கற்போம்

education2கல்வி என்பது என்ன?

இன்றைய நிலையில் கல்வி என்பது தனிமனித பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்யும் ஒரு கருவி என்பதாகிவிட்டது.அதாவது ஒருவன் தனது கல்வியினால் தன்னுடைய பொருளாதாரத்தேவைகளை நிறைவு செய்து கொள்ள முடியாமல் போனால் அவன் கற்ற கல்வி தவறானது என்றே பொருள் கொள்ளப்படும்.

அது கல்வி அல்ல. பயிற்சி. ஒரு குறிப்பிட்ட எதிபார்ப்போடு செய்யப்படக்கூடிய ஒரு செய்முறை என்பது பயிற்சியே. கல்வி என்பது அதுவல்ல.

 கல்வி என்பது கற்றல். அது நாம் பள்ளி, கல்லூரிகளில் மட்டுமே கற்க முடியும் என்பதல்ல. அங்கே கிடைப்பது கல்விக்கடலின் ஒரு துளி. சமுத்திரத்தின் மிச்சமும் சேர்ந்ததுதான் கல்வி.அது பள்ளி செல்லாத ஒருவரிடமும் உண்டு. சூழ்நிலைகளினின்று கற்றிருப்பார்.

நமது பாடத்திட்டம், தேர்வு இந்த இரண்டையும் தாண்டி அறியத்துவங்கும் ஒரு செயல்பாடே கல்வி. உலகின் மாபெரும் கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர்கள் எல்லோருமே பள்ளி, கல்லூரிக்கல்விக்கு அப்பாற்பட்டு கற்றவர்களே.

 அதற்கு என்ன செய்ய வேண்டும்?

அதிகம் வாசிப்பதே இதன் முதல் நிலை. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கலை, அறிவியல், தொழில்நுட்பம், இலக்கியம், கவிதை, வரலாறு, வணிகம் என எதுவாக வேண்டுமானாலும்.  எது என முடிவு செய்ய முடியவில்லையா? எல்லாவற்றையும் படிப்போம்.

புத்தகங்கள் வாசிப்பதில் பல நன்மைகள் உண்டு. ஒரு மிகப்பெரும் எழுத்தாளர் எழுதிய ஒரு நூலை வாசிக்கும் பொழுது அது தொடர்பான அவருடைய அறிவை எல்லாம் நாம் பெற்று விட முடியும்.

உதாரணமாக ஒரு வருட முயற்சியில் அவர் அந்த நூலை வெளியிட்டிருப்பாரானால் அதனை ஒரு வாரத்தில் படித்து முடித்துவிடுவதன் மூலமாக அவரின் அந்த நூல் தொடர்பான‌ அறிவை நாம் பெற்றுவிடலாம். அல்லது குறைந்த பட்சம் 90 விழுக்காட்டையாவது பெற்றுவிடலாம். ஏனென்றால் ஒரு எழுத்தாளர் தனக்குத் தெரிந்த தகவல்களை மறைத்து எந்த ஒரு நூலையும் எழுத மாட்டார்.

மிக முக்கியமான இன்னொரு நன்மை யாதெனின் ஒவ்வொரு புத்தகத்தை படித்து முடிக்கும்பொழுதும் நம் மனநிலை துவங்கும்பொழுது இருந்த மனநிலையை விட பல படிகள் உயர்வானதாக‌ இருக்கும். சிற்றின்பம் விடுத்து பேரின்பம் நோக்கிச் செல்ல நம் மனநிலைச் செம்மைப் படுத்துவதற்கான சிறந்த வழியும் அதுவே.

நன்றி.

Similar Posts

  • ஜெயமோகன் அவர்களிடமிருந்து

    மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நான் எழுதிய மடலுக்கான ஜெயமோகன் அவர்களுடைய‌ பதிலை இங்கே பதிவிடுகிறேன். நான் படித்த சில புத்தகங்கள் வாயிலாகவே என்னையறியாமல் வந்த தலைக்கனத்தின் மீது மீண்டும் ஒரு குட்டு. நான் செப்பனிடப்படுகிறேன். அன்புள்ள மகிழ்நன் உங்கள் முந்தைய கதைக்கான என் பதிவுக்கு நீங்கள் இப்படி எதிர்வினையாற்றியிருக்கிறீர்கள் என்றால் வருந்துகிறேன். நீங்கள் உங்கள் இடத்தை, நிலையை சற்றும் பரிசீலனைசெய்ய தயாராக இல்லை என்றுதான் அர்த்தம். எழுத்தாளர்களின் இயல்பு அது அல்ல. உங்கள் கடிதம் அதிலுள்ள கோபம்…

  • அழிக்கப்பட‌ வேண்டியது சாதியா?

    கடந்த 10,20 ஆண்டுகளாகவே நாம் இதனை கேள்விப்பட்டிருக்கக்கூடும். “சாதிகள் அழிக்கப்பட வேண்டும்” என்று. அனைவரும் இதே கருத்தை மீண்டும் மீண்டும் கேட்பதனால் நாம் நம்மை சாதிக்கு எதிரானவராக காட்டிக்கொள்ள முயல்கிறோம். (எல்லோரும் அல்ல). நாம் உயர் வகுப்பினராகவோ, நடுத்தர வகுப்பினராகவோ, பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவோ குறிப்பிடப் படலாம். முதலில் நாம் ஒன்றை தெளிவுபடுத்திக் கொள்வோம். நாம் சாதிக்கு எதிரானவரா அல்லது சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரானவரா?

  • எளிய அழகிய இஸ்லாம்

    அனைவரிடத்தில் இஸ்லாம் மதத்தினைப் பற்றிய ஒரு தவறான அபிப்ராயத்தினை ஏற்படுத்தி இருக்கும் ஒரு சாரர்கள் மறந்த இஸ்லாமின் ஒர் அழகிய‌ பக்கம்.

  • நிறமும் மொழியும்

    நம்மில் பலருக்கும் இந்த எண்ணம் உண்டு. சிவப்பாய் இருப்பவர்கள் அழகானவர்கள், ஆங்கிலம் தெரிந்தவர்கள் அறிவானவர்கள். அது தவறான எண்ணம் என்பதே திண்ணம். நம்மிடத்து உள்ள இந்த எண்ணம் நமக்கு முந்தைய தலைமுறையிடமிருந்து நம்மிடத்தே வந்து விட்டது. நமக்கு முந்தைய தலைமுறையிடம் இருந்த அளவிற்கு இப்போது இல்லையென்றாலும், அற‌வே இல்லையெனக் கூறிவிடலாகாது. உண்மை இதுதான். சிவப்பு அழகல்ல, நிறம். ஆங்கிலம் அறிவல்ல, மொழி.  கடந்த காலப் பெரும்பான்மையான புத்தகங்கள், தொழில்நுட்பம் சார்ந்த நூல்கள் ஆங்கிலத்தில் வெளியானமையால் ஆங்கிலம் அறிவாளிகளின்…

  • | | |

    நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கலாமா?

    சமீபத்திய நாட்களில் சீமான் மீதான ஆர்வத்தையும் ஆதரவையும் சில இடங்களில் காண முடிகிறது. சீமானின் நாம் தமிழர் கட்சி இன்றைய நிலையில் தமிழகத்திற்கு ஓர் மாற்றாக அமையுமா? சீமானுக்கு வாக்களிக்கலாமா? அவரின் இன்றைய இடம் எது? சீமான் நாம் தமிழர் கட்சியை 2010 ல் தொடங்கினார். சென்ற நாடாளுமன்றத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். தற்போது தனியாக நிற்பதாக அறிவித்து திராவிடக்கட்சிகள், மக்கள் நலக் கூட்டணி, காங்கிரஸ், பாஜக என அனைத்து கட்சிகளையும் விமர்சனம் செய்து வருகிறார்….

  • |

    மனதை நெருடும் ஒரு காணொளி

    எத்தனையோ குறைகளைக் கூறிக்கொண்டும், மற்றவர்கள் மீது வெறுப்பை உமிழ்ந்துகொண்டு வாழும் இவ்வுலகில் இத்துனை குறைகள் இருந்தாலும் மற்றவர்களுக்காக வாழும் உயர்ந்த உள்ளம் கொண்ட சகோதரிகள். மனதை நெருடும் ஒரு காணொளி.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.