புகழுக்கு இருபடி முன்னால்

தான் வாழும் காலத்தில் புகழ் பெற்ற அறிஞர்கள், சிந்தனையாளர்கள் இவ்வுலகில் எத்தனை பேர்? வெகு சொற்பம். ஆனால் பிற்காலத்தில் அவர்கள் மறைந்த பின்னர் பல காலம் கழித்து அவர்களை இந்த சமூகம் புகழின் உச்சியில் கொண்டு சென்று வைத்துவிடுகிறது. இது ஏன் நிகழ்கிறது?
முதல் காரணம் அறிவியளாளர்கள் அல்ல‌து சிந்தனையாளர்கள் அவர்கள் வாழும் காலங்களில் மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருக்கின்றனர். ஏனெனில் அவர்கள் நிகழ்கால மக்களின் அறிவிற்கு புரியவேண்டும் என்ற எண்ணத்தில் எதனையும் விளக்குவதோ எழுதுவதோ இல்லை. தான் நினைக்கும் அல்லது அடைய விரும்பும் இலட்சியத்தை தன்னுடைய அறிவாலும், ஞானத்தாலும் எழுதுகிறார்கள்,விளக்குகிறார்கள். அதனைப் புரிந்து கொள்ள விரும்பும் ஒருவன் கண்டிப்பாக சற்றேனும் முயற்சி எடுத்துதான் அதனைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் இந்த மனிதன் என்னும் விலங்கிற்கு புதிதாக ஒன்றைக்க கற்பிக்க வேண்டுமென்றாலோ அல்லது தெரிவிக்க வேண்டுமென்றாலோ அதன் அறிவு நிலையிலிருந்து ஒரு படி அல்லது இரண்டு படிக்கு முன்னால் உள்ள ஒரு விஷயத்தை சொன்னால் மட்டுமே ஏற்றுக்கொள்ளும். வெகு தூரத்திலுள்ள ஒன்றைப் பற்றிக்கூறினால் அதனை ஏற்றுக் கொள்ளாது.

இந்த அறிவியளாளர்கள் அல்ல‌து சிந்தனையாளர்கள் மிகவும் முற்போக்கான‌ கண்டுபிடிப்புகளையும், சிந்தனைகளயும் இக்காலத்தில் அறிவிக்கும் பொழுது நிகழ்கால மக்களுக்குப் புரிவதில்லை. அதனைப் புரிந்து கொள்ள அவர்கள் இன்னும் சில காலம் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. அவர்கள் அந்த காலத்தை அடைந்த பின்னரே அதனை உணர்ந்து கொள்கின்றனர். அப்போது அந்த சிந்தனையாளன் இருப்பதில்லை. எந்த ஒரு ஆய்வாளனும் அல்லது சமூகத்தில் முன்னகர்பவனும் இந்த புகழை உண்மையில் விரும்புவதில்லை. சரி ஏன் ஒரு சிலருக்குப் புரியும் ஒரு தகவல் ஒட்டு மொத்த சமூகத்திற்கும் புரியாமல் போகிறது. இதற்கான காரணம் எளிது. இந்த மானுட உயிரினம் தான் அறிபவற்றின் வழியாகவே தன்னுடைய அறிவைப் பெருக்கிக் கொள்கிறது. அந்த அறிவியலாளர்களும் சிந்தனையாளர்களும் தொடர்ந்த வாசிப்பின் வழியாகவும், அனுபவத்தின் வழியாகவும் தன்னுடைய முன்னகர்வை விரைவு படுத்துகிறார்கள். மீண்டும் மீண்டும் புதிய வாசிப்புகளையும் அறிவுகளையும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றனர்.

ஒரு கட்டத்தில் அவர்கள் வாழும் உலகு என்பது ஒரு சராசரி மனிதனின் உலகிலிருந்து மிகவும் முன்னே இருக்கின்றது. ஏனையவர்கள் அத்தகைய முயற்சி ஏதும் இல்லாததால் தங்களுடைய இடத்திலேயே இருக்கிறார்கள். ஆனாலும் கூட ஒரு கட்டத்தில் கட்டாயத்தின் காரணமாக தங்களை சற்றே முன்னோக்கிக் கொண்டு செல்கிறார்கள். சிலர் தங்களால் தங்களுடைய சோம்பேறித்தனத்தை விட முடிந்த அள‌விற்கு முன்னேறி ஓர் இடத்தை அடைகிறார்கள். இதில் இடை நிலையை அடைபவர்கள் புதிய சிந்தனைகளையும் கண்டுபிடிப்புகளையும் மீதமுள்ளவர்களுக்கு எடுத்துச் செல்லும் பாலமாக இருக்கிறார்கள். இவர்கள், தான் வாழும் காலத்தில் பெரும் புகழ் அடைகிறார்க‌ள். உதாரணமாக முதன் முதலாக சாட்டிலைட் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்த ஒரு அறிவியலாளரை விட அதனை ஒரு தொலைக்காட்சிக்கான ஊடகமாக உபயோகிக்கும் ஒருவன் பெறும் புகழ் அதிகம்.

இந்த ஒட்டுமொத்த மனித சமூகத்தில் 2 விழுக்காடு மக்களே முற்றிலும் புதிய கண்டுபிடிப்புகளை எல்லாத் துறையிலும் நிகழ்த்துகிறார்கள் என்பதே வரலாற்று உண்மை. ஏனைய பிறர் அவற்றை பின் தொடர்வதை மட்டுமே செய்கிறார்கள். ஆனால் அந்த 2 விழுக்காடு மக்கள் மீதமுள்ள 98 விழுக்காட்டிலிருந்தே மேலே வருகிறார்கள். நாம் அந்த 98 ல் இருக்கலாம், அல்லது அதிலிருந்து படிப்படியாக முன்னேறி அந்த இரண்டு விழுக்காட்டை அடையலாம். அது எது என்பதனை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.

Similar Posts

  • | |

    மறைக்கப்பட்ட இந்தியா – எஸ்.ராமகிருஷ்ணன்

    எழுத்தாளர் ராமகிருஷ்ணனால் எழுதப்பெற்றது. ஆனந்த விகடனில் தொடர்ச்சியாக‌ வெளிவந்த க‌ட்டுரைகளின் தொகுப்பு. இந்திய வரலாற்றில் நிகழ்ந்த சம்பவங்களின் அடிப்படையிலான கட்டுரைகள். இதுவே சாராம்சம். தனித்தனியாக வெளிவந்ததால் ஒட்டுமொத்த புத்தகத்திற்கு என்று ஒரு கச்சித வடிவம் கிடையாது. ஓர் ஆரம்பகால அல்லது இதுவரை வாசிப்பு பழக்கம் இல்லாத ஒருவருக்கான புத்தகம். ஏனெனில் வெறுமனே தட்டையான எழுத்து நடை. ஏற்கனவே வாசிக்கும் பழக்கம் உள்ளவருக்கு சலிப்பையே தரும். அதிலுள்ள தகவல்களும் அப்படியே. எந்த தகவலும் தினசரி செய்தித்தாள்களில் வரக்கூடிய அளவிற்கானவையே….

  • அந்நிய நேரடி முதலீடு என்ன செய்யும்?

    சில்லறை வர்த்தக அந்நிய நேரடி முதலீடு என்ன செய்யும்? இந்தியச் சந்தையில் அந்நிய முதலீட்டிற்கான பல்வேறு விதிகளையும், உச்ச வரம்பையும் மத்திய அரசு தளர்த்தியிருக்கின்றது. அதில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு அனைத்து மாநில ஒப்புதலோடுதான் நிறைவேற்றப்படும் என மத்திய அரசு அறிவித்து அதன் காரணமாக எழுந்த கொந்தளிப்புகளை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டது. இது தற்காலிகம்தான்.  விரைவில் அரசு அதையும் அறிவிக்கும். அந்நிய முதலீட்டாளர்கள் சில்லறை வணிகத்தில் முதலீடு செய்வதால் நன்மை என்ன? தீமை என்ன? இந்தியாவில்…

  • நாம் நாமல்ல

    நாம் நம் இடத்தை விடுத்து நீண்ட தூரம் செல்லச் செல்ல நம்முடைய செயல்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. ஏனெனில் எந்த ஒரு நிலையிலும் நம்முடைய செயல்பாடு நாம் சார்ந்திருக்கக்கூடிய சமூகத்தின் செயல்பாடாகவே பார்க்கப்படுகிறது. இங்கே குறிப்பிடப்படும் சமூகம் என்பது நம் இடத்தையும் பதவியையும் பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும். எனது பள்ளி நாட்களில் நான் முதல் பரிசு பெற்றபொழுது எனது சுற்றுவட்ட கிராமங்களில் எனது செயல்பாடு எனது கிராமத்தின் ஒருவனது செயல்பாடாகவே பார்க்கப்பட்டது. ” School First…

  • | |

    காஷ்மீரும் ராணுவமும்

    காஷ்மீர் ராணுவத்தின் செயல்பாடுகள் பற்றிய விவாதங்கள் பற்றிய நேரத்தில் வாசித்த சிறந்ததொரு கட்டுரை. திருச்சி வே விஜயகிருஷ்ணன் அவர்களால். எனக்கு சாதாரணமாகவே ஒரு கட்டுகோப்பான இயக்கங்கள் மீது ஒரு தனி மரியாதை உண்டு. அது கம்யூனிசமானாலும் ஆர்எஸ்எஸ் ஆனாலும் சரி. அதுவே இராணுவம் என்றால் சற்று அதிக்கப்படியான மரியாதைதான். அவற்றின் அங்கத்தினர்கள் சாமான்ய மனிதர்களின் உந்துதள்களை மீறிய வாழ்வை வாழ்வதனாலேயே அவர்களுக்கு சற்று சலுகைகள் தேவை என்பதே என் எண்ணம். அதிலும் இராணுவம் போன்ற தன உயிரை…

  • அறிதலின் துவக்கம்

    அறிதலின் அடிப்படைத்துவக்கமே தன் குறைகளைத் தன்னளவில் ஏற்றுக்கொள்வதே. தன் செயலை சரியாக செய்யக்கூடிய ஒருவன் அதனை மேம்படுத்தும் வழியைத் தேடுகிறான். தன்னால் செயலையே செய்து முடிக்க‌ முடியாத ஒருவன் அச்செயலை செய்து முடிப்பதையே பெரிய சாதனையாகக் கருதும்பொழுது அங்கே மேம்படுத்துவது என்ற‌ சொல்லே பொருளற்றுப் போகிறது.

  • எளிய அழகிய இஸ்லாம்

    அனைவரிடத்தில் இஸ்லாம் மதத்தினைப் பற்றிய ஒரு தவறான அபிப்ராயத்தினை ஏற்படுத்தி இருக்கும் ஒரு சாரர்கள் மறந்த இஸ்லாமின் ஒர் அழகிய‌ பக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.