|

The Core

2003 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இயக்கம் Jon Amiel. நடிப்பு Aaron Eckhart, Hilary Swank மற்றும் பலர்.

சில நகரங்களில் நடைபெறும் சில‌ விசித்திர நிகழ்வுகளால் ஆச்சரியமடையும் Dr.Josh Keyes மற்றும் Dr.Serge Leveque இருவரும் பூமியின் காந்தப்புலத்தில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றமே இதற்கான காரணம் என அறிகிறார்கள். காந்தப்புல மாற்றத்திற்கான‌ காரணம் பூமியின் ஆழ் மையத்தில் உள்ள உலோக குழம்பு சுழல்வதை நிறுத்தியதே எனவும், அது பூமியின் நிலைத்தன்மையில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும், தொடரும் பட்சத்தில் பூமி விண்வெளியின் கதிரியக்கத்தாக்குதலுக்கு நேரடியாக உள்ளாகி, விண்வெளிக் கதிரியக்கத்தினால் பூமியில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் அழிந்துவிடும் எனவும் அறிகிறார்கள். அதனை மற்றோர் அறிவியலாளரும் பிரபலமானவருமான Dr.Conrad Zimsky இடம் தெரிவிக்கிறார்கள்.

இது அமெரிக்க ராணுவத்திற்கு தெரிவிக்கப்படுகிறது. இதனை சரிசெய்ய பூமியின் ஆழத்தில் உள்ள உலோகக்குழம்பு மீண்டும் சுழலவைக்கப்பட வேண்டும், ஆனால் அது மிக மிக சவாலானது எனத் தெரிவிக்கிறார்கள். ஆனால் அவர்களே வியக்கும் வண்ணம் பூமியின் ஆழத்திற்கு பயணிப்பதற்கான ஓர் ஓடம் Dr.Brazzelton என்பவரால் தயாரிக்க‌ப்பட்டுக்கொண்டிருப்பதை அறிகிறார்கள். அவ்வோடம் எத்தகைய வெப்பத்தினையும் தாங்க வல்ல ஆற்றல் கொண்டதாகவும், பூமியினைக் கதிரியக்கத்தினால் விரைவாகத் துளையிடும் ஆற்றல் கொண்டதாகவும் இருக்கிறது.

இதனால் பூமியின் ஆழ் மையக் குழம்பை சுழல வைக்க அமெரிக்க ராணுவத்தின் மேற்பார்வையில் அக்குழு தயாராகிறது. அக்குழுவில் Dr.Josh Keyes,Dr.Serge Leveque,Dr.Conrad Zimsky,ராணுவ விண்வெளி ஓடத்தின் விமானிகள் Robert Iverson,Rebecca,ஓடத்தின் வடிவமைத்த Dr.Brazzelton இருக்கிறார்கள். அத்தோடு இது தொடர்பான தகவல்கள் உலகில் கசியாமல் இருக்கவும், மக்கள் பீதியடையாமல் இருக்கவும் Finch என்ற ஓர் ஹேக்கிங் இளைஞனை பணியில் அமர்த்துகின்றனர். இத்திட்டம் தொடர்பான தகவல்களை இணையத்தில் பரவாமல் தடுப்பதே அவனுடைய வேலை.

இந்த திட்டத்தின் ஒட்டுமொத்த செயல்பாடும் அமெரிக்க ராணுவம் பூமியின் மேற்பரப்பிலிரிந்து கண்காணிக்கும் வண்ணம் வடிவமைக்க‌ப்படுகிறது.

பசிபிக் கடலின் ஓர் ஆழமான இடத்தில் குழு தன்னுடைய பூமியின் ஆழ் மையத்திற்கான‌ பயணத்தினை தொடங்குகிறது. பூமியின் ஆழத்திற்குச் சென்று அங்கு கதிரியக்கக் குண்டுகளை வெடிக்கவைப்பதன் மூலம் அதனை மீண்டும் சுழல வைப்பதே அவர்களின் திட்டம். ஆனால் செல்லும் வழியில் ஏற்படும் சில எதிர்பாராத தடைகளால் அவர்களது ஓடம் பாதிக்கப்படுகிறது. அதனை சரி செய்யும் முயற்சியில் விமானி Robert Iverson இறந்து விடுகிறார். தொடர்ந்து புறப்படும் அவர்கள் பயணத்தில் மற்றொரு அறிவியலாளரும் (Dr.Serge Leveque) இறந்து விடுகிறார்.

இதற்கிடையில் பூமியில் ஆங்காங்கு ஏற்படும் கதிரியக்க நிகழ்வுகளால் மக்கள் மத்தியில் இது தொடர்பான பீதி அதிகம் பரவத்தொடங்குகிறது. அதனைக் கட்டுப்படுத்த முயலும் Finch DESTINY என்னும் திட்டத்தினைப் பற்றி அறிந்து ஆச்சரியம் அடைகிறான். அதாவது பூமியின் மையத்திலுள்ள உலோகக் குழம்பு சுழலாமல் இருப்பதற்கு காரணம் அமெரிக்க ராணுவம்தான் எனவும், பூமியின் மையத்திலிரிந்து நிலநடுக்கத்தினை உருவாக்கும் கருவியினை சோதனை செய்யும் பொழுதே பூமிக்குழம்பின் சுழற்சி நின்றதையும் அறிந்து கொள்கிறான். அத்திட்டத்தினை ராணுவத்திற்காக செயல்படுத்தியவர் Dr.Conrad Zimsky தான் என்பதையும் அறிந்து கொள்ளும் பின்ச் அதனை Dr.Josh Keyes இடம் தெரிவிக்கிறான்.

இதற்கிடையில் பூமியின் மையத்தினை நெருங்கும் குழு, மையத்திலுள்ள உலோககுழம்பின் தடிமன் அவர்கள் கணித்ததனை விட மாறாக இருப்பதை அறிகிறார்கள். அதனால் தங்களிடம் உள்ள கதிரியக்கக் குண்டுகள் போதுமானவையாக இருக்காது என Dr.Conrad Zimsky கூறுகிறார். மேலும் தங்களுடைய திட்டத்தினை விட்டு விட்டு பூமியின் மேல்பரப்பிற்கு செல்வோம் எனவும் கூறுகிறார். ராணுவத்தலைமையும் அவர்களை திட்டத்தினைக் கைவிட்டு விட்டு பூமியின் மேல்பரப்பிற்கு வருமாறு உத்தரவிடுகிறது. அதனை மறுக்கும் மற்றவர்கள் தங்களுடைய மாற்றுத்திட்டத்தின் படி இதனை முயற்சிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் அதற்காக கூடுதல் நேரத்தினையும் கோருகிறது. அக்கோரிக்கையை ராணுவம் நிராகரிக்கிறது. தங்கள் திட்டப்படியே தொடர விரும்பும் குழுவினர் அதற்கு Dr.Josh Keyes ஐ ஒத்துக்கொள்ள வைக்கின்றனர்.

இந்நிலையில் ராணுவம் இத்திட்டத்தின் மாற்றுத்திட்டமான‌ DESTINY திட்டத்தினை செயல்படுத்த தொடங்குகிறது. அதாவது சென்ற முறை செய்த முயற்சியினைப்போல (கதிரியக்கக் குண்டை பூமியின் ஆழத்தில் வெடிக்கச் செய்வது) மீண்டும் ஒருமுறை செய்து பூமியின் ஆழத்திலுள்ள உலோகக்குழம்பை சுழல வைக்க முயல்கிறது். அதன் பின்விளைவுகளை எச்சரிக்கும் Dr.Josh Keyes ஐ அவர்கள் புறந்தள்ளுகின்றனர். அதனால் Finch இடம் DESTINY திட்டத்டினை தாமதப்படுத்துமாறு Dr.Josh Keyes ரகசியாமய்க் கேட்கிறார். Finch DESTINY திட்டத்தின் கணினிகளை ஹேக் செய்து அதனைத் தாமதிக்கிறான்.

தங்களுடைய மாற்றுத்திட்டத்தின் முயற்சியில் Dr.Brazzelton மற்றும் Dr.Conrad Zimsky இறந்துவிடுகின்றனர். விடாமல் முயற்சிக்கும் Keyes,Rebecca பூமிக் குழம்பை சுழல வைத்துவிடுகின்றனர். பின்னர் சில முயற்சிகள் மூலம் பூமியின் மேற்பரப்பிற்கு வரும் அவர்கள் திமிங்கிலங்கள் எழுப்பும் அதிர்வலைகளின் உதவியால் ராணுவத்தால் மீட்கப்படுகின்றனர். சில நாட்களுக்குப்பிறகு Finch DESTINY திட்டத்தினைப் பற்றிய ராணுவத்தின் ரகசியங்களையும் அதற்காக இறந்தவர்களைப் பற்றியும் இணையத்தில் வெளியிடுகிறான்.

இத்திரைப்படத்தில் அறிவியல் புனைக்கதைகளுக்கான அனைத்து அபத்தங்களும் உண்டென்றாலும் இப்படத்தின் சில பாராட்டப்பட வேண்டிய விஷயங்கள்.

  1. புனைவு என்பதற்காக எல்லாவற்றையும், இது சாத்தியமான ஒன்று. இதற்கு இந்த கருவி என வெறுமனே கூறாமல் அது தொடர்பாக சற்றேனும் தகவல்களை அறிந்து அதனை ஒட்டி காட்சிகளைப் படமாக்கியிருப்பது. நம் தமிழ் சினிமாவில் இதுவரை நாம் இதனை செய்தது இல்லை. இதுவரை வெளிவந்த ஒரு சில அறிவியல் புனைவுத் திரைப்படங்களும் மிதமிஞ்சிய கற்பனாவாதத்தினைக் கொண்டிருப்பவை. அதாவது ‘எல்லாமே சாத்தியம் ஒரு கருவியால்’ என்னும் ஒற்றைப்படையான கனவில் இருந்து வருபவை.
  2. வழக்கமாக கதாநாயகன் துதிபாடல்கள் இல்லாமை. இந்திய சினிமாவினைப் பின்னிழுக்கும் முக்கிய காரணிகளுள் ஒன்றாக நான் கருதுவது. கதையின் நாயகனாக இல்லாமல் நாயகனின் கதையாக மாறிப்போய்விட்ட நம் சூழலில் கதையின் ஓட்டத்தில் அனைவரையும் அறிமுகம் செய்வது என்பது ஆங்கிலத்திரைப்படங்களின் இயல்பாகவே அமைகின்றன. இத்திரைப்படமும் அதற்கு விதிவிலக்கல்ல‌
  3. இது போன்ற திரைப்படங்களை சிறுவர்களுக்கு காண்பிக்க வேண்டும் என்பது என் எண்ணம். இத்தகைய திரைப்படங்கள் வாயிலாக அவர்களது ஆர்வம் தூண்டப்படும் அல்லது அவர்கள் சற்றே ஆழமாக சிந்திக் ஒர் புதிய வாசல் திறக்கலாம். உதாரணமாக இப்படத்தில் வரக்கூடிய ஓடம் unobtainium என்னும் உலோகத்தால் ஆனது, அது எத்தகைய வெப்பத்தினையும் தாங்கும் என்பது போன்றவை அவர்களுடைய அறிவியல் புரிதலில் ஓர் சிறிய மாற்றத்தினை ஏற்படுத்தக்கூடும். இதில் ஓர் சுவாரசியம் என்னவெனில் அப்படி ஒர் உலோகமே கிடையாது. unobtainable என்ற வார்த்தையில் -ium என்ற வார்த்தையைச் சேர்த்து உருவாகிய வார்த்தை அது.

Similar Posts

  • |

    சிம்ம சொப்பனம் – மருதன்

    மருதன் அவர்களால் எழுதப்பெற்ற புத்தகம். கியூபாவினுடைய‌ பிதாமகரான பிடல் காஸ்ட்ரோவினுடய வாழ்க்கை வரலாறு. கியூபா எதற்காக அமெரிக்காவிற்கு முக்கியமான ஒரு நாடு. இன்றுவரை அமெரிக்காவினால் கபளீகரம் செய்யப்படாமல் இந்த தேசம் இருப்பதற்கான காரணங்கள் என்னென்ன‌ என பலவற்றை இப்புத்தகம் விவரிக்கிறது. புத்தகம் பிடல் காஸ்ட்ரோவினுடைய தந்தையின் காலத்தில் இருந்து தொடங்கி இன்றைய பிடல் காஸ்ட்ரோ வரை வருகிறது. ஸ்பெயினினுடைய ஆதிக்கம், பின்னர் ஸ்பெயினின் ஆதிக்கம் தளர்ந்து அமெரிக்காவின் கை ஓங்குதல் என பல்வேறு காலகட்டங்களையும், அதனுள் எவ்வாறு…

  • |

    THE SEVEN HUSBANDS OF EVELYN HUGO – Taylor Jenkins Reid

    The Seven Husbands of Evelyn Hugo was a mixture of both fiction and non-fiction, written by Taylor Jenkins Reid. Once you finish reading this book, you can open a new door in your brain with a different perspective from other doors and my door opened when I read, “You have to find a job that…

  • |

    ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது – ஜெயகாந்தன்

    ஜெயகாந்தன் அவர்களால் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பெற்ற சிறுகதைகளின் தொகுப்பு. பின்வரும் கதைகள் நூலில் உள்ளன. திரஸ்காரம்சாளரம்பிணக்குநந்தவனத்தில் ஓர் ஆண்டிதேவன் வருவாரா?சிலுவையுகசந்திஇருளைத் தேடிசுய தரிசனம்புதிய வார்ப்புகள்அக்கினிப்பிரவேசம்லட்சாதிபதிகள்ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறதுஅந்தரங்கம் புனிதமானதுகுருபீடம்புதுச் செருப்பு கடிக்கும் ஒவ்வொரு கதையும் மனித வாழ்வின் இக்கட்டான அல்லது முக்கிய‌ தருணங்களை விவரிப்பவை. அக்கினிப்பிரவேசம் சிறுகதை பின்னாளில் சில நேரங்களில் சில மனிதர்களாக உருமாறிய கதை. வாசிக்க வேண்டிய சிறுகதைகள்.

  • |

    மெளனத்தூதன் – வத்ஸலா விஜயகுமார்

    ஜெர்மனியக் கவிதைகளின் அறிமுகமும், ஜெர்மனியக் கவிதைகளின் மொழி பெயர்ப்புமே இந்நூல். வெளியீடு சந்தியா பதிப்பகம். ஆக்கம் வத்ஸலா விஜயகுமார். இப்புத்தகம் இரண்டு பாகங்களால் ஆனது. முதல் பாகம் ஜெர்மனி கவிதைகளின் வரலாறு குறித்தும் அதன் வெவ்வேறு காலத்தைய கவிஞர்கள் குறித்தும் அறிமுகம் செய்கிறது. இரண்டாவது பாகம் அவற்றுள் குறிப்பிடத்தக்க கவிதகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அதனுடன் அக்கவிதைகளின் ஆசிரியர் பற்றிய சிறுகுறிப்பும் தரப்படுகிறது. இரண்டாவது பாகம் கவிதையின் மொழிபெயர்ப்பு ஆதலால் ஆர்வமுடன் வாசிக்க முடிகிறது. ஆனால் முதல் பாகம்…

  • |

    ஏறுவெயில் – பெருமாள் முருகன்

    எழுத்தாளர் பெருமாள் முருகனால் எழுதப்பெற்று 1991 ஆம் ஆண்டில் வெளிவந்த நாவல். இது அவருடைய முதல் நாவல். நகரமயமாதலின் பொருட்டு தன்னுடைய பூர்விக நிலத்தைவிட்டு செல்லும் ஒரு கிராமத்து குடும்பத்தின் கதை. கதைக்களம் நிகழ்வது 1980 களில். பொன்னையாவின் தாத்தாவிற்கு மூன்று மகன்கள். நிலத்தினை அரசாங்கம் எடுத்துக்கொள்வதன் பொருட்டு நிலத்தை விற்றுவிட்டு அக்காசை மூன்று மகன்களுக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டு தன் மனைவியோடு அருகில் ஏரிக்கு பக்கத்தில் தங்கிவிடுகிறார் தாத்தா. இரண்டு மகன்கள் அவர்களின் மாமனார் வீட்டோடு சென்றுவிட…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.