லூவர் அருங்காட்சியகம்

லூவர் அருங்காட்சியகம் பிரான்ஸிலுள்ள ஓரு உலகப்புகழ் பெற்ற அருங்காட்சியகம். அங்கு 4500 ஆண்டுகளுக்கு முன்னரிருந்த புராதானச்சின்னங்கள் முதல் 18 ஆம் நூற்றாண்டு வரையிலான பல்வேறு பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. உலகப்புகழ் பெற்ற மோனாலிசா ஒவியம் இங்குதான் உள்ளது.

Monalisa by Leonardo da Vinci

இந்த அருங்காட்சியகம் பற்றிய சில தகவல்கள்.

‍இந்த அருங்காட்சியகம் 60 சதுர கிமீ பரப்பளவில் செய்ன் நதிக்கரையில் அமைந்துள்ளது.

வருடத்திற்கு 97 லட்சம் மக்கள் இங்கு வருகின்றனர்.

உலகிலேயே அதிக மக்களால் கண்டுகளிக்கப்பட்ட‌ அருங்காட்சியகம் இதுதான்.

மொத்தம் 380000 க்கும் அதிகமான நினைவுச் சின்னங்கள் உள்ளன.அவற்றுள் ஒவியங்கள் மட்டும் 35000க்கும் அதிகம்.

முதன்முதலாக இரண்டாம் பிலிப் மன்னனால் 12 ஆம் நூற்றாண்டில் வசிப்பதற்காக கட்டப்பட்டது. பின்னர் பல்வேறு மன்னர்களால் மாற்றம் செய்யப்பட்டது.

பின்னர் 14 ஆம் நூற்றாண்டில் ஐந்தாம் சார்லஸ் மன்னன் வெர்செய்ல்ஸ் மாளிகைக்கு தன்னுடைய வசிப்பிடத்தை மாற்றிய பின்னர் சில ஒவியர்கள் தங்குவதற்காக வழங்கப்பட்டது.

பின்னர் பல்வேறு மன்னர்களால் சேர்க்கப்பட்ட கலைப்பொருள்கள், வரலாற்று சின்னங்கள், ஓவியங்கள் ஆகியவற்றைக் கொண்டு 1750 ல் ஒரு கண்காட்சி இந்த லூவர் அரண்மனையில் 15 ஆம் லூயிஸ் மன்னனால் நடத்தப்பட்டது.

பின்னர் நெப்போலியன் காலத்தில் போர் நடவடிக்கைகள், ஒப்பந்தங்கள் மூலமாக பல்வேறு உலகப்புகழ் பெற்ற ஓவியங்கள், புராதானச்சின்னங்கள் இந்த அருங்காட்சியகத்தில் சேர்க்கப்பட்டன.

The Seated Scribe from Saqqara, Egypt, limestone and alabaster, circa 2600 and 2350 BC

இரண்டாம் உலகப்போரின்போது இவையெல்லாம் அபகரிக்கப்பட்டுவிடும் என்ற எண்ணத்தில் வெவ்வேறு இடங்களில் மறைவாக வைக்கப்பட்டன.

அவற்றுள் உள்ள பல்வேறு பொருட்கள் உரிமையாளரை வற்புறுத்தி பெறப்பட்டவை என்ற குற்றச்சாட்டு எப்போதும் உண்டு.

அதனால் பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் அருங்காட்சியகத்தின் எந்த ஒரு பொருளையும் அதன் உரிமையாளர் மீண்டும் எடுத்துக்கொள்ளும் வண்ணம் அனுமதி அளிக்கப்பட்டது.

இதன் காரணமாக பல்வேறு நபர்கள் தங்களுடைய புராதானப் பொருட்களை நிருபித்து பெற்றுச் சென்றனர்.

இந்த அருங்காட்சியகம் பிரான்ஸ் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் பெரும்பாலான நடவடிக்கைகளை லூவர் நிர்வாகமே செய்து கொள்ளும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு,ஊழியர்களின் ஊதியம், நிர்வாகம் இவற்றுக்கான செல‌வை அரசும் பிற செயல்களுக்கான செலவுகளை லூவர் நிர்வாகமும் ஏற்றுக்கொள்கின்றன.

இதனால் வருமானத்திற்காக லூவர் அருங்காட்சியகத்தின் சில பகுதிகள் திரைப்படங்களின் ஒளிப்பதிவிற்காக வாடகைக்கு விடப்படுகின்றன.

மேலும் வருமானத்தை அதிகரிக்கவும், கூட்டத்தினை சமாளிக்கவும் பிரான்ஸில் மேலும் பல நகரங்களில் இந்த அருங்காட்சியகத்தின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலும் எந்தவித கட்டுமான மாற்றமும் பெறாத இந்த அருங்காட்சியகத்தின் முகப்பில் கண்ணாடியால் ஆன பிரமீடு 1988 ல் பிரான்ஸ் அரசால் அமைக்கப்பட்டது.

பிரான்ஸ் அரசாங்கம் மற்றுமொரு லூவர் அருங்காட்சியகத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சாடியாத் தீவில் அமைக்க அந்நாட்டு அரசுடன் 130 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த அருங்காட்சியகம் பறக்கும் தட்டு வடிவில் அமைக்கப்படுகிறது. கட்டுமானப் பணிகள் 2015 ஆம் ஆண்டு நிறைவு பெறும் என எதிபார்க்கப்படுகிறது.

அங்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் புராதான சின்னங்கள் கொண்டுவரப்பட்டு ஆண்டுக்கு 4 கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்படும்.
இந்த செயல்பாடு 15 ஆண்டுகளுக்குத் தொடரும்.

உலகின் பல்வேறு பகுதிகளின் தலைவர்களிடமிருந்து நன்கொடையும், பலர் தங்களிடமுள்ள புராதான சின்னங்களையும் இந்த அருங்காட்சியகத்துக்கு வழங்கி வருகின்றனர்.

Similar Posts

  • லிவ்ரே டூர்னாய்ஸ்

    லிவ்ரே டூர்னாய்ஸ் என்பது 1800 களின் பிற்பகுதியில் பிரான்சில் உபயோகப்படுத்தப்பட்ட பணமாகும். இது பிரான்சின் டூர்னாய்ன் மாகாணத்தில் உபயோகப்படுத்தப்பட்டது. இரண்டாம் பிலிப் மன்னன் இம்மாகாணத்தைக் கைப்பற்றியதும் அதுவரை புழக்கத்திலிருந்த லிவ்ரே பாரிசிஸிற்கு பதில் லிவ்ரே டூர்னாய்ஸை அதிகாரப்பூர்வ பணமாக அறிவித்தார். இருப்பினும் 1667 வரை லிவ்ரே பாரிசிஸும் புழக்கத்தில் இருந்தது. ஒரு லிவ்ரே ரூர்னாய்ஸ் என்பது 20 சூஸ்களாகவும் ஒரு சூஸ் என்பது 12 டினையர்ஸாகவும் பகுக்கப்படும். கடைசியாக 1720 ல் அச்சடிக்கப்பட்ட நோட்டுக்கள் வரை லிவ்ரே…

  • | | | |

    இந்தியாவில் முகலாயர்கள் – 2

    முகலாயர்களின் ஆட்சியில் இந்தியாவில் ஏற்பட்ட கலாச்சார பாதகங்கள், பொருளாதார பாதகங்கள் பல இருப்பினும் அவர்களால் ஏற்பட்ட சில சமூக நன்மைகளும் உண்டு. முகலாய சாம்ராஜ்யத்தின் போதே இந்தியா நிர்வாக ரீதியில் இன்றைய‌ ஒருங்கிணைந்த வடிவை அடைந்தது. அதற்கு முன்புவரை வெவ்வேறு பகுதிகளும் வெவ்வேறு நிலச்சுவான்தாரர்களாலும், குறு மன்னர்களாலும் ஆளப்பட்டு வந்தது. முகலாயர்களே அவர்களை வென்று ஒற்றை ஆட்சியின் கீழ் கொண்டுவந்தனர். முகலாயர்களைத் தொடர்ந்து ஆங்கிலேயர்கள் அவ்வொருங்கிணைக்கும் பணியினையே செய்தனர். அவர்கள் இவற்றையெல்லாம் இந்தியா என்னும் தேசத்தை உருவாக்க…

  • | |

    ஒற்றைப்படையாகும் உலகம்

    நான் சில ஆசிய நாடுகளுக்கு சமீபத்தில் பயணம் செய்தேன். அப்பயணங்களின் போது நான் உணர்ந்த மிகப் பொதுவான ஒரு விஷயம் எல்லா நாடுகளும் தங்களுடைய சுயத்தை இழந்து ஒற்றைப்படையாக ஆகிக்கொண்டிக்கின்றன என்பதையே. ஒருவேளை நாம் இந்தியா தவிர்த்து வேறு எந்த ஆசிய நாட்டிற்கும் செல்லாதவராக இருப்போமேயானால் மற்ற நாடுகள் முற்றிலும் வேறானவையாக இருக்கும் என்று எண்ண வேண்டியதேயில்லை போலிருக்கிறது. காரணம் பெரும்பாலான நாடுகளில் அங்கிருக்கும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை மறந்துவிட்டுப் பார்த்தால் அது முற்றிலும் நம்முடைய இந்தியாவின்…

  • | | |

    சட்டத்தை நிறைவேற்றுபவர்களின் ஆட்சி

    தமிழக,இந்திய‌ அரசியல் தொடர்பான எந்த ஒரு நிகழ்வையும் வரலாற்றுத்தகவல்களோடு அணுகவேண்டும், அன்றாட‌ வெற்று அரசியல் கூப்பாடுகளுக்கு செவி மடுக்கக்கூடாது என்ற நினைப்பு எனக்கு எப்பொழுதும் உண்டு. அதனால் பெரும்பாலான‌ நிகழ்கால அரசியல் விவாதங்களில் என்னுடைய கவனத்தை முற்றிலுமாக நான் தவிர்த்து விடுவதுண்டு. கடந்த ஒரு மாதங்களில் ஏதேனும் ஓர் ஊடகத்தில் வெளிவந்த விவாதங்களை ஒட்டுமொத்தமாக தொகுத்துப் பாருங்கள். அவையெல்லாம் வெற்றுக் குப்பைகள், அன்றன்றைய சொறிதலுக்கு மட்டுமேயானவை என்பது தெரியும். அதன் காரணமாகவே இந்த வெற்று நுரை கொப்புளிக்கும்…

  • | | | | |

    புதிய தலைமுறை வார இதழில்

    நான் எழுதிய இந்திய உளவுத்துறை எவ்வாறு செயல்படுகிறது புத்தக விமர்சனம் புதிய தலைமுறை 31 டிசம்பர் தேதியிட்ட வார இதழில் வெளிவந்துள்ளது. அக்கட்டுரை. ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண் என்பது வள்ளுவர் வாக்கு. அதாவது நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்திலேயே ஓர் அரசு சிறப்பாகச் செயல்பட முடியும். ஆம் இன்றும் அதுதான் நிலை. கடந்த 50 ஆண்டுகால வரலாற்றை…

  • |

    அழகானவர்கள்

    சிவப்பாய் இருப்பவர்களே அழகானவர்கள், கருப்பு நிறத்தவர்கள் சற்று கீழே என கடந்த 30 ஆண்டுகளாகவே ஒருவகை மனநிலை நமக்குள் திணிக்கப்படுகிறது. இருபத்தைந்து விழுக்காடு சிவப்பு நிறத்தவர்கள்  இருந்தால் சற்றே ஆச்சரியம் அளிக்கக்கூடிய இந்த தமிழகத்தில் இந்த மனநிலை எப்படி நம‌க்குள் வந்திருக்கலாம்? ஒரு சில நண்பர்கள் இல்லை என மறுத்துப் பேசினாலும் உள்ளுக்குள் அவர்களுக்கும் அந்த எண்ணம் இருப்பதை பலமுறை அவர்களுடைய பேச்சுக்களில் உணர்ந்திருக்கிறேன். கிட்டத்தட்ட கருப்பென்றாலே அழகு குறைவு என்ற மனநிலை நம் அனைவருக்குமே. ‘கருப்பா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.