நாம் நாமல்ல

நாம் நம் இடத்தை விடுத்து நீண்ட தூரம் செல்லச் செல்ல நம்முடைய செயல்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. ஏனெனில் எந்த ஒரு நிலையிலும் நம்முடைய செயல்பாடு நாம் சார்ந்திருக்கக்கூடிய சமூகத்தின் செயல்பாடாகவே பார்க்கப்படுகிறது. இங்கே குறிப்பிடப்படும் சமூகம் என்பது நம் இடத்தையும் பதவியையும் பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும்.

எனது பள்ளி நாட்களில் நான் முதல் பரிசு பெற்றபொழுது எனது சுற்றுவட்ட கிராமங்களில் எனது செயல்பாடு எனது கிராமத்தின் ஒருவனது செயல்பாடாகவே பார்க்கப்பட்டது. ” School First நாட்டாம்பட்டி பையனாம்” என்றே பலர் கூறினர். ஏன் என்னிடமே பலர் அவ்வாறு கூறியதுண்டு. இது அவர்கள் மத்தியில் என் ஊரின் மீதான மதிப்பினை சற்று உயர்த்தியிருக்கும். என்னை மறந்து அந்த நிகழ்வையும் என் ஊரையுமே மக்கள் நீண்ட நாள் நினைவில் வைத்திருந்தனர்.

அதேபோல் நான் சென்னை வந்த பொழுது என்னை, என் மாவட்டத்தை சேர்ந்த ஒருவனாகவே பார்த்தனர். அதேபோல் வேறு மாநிலத்திலிருந்து வந்து என்னுடன் பணியாற்றியவர்கள் செயல்பாடெல்லாம் அவரவர் சார்ந்திருந்த் மாநிலத்தின் பொதுவான செயல்பாடகவே பார்ககப்பட்டது. உண்மை.

நாம் ஒரு சில மாநிலத்தினர் மீது மரியாதை கொள்வதற்கும், சில மாநிலத்தாரின் மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பதற்கும் காரணம் நமக்குத் தெரிந்த அந்த மாநிலத்தினைச் சேர்ந்த ஒரு சிலரது செயல்பாடுகளே. நாம் ஒன்றும் அந்த மாநிலத்தைச் சேர்ந்த அனைவருடனும் பழகி அந்த முடிவுக்கு வருவதில்லை. 

இது இங்கல்ல. உலகம் முழுவதும் அப்படியே.

அத‌னால் நாம் தூரம் செல்லச் செல்ல நம்முடைய பொறுப்பு அதிகமாகிறது. உதாரணமாக சென்னையில் உள்ள ஒரு கேரளத்து நபரின் செயல்பாடினைக் கொண்டு நாம் கேரளத்தவ‌ரை மதிப்பிடுகிறோம். ஆனால் சென்னையில் நாம் ஒரு கேரளத்தவரை மட்டுமல்ல, பலரை சந்திப்போம். அவர்கள் அனைவரது செயல்பாடுகளில் இருந்தே கேரளத்தை மதிப்பிடுவோம். 

ஆனால் இதுவே நாம் வேறொரு நாட்டிற்குச் செல்லும்பொழுது அங்கு நாம் இந்தியாவைப் பிரதிபலிப்போம். அங்குள்ள‌ பல வெளிநாட்டவருக்கு மிகச் சில இந்தியர்களே பழக்கமாய் இருப்பர். அவர்கள்தான் மற்ற நாட்டினரிடத்து இந்தியர்கள் குறித்த மதிப்பீடுகளை நிர்ணயம் செய்பவர்கள்.

உதாரணமாக சிங்கப்பூரில் என்னுடைய செயல்பாடுகள், பழக்க வழக்கங்கள், திறமை, அறிவு, மடத்தனம் எல்லாமே இந்தியர்களின் செயல்பாடாகவே பார்ககப்படுகிறது. அதனாலே மிகவும் கவனமுடன் என்னுடைய செயல்பாடுகளையும், சொற்களையும் நிர்வகிக்க விரும்புகிறேன். 

குறைந்தது நாம் சந்திக்கும், நம்மை சந்திக்கும் நபர்களிடமாவது  இந்தியர்களைப் பற்றி உயர்வாய் நினைக்கச் செய்வோமே!

Similar Posts

  • எளிய அழகிய இஸ்லாம்

    அனைவரிடத்தில் இஸ்லாம் மதத்தினைப் பற்றிய ஒரு தவறான அபிப்ராயத்தினை ஏற்படுத்தி இருக்கும் ஒரு சாரர்கள் மறந்த இஸ்லாமின் ஒர் அழகிய‌ பக்கம்.

  • | | |

    நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கலாமா?

    சமீபத்திய நாட்களில் சீமான் மீதான ஆர்வத்தையும் ஆதரவையும் சில இடங்களில் காண முடிகிறது. சீமானின் நாம் தமிழர் கட்சி இன்றைய நிலையில் தமிழகத்திற்கு ஓர் மாற்றாக அமையுமா? சீமானுக்கு வாக்களிக்கலாமா? அவரின் இன்றைய இடம் எது? சீமான் நாம் தமிழர் கட்சியை 2010 ல் தொடங்கினார். சென்ற நாடாளுமன்றத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். தற்போது தனியாக நிற்பதாக அறிவித்து திராவிடக்கட்சிகள், மக்கள் நலக் கூட்டணி, காங்கிரஸ், பாஜக என அனைத்து கட்சிகளையும் விமர்சனம் செய்து வருகிறார்….

  • ஆசானுக்கு மீண்டும் ஒரு கடித‌ம்

    மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு சமீபத்திய ஆண்டுகளில் அதிகம் வாசிக்கத் தொடங்கிய பின்னர் என் வாழ்க்கை முறை இத்தனை மாற்றங்களை சந்தித்துள்ளதை எண்ணி வியக்காமல் இருக்க முடிவதில்லை. ஏதோ ஒரு கணத்தில் வாசிப்பால் கவரப்பட்டு தீவிர வாசிப்புக்கு ஆளான நாள் முதல் என்னுள் நிகழும் இந்த மாற்றங்களை உள்ளும் புறமும் வேறோருவனாக இருந்துகொண்டு கவனித்துக் கொண்டே இருக்கிறேன். என்னால் தினமும் காலை ஐந்து மணிக்கு எழ முடிகிறது. தினமும் என் சொந்த திட்டங்களுக்காக 5 மணி நேரங்களை ஒதுக்க…

  • |

    சமையல்கட்டும் கிச்சனும்

    கிச்சன் என்ற சொல் சமைய‌ல்கட்டு என்ற சொல்லிருந்து எவ்வளவு தூரம் வேறுபடுகிறது? என்னால் என்றுமே கிச்சனை அத்தனை அந்நியோன்யமாக உணர முடிந்ததே இல்லை. அது முற்றிலும் நிற்பதற்கான இடம் மட்டுமே. சமைப்பதற்கான இடம் மட்டுமே. அங்கு வேறு எதுவும் செய்ய முடியாது. அங்கே தரையில் உட்கார்வதற்கு வழியே இல்லை. மிகக்குறுகலான இட வசதி கொண்டதாக இருக்கும். நகரங்களின் இடவசதிப்பற்றாக்குறையில் அதற்கு ஆகக்குறைந்த அள‌விற்கே இடம் ஒதுக்கும் இன்றைய சூழ்நிலையில் வேறு வழியும் இல்லை. ஆனால் நான் உணர்ந்த…

  • |

    யானை வேட்டை

    ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு யானை தந்தத்திற்காக கொல்லப்படுவதை விவரிக்கும் இந்த ஆவணப்படம் இன்றைய நிலையில் மிக முக்கியமானது. மேலதிக தகவல்களுக்கு, http://www.lastdaysofivory.com/

  • |

    புதிய இந்தியா

    16வது மக்களவைத்தேர்தல் சிறப்பாக முடிவடைந்திருக்கிறது. இந்த தேர்தலைப் பொறுத்தமட்டில் நாம் மிகப்பெரும் பெருமை கொள்ளத்தக்க செய்தி உலகின் எந்த ஒரு தேசமும் இத்தனை பெரிய ஜனநாயக வலிமை கொண்டிருக்கவில்லை என்பதுதான். என்னதான் ஜனநாயகம் என்று வெளிக்காட்டிக்கொண்டாலும் தன்னளவில் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ சர்வாதிகாரப்போக்குடையதாகவே இருந்திருக்கிறது, இருக்கிறது. நம்மில் பத்தில் ஒரு பங்கிற்கும் குறைவான நிலப்பரப்புள்ள தேசங்களிலும் சரி நம்மை சுற்றியுள்ள தேசங்களிலும் சரி ஜனநாயகம் சரிவர செயல்படுவதில்லை. உதாரணம் சிங்கப்பூர், உக்ரைன், பாகிஸ்தான், இலங்கை. உக்ரைனில் புதிய அரசு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.