The Siren’s Feast – Benjamin Hulme-Cross

Benjamin Hulme-Cross என்பவரால் எழுதப்பட்டது. சாத்தான்களை ஓட்டும் கதை. சிறுகதை என‌லாம். குழந்தைகள் மற்றும் ஆரம்பகால வாசிப்பு நிலைகளில் உள்ளவர்களின் வாசிக்கும் பழக்கத்தினை ஊக்குவிக்கக்கூடிய‌ புத்தகம். அதற்காகவே புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறைவான வார்த்தைகள், பெரிய எழுத்துக்கள்.

ப்லட் சாத்தான்களை ஓட்டுபவ‌ர். அவருக்கு உதவக்கூடிய சிறுவர்கள் எட்ஜும் மேரியும்.ஒருமுறை அவர்கள் ஓரிடத்தைக் கடக்கும்பொழுது ஓர் கிராமம் அதீத வறுமையில் இருப்பதைக் கண்டு தங்களிடமுள்ள உணவுப்பொருள்களைக் கொடுக்கின்றனர். அதனைத் தொடர்ந்து அந்தக் கிராமத்தில் உள்ள மற்ற‌ அனைவரும் இவர்களிடம் உணவுப்பொருள்களை எதிர்பார்க்கின்றனர். அவர்களிடம் அனைவருக்கும் கொடுப்பதற்கான உணவுப்பொருள் அவர்களிடத்தில் இல்லை. அதனால் ஏதேனும் பிரச்சினை நேரலாம் என எண்ணி அவ்விரவில் அக்கிராமத்தில் தங்காமல் வேறிடம் நோக்கி செல்கின்றனர். சிறிது தூரத்தில் அவர்கள் ஓர் அழகிய இளம்பெண்ணைக் காண்கின்றனர். அவள் தன்னுடன் வந்து தங்கள் வீட்டில் இரவைக் கழிக்கலாம் எனக் கூறுகிறாள். அதனை ஏற்று அவளுடன் செல்கின்றனர்.

அவள் வீட்டில் அவளுடன் அவளுடைய இரண்டு சகோதரிகளும், பெற்றோரும் இருக்கின்றனர். மூன்று பேரும் ஒன்றுபோல் இருக்கின்றனர். அவர்கள் ஒன்றாகப் பிறந்ததாக அவர்களின் அப்பா கூறுகிறார். அனைவரும் வசதியாகவும் செழிப்புடனும் இருப்பதைப் பார்த்து மேரி சந்தேகம் அடைகிறாள். ஆனால் ப்லட்டும், எட்ஜூம் அச்சகோதரிகளையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இரவு உணவுக்குப்பின்னர் படுக்கைக்கு செல்லும் மேரி ஒரு பாடலைக் கேட்கிறாள். அப்பாடல் தன்னை அதனை நோக்கி இழுப்பதை உணர்ந்த அவள் அதனைக் கண்டறிய அதன் பின் செல்கிறாள். அங்கே, வீட்டிற்கு வெளியே உள்ள கொட்டகையில் வெளிச்சம் வருவதைக்கண்டு அங்கே செல்கிறாள். அங்கே அவள் காணும் காட்சி திடுக்கிட வைக்கிறது. சகோதரிகள் மூவரும் பாடிக்கொண்டிருக்க எட்ஜும், ப்லட்டும் அதனைக் கேட்டுக்கொண்டு அசையாமல் நிற்கின்றனர். அவர்களுடைய அப்பா கையில் பெரிய கோடாரி போன்ற ஓர் ஆயுதத்தோடு நிற்கிறார்.அதன் பின்னர் மேரி அவர்களை எப்படிக் காப்பாற்றுகிறாள் என்பது கதை. விறுவிறுப்பான சிறுகதை அல்லது குறுநாவல். குழந்தைகளின் வாசிப்பு ஆர்வத்தை தூண்ட வாசிக்க வைக்க‌லாம்.

Similar Posts

  • |

    Get To The Top – Suhel Seth (புத்தகம் – 1)

    இந்திய தொழிலதிபர் சுஹெல் சேத் அவர்களால் எழுதப்பெற்ற சுயமுன்னேற்ற‌ நூல். இந்தப்புத்தகம் பெரும்பாலும் நண்பர்களைப் பெறுவது எவ்வாறு, அவர்களை பேணுவது எவ்வாறு என்பதனை விளக்கும் ஒரு புத்தகம். சுஹெல் தொழிலதிபர் மட்டுமல்லாமல், பத்திரிக்கைகளில் தலையங்கம் எழுதக்கூடியவரும், தொலைக்காட்சித் தொகுப்பாளரும், பேச்சாளரும் கூட. ஆதலால் அவருக்கு இருக்கும் தொடர்புகள் மேல்மட்டத்திலானவையாக இருக்கின்றன. உதாரணமாக அருண் ஜேட்லி, விஜய் மல்லையா, மம்தா பானர்ஜி என. அத்தகைய அவருடைய மேல்தட்டு அனுபவங்களின் நிகழ்வுகளை விவரித்து அவற்றிலிருந்து இப்புத்தகத்திற்கான கருத்துக்களை ஒருங்கிணைத்துள்ளார். ஒரு…

  • முத்துக்கள் பத்து – தி.ஜானகிராமன்

    ஜானகிராமன் அவர்களின் ப‌த்துக் கதைகளின் தொகுப்பு. அம்ருதா பதிப்பகம் வெளியீடு. கங்கா ஸ்நானம் சிலிர்ப்பு பரதேசி வந்தான் பிடி கருணை முள்முடி மேரியின் ஆட்டுக்குட்டி கோதாவரிக்குண்டு பசி ஆறிற்று சத்தியபாமா செய்தி இவையே அந்த பத்து சிறுகதைகள். வாசிக்க வேண்டிய சிறுகதைகள்.

  • |

    ஆயிரம் கைகள் – ஜெயமோகன்

    ஜெயமோகன் எழுதிக்கொண்டிருக்கும் மகாபாரதமாகிய வெண்முரசுவில் வரும் பரசுராமன் தொடர்பான அத்தியாயங்களைத் திரட்டி ஒரு சிறிய நூலாக வெளியிட்டிருக்கிறார்கள். ஜெயமோகன் கூறியது போல இது வெண்முரசில் நுழைய ஒரு வழி. பரசுராமனி பிறப்பிற்கான காரணம் முதல் பிருகுகுல பிராமணர்களிற்கும், யாதவ குடிகளுக்கும் பல தலைமுறைகள் நடந்த போரினைப் பற்றி சுருக்கமாக விளக்கும் நாவல். வாசிக்க வேண்டிய புத்தகம்.

  • |

    இந்திய வரலாறு ‍ – ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்

    ஆரியர்கள் வருகை முதலாக இந்தியாவின் முதல் காங்கிரஸ் அல்லாத அரசு கேரளத்தில் அமைந்தது வரையிலான இந்திய வரலாற்றை மார்க்சிய நோக்கில் விவரிக்கும் நூல். கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் முதலமைச்சரான ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் அவர்களால் எழுதப்பெற்றது. எழுதப்பெற்ற ஆண்டு 1977. கிட்டத்தட்ட 3500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் நுழையும் ஆரியர்கள் இங்கு வாழ்ந்து வரும் சிந்து சமவெளி மக்களை வென்று தங்கள் ஆட்சியைத் தொடங்குகிறார்கள். அக்காலக் கட்டத்திலேயே ரிக் வேதம் இயற்றப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. அதனைத்தொடர்ந்து மெளரியர்கள்,குப்தர்கள்,…

  • |

    இஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமைகள் ‍- டாக்டர் ஜாகிர் நாயக்

    இஸ்லாம் மதம் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் பற்றி ஜாகிர் நாயக் அவர்கள் ஆற்றிய உரைகளின் தமிழாக்கம். வெளியீடு சாஜிதா புக் சென்டர். வருடம் ந‌வம்பர் 2010. தமிழாக்கம் முஹம்மது. இஸ்லாம் மீதான விமர்சனமாக வைக்கப்படும் பெண்கள் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் அவர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள் ஆகியவற்றை மறுத்து குரானில் கூறப்பட்டுள்ள வரிகளையும் அவற்றின் விளக்கங்களையும் விவரிக்கிறார் ஜாகிர் நாயக். ஆன்மீக உரிமைகள்பொருளாதார உரிமைகள்சமூக உரிமைகள்கல்வி உரிமைகள்சட்ட உரிமைகள்அரசியல் உரிமைகள் இவற்றைப் ப‌ற்றி ஒவ்வொரு அதிகாரமாக விளக்குகிறார். இறுதியாக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.