|

சமையல்கட்டும் கிச்சனும்

கிச்சன் என்ற சொல் சமைய‌ல்கட்டு என்ற சொல்லிருந்து எவ்வளவு தூரம் வேறுபடுகிறது? என்னால் என்றுமே கிச்சனை அத்தனை அந்நியோன்யமாக உணர முடிந்ததே இல்லை. அது முற்றிலும் நிற்பதற்கான இடம் மட்டுமே. சமைப்பதற்கான இடம் மட்டுமே. அங்கு வேறு எதுவும் செய்ய முடியாது. அங்கே தரையில் உட்கார்வதற்கு வழியே இல்லை. மிகக்குறுகலான இட வசதி கொண்டதாக இருக்கும். நகரங்களின் இடவசதிப்பற்றாக்குறையில் அதற்கு ஆகக்குறைந்த அள‌விற்கே இடம் ஒதுக்கும் இன்றைய சூழ்நிலையில் வேறு வழியும் இல்லை.

ஆனால் நான் உணர்ந்த சமைய‌ல்கட்டு என்பது மிகவும் அந்நியோன்யமானது. என் அம்மாவோடும், அக்காக்களோடும் அமர்ந்து சமையல்கட்டில் பேசும் போது ஏற்படும் மகிழ்ச்சி என்பது வீட்டின் ஹாலில் அமர்ந்து பேசுவதைவிட மிக பல நூறு மடங்கு நெருக்கமானது. அம்மா சமைத்துக்கொண்டே பேசிக்கொண்டிருப்பார்கள், அக்காவும் சமையலறையிலேயே உட்கார்ந்து இருப்பார்கள். முற்றிலும் வெட்டிப்பேச்சே அங்கு மையம். அங்கு பேசப்படும் விஷயம் பலநூறு முறை முன்னர் பேசப்பட்டதாகவே இருக்கும். இருந்தாலும் ஒவ்வொரு முறையும் அது புதியதாக இருக்கும். எங்களுடைய புதிய வீட்டில் சமையல்கட்டு அமைக்கும் பொழுது அத்தனை திட்டமிட்டெல்லாம் சமையல்கட்டு அமைக்கவில்லை. ஆனாலும் இயல்பிலேயே நான் என் ஆழ்மனதில் விரும்பிய ஒரு சமையல்கட்டாகவே அது அமைந்து விட்டது. நல்ல இடவசதி. சமையல்கட்டில் இருந்து பின்புறம் செல்ல‌ கொல்லைப்புறமாக ஒரு வழி, உள்ளே டைனிங்க் ஹால் செல்ல ஒரு வழி. ஆக எப்பொழுதும் நல்ல வெளிச்சமாகவே இருக்கும்.

அத்தோடு வெளியே செல்லும் ப‌டிக்கட்டில் அமர்ந்துகொண்டு பேசுவது என்பது அத்தனை மகிழ்ச்சியானது. ஒவ்வொரு முறையும் அம்மா வெளியே செல்லும்போதும் ஏண்டா படிக்கட்டுல உட்கார்ர‌? அங்கிட்டு உட்கார்ந்தா என்ன என்று சொல்லிக்கொண்டே செல்வதும் வருவதுமாக இருப்பார்கள். பாட்டி வெளியே உள்ள திண்ணையில் அமர்ந்துகொண்டு ஏதாவது அரைத்துக் கொண்டோ, பாத்திரம் கழுவிக்கொண்டோ இருப்பார்கள். அதனால் உள்ளிருந்து வெளியிலேயும், வெளியிலிருந்து உள்ளேயும் ஏதாவது போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருக்கும். இதற்கிடையில் அம்மா சமைக்க எடுக்கும் ஒவ்வொரு பொருளிலும் ஏதாவது தின்னும் பொருளிருந்தால் எடுத்து நீட்டுவார்கள். அதனையும் தின்று கொண்டே பேச்சைத் தொடர்வோம். விரும்பிய சமையலறை அமைவதென்பதே ஒரு வரம்தான் என்ன!

Similar Posts

  • ஜெயமோகன் அவர்களிடமிருந்து

    மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நான் எழுதிய மடலுக்கான ஜெயமோகன் அவர்களுடைய‌ பதிலை இங்கே பதிவிடுகிறேன். நான் படித்த சில புத்தகங்கள் வாயிலாகவே என்னையறியாமல் வந்த தலைக்கனத்தின் மீது மீண்டும் ஒரு குட்டு. நான் செப்பனிடப்படுகிறேன். அன்புள்ள மகிழ்நன் உங்கள் முந்தைய கதைக்கான என் பதிவுக்கு நீங்கள் இப்படி எதிர்வினையாற்றியிருக்கிறீர்கள் என்றால் வருந்துகிறேன். நீங்கள் உங்கள் இடத்தை, நிலையை சற்றும் பரிசீலனைசெய்ய தயாராக இல்லை என்றுதான் அர்த்தம். எழுத்தாளர்களின் இயல்பு அது அல்ல. உங்கள் கடிதம் அதிலுள்ள கோபம்…

  • |

    சில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்

    நீண்ட நாட்களாக கேள்விப்பட்டுக்கொண்டு இருந்த, ஆனால் வாசித்திராத ஒரு நாவல். ஜெயகாந்தன் அவர்களால் எழுதப்பெற்று தொடர்கதையாக வெளிவந்தது. கதை நாயகி கங்கா பாலியல் ரீதியாகப் எதிர்பாராமல் பாதிக்கப்படுகிறாள். அதன் காரணமாக அவள் வாழ்வில் எதிர்கொள்ளும் நிகழ்வுகளே நாவலின் சுருக்கம். கங்கா முற்போக்கிற்கும், பிற்போக்கிற்கும் இடையில் அல்லாடும் ஒரு பெண். இந்நாவல் வெளிவந்தது 1970. பெண் கல்வி, வேலைக்கு செல்வது தொடர்பாக தீவிர விவாதங்கள் நடைபெற்ற கால கட்டம் அது. ஒரு தரப்பில் பெண் கல்வி கற்கச் செல்வதும்,…

  • நாம் ஏன் வாசிக்க வேண்டும்?

    எல்லோரும் வாசிப்பதில்லை. ஒரு சிலரே வாசிக்கின்றனர். அவர்கள் எதற்காக வாசிக்கிறார்கள்? வாசிப்பு சோறு போடுகிறதா? ஆம்,உலகுக்கே சோறு போடுகிறது, இவ்வுல‌கையே இயக்குகிறது. உலகையே நிர்ணயம் செய்கிறது. வாசிப்பு இல்லாதவனிடத்து தானும் உலக நடப்பு தெரிந்ததைப்போலவும், தானும் வாசிப்பவன் என்ற எண்ணம் கொண்டிருக்கச் செய்தே இயற்கை மிகச்சரியான, நுட்பமானவர்களை மட்டுமே வாசிப்பு உலகத்தில் சேர்த்துக்கொள்கிறது. வாசிப்பவன் மற்றவர்களில் இருந்து எப்படி மேலோங்குகிறான்? மேல் என்பது என்ன? நாம் கொண்டுள்ள எண்ணம்தானே அன்றி வேறல்ல. என்னிடம் பணம் இருக்கிற பொழுது…

  • |

    சுதந்திர தின‌ வாழ்த்துக்கள்

    70 ஆவது சுதந்திரதினத்தைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின‌ வாழ்த்துக்கள். முதலில் நம் அனைவரிடமும் ஓர் கேள்வி. நாம் உண்மையாகவே சுதந்திரதினத்தைக் கொண்டாடுகிறோமா, இல்லை அதனை ஓர் விடுமுறை நாளாக மட்டும் எடுத்துக்கொள்கிறோமா? உண்மையான பதில் நம்மில் பெரும்பாலானோர்க்கு உண்மையில் அது விடுமுறை தினம் மட்டுமே. நாம் மற்ற பண்டிகைகளான தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போலவா சுதந்திர தினத்தினைக் கொண்டாடுகிறோம்? இல்லவே இல்லை. நண்பர்களே! நாம் பெற்ற அந்த சுதந்திரத்தால்தான் இன்று நாம் நாம்…

  • அதிக பணம் அச்சடித்தால் என்ன?

    பொருளாதாரம் பற்றி அறியத்துவங்கிய காலத்தின் ஆரம்பகாலக் கேள்விகளுள் ஒன்று. இந்தக் கேள்வியோடிருப்பவர் நீங்களென்றால் உங்களுக்கே இந்தப் பதிவு. இந்தியாவின் கடன் தொகை பல லட்சம் கோடிகளில். ரூபாய் மதிப்பு சரிவு. இதைச் சரிசெய்ய அதிக பணம் அச்சடித்தால் என்ன? அடிப்படைக்கேள்வி. அடிக்கலாம். என்ன நடக்கும்? அரசாங்கம் அதிக பணம் அச்சடிக்கும். அதை புழக்கத்தில் விடும். புழக்கத்தில் விட வேண்டுமென்றால் அரசு திட்டங்களுக்காக செலவிடலாம், அரசு ஊழியர்களுக்கு சம்பளமாக தரலாம் அல்லது மக்களுக்கு  மணியார்டர் செய்யலாம். எப்படியோ மக்களிடம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.