கற்போம்

education2கல்வி என்பது என்ன?

இன்றைய நிலையில் கல்வி என்பது தனிமனித பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்யும் ஒரு கருவி என்பதாகிவிட்டது.அதாவது ஒருவன் தனது கல்வியினால் தன்னுடைய பொருளாதாரத்தேவைகளை நிறைவு செய்து கொள்ள முடியாமல் போனால் அவன் கற்ற கல்வி தவறானது என்றே பொருள் கொள்ளப்படும்.

அது கல்வி அல்ல. பயிற்சி. ஒரு குறிப்பிட்ட எதிபார்ப்போடு செய்யப்படக்கூடிய ஒரு செய்முறை என்பது பயிற்சியே. கல்வி என்பது அதுவல்ல.

 கல்வி என்பது கற்றல். அது நாம் பள்ளி, கல்லூரிகளில் மட்டுமே கற்க முடியும் என்பதல்ல. அங்கே கிடைப்பது கல்விக்கடலின் ஒரு துளி. சமுத்திரத்தின் மிச்சமும் சேர்ந்ததுதான் கல்வி.அது பள்ளி செல்லாத ஒருவரிடமும் உண்டு. சூழ்நிலைகளினின்று கற்றிருப்பார்.

நமது பாடத்திட்டம், தேர்வு இந்த இரண்டையும் தாண்டி அறியத்துவங்கும் ஒரு செயல்பாடே கல்வி. உலகின் மாபெரும் கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர்கள் எல்லோருமே பள்ளி, கல்லூரிக்கல்விக்கு அப்பாற்பட்டு கற்றவர்களே.

 அதற்கு என்ன செய்ய வேண்டும்?

அதிகம் வாசிப்பதே இதன் முதல் நிலை. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கலை, அறிவியல், தொழில்நுட்பம், இலக்கியம், கவிதை, வரலாறு, வணிகம் என எதுவாக வேண்டுமானாலும்.  எது என முடிவு செய்ய முடியவில்லையா? எல்லாவற்றையும் படிப்போம்.

புத்தகங்கள் வாசிப்பதில் பல நன்மைகள் உண்டு. ஒரு மிகப்பெரும் எழுத்தாளர் எழுதிய ஒரு நூலை வாசிக்கும் பொழுது அது தொடர்பான அவருடைய அறிவை எல்லாம் நாம் பெற்று விட முடியும்.

உதாரணமாக ஒரு வருட முயற்சியில் அவர் அந்த நூலை வெளியிட்டிருப்பாரானால் அதனை ஒரு வாரத்தில் படித்து முடித்துவிடுவதன் மூலமாக அவரின் அந்த நூல் தொடர்பான‌ அறிவை நாம் பெற்றுவிடலாம். அல்லது குறைந்த பட்சம் 90 விழுக்காட்டையாவது பெற்றுவிடலாம். ஏனென்றால் ஒரு எழுத்தாளர் தனக்குத் தெரிந்த தகவல்களை மறைத்து எந்த ஒரு நூலையும் எழுத மாட்டார்.

மிக முக்கியமான இன்னொரு நன்மை யாதெனின் ஒவ்வொரு புத்தகத்தை படித்து முடிக்கும்பொழுதும் நம் மனநிலை துவங்கும்பொழுது இருந்த மனநிலையை விட பல படிகள் உயர்வானதாக‌ இருக்கும். சிற்றின்பம் விடுத்து பேரின்பம் நோக்கிச் செல்ல நம் மனநிலைச் செம்மைப் படுத்துவதற்கான சிறந்த வழியும் அதுவே.

நன்றி.

Similar Posts

  • |

    அழகானவர்கள்

    சிவப்பாய் இருப்பவர்களே அழகானவர்கள், கருப்பு நிறத்தவர்கள் சற்று கீழே என கடந்த 30 ஆண்டுகளாகவே ஒருவகை மனநிலை நமக்குள் திணிக்கப்படுகிறது. இருபத்தைந்து விழுக்காடு சிவப்பு நிறத்தவர்கள்  இருந்தால் சற்றே ஆச்சரியம் அளிக்கக்கூடிய இந்த தமிழகத்தில் இந்த மனநிலை எப்படி நம‌க்குள் வந்திருக்கலாம்? ஒரு சில நண்பர்கள் இல்லை என மறுத்துப் பேசினாலும் உள்ளுக்குள் அவர்களுக்கும் அந்த எண்ணம் இருப்பதை பலமுறை அவர்களுடைய பேச்சுக்களில் உணர்ந்திருக்கிறேன். கிட்டத்தட்ட கருப்பென்றாலே அழகு குறைவு என்ற மனநிலை நம் அனைவருக்குமே. ‘கருப்பா…

  • | |

    ஒரு வருட கொரோனா கற்றுத்தந்த பாடங்கள் – யுவல் நோவா ஹராரி

    FINANCIAL TIMES பத்திரிக்கையில் Yuval Noah Harari அவர்களால் எழுதப்பெற்ற கட்டுரையின் தமிழாக்கம். (https://www.ft.com/content/f1b30f2c-84aa-4595-84f2-7816796d6841) வரலாற்றின் பார்வையில் இந்த ஒரு வருட கொரோனா காலத்தை நாம் எப்படி மதிப்பிடலாம்? பெரும்பாலானவர்கள் கொரோனா இறப்புகள், இயற்கையின் முன் மனித குலத்தின் மனிதாபிமானமற்ற தன்மையையின் வெளிப்பாடு என எண்ணலாம். ஆனால் உண்மையில் மனிதகுலம் இன்னும் மனிதாபிமானத்தை முற்றிலுமாக விட்டுவிடவில்லை என்பதையே 2020 காட்டியிருக்கிறது. பெருந்தொற்றுக்கள் முந்தைய கால கட்டங்களைப் போல கட்டுப்படுத்தமுடியாதவைகளாக இப்போது இருக்கவில்லை. அறிவியல் அதனை கட்டுப்படுத்தக்கூடிய சவாலாக…

  • நாம் நாமல்ல

    நாம் நம் இடத்தை விடுத்து நீண்ட தூரம் செல்லச் செல்ல நம்முடைய செயல்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. ஏனெனில் எந்த ஒரு நிலையிலும் நம்முடைய செயல்பாடு நாம் சார்ந்திருக்கக்கூடிய சமூகத்தின் செயல்பாடாகவே பார்க்கப்படுகிறது. இங்கே குறிப்பிடப்படும் சமூகம் என்பது நம் இடத்தையும் பதவியையும் பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும். எனது பள்ளி நாட்களில் நான் முதல் பரிசு பெற்றபொழுது எனது சுற்றுவட்ட கிராமங்களில் எனது செயல்பாடு எனது கிராமத்தின் ஒருவனது செயல்பாடாகவே பார்க்கப்பட்டது. ” School First…

  • கழுதையும் உருளைக்கிழங்கும்

    ஒரு சமயம் பெர்னாட்ஷா ஒரு தட்டு நிறைய அவித்த உருளைக்கிழங்குகளை வைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.அப்போது அவருடைய நண்பர் ஒருவர் அவரைப் பார்க்க வந்தார். பெர்னாட்ஷா அவரை வரவேற்று “வாருங்கள்! உருளைக்கிழங்கு சாப்பிடுங்கள்” என்றார்.அதற்கு நண்பர் “உருளைக்கிழங்குகளா? நோ! நோ! எனக்கு அறவே பிடிக்காது. அதை எப்படித்தான் ரசித்து ருசித்து சாப்பிடுகிறீர்களோ தெரியவில்லை?” என்றார். பெர்னாட்ஷா சிரித்தபடி ஒரு உருளைக்கிழங்கை எடுத்தார். அப்போது அது தவறி கீழே விழுந்து தோட்டத்தின் பக்கம் உருண்டு ஓடியது.அப்போது அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஓர்…

  • தொடர்பெனும் சிக்கல்

    மனித குலத்தின் கடந்த கால வரலாற்றினை ஓரளவிற்கு வாசித்தால் நாம் ஒரு மிகப்பெரிய‌ மாற்றத்தினை உணரலாம். முன் காலங்களில் மிகப்பெரும் விஷயமாக இருந்த ஒன்று இன்று முற்றிலும் மாறிவிட்டிருக்கிறது. அது தொடர்பு. பழைய காலங்களில் ஒரு நாட்டிலிருந்து புதியதோர் நாட்டிற்குச் செல்வதென்பது மிகப்பெரிய‌ செயல்பாடாக இருந்திருக்கிறது, ஆறு மாத காலப்பயணம், 1 வருடப்பயணம் ஏன் திரும்பி வருவதென்பதே சாத்தியமில்லாத பயணம் என . ஆனால் இன்று ஒட்டுமொத்த உலகத்தினையும் சில மணி நேரங்களில் கடந்துவிட முடியும். காரணம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.