Who is a Common Man?

cmanநம‌து சமூகத்தின் இன்றைய அடுக்கில் இந்தச் சொற்றொடர் பலரிடமிருந்து வெளிப்படக்காணலாம்.

“நான் மற்றவரைப்போலல்ல”

இதன் சாரம்சம் என்பது. “நான் எண்ணத்திலும் சிந்தனையிலும் அறிவிலும்  ஒரு சாதாரண வெகுஜன பிரதிநிதி சிந்திப்பதைக்காட்டிலும் உயர்வாக சிந்திப்பவன்”. இதை புறவயமாக மறுத்தாலும் அதுதான் ஆழ்மன உண்மை.

சரி. அந்தச் சராசரி மனிதன் யார்? அவனுடைய செயல்பாடுகள் எத்தகையவை? எல்லோரும் தன்னை சராசரியிலிருந்து விடுபட்ட ஒன்றாகக் கருதினால் உண்மையில் அந்த சராசரி மனிதன் என்பவன் யார்? எங்கிருக்கிறான்?

உண்மையாதெனின் “நான் மற்றவரைப் போலில்லை” எனக் கூறும் ஒவ்வொருவருமே இன்றைய சராசரி மனிதன்தான். இந்த வசனம் நாற்பதாண்டுகளுக்கு முன்னால் அன்றைய மாற்றுச் சிந்தனையாளர்களால் மொழியப்பட்ட ஒன்று. இன்று அதனை நகல் எடுக்கும் ஒருவன் எப்படி மாற்றுச் சிந்தனையாளனாக இருக்க முடியும்?

ஆம், அன்றைய சராசரி மனிதனுக்கான வரையறை இன்று இல்லை. மாற்றங்கள் பல வந்துவிட்டன. அன்றைய காலக்கட்டத்தில் கருத்து தெரிவிக்கும் ஒருவரே பொது நீரோட்டத்திலிருந்து விலகியவராக இருப்பார். பொது சராசரி மனிதன் என்பவன் இந்தக் கருத்துக்களை கவனிப்பவனாகவும், அல்லது அதைப்பற்றியே அறியாதவனாகவும் இருப்பான்.

ஆனால் இன்று அவ்வாறு இல்லை. ஒருவன் கருத்து தெரிவிப்பதற்கான குறைந்தபட்ச தகவல்களை ஊடகங்கள் அளித்துவிடுகின்றன. சிரத்தை எடுத்து தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. ஒருவேளை எந்த செய்தியையும் படிக்காமல் இருந்தால் கூட முக்கிய நிகழ்வுகள் எப்படியாவது நண்பர்கள் வழியாகவோ ஃபேஸ்புக் போன்ற ஊடகங்கள் வழியாகவோ நம்மை வந்தடைந்துவிடும்.

நாம் செய்வதெல்லாம் அறிந்த தகவ‌ல்களைக் கொண்டு வாந்தி எடுப்பது மட்டுமே. கருத்து தெரிவிக்கும் முன்னோ, விவாதிக்கும் முன்னோ அது  தொடர்பாக எந்த ஆய்வும் செய்திருக்க மாட்டோம், அல்லது அதைப் பற்றி முழுமையாகப் படித்திருக்க மாட்டோம். ஆனால் பங்கேற்போம். 

ஏன் மூன்று பத்திக்குமேல் எந்த ஒரு கட்டுரையும் வாசிக்கும் திராணி கூட‌ இருக்காது. அங்கங்கே நுனிப்புல் மேய்ந்து விட்டு கருத்து தெரிவிக்கும் நாம் அனைவருமே சாதாரண மனிதன் தான். தலைப்புச் செய்தியை மட்டுமே விவாதிப்பவரெல்லாரும் சாதாரண மனிதன் தான். ஏனென்றால் அத‌னைப் பற்றி மட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாக நமக்குத் தகவல் கிடைக்கிறது. 

நாம் எதை விவாதிக்க வேண்டுமென்பதை ஊடகங்கள் தீர்மானிக்குமென்றால் நாம் சாதாரன மனிதன் தான். மாறுபட்ட சிந்தனையாளராக நம்மை நினைக்க வேண்டியதில்லை. இன்று நம்மை வந்தடையும் தகவல்களை வைத்து கருத்து தெரிவிக்கும் இந்த செயலை போன தலைமுறையிலேயே தேடிப்போய் அறிந்து தெரிவித்துவிட்டார்கள். அவர்கள்தான் சிந்தனையாளர்கள்.

அப்படியானால் இன்றைய மாற்றுச் சிந்தனையாளர்கள் யார்? அவர்களின் செயல்பாடு எப்படிப்பட்டது?

இதுதான் என வறையறுக்க முடியாதென்றாலும், அவர்களின் நிலை கண்டிப்பாக இதற்கு கீழ் இல்லை என சில செயல்பாடுகளைக் கூறலாம்.

1. மேற்கூறியது போல தன்னை வந்தடையும் தகவல்களைக் கொண்டு விவாதமோ, கருத்து வெளியிடுதலோ செய்ய மாட்டார்கள்.

2. வேண்டுமானால் அவர்கள் மேலும் அறிந்து கொள்ள அல்லது ஆய்வு செய்ய அவர்களை வந்தடைந்த தக‌வல்கள் பயனுறும்.

3. நுனிப்புல் மேய்ந்து கருத்து சொல்ல மாட்டார்கள். அடுத்த தகவல் வந்தவுடன் முதல் தகவலை கூண்டோடு மறந்து போக மாட்டார்கள்.

4. நான் மற்றவரைப்போல் அல்ல எனக் கூற மாட்டார்கள். அவர்கள் செயல்பாடு வழி அது வெளிப்படும்.

5. முழுமையான தரவுத்திரட்டுகள், ஆய்வுகள் இல்லாமல் கருத்தோ விவாதமோ செய்ய மாட்டார்கள்.

6. நடப்பு நிகழ்வுகளின் தலைப்புச் செய்திகளை பெரும்பாலும் விவாதிக்க மாட்டார்கள்.

ஒருவேளை நாம் இந்த வெகுஜன நீரோட்டத்தினின்று விலகி மாற்றுச் சிந்தனையாளராக வேண்டுமாயின் முதலில் இன்றைய நிலையில் சாதாரண மனிதனின் செயல்பாடுகள் என்ன என்பதனை வரையறை செய்து அதிலிருந்து விலகி பின்னர் மாற்றுச் சிந்தனை நீரோட்டத்தினில் கலக்க முயலலாம்.

நன்றி.

Similar Posts

  • அறிதலின் துவக்கம்

    அறிதலின் அடிப்படைத்துவக்கமே தன் குறைகளைத் தன்னளவில் ஏற்றுக்கொள்வதே. தன் செயலை சரியாக செய்யக்கூடிய ஒருவன் அதனை மேம்படுத்தும் வழியைத் தேடுகிறான். தன்னால் செயலையே செய்து முடிக்க‌ முடியாத ஒருவன் அச்செயலை செய்து முடிப்பதையே பெரிய சாதனையாகக் கருதும்பொழுது அங்கே மேம்படுத்துவது என்ற‌ சொல்லே பொருளற்றுப் போகிறது.

  • |

    சமையல்கட்டும் கிச்சனும்

    கிச்சன் என்ற சொல் சமைய‌ல்கட்டு என்ற சொல்லிருந்து எவ்வளவு தூரம் வேறுபடுகிறது? என்னால் என்றுமே கிச்சனை அத்தனை அந்நியோன்யமாக உணர முடிந்ததே இல்லை. அது முற்றிலும் நிற்பதற்கான இடம் மட்டுமே. சமைப்பதற்கான இடம் மட்டுமே. அங்கு வேறு எதுவும் செய்ய முடியாது. அங்கே தரையில் உட்கார்வதற்கு வழியே இல்லை. மிகக்குறுகலான இட வசதி கொண்டதாக இருக்கும். நகரங்களின் இடவசதிப்பற்றாக்குறையில் அதற்கு ஆகக்குறைந்த அள‌விற்கே இடம் ஒதுக்கும் இன்றைய சூழ்நிலையில் வேறு வழியும் இல்லை. ஆனால் நான் உணர்ந்த…

  • | | |

    ஜெயலலிதா கைதும், மக்களின் மனநிலையும்

    ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் ஜாமின் பெற்று வெளியே வந்துவிட்டார். அதனைப் பற்றிய பேச்சு முற்றிலுமாக அடங்கிவிட்டது. அது தொடர்பான நிகழ்வுகளின் போதே இப்பதிவை இட வேண்டுமெனத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் அப்போது ஏற்பட்ட இரைச்சலுக்கு மத்தியில் இதற்கு இடமில்லாது போகுமென்பதால் அவ்விவாதங்கள் முற்றிலுமாக அடங்கும் வரைக் காத்திருந்து இப்பதிவை இடுகின்றேன். ஜெயலலிதா கைது ஆன பின்னர் அதனைப் பற்றி அளவுக்கு அதிகமாக விவாதித்து கட்டுரைகளை எழுதியவர்களோ, அதனைப்பற்றி செய்திகளைப் படித்துவிட்டு அப்போதைய நாட்களில் மட்டும் நண்பர்கள் மத்தியில் தனக்கு…

  • | |

    ஒற்றைப்படையாகும் உலகம்

    நான் சில ஆசிய நாடுகளுக்கு சமீபத்தில் பயணம் செய்தேன். அப்பயணங்களின் போது நான் உணர்ந்த மிகப் பொதுவான ஒரு விஷயம் எல்லா நாடுகளும் தங்களுடைய சுயத்தை இழந்து ஒற்றைப்படையாக ஆகிக்கொண்டிக்கின்றன என்பதையே. ஒருவேளை நாம் இந்தியா தவிர்த்து வேறு எந்த ஆசிய நாட்டிற்கும் செல்லாதவராக இருப்போமேயானால் மற்ற நாடுகள் முற்றிலும் வேறானவையாக இருக்கும் என்று எண்ண வேண்டியதேயில்லை போலிருக்கிறது. காரணம் பெரும்பாலான நாடுகளில் அங்கிருக்கும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை மறந்துவிட்டுப் பார்த்தால் அது முற்றிலும் நம்முடைய இந்தியாவின்…

  • | |

    அமரர் கல்கியின் பெண்குலத்தின் வெற்றி

    கல்கி இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களால் கல்கி இதழில் எழுதப்பெற்று வெளிவந்த ஆசிரியர் கட்டுரைகளின் தொகுப்பு. பெரும்பாலும் 1947 ஆம் ஆண்டுகளின் வாக்கில் எழுதப்பெற்றவை. பெரும்பாலான கட்டுரைகள் அக்காலத்தில் புகழ்பெற்றிருந்தவர்களைப் பற்றியும், இசைத்துறை சார்ந்தவர்கள் பற்றியுமாக இருக்கிறது. உதாரணமாக அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த இசை வல்லுநர்கள், கதா கலாட்சேபம் செய்பவர்கள், கர்நாடக இசைக் கலைஞர்கள் போன்றவர்களைப்பற்றி. அனேகக் கட்டுரைகள் பிராமணர்களைப் பற்றியவையே. இதனை அவர் திட்டமிட்டு செய்ததாக நினைக்கவேண்டியதில்லை. அக்காலகட்டத்தின் சமூகப்பார்வையின் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்ளலாம். அல்லது கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள்…

  • |

    குடி அரசு

    தமிழகத்தில் மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டு விட்டது. அரசாங்கம் தன்னுடைய பொருளாதார நிலைக்கு இது மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்று நினைத்து பல வருடங்களாகி விட்டது. அதனால் மதுக்கடைகள் அரசு மூடிவிடும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது. ஒருவேளை சமூக ஊடகங்களிலும், செய்தித் தொலைக்காட்சிகளிலும் இதனை ஒரு கருப்பொருளாகக் கொண்டு விவாதம் நடத்தலாம். சில கிண்டல் செய்திகளை பரப்பி மகிழலாம். அவ்வளவே. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு கள்,சாராயம் போன்றவை தமிழகத்தில் ஆங்காங்கே விற்பனை செய்யப்பட்டுக்கொண்டிருந்த போது, 1886 ஆம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.