நுகர்வு எனும் நோய்

இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் குறித்த சுதந்திரத்திற்கு முந்தைய பிந்தைய நிகழ்வுகள், வனத்தைக் காத்தல் என்ற பெயரில் காட்டுவாசிகளை விரட்டி காட்டை வணிக நோக்கில் பயன்படுத்திய‌ செயல்பாடுகள்,அமெரிக்க வாழ்வினை போல வாழ முயலும் நம்முடைய நுகர்வு என‌ ஒட்டுமொத்த சூழலியல் பார்வையே how much a person should consume?.
nuharvenum_perumbasi

ராமச்சந்திர குஹா அவர்களால் ஆங்கிலத்தில்ல் எழுதப்பெற்ற‌ இந்நூல் தமிழில் போப்பு அவர்களால் நுகர்வெனும் பெரும்பசி எனும் பெய‌ரில் வெளிவந்துள்ளது. 

  • தனிமனிதன் செய்யும் மனித குல அழிவிற்கான செயல் நுகர்வு. காட்டுவாசி என்னும் வார்த்தையையே நாகரிமற்ற சொல்லாக மாற்றிய அவலம் நம் நாட்டில்தான்.
  • இன்றும் காட்டுவாசி என்ற நாகரிகம் என்பதன் எதிர்ப்பதமாகவே உருவகம் செய்கிறோம். இயற்கையை அழிக்காமல் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை நடத்தும் அவர்கள் நாகரீகமற்ற மனிதர்கள். சுய நலத்துக்காக இயற்கையை அழித்து, நம் இடத்தை நாசப்படுத்தி பல் உயிர்கள் வாழ இயலாத இடமாக மாற்றிவிட்டு அவர்களுடைய வளங்களையும் உறிஞ்சும் நாம் நாகரிக மனிதர்கள். 
  • நாம் உரக்க ஒலிப்பதால் நம் குரல் ஓங்கி ஒலிக்கிறது. உரக்கக் கேட்கிறது. அவர்கள் உரக்க ஒலிப்பதில்லை. ஒலிக்க முடிவதில்லை.
  • இந்தியாவை பிரிட்டீஷ் ஆண்ட காலத்தில் அரசின் காடுகள் மீதான உரிமையை நிலைநாட்டுவதற்காக அங்கு வாழ்ந்த ப‌ல்லாயிரம் மக்கள் வேறு இடங்களுக்கு கட்டாயமாக அனுப்பப்பட்டார்க்ள். அதற்கு முக்கிய காரணம் காட்டின் வளம் முழுமையாக அப்போதையா அரசுக்குத் தேவைப்பட்டது. வணிக ஏற்றுமதி செய்யவும், ரயில் தண்டவாளங்கள் அமைக்கவும் இன்னும் பல தேவைகளுக்கும் மரம் தேவைப்பட்டது.
  • பிரிட்டீஷ் நிர்வாகத்தின் ஆரம்ப 40 ஆண்டுகளில் மட்டும் 80000 மைல்கள் ரயில் பாதைகள் போடப்பட்டன. இதற்காக பல லட்சம் மரங்கள் அழிக்கப்பட்டன. அங்கு வாழ்ந்த காட்டுவாசி மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.ரயில் பாதைகளும் துறைமுகங்களை நோக்கியே வணிக நோக்கிற்காக போடப்பட்டன.
  • பின்னர் வந்த இந்திய சுதந்திர அரசும் காட்டின் மீதான பாதுகாப்பு என்ற பெயரில் மலைவாழ்மக்களின் காடுகள் மீதிருந்த உரிமைகளையும், அவர்களின் வாழ்வாதாரத்தையும் அழித்தது.
  • காட்டை வணிக நோக்கில் அழித்தவர்கள் தப்பிப்பதற்காக மலைவாழ் மக்கள் பலியாக்கப்பட்டனர்.
  • மலைவாழ் மக்கள் காட்டினை தங்கள் வாழ்வாதாரத்திற்காக பயன்படுத்தினார்களேயன்றி வணிகத்திற்காக அன்று.
  • மேலும் வணிக நோக்கிற்காக ஓக் மரங்கள் அழிக்கப்பட்டு பைன் மரங்கள் நடப்பட்டன. இம்மரங்கள் புல் மற்றும் வேறு பல செடிகள் வளரவிடாமல் காட்டின் பல்லுயிர் அமைப்பைக் கெடுத்தன. இதனால் தங்களுடைய கால்நடைகளுக்கான தீவனம் போன்றவை கிடைக்காமல் காட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
  • இன்றும் கூட இயற்கை பாதுகாக்கப்பட வேண்டுமென்று கூறுபவர்களின் வாதப் பின்னணி என்பது மரங்களும் உயிர், விடுமுறை நாட்களில் நுகர்தல் என்ற நிலையிலேயே பார்கப்படுகின்றது. காடு என்பது அம்மக்களின் வாழ்வாதாரம் என்ற எண்ணத்தில் பார்க்கப்படுவ‌தில்லை. 
  • தன் தேவைக்கு அதிகமாகவே நுகரும் வாழ்க்கைக்கு பழகிவிட்டோம் நாம். அதுவே நமக்கும் இயல்பாகவே தெரிகின்றது. எல்லா பொருளையும் மறு உபயோகமோ, நீண்ட கால உபயோகமோ செய்வதில்லை.
  • நாம் அமெரிக்க இங்கிலாந்து வாழக்கை முறையை நோக்கி பயணிக்கிறோம். 100 இந்தியர்களினால் ஏற்படும் சுற்றுச் சூழல் சீர்கேட்டை ஒரு அமெரிக்கன் ஏற்படுத்தி விடுகிறான். ஒட்டுமொத்த உலக மக்கள் தொகையில் 4 விழுக்காடு இருக்கும் அமெரிக்கா உலக உற்பத்தி வளத்தில் 30 விழுக்காட்டை நுகர்கின்றது. 
  • அந்த நிலையை நோக்கி பயணிக்கும் நாமும், சீனர்களும் அதனை அடையும் பட்சத்தில் உலகில் நுகர்வதற்கு இயற்கை இல்லாத நிலையே உருவாகும். 
  • இன்று நுகர்வில் கட்டுப்பாடு விதிப்பதனையோ, சுய அளவில் தேவைக்கு மேல் நுகராத நிலையையோ ஏற்கத் தயங்கும் நாம் ஒரு நாள் கண்டிப்பான நுகர்விற்காக தள்ளப்படுவோம்.

இப்படியாக‌ பல சூழலியல் கருத்துக்களின் தொகுப்பு நூல் how much a person should consume? .சுற்றுச்சூழல் குறித்த புரிதலுக்கான் சிறந்த நூல்.

Similar Posts

  • அந்நிய நேரடி முதலீடு என்ன செய்யும்?

    சில்லறை வர்த்தக அந்நிய நேரடி முதலீடு என்ன செய்யும்? இந்தியச் சந்தையில் அந்நிய முதலீட்டிற்கான பல்வேறு விதிகளையும், உச்ச வரம்பையும் மத்திய அரசு தளர்த்தியிருக்கின்றது. அதில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு அனைத்து மாநில ஒப்புதலோடுதான் நிறைவேற்றப்படும் என மத்திய அரசு அறிவித்து அதன் காரணமாக எழுந்த கொந்தளிப்புகளை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டது. இது தற்காலிகம்தான்.  விரைவில் அரசு அதையும் அறிவிக்கும். அந்நிய முதலீட்டாளர்கள் சில்லறை வணிகத்தில் முதலீடு செய்வதால் நன்மை என்ன? தீமை என்ன? இந்தியாவில்…

  • |

    புதிய இந்தியா

    16வது மக்களவைத்தேர்தல் சிறப்பாக முடிவடைந்திருக்கிறது. இந்த தேர்தலைப் பொறுத்தமட்டில் நாம் மிகப்பெரும் பெருமை கொள்ளத்தக்க செய்தி உலகின் எந்த ஒரு தேசமும் இத்தனை பெரிய ஜனநாயக வலிமை கொண்டிருக்கவில்லை என்பதுதான். என்னதான் ஜனநாயகம் என்று வெளிக்காட்டிக்கொண்டாலும் தன்னளவில் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ சர்வாதிகாரப்போக்குடையதாகவே இருந்திருக்கிறது, இருக்கிறது. நம்மில் பத்தில் ஒரு பங்கிற்கும் குறைவான நிலப்பரப்புள்ள தேசங்களிலும் சரி நம்மை சுற்றியுள்ள தேசங்களிலும் சரி ஜனநாயகம் சரிவர செயல்படுவதில்லை. உதாரணம் சிங்கப்பூர், உக்ரைன், பாகிஸ்தான், இலங்கை. உக்ரைனில் புதிய அரசு…

  • | | |

    நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கலாமா?

    சமீபத்திய நாட்களில் சீமான் மீதான ஆர்வத்தையும் ஆதரவையும் சில இடங்களில் காண முடிகிறது. சீமானின் நாம் தமிழர் கட்சி இன்றைய நிலையில் தமிழகத்திற்கு ஓர் மாற்றாக அமையுமா? சீமானுக்கு வாக்களிக்கலாமா? அவரின் இன்றைய இடம் எது? சீமான் நாம் தமிழர் கட்சியை 2010 ல் தொடங்கினார். சென்ற நாடாளுமன்றத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். தற்போது தனியாக நிற்பதாக அறிவித்து திராவிடக்கட்சிகள், மக்கள் நலக் கூட்டணி, காங்கிரஸ், பாஜக என அனைத்து கட்சிகளையும் விமர்சனம் செய்து வருகிறார்….

  • உலகத்தொழிலாளர்களே! (ஆசானிடமிருந்து)

    உலகத்தொழிலாளர்களே என்ற தலைப்பில் மே தினத்தினையொட்டி ஆசான் 2011 ல் எழுதிய கட்டுரை. எத்துனை அடர்த்தியான கட்டுரை. அவர் ஆசானாக இருப்பதில் வியப்பேதுமில்லை. நன்றி: ஜெயமோகன் http://www.jeyamohan.in/16732#.VUbd7_mqqko மே மாதம் ஒன்றாம் தேதி, ஒலிபரப்புவதற்காக ஒரு பண்பலை வானொலியில் இருந்து தொலைபேசிப் பேட்டி எடுத்தார்கள். ஓரிரு சொற்கள், அதில் பாட்டுகளில் ஊடாக ஒலிக்கும் என நினைக்கிறேன்! அப்போது மனதில் பட்டதைச் சொன்னாலும் அதன்பின் அச்சிந்தனைகளை தொகுத்துக் கொள்ளலாம் என்று தோன்றியது. இன்று உழைப்பாளிகளின் நிலைமை எப்படி இருக்கிறது,…

  • | |

    ஒற்றைப்படையாகும் உலகம்

    நான் சில ஆசிய நாடுகளுக்கு சமீபத்தில் பயணம் செய்தேன். அப்பயணங்களின் போது நான் உணர்ந்த மிகப் பொதுவான ஒரு விஷயம் எல்லா நாடுகளும் தங்களுடைய சுயத்தை இழந்து ஒற்றைப்படையாக ஆகிக்கொண்டிக்கின்றன என்பதையே. ஒருவேளை நாம் இந்தியா தவிர்த்து வேறு எந்த ஆசிய நாட்டிற்கும் செல்லாதவராக இருப்போமேயானால் மற்ற நாடுகள் முற்றிலும் வேறானவையாக இருக்கும் என்று எண்ண வேண்டியதேயில்லை போலிருக்கிறது. காரணம் பெரும்பாலான நாடுகளில் அங்கிருக்கும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை மறந்துவிட்டுப் பார்த்தால் அது முற்றிலும் நம்முடைய இந்தியாவின்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.