இரண்டு மரங்கள் – பாவண்ணன்

Irandu marangal

பாவண்ணன் அவர்களால் வெவ்வேறு காலங்களில் எழுதப்பெற்ற ஒன்பது சிறுகதைகளின் தொகுப்பு.புதுமைப்பித்தன் பதிப்பகம் வெளியீடு. வெளிவந்த ஆண்டு 2008.

கையெழுத்து
கூடு
இனிப்பும் கசப்பும்
பற்றுதல்
இரண்டு மரங்கள்
கடல்
பொங்கல்
உயரத்தை நோக்கி
வரிசை

கையெழுத்து
வாழாவெட்டியாக தன்னுடைய அண்ணன் வீட்டில் வந்து தங்கும் அம்பிகா, இருபது வருடங்கள் கழித்து அவள் கணவனுடைய மரணத்திற்கும் செல்ல மறுக்கிறாள். அதன் பின்னர் அவருடைய சொத்து வாரிசாக உரிமை கொண்டாடவும் மறுக்கிறாள். ஆனால் வீட்டில் உள்ளவர்கள் வற்புறுத்தவே வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.

கூடு
தன்னுடைய குடும்பத்தினரோடு மன வருத்தம் கொண்டு வெளியேறி வேறோர் ஊரில் தங்கும் சாமிநாதன் என்னும் முதியவரின் கதை. அவர் குடியிருந்த வீட்டின் ராகவனும் அவன் மனைவி ரேவதியும் அவரோடு மிகவும் நெருக்கமாகின்றனர். தான் அங்கே ஒரு கதை எழுத வந்திருப்பதாகக் கூறும் அவரிடம் அவர்களும் பிற விவரங்களை அதிகமாகக் கேட்கவில்லை. இந்நிலையில் ஒருநாள் இறந்து போகிறார். அவரின் உடலை அடக்கம் செய்வதா அல்லது உறவினருக்காக காத்திருப்பதா என எண்ணி ஐந்து நாட்கள் காத்திருக்கிறார்கள். அதற்குள்ளாக ஏற்படும் எண்ண ஓட்டங்களே கதை.

இனிப்பும் கசப்பும்
சற்றே வித்தியாசமான கதை அமைப்பு. ஒரு தொலைக்காட்ச்சி நிகழ்ச்சியில், மக்களிடம் இருந்து பெறப்பட்ட நட்பு தொடர்பான அனுபவங்களை அவர்கள் கூறுவதாகவே கூறும் வண்ணம் அமைக்கப்பட்ட கதை. ஐந்து குறுங்கதைகளை ஒன்றாகத் தொகுத்த சிறுகதை.

பற்றுதல்
கண் தெரியாத தாத்தா தன் பேத்தியின் மகன் மாணிக்கத்தை வளர்த்து வருகிறார். அவர் பேத்தி மஞ்சள் காமாலையில் இறந்து போயிருந்தாள். அவள் கணவனோ ஒரு நாடகக் காரியோடு ஓடிப்போய் விட்டார். சேர்களுக்கு ஒயர் பின்னுவதே தாத்தாவின் தொழில். மாணிக்கத்தையும் அதற்குப் பழக்கியிருந்தார். ஒருநாள் சாஸ்திரி வீட்டில் வேலை செய்யும் பொழுது மாணிக்கம் வாசிக்கும் புல்லாங்குழலின் இசையைக் கேட்ட சாஸ்திரி அவனை இசை கற்றுக்கொள்ள அனுப்பச் சொல்கிறார். கற்றுக்கொள்ளச் செல்லும் தன் பேரன் தன்னை விட்ட விலகுவதாகச் செல்லும் தாத்தாவின் எண்ணங்களே கதை.

இரண்டு மரங்கள்
தேங்காய்த்திட்டு முழுவதும் மரங்கள் வளர்த்ததற்காக பத்மஸ்ரீ விருது பெற்ற ராஜாத்தி அம்மாள் அவ்விடத்தை பொருளாதார மண்டலத்திற்காக அரசாங்கம் ஒதுக்கும்பொழுது அதனை எதிர்த்து தன்னுடைய பத்மஸ்ரீ விருதைத் திருப்பிக்கொடுக்கும் கதை. அதன் பின்னர் அவருடைய கடந்தகாலம், அவருடைய வாழ்க்கை என விரிவடையும் சிறுகதை.

கடல்
டூரிஸ்ட் கைடாக வேலை பார்க்கும் முட்டைக்கோஸின் கதை. கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு, பத்தாண்டுகள் கழித்து வருபவனின் நினைவில் கதை சொல்லப்படுகிறது. அவன் வளர்ந்த விதம், டூரிஸ்ட் கைடாக ஆனது. அவனை பிரான்ஸுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறிய வெளிநாட்டுப் பெண்மணியின் நேசம் என விரியும் கதை.

பொங்கல்
தன்னுடைய குடிகாரக் கணவனிடம் போராடும் பட்டம்மாவின் கதை. அய்யனார் கோவிலில் பொங்கல் வைக்கும் பொழுது குடித்துவிட்டு வரும் சாமிக்கண்ணு பட்டம்மாவை அடித்து சண்டை பிடிப்பது தான் கதை. பட்டம்மாள் அய்யனாராக மாறும் தருணம் கதையின் உச்சம்.

உயரத்தை நோக்கி
தான் விரும்பாத வாழ்க்கை அமையப்பெற்ற பத்மா அதனை உதறி தான் விரும்பும் நபரோடு வேறோர் ஊருக்குச்சென்று வாழ்வைத் தொடங்க முயன்று, அவள் கண்டுபிடிக்கப்பட்டு அத்தருணத்தில் தற்கொலை செய்து கொள்ளும் கதை. வெளியே சென்ற தன் காதலனின் நினைவாகக் காத்திருக்கும் தருணத்தில் தோன்றும் எண்ணங்களே கதை.

வரிசை
தன்னுடைய மூன்று மகள்களையும் தனியாக வளர்த்து, அவர்களைக் கட்டிக்கொடுத்து அவர்களின் தேவைகளுக்காக இன்னும் காய்கறி விற்கும் அப்பாவின் கதை. மனைவியின் நினைவாக இருக்கும் தாலியையும் விற்று மகளுக்கு தீபாவளி சீர் செய்வதோடு கதை முடிகிறது.

இதில் என்னை மிகவும் கவர்ந்த கதை வரிசை மற்றும் பொங்கல். வாசிக்க வேண்டிய சிறுகதைகள்.

Similar Posts

  • இன்றைய காந்தி ‍- ஜெயமோகன்

    மகாத்மா காந்தி அவர்களைப் பற்றி உண்மையாக அறியத் தொடங்க விரும்புபவர்களுக்கான சிறந்த தொடக்க நூல். ஜெயமோகன் அவர்களால் அவரது இணைய தளத்தில் தொடர்ச்சியாக வெளிவந்த கேள்வி பதில் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். அஹிம்சைப் போராட்டம் எவ்வளவு தூரம் சாத்தியமானது? இந்திய நிலப்பகுதி அல்லாமல் பிற தேசங்களுக்கு இது சாத்தியமா? காந்தியை ஏன் மகாத்மா என அழைக்க வேண்டும்? காந்தி இந்திய சுதந்திரத்தினை தனது அஹிம்சைப்போராட்டத்தினால் மேலும் தாமதிப்படுத்தினார். இல்லையேல் இன்னும் முன்னதாகவே நம‌க்கு சுதந்திரம் கிடைத்திருக்கும் என்ற…

  • | | |

    BackStage – Montek Singh Ahluwalia

    மான்டெக் சிங் அலுவாலியா அவர்களால் எழுதப்பெற்று 1990 களில் இந்தியா மேற்கொண்ட பொருளாதாரா சீர்திருத்தங்களைப் ப‌ற்றி விரிவாக விவரிக்கும் புத்தகம். இந்திய வரலாற்றையும், பொருளாதாரத்தையும் அறிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நூல். பெரும்பாலும் தனி நபர் நினைவிலிருந்து எழுதக்கூடிய புத்தகங்கள் எல்லாம் அவர்களைப் பற்றிய மற்றும் அவர்களைச் சுற்றி நடைபெற்ற‌ நிகழ்வுகளின் தொகுப்பாகவே இருக்கும். அத்தகைய ஒரு புத்தகத்தினை எழுதுவதில் தனக்கு உடன்பாடு இல்லை எனக்கூறிவிட்டே புத்தகத்தினை தொடங்குகிறார் அலுவாலியா. இந்த புத்தக்கத்தினை வாசித்து…

  • புத்தகம் 2 : அப்புசாமியும் ஆப்ரிக்க அழகியும்

    பாக்கியம் ராமசாமியால் எழுதப்பெற்று குமுதத்தில் 1963 களில் தொடர்கதையாக வெளிவந்த நகைச்சுவைத் தொடர். பின்னர் மொத்த நாவலாக வெளியிடப்பட்டது. அப்புசாமித் தாத்தா தன்னுடைய மனைவி சீதாவுடன் நாள்தோறும் சண்டையிட்டு வருபவர். சாதாரண விளையாட்டுச் சண்டைகள். ஒருமுறை அவருடைய தாடியை அவர் மழிக்கவில்லை என்பதற்காக அவரைத் தன்னுடன் ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லாமல் விடுகிறாள் சீதா. அதனால் தான் இனிமேல் தாடியை எடுக்கப்போவதில்லை என சபதம் செய்கிறார் அப்புசாமி. இந்நிலையில் இந்தியாவுக்கு வருகை தரும் ஒரு ஆப்ரிக்க இளவரசி…

  • |

    இன்னும் மீதமிருக்கிறது

    சிங்கப்பூரில் வாழும் சத்திக்கண்ணனால் எழுதப்பட்ட கவிதைப் புத்தகம். பெரும்பாலானவை வசனக்கவிதைகள். ஒரு சில முத்தாய்ப்பான கவிதைகளும் உண்டு. உதாரணமாக மனைவியைப்பற்றிய கவிடையொன்றில் எல்லாவற்றையும் தூரமாகத்தெரிந்தால் அழகென்றிருந்த எனக்கு அருகில் மலர் நீ இருக்கும் போது என்ன செய்ய?  என்னும் கவிதை அழகு. வானவில், கனவு போன்றவை நான் ரசித்த கவிதைகள். நான் ரசிக்காதது முன்னுரை எழுதியிருப்பவர் பாடியிருக்கும் துதி.

  • |

    Rich Dad Poor Dad – Robert Kiyosaki

    Robert Kiyosaki ஆல் எழுதப்பெற்று 1997 ஆம் ஆண்டில் வெளிவந்தது. வாழ்வில் பொருளாதார தன்னிறைவு அடைவதற்கு தனி மனித நுண்ணறிவு எத்தகைய முக்கியமான ஒன்று என்பதனை விவரிக்கும் நூல். 50 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலகம் முழுவதும் 30 மில்லியனுக்கும் அதிகமாக விற்பனையான நூல். இந்நூல் வாசிப்பவர்கள் பொருளாதார தன்னிறைவினை அடைந்தார்கள் என்பதனை விட‌ Robert Kiyosaki கண்டிப்பாக இப்புத்தகத்தினால் பொருளாதார நிறைவினை அடைந்திருப்பார் என்பது நிதர்சனம். இப்புத்தகத்தினை பத்து தனி அத்தியாயங்களாக‌ Robert Kiyosaki…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.