.
இரண்டாம் கேள்விக்கான் பதில் விவசாயம் என 50% ற்க்கும் அதிகமானோர் கூறுவோம்.
மூன்றாம் கேள்விக்கான பதில் விவசாயம் என கண்டிப்பாக 90% ற்க்கும் அதிகமானோர் கூறுவோம். இதுதான் இன்றைய விவசாயத்தின் நிலை.

இரண்டே தலைமுறையில் விவசாயத்தை 85% அழித்துவிட்டு விலைவாசி உயருகிறது என்று கூறக்கூடிய உரிமை விவசாயித்தைத் தவிர எவருக்குமில்லை.

ஏன், எவ்வாறு?

விவசாயம் அழிந்ததற்கு தனிப்பட்ட ஒரு விசயத்தை நாம் காரணமாக கூறிவிட முடியாது. அது ஒரு கூட்டு செயல்பாடு. நான், நீங்கள், அரசு ஏன் விவசாயியே கூட சேர்ந்துதான் அழித்தோம்.

அரசு:

விவசாய அழிவில் முக்கியப்பங்கு ஆற்றியது நமது அரசு.விவசாயத்தை பெருக்குவது என்பது அரசைப் பொறுத்தமட்டில் விவசாயக்கடனை அதிகரிப்பது. அதோடு முடிந்து போகிறது அரசின் கடமை. வருட பட்ஜெட்டில் கடைசியாக இவ்வாறு கூறி விடுவார்கள். “சென்ற ஆண்டை விட இந்த ஆண்டில் 1000 கோடி ரூபாய் அதிகமாக கடன் வழங்கப்பட்டுள்ளது”. ஆனால் இந்த வருடம் மேலும் 1000 கோடிக்கு விவசாயிகளைக் கடனாளிகளாக்கி இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. விவசாயி தன் சுய வருமானத்தில் விவசாயம் செய்ய முடியாத நிலையில் விவசாயத்தை சீரழித்த பாக்கியத்தின் பெரும் பங்கு அரசுக்கே.

சரி அரசு அளிக்கும் அந்த கடன் தொகை எந்த சிறு விவசாயிக்கு போனது? பெரிய பண்ணை முதலாளிகளுக்குத்தானே அது உதவுகிறது.

இது மட்டுமில்லாது,வேறொரு நாட்டில் மலிவாக கிடைக்கும் பொருளை இற்க்குமதி செய்து, அதனை சந்தையில் குறைந்த விலையில் விற்று விவசாயிகளை அழித்ததும் இந்த அரசுதான்.

இதுதான் நடந்தது வட இந்தியாவில். வெளிநாட்டில் இருந்து பருத்தி இறக்குமதி செய்யப்பட்டது. கூறப்பட்ட காரணம் “தேவையான அளவி பருத்தி உற்பத்தி இல்லை, இந்தியாவில்”. உற்பத்தியை அதிகரிக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளோ, உற்பத்தி குறைவுக்கான காரணத்தை சேகரிக்கவோ செய்யவில்லை. மாறாக தேவைக்கு மேல் இறக்குமதி செய்தார்கள். மலிவு விலையில் பருத்தி கிடைத்தது சந்தையில். விவசாயிகளால் அவ்வளவு குறைவான விலைக்கு விற்க முடியாது. வேறு வழியில்லை, விற்றார்கள் நட்டத்திற்காக. விளைவு. விவசாயிககள் தற்கொலை செய்து கொண்டார்கள். அரசு வேடிக்கை பார்த்தது.

வெளிநாடுகளில் பருத்தியின் உற்பத்திச் செலவு குறைவாக இருந்தது.அப்படிப்பட்ட சூழ்நிலை அவர்களுக்கு. அதனால் குறைந்த விலைக்கு ஏற்றுமதி செய்தார்கள்.

அப்படிப்பட்ட சூழ்நிலையை இந்தியாவில் விவசாயிக்கு ஏற்படுத்தி இருக்க வேண்டும் அரசு. சரி அதுதான் இல்லை. இந்திய பருத்தியின் உற்பத்தி விலைக்கேற்ப அதனை கொள்முதல் செய்து மானியத்தின் மூலமாக குறைந்த விலைக்கு சந்தையில் விட்டிருக்க வேண்டும். இருந்த விவசாயிகளையாவது காப்பாற்றியிருக்க முடியும்.

ஆனால் இறக்குமதி செய்த விலையைக்கொண்டு இந்திய பருத்தி மதிப்பிடப்பட்டது. குறைந்த விலையே நிர்ணயம் செய்யப்பட்டது. விளைவு, விவசாயிககள் மரணம்.

கார்ப்பரேட் நிறுவனங்கள்:

அரசோடு கார்ப்பரேட் நிறுவனங்களும் அழித்தன‌ விவசாயத்தை தன் பங்கிற்கு. நகரை ஒட்டியுள்ள விவசாய நிலங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களாலும், ரியல் எஸ்டேட் நிறுவனங்களாலும் வாங்கப்பட்டன. 20 வருடம் விளைந்தால் கிடைப்பதை விட பல மடங்கு பணம் கிடைக்கும் என விவசாயிக்கு காட்டப்பட்டது. ஏற்கனவே பசியிலும் கடனிலும் இருந்த விவசாயி நிலத்தை விற்றான். விற்காத ஒரு சில விவசாயிகளையும் சுற்றியிருந்த நிலங்களையெல்லாம் வளைத்து விற்கும் நிலைக்கு தள்ளினார்கள். சமீபத்தில் அரசு சில சட்ட வரைவுகளை கடுமையாக்கியிருக்கிறது, விவசாய நிலங்கள் விற்கப்படாமல் இருப்பதற்காக. தும்பை விட்டாச்சு, வாலைப் பிடித்து என்ன செய்ய?

படித்தவர்கள்:

படித்தவர்கள் மத்தியில் பள்ளிப்பருவம் தொட்டே விவசாயம் என்பது வேறு வழியே இல்லையென்றால் செய்யப்படும் தொழில் என்ற மனப்பாங்கே விதைக்கப்பட்டு விட்டது. படித்து மாநில மாவட்ட அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்கள் கூறுவதெல்லாம் தான் டாக்டர் ஆவேன் என்பதும், இன்ஜினியர் ஆவேன் என்பதும் தான். இதனால் இதனை கேட்கும் ஒரு விவசாயின் மகன் கூட விவசாயம் என்பது ஒரு மதிப்பில்லாத ஒரு தொழிலாக மனதில் பதிய வைத்துக்கொள்கிறான்.

இடைத்தரகர்கள்:

உலகில் தான் உற்பத்தி செய்யும் பொருளுக்கு விலை நிர்ணயம் செய்யும் அதிகாரம் இல்லாத ஒருவன் விவசாயியே! வேறு எந்த தொழிலிலும் அவ்வாறு இல்லை. இந்த நிலையை நீண்டகாலமாகவே மாற்றாமல் வைத்திருப்பதில் பெரும்பங்கு இடைத்தரகர்களையே சாரும். விவசாய பொருள் தேவைப்படும் நிறுவனங்கள் பாதி விலைக்கு கேட்டால், கால் விலைக்கு விவசாயியிடம் வாங்கி விடுகிறான் இடைத்தரகன். வரண்டு விடுகிறான் விவசாயி.

விவசாயி:

அவரவர்க்கு விவசாயத்தை அழித்ததில் பங்கு உள்ளதைப்போல விவசாயிக்கும் பங்கு உண்டு. “நாந்தான் வயல்ல கெடந்து கஸ்டப்படுறேன், நீயாவது படிச்சு நல்ல வேலைக்கு போப்பா” என்று கூறும் விவசாயி சிறு வயதிலே தன் மகனிடம், விவசாயம் சரியான வேலை இல்லை எனப் பதிய வைத்து விடுகிறான். அதற்கு அவன் சந்தித்த பிரச்சினைகளும், ஏமாற்றங்களும் காரணமாய் இருக்கலாம். அவன் மகனும் விவசாயத்தை தான் செய்யப் போவதில்லை என்ற மனப்பாங்குடனே வளர்கிறான்.

இது மட்டுமல்ல, இன்னும் பலப்பல விசயங்கள் விவசாயத்தை அழித்தன. அழிக்கின்றன. நாம் என்ன செய்யலாம்? குறைந்த பட்சம் நாம் நினைவில் கொள்ளலாம் இவற்றை.

1. உலகின் முதல் குடிமகன் விவசாயியே.!

2. வருமானத்தால் வேலையை தரம் பிரிக்கமாட்டேன்.!

3. விவசாயி மகனாகப் பிறந்த நான் மரணிக்கும் வேலையில் விவசாயியாய் மரணிப்பேன்.!

Similar Posts

  • | |

    தற்கொலைக் குறுங்கதைகள் – அராத்து

    அராத்து அவ்வப்போது ஃபேஸ்புக்கில் எழுதிய குறுங்கதைகளை உயிர்மை பதிப்பகம் நூலாக வெளியிட்டிருக்கிறார்கள். எதேச்சையாக கண்ணில் பட்ட நூல், இந்நூலின் வெளியீட்டு விழாவில் சாருவும், ஜெயமோகனும் கலந்துகொண்ட நினைவு. அதனால் இப்புத்தகத்தை வாசிக்கலாம் என நினைத்து எடுத்து வந்தேன். ஒட்டுமொத்த நாவலின் பெரும்பான்மை பேசுபொருள் உடலுறவு. காமம் அல்ல. இதற்கு பாலுறவுக் கதைகளாகவே வெளியிடப்படும் கதைகள் எவ்வளவோ பரவாயில்லை. அவர்கள் அவர்களுடைய கதைகளை உலகத்தர நாவல் என்றோ அல்லது தமிழின் முதல் ஃபோர்னோ நாவல் என்றோ இன்ன பிற…

  • அந்நிய நேரடி முதலீடு என்ன செய்யும்?

    சில்லறை வர்த்தக அந்நிய நேரடி முதலீடு என்ன செய்யும்? இந்தியச் சந்தையில் அந்நிய முதலீட்டிற்கான பல்வேறு விதிகளையும், உச்ச வரம்பையும் மத்திய அரசு தளர்த்தியிருக்கின்றது. அதில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு அனைத்து மாநில ஒப்புதலோடுதான் நிறைவேற்றப்படும் என மத்திய அரசு அறிவித்து அதன் காரணமாக எழுந்த கொந்தளிப்புகளை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டது. இது தற்காலிகம்தான்.  விரைவில் அரசு அதையும் அறிவிக்கும். அந்நிய முதலீட்டாளர்கள் சில்லறை வணிகத்தில் முதலீடு செய்வதால் நன்மை என்ன? தீமை என்ன? இந்தியாவில்…

  • Who is a Common Man?

    நம‌து சமூகத்தின் இன்றைய அடுக்கில் இந்தச் சொற்றொடர் பலரிடமிருந்து வெளிப்படக்காணலாம். “நான் மற்றவரைப்போலல்ல” இதன் சாரம்சம் என்பது. “நான் எண்ணத்திலும் சிந்தனையிலும் அறிவிலும்  ஒரு சாதாரண வெகுஜன பிரதிநிதி சிந்திப்பதைக்காட்டிலும் உயர்வாக சிந்திப்பவன்”. இதை புறவயமாக மறுத்தாலும் அதுதான் ஆழ்மன உண்மை. சரி. அந்தச் சராசரி மனிதன் யார்? அவனுடைய செயல்பாடுகள் எத்தகையவை? எல்லோரும் தன்னை சராசரியிலிருந்து விடுபட்ட ஒன்றாகக் கருதினால் உண்மையில் அந்த சராசரி மனிதன் என்பவன் யார்? எங்கிருக்கிறான்?

  • |

    A Letter to President

    Dear Sir/Madam, I am Rajeshkumar, from a Village named Nattampatti, Pudukkottai, Tamil Nadu, India. I am a proud Indian who values our country’s rich heritage, culture, and traditions. I have a deep appreciation for the sacrifices our forefathers made to secure our freedom, and I am grateful for the democracy that we have today. I…

  • | | | |

    இந்தியாவில் முகலாயர்கள் ‍- 1

    16 ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டு வரையிலான‌ ஏறத்தாழ 350 ஆண்டுகள் இந்தியாவில் முகலாயர்களின் ஆட்சிக்காலம். அதுவரை இந்தியாவினை ஆண்டு வந்தவர்கள் ஆப்கானிய‌ வம்சத்தைச் சேர்ந்த சுல்தானியர்கள். சுல்தானியர்களும் இன்றைய இந்திய நிலப்பரப்பு முழுவதையும் ஆளவில்லை. இன்றைய வட இந்திய நிலப்பகுதி, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றை உள்ளடக்கிய ஓர் நிலப்பகுதியினை ஆண்டு வந்தார்கள். அவர்களைத் தோற்கடித்தே முகலாயப் பேரரசினை பாபர் தொடங்கி வைத்தார். மங்கோலிய இன‌ செங்கிஸ்கான் வழி வந்தவர் தைமூர். தைமூர் மங்கோலிய,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.