Words at Work

இந்த புத்தகத்தினை தலைப்பினைக்கொண்டு வேலை செய்யும் இடத்தில் சொற்களைக் கையாள்வது எப்படி என்ற எண்ணத்தில் வாசிக்கத்தொடங்கினேன். ஆனால் இந்த புத்தகம் அதைப்பற்றி அல்லாமல் ஒவ்வொரு துறை சார்ந்த இடத்திலும் பயன்பாட்டில் உள்ள வார்த்தைகள், அதற்கு அவர்கள் மொழியிலான பொருள் ஆகியவற்றைப் பற்றி விவரிக்கிறது. மிக எளிய நூலாக இருப்பினும் மிகுந்த சிரத்தையின் ப‌லனாகவே இந்த எளிமை சாத்தியமாயிருக்கிறது.

எந்த ஒரு புத்தகத்திலும் கற்றுக்கொள்வதற்கு தக‌வல்கள் உண்டு என்ற என் எண்ணம் மீண்டும் இந்த புத்தகத்தை வாசிக்கும் பொழுது ஏற்பட்டது. உதாரணமாக Cereal Box என்ற வார்த்தை நறுமணத்திரவியங்கள் தொடர்பாக பயன்படுத்தப்படுகிறது. அதன் பொருள் நறுமணத்திரவியத்தைப் போலவே ஒரு அட்டைப் பெட்டியில் பெரியதாக செய்து கடைகளில் காட்சிக்கு வைப்பது. இதனை நாம் பல முறை கண்டிருந்தாலும், அதற்குப் பின்னாலும் ஒரு திட்டமிடல் இருக்கிறது எனும்போது புதிய அனுபவமாய் அது அமைகிற‌து. இனி அதனைப் பார்க்கும் பொழுது நம் பார்வை மாறுபடலாம்.

இதனைப் போலவே வாசனைத்திரவியத்தின் மேல் மூடியில் இருக்கும் அழுத்து விசையை Actuator என்று குறிப்பிடுகின்றனர். இதனைப் போலவே Tulip Mania, Hockey Stick எனப் பல வார்த்தைகள் உண்டு. அது தொடர்பான விளக்கங்களும் உண்டு. புதிய வார்த்தைகளையும் பொருள்களையும் விரும்புபவர்களும், ஆர்வமுடையவர்களும் வாசிக்கலாம்.

நன்றி.

Similar Posts

  • தாயம் – ரங்கராஜன்

    சுயமுன்னேற்ற நூல் என இந்நூலை வகைப்படுத்தினால் மற்ற சுய முன்னேற்ற நூல்களுக்கான இடமே மனதில் இதற்கும் கிடைக்குமென்றால் இது சுய முன்னேற்ற‌ நூலன்று. எப்பொழுதெல்லாம் தன்னம்பிக்கை, ஒழுக்கத்தில் பிழை ஏற்படுவதாக எண்ணினாலும் உடனே வாசிக்க வேண்டிய‌ நூல் இது.  எத்தனை முறை வாசித்தாலும் ஒவ்வொரு முறையும் புதியதொரு புத்துணர்ச்சியைத் தரும் நூல். எப்பொழுது வேண்டுமானலும் எந்த அதிகாரத்தை வேண்டுமானாலும் படிக்கக்கூடிய வடிவமைப்பு. மிக எளிய மொழிநடை. எக்காலத்திற்கும் மனதில் நிற்கும் சிறந்த நூல்களில் ஒன்று. நன்றி.

  • |

    மணலின் கதை – மனுஷ்யபுத்திரன்

    மனுஷ்ய புத்திரன் அவர்களால் 2002, 2003 ஆம் ஆண்டுகளின் வெவ்வேறு நாட்களில் எழுதப்பெற்ற 37 கவிதைகளின் தொகுப்பு. 2004 ல் வெளிவந்த நூல். உயிர்மை பதிப்பகம் வெளியீடு. அவற்றுள் என்னைக் கவர்ந்த ஒரு கவிதை ‘இந்தக் காயங்கள்’. இந்தக் காயங்கள்இன்று வெய்யில் நோக்கி திறந்திருக்கின்றன‌நாளை மழை நோக்கி திறந்து கிடக்கும் வெட்ட வெளியில் கிடத்தப்பட்ட‌ஒரு காயம்மருந்திட இயலாததல்ல‌மருந்திடப்படாமல் புறக்கணிக்கப்பட்டதுமல்ல‌ இந்தக் காயங்கள்காயங்களாக இருப்பதற்காகவேகசிந்துகொண்டிருக்கின்றன‌ பிடிவாதமாய் தன்னை மூடிக்கொண்டிருக்கும்ஒரு கருணையின் ஊற்றுக்கண் திறக்க வாசிக்கலாம்.

  • |

    சுந்தரராமசாமியின் கவிதைக் கலை – ராஜமார்த்தாண்டன்

    ராஜாமார்த்தாண்டன் அவர்களால் 2007 ஆம் ஆண்டில் எழுதப்பெற்றது. சுந்தரராமசாமி அவர்கள் எழுதிய கவிதைகள் மீதான விமர்சனமே இப்புத்தகம். பெரும்பாலும் கவிதைகள் பற்றிய விளக்கங்கள். ஏற்கனவே சுந்தரராமசாமியின் கவிதைகளை வாசித்தவர்கள் இப்புத்தகத்தினை வாசிக்கும்பொழுது அவர்கள் தொடாத சில பார்வைகைளை அறிந்து கொள்ள உதவும். வாசிக்கலாம்.

  • |

    இஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமைகள் ‍- டாக்டர் ஜாகிர் நாயக்

    இஸ்லாம் மதம் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் பற்றி ஜாகிர் நாயக் அவர்கள் ஆற்றிய உரைகளின் தமிழாக்கம். வெளியீடு சாஜிதா புக் சென்டர். வருடம் ந‌வம்பர் 2010. தமிழாக்கம் முஹம்மது. இஸ்லாம் மீதான விமர்சனமாக வைக்கப்படும் பெண்கள் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் அவர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள் ஆகியவற்றை மறுத்து குரானில் கூறப்பட்டுள்ள வரிகளையும் அவற்றின் விளக்கங்களையும் விவரிக்கிறார் ஜாகிர் நாயக். ஆன்மீக உரிமைகள்பொருளாதார உரிமைகள்சமூக உரிமைகள்கல்வி உரிமைகள்சட்ட உரிமைகள்அரசியல் உரிமைகள் இவற்றைப் ப‌ற்றி ஒவ்வொரு அதிகாரமாக விளக்குகிறார். இறுதியாக…

  • |

    ரகுவம்சம் – அ.வெ.சுப்பிரமணியன்

    ராமன் பிறந்த ரகுவம்சத்தின் வரலாறு, சுருக்கமான வடிவில். அ.வெ.சுப்பிரமணியன் அவர்களால் காளிதாசனின் மூலவடிவில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது. எளிய பிழையற்ற மொழிநடை. திலீபனின் தொடங்கி, ரகு, அஜன், தசரதன் வழியாக ராமனின் வரலாறைக் கூறும் நூல். சூர்ய குலம் எனப்படும் ரகுவம்ச வரலாறை அறிந்துகொள்ள ஒரு தொடக்கமாக இந்நூலை வாசிக்கலாம். ஒட்டுமொத்த அரசகுலத்தின் தோற்றம் கிடைக்கும். ரகுவம்ச மன்னர்களின் பெருமையைப் பற்றிக் கூறும் நூல். ஆதலால் ஒரு வரலாற்று நூல்போலக் கொள்ள இயலாது. ஆழ்ந்த மத நம்பிக்கையாளர்களுக்கான ஆரம்பப்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.