|

மயான காண்டம் – ல‌க்ஷ்மி சரவணகுமார்

லக்ஷ்மி சரவணகுமாரால் எழுதப்பெற்ற பத்து சிறுகதைகளின் தொகுப்பு. உயிர்மை பதிப்பக வெளியீடு.

  1. அஜ்ஜி
  2. மயான காண்டம்
  3. ஜீஸசின் முத்தம்
  4. ஒரு துண்டு வானம்
  5. டெய்ஸி
  6. Fake
  7. அப்பாவும் அம்மாவும் காதலிக்காத கதை
  8. கப்பல்காரர் வீடு
  9. ஒரு அவசர கடிதம்
  10. வள்ளி திருமணம்

இவையே அக்கதைகள். மனித வாழ்வின் வெவ்வேறு நிலைகளை வெவ்வேறு மனிதர்களின் வெவ்வேறு நிலைகளில் இருந்து நோக்குபவை என இக்கதைகளை பொதுவாக வரையறுக்கலாம். சிறுகதைகளுக்கான வடிவமைப்புகளுக்காக பொதுவாக அளிக்க்ப்படும் ஒரு விளக்கம், விவரித்து சொல்லப்படும் ஒரு நிகழ்வில் ஒரு திடீர் சுழிப்பு உருவாகும். அதுவே அக்கதையின் உச்சம். அவ்வுச்சத்தை நோக்கியே அக்கதையின் மொத்த நகர்வும் இருக்கும்.

பெரும்பாலான கதைகளை இரண்டாம் முறை வாசிக்கும்பொழுது இதனை முழுமையாகவே அறியமுடிகிறது. இந்த விதிக்குள் அடங்காத ஒரே கதை வள்ளி திருமணம்.

கதையின் சுவாரசியம் என்பது எதனைச் சொல்வது என்பதல்ல, எதனைச் சொல்லாமல் விடுவது என்பதில்தான். வள்ளி திருமணம் தவிர்த்த ஏனைய கதைகளில் வாசகனின் கற்பனைக்கு வேலை இல்லை. ஒரு வாசகன் என்ன நினைக்க வேண்டும் என்பதனை வெளிப்படையாகவே எழுத்தாளர் சொல்லி விடுகிறார். அதனால் ஒரு கதையினைத் தொட்டு விரித்தெடுக்கும் சாத்தியக்கூறுகள் இக்கதைகளில் இல்லை வள்ளி திருமணம் நீங்கலாக.

என்னை மிகவும் கவர்ந்த இரு கதைகள் ஒன்று கப்பல்காரர் வீடு, மற்றொன்று வள்ளி திருமணம்.

கப்பல்காரர் வீடு ஒரு திருப்பத்தை நோக்கிய நகர்வுதான் என்றாலும், சிங்கராசுவின் மனைவி சுமதி கதாபாத்திரம் மிகத்துல்லியமாக வடிவமைக்கப்பட்ட ஒன்று. அவள் அப்படித்தான். அப்படித்தான் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஓர் வடிவமைப்பு. ஒருவிதத்தில் எனக்கும் சுமதி டெய்ஸியையும், ஜெனியையும் நினைவுபடுத்துகிறாள். அக்கதையின் ஆழத்திற்கு நெருடலாக எனக்குத் தோன்றிய ஒன்று சுமதி தன் கணவன் சிங்கராசுவுடன் கடைசியில் போனில் பேசுவது. அது கதையில் இல்லாமல் போயிருந்தால் இன்னும் அதீத ஆழமானதாகத் தோன்றியிருக்கும், வாசகன் பல தளங்களை விரித்தெடுத்திருக்கலாமோ என்று.

இந்தப் பத்துக்கதைகளில் ஆகச்சிறந்ததாக நான் கருதுவது வள்ளி திருமணத்தைத் தான். இதில் தொடக்கம் முடிவு என எதுவும் இல்லை. ஒரு சுழிப்பினை நோக்கிய நகர்வு இல்லை. கதைக்கான ஒட்டு மொத்த கதாபாத்திரமும் மிகச்சிறப்பு. ஒரு கலை, கலைஞன் வழியாக நிகழ்கிறது. அது கலைஞனை மீறிய ஒன்று. இக்கதை அப்படித்தான் நிகழ்கிறது. கதைக்கு உள்ளும் வெளியும். புத்தகத் தலைப்பாகவே வைத்திருக்கலாம் இக்கதையை. நான் முன்னரே வாசித்திருப்பேன். ஒன்பது கதைகளை வாசிப்பதற்கு முன்னரே. அத்தனை சிறந்த கதை.

வாசிக்க வேண்டிய சிறுகதைகள்.

Similar Posts

  • Fail Fast Fail Often

    ரியான் பாபினக்ஸ் மற்றும் ஜான் க்ரும்போட்ஸ் என்ற இருவரால்  எழுதப்பெற்ற சுய முன்னேற்ற புத்தகம் Fail Fast Fail Often. தற்போதைய அறிவியல் உலகின் செயல்பாடுகளின் தாரக மந்திரம் என்பது உடனடி செயல்பாடு, பின்னர் மேம்பாடு என்பதே. இதுவே கூகுள், ஃபேஸ்புக் போன்ற தலைசிறந்த நிறுவனங்களின் இன்றைய செயல்முறை. அதாவது முற்றிலும் திட்டமிட்டு அல்லது முழுமையாக தயார் செய்துவிட்ட பின்னர்தான் ஒரு செயலைத் தொடங்கவேண்டும் என்ற செயல்பாடு இக்காலத்திற்கு ஏற்றதல்ல என நிறுவப்பட்டு விட்டது. அதனால் உடனடியாக…

  • |

    திருப்பம் – கேசவதேவ்

    மலையாளத்தில் வெளிவந்த கேசவதேவின் ஒரு குறுநாவலையும், மாதவிக்குட்டியின் ஒரு சிறுகதையையும் தமிழில் சுரா அவர்கள் மொழி பெயர்த்து வெளியிட்டிருக்கிறார். அவ்விரண்டுமே இப்புத்தகம். முதல் குறுநாவல் திருப்பம், அப்போதைய சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டத்தினை ஒட்டிய நாவல். கேரள ஈழவ சாதிகளுக்குள் நிகழும் ஏற்றத்தாழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது. மாலேத்து சாணார் வீட்டில் வேலை செய்கிறார் கண்டப்பன். அவர்கள் இடத்தில்தான் இவன் வீடு கட்டிக்குடியிருந்தான். அவர்கள் தரும் கூலியோடு அவர்கள் தரும் எச்சில் சாப்பாடும் அவர்களுக்கு கிடைக்கும். அவரோடு அவர் மகன்…

  • |

    THE ANTHROPOCENE REVIEWED – JOHN GREEN (புத்தகம் – 2)

    John Green என்பவரால் எழுதப்பெற்ற புத்தகம். வலையொளியில் podcast ஆக வெளிவந்த ஒலித் தொகுப்புகள் புத்தமாக வெளிவந்துள்ளது. இப்புத்தகத்தின் தலைப்பு THE ANTHROPOCENE REVIEWED. அது நிகழ் யுகத்தினைக் குறிக்கக்கூடிய ஒரு சொல். ஏறத்தாழ மனிதனின் செயல்பாடுகள் பூமியின் மீது தாக்கத்தை ஏற்படுத்தத்தொடங்கிய காலத்திலிருந்து தொடங்கும் காலம் அது. இக்காலக்கட்டத்தில் இப்பூமியில் உள்ள, மனிதனால் உருவாக்கப்பட்ட பலதரப்பட்டவற்றைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சினிமா,உணவகம்,இடம் என‌ எல்லாவற்றையும் நட்சத்திர குறியீட்டு அளவினால் அளவிடும் காலகட்டதிற்கு நாம் வந்துவிட்டதால்,…

  • | |

    The Boss Baby – குழந்தை முதலாளி

    2017 ஆம் ஆண்டு வெளிவந்த அனிமேஷன் திரைப்படம். 2010 ஆம் ஆண்டு இதே பெயரில் வெளிவந்த The Boss Baby என்ற புத்தகத்தினை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. கதைச்சுருக்கம் இதுதான். கதை எதிர்காலத்தில் நடைபெறுகிறது. டிம் தன்னுடைய குழந்தைக்கு தன்னுடைய சிறு வயதுக்கதையைக் கூறுவதாகப் படம் தொடங்குகிறது. டிம் தன்னுடைய பெற்றோருக்கு ஒரே பையன். செல்லமாகவும் புத்திசாலித்தனமாகவும் வளர்ந்து வருகிறான். டிம்மின் பெற்றோர் பப்பிஸ் கார்ப் என்ற‌ நாய்க்குட்டிகளை விற்பனை செய்யும் கம்பெனியில் பணியாற்றுகின்றனர். பரபரப்பான வேலைக்கு மத்தியிலும்…

  • 2020 ஒரு மீள்பார்வை

    2020 ஆம் வருடம் இனிதே நிறைவுற்று விட்டது. கொரோனா பெருந்தொற்று இன்னும் முழுமையாக நம்மை விட்டு நீங்கவில்லை என்றாலும், பெரும்பாலான தொழில் செயல்பாட்டு முறைகளில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துவிட்டது. அரசுகளும் இது போன்ற சூழல்களினை எப்படிக் கையாள்வது போன்ற திட்டங்களை வகுக்கத்தொடங்கி விட்டன. இன்றைய உலகில் எந்த ஒரு நாடும் கிட்டத்தட்ட தனித்து இயங்க முடியாது என்ற நிலையில்தான் இருக்கின்றன. அதனால் கொரோனா போன்ற தொற்றுக்கள் ஒரு தேசத்தில் ஏற்படின் கண்டிப்பாக மற்ற நாடுகளுக்கும் நேரடியாகவோ…

  • தாயம் – ரங்கராஜன்

    சுயமுன்னேற்ற நூல் என இந்நூலை வகைப்படுத்தினால் மற்ற சுய முன்னேற்ற நூல்களுக்கான இடமே மனதில் இதற்கும் கிடைக்குமென்றால் இது சுய முன்னேற்ற‌ நூலன்று. எப்பொழுதெல்லாம் தன்னம்பிக்கை, ஒழுக்கத்தில் பிழை ஏற்படுவதாக எண்ணினாலும் உடனே வாசிக்க வேண்டிய‌ நூல் இது.  எத்தனை முறை வாசித்தாலும் ஒவ்வொரு முறையும் புதியதொரு புத்துணர்ச்சியைத் தரும் நூல். எப்பொழுது வேண்டுமானலும் எந்த அதிகாரத்தை வேண்டுமானாலும் படிக்கக்கூடிய வடிவமைப்பு. மிக எளிய மொழிநடை. எக்காலத்திற்கும் மனதில் நிற்கும் சிறந்த நூல்களில் ஒன்று. நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.