The Siren’s Feast – Benjamin Hulme-Cross

Benjamin Hulme-Cross என்பவரால் எழுதப்பட்டது. சாத்தான்களை ஓட்டும் கதை. சிறுகதை என‌லாம். குழந்தைகள் மற்றும் ஆரம்பகால வாசிப்பு நிலைகளில் உள்ளவர்களின் வாசிக்கும் பழக்கத்தினை ஊக்குவிக்கக்கூடிய‌ புத்தகம். அதற்காகவே புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறைவான வார்த்தைகள், பெரிய எழுத்துக்கள்.

ப்லட் சாத்தான்களை ஓட்டுபவ‌ர். அவருக்கு உதவக்கூடிய சிறுவர்கள் எட்ஜும் மேரியும்.ஒருமுறை அவர்கள் ஓரிடத்தைக் கடக்கும்பொழுது ஓர் கிராமம் அதீத வறுமையில் இருப்பதைக் கண்டு தங்களிடமுள்ள உணவுப்பொருள்களைக் கொடுக்கின்றனர். அதனைத் தொடர்ந்து அந்தக் கிராமத்தில் உள்ள மற்ற‌ அனைவரும் இவர்களிடம் உணவுப்பொருள்களை எதிர்பார்க்கின்றனர். அவர்களிடம் அனைவருக்கும் கொடுப்பதற்கான உணவுப்பொருள் அவர்களிடத்தில் இல்லை. அதனால் ஏதேனும் பிரச்சினை நேரலாம் என எண்ணி அவ்விரவில் அக்கிராமத்தில் தங்காமல் வேறிடம் நோக்கி செல்கின்றனர். சிறிது தூரத்தில் அவர்கள் ஓர் அழகிய இளம்பெண்ணைக் காண்கின்றனர். அவள் தன்னுடன் வந்து தங்கள் வீட்டில் இரவைக் கழிக்கலாம் எனக் கூறுகிறாள். அதனை ஏற்று அவளுடன் செல்கின்றனர்.

அவள் வீட்டில் அவளுடன் அவளுடைய இரண்டு சகோதரிகளும், பெற்றோரும் இருக்கின்றனர். மூன்று பேரும் ஒன்றுபோல் இருக்கின்றனர். அவர்கள் ஒன்றாகப் பிறந்ததாக அவர்களின் அப்பா கூறுகிறார். அனைவரும் வசதியாகவும் செழிப்புடனும் இருப்பதைப் பார்த்து மேரி சந்தேகம் அடைகிறாள். ஆனால் ப்லட்டும், எட்ஜூம் அச்சகோதரிகளையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இரவு உணவுக்குப்பின்னர் படுக்கைக்கு செல்லும் மேரி ஒரு பாடலைக் கேட்கிறாள். அப்பாடல் தன்னை அதனை நோக்கி இழுப்பதை உணர்ந்த அவள் அதனைக் கண்டறிய அதன் பின் செல்கிறாள். அங்கே, வீட்டிற்கு வெளியே உள்ள கொட்டகையில் வெளிச்சம் வருவதைக்கண்டு அங்கே செல்கிறாள். அங்கே அவள் காணும் காட்சி திடுக்கிட வைக்கிறது. சகோதரிகள் மூவரும் பாடிக்கொண்டிருக்க எட்ஜும், ப்லட்டும் அதனைக் கேட்டுக்கொண்டு அசையாமல் நிற்கின்றனர். அவர்களுடைய அப்பா கையில் பெரிய கோடாரி போன்ற ஓர் ஆயுதத்தோடு நிற்கிறார்.அதன் பின்னர் மேரி அவர்களை எப்படிக் காப்பாற்றுகிறாள் என்பது கதை. விறுவிறுப்பான சிறுகதை அல்லது குறுநாவல். குழந்தைகளின் வாசிப்பு ஆர்வத்தை தூண்ட வாசிக்க வைக்க‌லாம்.

Similar Posts

  • |

    ஆயிரம் ஜன்னல் ‍‍- ஜக்கி வாசுதேவ்

    ஆனந்த விகடனில் தொடர்ச்சியாக வெளிவந்த ஜக்கி வாசுதேவ் அவர்கள் எழுதிய‌ கட்டுரைகளின் தொகுப்பு. எழுத்தாக்கம் சுபா. வாராந்திரக் கட்டுரை வடிவில் வெளிவந்ததனால் ஒட்டு மொத்த தொடர்ச்சி கிடையாது. ஒரு எளிய கட்டுரை அதனுள் ஒரு சிறு அறம். இப்படித்தான் பெரும்பாலானவை. இத்தொடர் வெளிவந்த காலகட்டத்திலேயே ஜக்கி வாசுதேவ் ஒரு புகழ்பெற்ற நபராக இருந்தமையால் அவர் சாதாரணமாகச் சொல்வதைக்கூட பிரமாண்டமாகவே எடுத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு வாசிப்பவர்கள் சென்றே ஆக வேண்டும். அப்படிப்பட்டவையே இக்கட்டுரைகள். வாராந்திர சஞ்சரிகைகளையும், தினசரி செய்திகளையும்…

  • | |

    புத்தகம் 1 : சூதாடி

    ரஷ்ய மொழியில் தஸ்தோயேவ்ஸ்கியால் எழுதப்பெற்று 1867 ல் வெளிவந்த‌ The Gambler நாவலின் தமிழாக்கம். தமிழாக்கம் ரா.கிருஷ்ணையா. இந்நாவலின் மையக் கதாபாத்திரம் Alexei Ivanovich, தன்னுடைய அனுபவங்களை கூறுவது போன்ற நாவல். ரஷ்ய ஜெனரலின் குழந்தைகளுக்கு பாடம் கற்றுத் தரும் ஆசிரியராக வேலை செய்கிறான் Alexei Ivanovich. அவன் ஒருதலையாக‌ ஜெனரலின் சகோதரர் மகள் Polina மீது காதல் கொள்கிறான். அவளுக்கு அவனுடைய காதல் தெரிந்தாலும் அதனை ஏற்காமலும் மறுக்காமலும் அவனுடன் பழகி வருகிறாள். அவளுடைய சிற்றப்பாவாகிய…

  • | | | |

    இந்தியாவில் முகலாயர்கள் ‍- 1

    16 ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டு வரையிலான‌ ஏறத்தாழ 350 ஆண்டுகள் இந்தியாவில் முகலாயர்களின் ஆட்சிக்காலம். அதுவரை இந்தியாவினை ஆண்டு வந்தவர்கள் ஆப்கானிய‌ வம்சத்தைச் சேர்ந்த சுல்தானியர்கள். சுல்தானியர்களும் இன்றைய இந்திய நிலப்பரப்பு முழுவதையும் ஆளவில்லை. இன்றைய வட இந்திய நிலப்பகுதி, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றை உள்ளடக்கிய ஓர் நிலப்பகுதியினை ஆண்டு வந்தார்கள். அவர்களைத் தோற்கடித்தே முகலாயப் பேரரசினை பாபர் தொடங்கி வைத்தார். மங்கோலிய இன‌ செங்கிஸ்கான் வழி வந்தவர் தைமூர். தைமூர் மங்கோலிய,…

  • ஃபாரன்ஹீட் 451

    கதை எதிர்காலத்தில் நடைபெறுவது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. நாட்டில் போர் ஏற்படுவது போன்ற சூழல். ஆதலால் அரசாங்கம் யாரும் புத்தகங்களை வைத்திருப்பதையும், வாசிப்பதையும் தடை செய்கிறது. மோண்டாக் ஒரு தீயணைப்புத் தொழிலாளி. அவனுடைய மேலாளர் பியாட்டி. அவர்களது பணி யார் வீட்டிலெல்லாம் புத்தகங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறதோ அவற்றைக்கண்டுபிடித்து எரிக்க வேண்டும். அதுவே அவர்களுக்கு இடப்பட்ட ஆணை. மக்கள் பெரும்பாலானவர்கள் வாசிக்கும் பழக்கத்தையே விட்டுவிட்டவர்களாக இருக்கிறார்கள். அன்றைய தொலைக்காட்சிகள் பார்ப்பவர்களோடு உரையாடும் தொழில்நுட்பம் கொண்டவைகளாக இருக்கின்றன. எனவே எல்லோரும் முற்றிலும்…

  • |

    ஆரோக்ய நிகேதனம் – தாராசங்கர் பந்த்யோபாத்யாய

    1951 ஆம் ஆண்டில் தாராசங்கர் பந்த்யோபாத்யாய அவர்களால் வங்க மொழியில் எழுதப்பெற்ற நாவல். பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலை தமிழில் த.நா.குமாரசாமி அவர்கள் 1972 ல் மொழிபெயர்த்துள்ளார். இந்திய அரசின் சாகித்திய அகாதெமி மற்றும் மேற்கு வங்க அரசின் ரபீந்திர புரஷ்கார் விருதுகளை வென்ற நாவல். இந்நாவல் ஜீவன் மாஷாய் என்னும் வைத்தியரின் நினைவோட்டத்தின் வாயிலாக சொல்லப்படுகிறது. மூன்று தலைமுறைகளாக ஆயுர்வேத சிகிச்சை செய்துவரும் ஜீவன் மாஷாயின் வாழ்வு மற்றும் ஆயுர்வேத மருத்துவம் ஆங்கில மருத்துவ‌த்தின் வருகையினால்…

  • |

    நவீன இந்தியாவின் சிற்பிகள் – ராமச்சந்திர குஹா

    நவீன இந்தியாவை உருவாக்கிய சிற்பிகள் இவர்கள் என பத்தொன்பது பேரைக் குறிப்பிட்டு அதற்கான காரணங்களாக அவர்களுடைய செயல்பாடுகள் மற்றும் அவர்கள் பல்வேறு சமயங்களில் ஆற்றிய உரைகள், எழுதிய கடிதங்கள் போன்றவற்றை ஆதாரங்களினோடு தொகுத்துள்ளார் ராமச்சந்திர குஹா. அதுவே இப்புத்தகம். அந்த பத்தொன்பது பேர் இவர்களே மகாத்மா காந்தி ஜவகர்லால் நேரு பி.ஆர்.அம்பேத்கர் ராம்மோகன் ராய் ரவீந்திரநாத் தாகூர் பாலகங்காதர திலகர் ஈ.வே.ராமசாமி முகம்மது அலி ஜின்னா சி.ராஜகோபாலச்சாரி ஜெயப்பிரகாஷ் நாராயணன் கோபால கிருஷ்ண கோகலே சையது அகமது கான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.