|

தேவாரம் – திருநாவுக்கரசர்

நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்;
நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்;
ஏமாப்போம்; பிணி அறியோம், பணிவோம் அல்லோம்;
இன்பமே எந்நாளும், துன்பமில்லை.

 

பொருள்:

எம்பெருமான், பெம்மான், பொன்னர் மேனியன் இருக்கும் போது நாம் யாருக்கும் குடி அல்ல; அதாவது யாரும் எம்மைக் கட்டுப்படுத்தவோ, அத்து இடவோ முடியாது. நமனுக்கு அஞ்சமாட்டோம். அதாவது நமன்(யமதருமன்) எம்மிடத்து வரவே மாட்டார் என்பது இல்லை. எமன் வருவார். ஆயினும் யாம் அஞ்சமாட்டோம். எமக்கு மரணத்தைக் கண்டு அச்சமில்லை. சாகத் தயார். ஏனென்றால் எம்பெருமான், பெம்மான், பொன்னர் மேனியன் இருகின்றார்.
நரகத்தில் இடர்ப்படோம். அதாவது நரகத்திற்கு போக மாட்டோம் என்றில்லை. ஒருவேளை நரகத்திற்கே சென்றாலும் யாம் அங்கே இடர் பட மாட்டோம். ஏனெனில் சென்றவிடத்தைச் சொர்க்கமாய்ப் பாவிக்க எம் மனதிற்குத் தெரியும். ஏமாற மாட்டோம். பிணி அறியோம்.அதாவது, பிணியுற மாட்டோம் என்றில்லை, பிணியுற்றாலும், அதனால் துவண்டிட மாட்டோம். அடிபணிய மாட்டோம். எமக்கு என்றும், எப்போதும் துன்பம் என்பது கிடையாது.என்றும், எப்போதும், எந்நாளும் இன்பமே. ஏனென்றால் எம்பெருமான், பெம்மான், பொன்னர் மேனியன் இருகின்றார்.

Similar Posts

  • How to book Freedom251 easily?

    If anyone wants to book the freedom 251 mobile phone please follow the steps below to do all the typo works like filling address, filling quantity, clicking the submit button etc., automatically till we get the payment page. You no need to reload and type details every time. Till it get success the browser will try again and again…

  • புது வருடம் ‍- 2020

    இந்த ஆண்டில் 1. 52 புத்தகங்களை வாசிப்பது2. வாசித்த புத்தகங்களுக்கான அறிமுகத்தை தமிழில் காணொளியாக இணையத்தில் பதிவேற்றுவது3. தெலுங்கு மொழியினை சரளமாக பேசவும்,எழுதவும்,வாசிக்கவும் கற்றுக்கொள்வது என மூன்று செயல்களைத் திட்டமிடுகிறேன். சென்ற ஆண்டில் 50 புத்தகங்களை வாசிக்கத்திட்டமிட்டு 7 புத்தகங்களை மட்டுமே முழுமையாக வாசித்தேன். எந்த விதமான காரணம் கூறிக்கொண்டாலும் திட்டமிட்டதனை அடய முடியவில்லை என்பதே உண்மை. அதிலுள்ள குறைபாடுகளை திருத்திக்கொண்டு மீண்டும் முன் செல்லத் திட்டமிடுகிறேன். இரண்டாவதாக, வாசித்த புத்தகங்களைப்பற்றி இணையத்தில் பதிவேற்றம் செய்வதற்கான காரணம்…

  • தினம் ஒரு வார்த்தை 49 – weed

    weed – தேவையில்லாமல் வளரக்கூடிய ஒர் செடி போன்ற பொருள்களில். உவமையாகவும் சில நேரங்களில் மனிதர்களையும் சுட்டும். Sample Sentences: 1. keep the seedlings clear of weeds 2. He thought party games were for weeds and wets

  • ஜாதகம் – வரலாறும் நம்பிக்கைகளும்

    மனித வரலாற்றில் ஜாதகத்திற்கு (Astrology) எத்தனை முக்கியத்துவம் இருந்திருக்கிறது, இருக்கிறது என்று நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் முற்றிலும் நாத்திகவாதியாகவோ, ஆத்திகவாதியாகவோ அல்லது இரண்டுக்கும் இடைப்பட்ட ஒருவராகவோ இருக்கலாம். இந்த மூன்றுக்கும் அப்பால் நின்று சிந்திப்பவற்களுக்காக‌ இந்தக் கட்டுரை. சீன மரபின் படி பாகுவா (Ba Gua) என்பது நமது ஊரின் வாஸ்து போன்றது. அதிலுள்ள பல்வேறு குறியீடுகளுக்கு ஏற்றார்போல், அந்த‌ அமைப்பின் படி எந்த ஒரு புதிய கட்டுமானத்தினையும் அமைக்க வேண்டும் என்பது நம்பிக்கை. நமது ஊரில்…

  • தினம் ஒரு வார்த்தை 15 – diddle

    diddle – (ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள்) 1. ஏமாற்றுதல் Sample Sentence: he thought he’d been diddled out of his change 2. வீணாக நேரத்தை செலவழித்தல் Sample Sentence: I felt sorry for her, diddling around in her room while her friends were having a good time

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.