|

திருப்பம் – கேசவதேவ்


மலையாளத்தில் வெளிவந்த கேசவதேவின் ஒரு குறுநாவலையும், மாதவிக்குட்டியின் ஒரு சிறுகதையையும் தமிழில் சுரா அவர்கள் மொழி பெயர்த்து வெளியிட்டிருக்கிறார். அவ்விரண்டுமே இப்புத்தகம்.

முதல் குறுநாவல் திருப்பம், அப்போதைய சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டத்தினை ஒட்டிய நாவல். கேரள ஈழவ சாதிகளுக்குள் நிகழும் ஏற்றத்தாழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது. மாலேத்து சாணார் வீட்டில் வேலை செய்கிறார் கண்டப்பன். அவர்கள் இடத்தில்தான் இவன் வீடு கட்டிக்குடியிருந்தான். அவர்கள் தரும் கூலியோடு அவர்கள் தரும் எச்சில் சாப்பாடும் அவர்களுக்கு கிடைக்கும். அவரோடு அவர் மகன் கொச்சப்பனும் செல்வதுண்டு. மாலேத்து சாணார் வீட்டில் கொச்சப்பன் வயதையொத்த வேலாயுதனும் உண்டு. அவன் தன் எச்சில் சாப்பாட்டை கொச்சப்பனிடம் தருவது, கல்லெடுத்து அடிப்பது போன்றவற்றை செய்பவன். ஒருமுறை பெரிய குழவிக்கல்லை எடுத்து கொச்சப்பன் நெஞ்சில் போட்டுவிட்டான். கொச்சப்பன் பேச்சு மூச்சில்லாமல் கிடந்துவிட்டான். அதனைக் கண்ட கண்டப்பன் கதறுகிறார். அதற்கு வேலாயுதனின் தாய் செத்துப்போனா புதைச்சிட்டு வேலையப்பாரு கண்டப்பா, பொலம்பாம என்கிறாள். அத்தகைய ஏற்றத்தாழ்வு இருக்கும் காலம். தன் மகனைத் தூக்கிக்கொண்டு வந்து விடுகிறார் கண்டப்பன். அதன் பின்னர் தன் மகனை அங்கு கூட்டிச்செல்வதில்லை.

கொச்சப்பன் தன் தாய் செய்யும், கயிறு திரிக்கும் தொழிலில் ஈடுபடுகிறான். அதில் மேலும் மேலும் முன்னேறுகிறான். காலங்கள் உருள மாலேத்து குடும்பம், ஏழ்மையாகிறது. கொச்சப்பன் மிகவும் வசதியாக ஆகிவிடுகிறான். ஊரில் அவனுக்கென்று செல்வாக்கு கூடுகிறது. அவனுக்கு ரவீந்திரன் என்று ஒரு பையன். வேலாயுதனுக்கு ஒரு பையனும், இரு பெண்களும். வேலாயுதனின் வீட்டிற்கு அருகிலேயே பெரிய மாளிகை கட்டி குடியேறுகிறார்கள் கொச்சப்பன் குடும்பம். ரவீந்திரனுக்கு வேலாயுதனின் மகளைத் திருமணம் செய்துகொள்ள விருப்பம். தந்தையிடம் சொல்கிறான். தந்தைக்கும் அது தனக்கு கவுரவமாக இருக்கும் என நினைக்கிறார். தன் கணக்குப் பிள்ளை சங்கரன் பிள்ளை மூலமாக கேட்டுப்பார்க்கிறார். வேலாயுதன் சீ என உதறித்தள்ளுகிறார். அதன் பின்னர் வேலாயுதனின் தங்கை மகளையே ரவீந்திரனுக்கும் மணமுடிக்கிறார்கள். அத்திருமணத்திற்கு பின்னர் சில காலம் கழித்து எல்லா குடும்பமும் இணைந்து விடுகிறார்கள். எளிய கதை. வாசிக்கலாம்.

இரண்டாவது கதை, இறுதி விருந்தாளி. அனுசியா தேவி ஒரு எழுத்தாளர். ஒருநாள் தன்னுடைய வீட்டில் கொலை செய்யப்பட்டுக்கிடக்கிறார். அதனை விசாரிக்க வரும் போலீஸ் ராமச்சந்திரன் ஒவ்வொருவராக விசாரிக்கிறார். அவர்கள் ஒவ்வொருவர் மூலமாக அனுசியா தேவியின் வெவ்வேறு பக்கங்கள் வெளிவருகின்றன. அவளினை சிறு வயதில் கற்பழிக்கும் ஒருவன், அவளை திருமணம் செய்த மனைவியை இழந்த ஒருவர், அவரின் மகன் இன்னும் பலர். வாசிக்கலாம்.

Similar Posts

  • |

    என்றென்றும் வாழும் படைப்புகளும் படைப்பாளர்களும் – எம்.ஏ.அப்பாஸ்

    எம்.ஏ.அப்பாஸ் அவர்களால் எழுதப்பெற்றது. வெளிவந்த ஆண்டு 1960 களின் தொடக்கம். 2006 ஆல் மீண்டும் புதிய பதிப்பாக அம்ருதா பதிப்பகத்தினர் கொண்டு வந்திருக்கின்றனர்.சிறந்த பத்து எழுத்தாளர்களைப் பற்றிய சிறிய வாழ்க்கைக் குறிப்பும், அவர்களின் படைப்புகள் பற்றிய ஒரு எளிய அறிமுகத்தினையும் செய்யும் புத்தகம். அந்த பத்துப் படைப்பாளிகள் இவர்களே. தஸ்தயேவ்ஸ்கி – ரஷ்யா கார்க்கி – ரஷ்யா T.H. லாரன்ஸ் – இங்கிலாந்து ஹெமிங்வே – அமெரிக்கா ஜேம்ஸ் ஜாய்ஸ் – அயர்லாந்து அல்பட்டோ மொறாவியா –…

  • மனம் – திரைப்படம்

    நாகேஸ்வரராவ்,நாகர்ஜுனா,நாக சைதன்யா நடிப்பில் விக்ரம் குமார் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம். நான் சமீபத்திய ஆண்டுகளில் ஒரு திரைப்படத்தை ஒரு தடவைக்கு மேல் பார்த்த‌தே இல்லை. எவ்வளவு நல்ல திரைப்படம் என்றாலும். ஆனால் இந்த திரைப்படத்தினை இன்று மீண்டும் ஒருமுறை பார்த்து விட்டேன். காரணம் மற்ற படங்கள் என் புத்தியை தொட்டிருக்கின்றன. இப்படம் என் மனதைத் தொட்டதே. முதல்முறை போலவே இம்முறையும் கண்களில் கண்ணீர் பல இடங்களில். வாழ்க்கைதான் எத்தனை அழகானது? நல்லதையே பார்த்து நல்லதையே செய்து நல்லவனாகவே…

  • மான்களுக்கும் கோபம் வரும் – மரபின் மைந்தன் முத்தையா

    மரபின் மைந்தன் முத்தையா அவர்களால் எழுதப்பெற்ற மற்றும் கவிதையரங்குகளில் வாசிக்கப்பெற்ற கவிதைகளின் தொகுப்பு. 2005 ஆம் ஆண்டு வெளிவந்தது. கற்பகம் புத்தகாலயம் வெளியீடு. இத்தொகுப்பில் என்னை ஈர்த்த கவிதை ‘புகார்கள் மற்றும் ஆலோசனைகள்’. ‘எந்தப்புகாரும் இல்லையென்றில்லைஎழுதும் தரமாய் இல்லையெம் புகார்கள்‘ ஏதேனும் நடைபெறுமிடத்திலேயே புகார் அளிக்க இயலும். ஆனால் இங்கே புகாரளிக்கும் அளவிற்கூ கூட செயல்கள் நடைபெறவில்லை என்பதன் அங்கதம் வெளிப்படும் தொணி என்னைக்கவர்ந்தது. அதே கவிதையில் ‘ஆனால் நண்பரே உம்மிடம் சொல்ல‌ஆலோசனைகள் உள்ளன எம்மிடம்கண்துடைப்புக்காக இங்கே…

  • ரஷ்யப்புரட்சி – என்.ராமகிருஷ்ணன்

    ரஷ்யாவின் ஜார் மன்னர்களின் ஆட்சி புரட்சியின் மூலம் ஒடுக்கப்பட்டு கம்யூனிச அரசு புரட்சியின் வழியாக 1917 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நிகழ்வே ரஷ்யப்புரட்சி. ஒற்றை வரியில் கடந்து சென்றாலும் 1900 களின் ஆரம்பகால ஆண்டுகளிலேயே ஜார் மன்னர்களுக்கு எதிரான கலகங்கள் தொடங்கி அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்று வந்தன. குறிப்பாக பண்ணையடிமை முறைக்கு எதிரான கலகங்கள். இதற்கிடையில் ஆங்காங்கே சில பெயர்களில் சில குழுக்கள் போராட்டங்களை ஒருங்கிணைத்தன. ஆனாலும் அவையெல்லாம் ஒருங்கிணையாமல் நடைபெற்றன. அச்சமயத்தில் மார்க்ஸ் ‍ எங்கல்ஸ்…

  • |

    குர் ஆனும் நவீன விஞ்ஞானமும் ‍ – டாக்டர் ஜாகிர் நாயக்

    நவீன விஞ்ஞானம் கண்டறிந்து நிறுவிய பல்வேறு உண்மைகள் ஏற்கனவே எவ்வாறு குர் ஆனில் விளக்கப்பட்டுள்ளது என்பதனை விவரிக்கும் புத்தகம். சாஜிதா புக் சென்டர் வெளியீடு. தமிழாக்கம் இப்னு ஹூசைன். விண்ணியல்,இயற்பியல்,புவியியல்,மண்ணியல்,சமுத்திரவியல்,உயிரியல், தாவரவியல், விலங்கியல், மருத்துவம், உடல் செயலியல், கருவியல், பொது விஞ்ஞானம் ஆகிய துறைகளின் இந்நூற்றாண்டு கண்டுபிடிப்புகளும் அறிதல்களும் எவ்வாறு ஏற்கனவே குர் ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளன என்பதனை புத்தகம் முழுவதும் விவரிக்கிறார் ஜாகிர் நாயக். பெருவெடிப்புக் கோட்பாடு, பூமி தட்டையானது அல்ல‌ உருண்டையானது, கோள்கள் சூரியனை மையமாகக்…

  • |

    The Core

    2003 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இயக்கம் Jon Amiel. நடிப்பு Aaron Eckhart, Hilary Swank மற்றும் பலர். சில நகரங்களில் நடைபெறும் சில‌ விசித்திர நிகழ்வுகளால் ஆச்சரியமடையும் Dr.Josh Keyes மற்றும் Dr.Serge Leveque இருவரும் பூமியின் காந்தப்புலத்தில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றமே இதற்கான காரணம் என அறிகிறார்கள். காந்தப்புல மாற்றத்திற்கான‌ காரணம் பூமியின் ஆழ் மையத்தில் உள்ள உலோக குழம்பு சுழல்வதை நிறுத்தியதே எனவும், அது பூமியின் நிலைத்தன்மையில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும்,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.