|

மயான காண்டம் – ல‌க்ஷ்மி சரவணகுமார்

லக்ஷ்மி சரவணகுமாரால் எழுதப்பெற்ற பத்து சிறுகதைகளின் தொகுப்பு. உயிர்மை பதிப்பக வெளியீடு.

  1. அஜ்ஜி
  2. மயான காண்டம்
  3. ஜீஸசின் முத்தம்
  4. ஒரு துண்டு வானம்
  5. டெய்ஸி
  6. Fake
  7. அப்பாவும் அம்மாவும் காதலிக்காத கதை
  8. கப்பல்காரர் வீடு
  9. ஒரு அவசர கடிதம்
  10. வள்ளி திருமணம்

இவையே அக்கதைகள். மனித வாழ்வின் வெவ்வேறு நிலைகளை வெவ்வேறு மனிதர்களின் வெவ்வேறு நிலைகளில் இருந்து நோக்குபவை என இக்கதைகளை பொதுவாக வரையறுக்கலாம். சிறுகதைகளுக்கான வடிவமைப்புகளுக்காக பொதுவாக அளிக்க்ப்படும் ஒரு விளக்கம், விவரித்து சொல்லப்படும் ஒரு நிகழ்வில் ஒரு திடீர் சுழிப்பு உருவாகும். அதுவே அக்கதையின் உச்சம். அவ்வுச்சத்தை நோக்கியே அக்கதையின் மொத்த நகர்வும் இருக்கும்.

பெரும்பாலான கதைகளை இரண்டாம் முறை வாசிக்கும்பொழுது இதனை முழுமையாகவே அறியமுடிகிறது. இந்த விதிக்குள் அடங்காத ஒரே கதை வள்ளி திருமணம்.

கதையின் சுவாரசியம் என்பது எதனைச் சொல்வது என்பதல்ல, எதனைச் சொல்லாமல் விடுவது என்பதில்தான். வள்ளி திருமணம் தவிர்த்த ஏனைய கதைகளில் வாசகனின் கற்பனைக்கு வேலை இல்லை. ஒரு வாசகன் என்ன நினைக்க வேண்டும் என்பதனை வெளிப்படையாகவே எழுத்தாளர் சொல்லி விடுகிறார். அதனால் ஒரு கதையினைத் தொட்டு விரித்தெடுக்கும் சாத்தியக்கூறுகள் இக்கதைகளில் இல்லை வள்ளி திருமணம் நீங்கலாக.

என்னை மிகவும் கவர்ந்த இரு கதைகள் ஒன்று கப்பல்காரர் வீடு, மற்றொன்று வள்ளி திருமணம்.

கப்பல்காரர் வீடு ஒரு திருப்பத்தை நோக்கிய நகர்வுதான் என்றாலும், சிங்கராசுவின் மனைவி சுமதி கதாபாத்திரம் மிகத்துல்லியமாக வடிவமைக்கப்பட்ட ஒன்று. அவள் அப்படித்தான். அப்படித்தான் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஓர் வடிவமைப்பு. ஒருவிதத்தில் எனக்கும் சுமதி டெய்ஸியையும், ஜெனியையும் நினைவுபடுத்துகிறாள். அக்கதையின் ஆழத்திற்கு நெருடலாக எனக்குத் தோன்றிய ஒன்று சுமதி தன் கணவன் சிங்கராசுவுடன் கடைசியில் போனில் பேசுவது. அது கதையில் இல்லாமல் போயிருந்தால் இன்னும் அதீத ஆழமானதாகத் தோன்றியிருக்கும், வாசகன் பல தளங்களை விரித்தெடுத்திருக்கலாமோ என்று.

இந்தப் பத்துக்கதைகளில் ஆகச்சிறந்ததாக நான் கருதுவது வள்ளி திருமணத்தைத் தான். இதில் தொடக்கம் முடிவு என எதுவும் இல்லை. ஒரு சுழிப்பினை நோக்கிய நகர்வு இல்லை. கதைக்கான ஒட்டு மொத்த கதாபாத்திரமும் மிகச்சிறப்பு. ஒரு கலை, கலைஞன் வழியாக நிகழ்கிறது. அது கலைஞனை மீறிய ஒன்று. இக்கதை அப்படித்தான் நிகழ்கிறது. கதைக்கு உள்ளும் வெளியும். புத்தகத் தலைப்பாகவே வைத்திருக்கலாம் இக்கதையை. நான் முன்னரே வாசித்திருப்பேன். ஒன்பது கதைகளை வாசிப்பதற்கு முன்னரே. அத்தனை சிறந்த கதை.

வாசிக்க வேண்டிய சிறுகதைகள்.

Similar Posts

  • |

    திருப்பம் – கேசவதேவ்

    மலையாளத்தில் வெளிவந்த கேசவதேவின் ஒரு குறுநாவலையும், மாதவிக்குட்டியின் ஒரு சிறுகதையையும் தமிழில் சுரா அவர்கள் மொழி பெயர்த்து வெளியிட்டிருக்கிறார். அவ்விரண்டுமே இப்புத்தகம். முதல் குறுநாவல் திருப்பம், அப்போதைய சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டத்தினை ஒட்டிய நாவல். கேரள ஈழவ சாதிகளுக்குள் நிகழும் ஏற்றத்தாழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது. மாலேத்து சாணார் வீட்டில் வேலை செய்கிறார் கண்டப்பன். அவர்கள் இடத்தில்தான் இவன் வீடு கட்டிக்குடியிருந்தான். அவர்கள் தரும் கூலியோடு அவர்கள் தரும் எச்சில் சாப்பாடும் அவர்களுக்கு கிடைக்கும். அவரோடு அவர் மகன்…

  • |

    அசைவ உணவு அனுமதிக்கப்பட்டதா? தடுக்கப்பட்டதா? – டாக்டர் ஜாகிர் நாயக்

    இஸ்லாம் மத போதகர் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கும், ராஷ்மிபாய் ஸ‌வேரி அவர்களுக்கும் இடையில் நடந்த அசைவ உணவு அனுமதிக்கப்பட்டதா? தடுக்கப்பட்டதா? என்ற விவாதத்தின் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பகுதியினை சுருக்கமாக புத்தகவடிவில் வெளியிட்டிருக்கிறார்கள். அதுவே இப்புத்தகம். தமிழாக்கம் நூ.முகமது கனி. வெளியிடப்பட்ட வருடம் ஜனவரி 2011. அசைவ உணவு மனிதர்களுக்கு அனுமதிக்கப்பட்டது என்பதனை ஜாகிர் நாயக் குரான் மற்றும் பிற அறிவியல் இதழ்களின் ஆதாரம் கொண்டு விவரிக்கிறார். ஸவேரி அவர்களின் உரைவடிவம் இப்புத்தகத்தில் இல்லையாதலால்…

  • |

    பாவம் இவள் ஒரு பாப்பாத்தி – ஜெயகாந்தன்

    ஜெயகாந்தன் அவர்களால் 1979 ஆம் ஆண்டில் எழுதப்பெற்ற குறு நாவல். ஊருக்கு வெளியேயுள்ள கரும்பு ஆலைக்கு அருகில் பல‌காரக்கடை நடத்தி வரும் பாப்பாத்தியம்மாளின் பார்வையில் கதை சொல்லப்படுகிறது. அவள் ஓர் அனாதை. அவளுக்கென்ற இப்போது யாரும் இல்லை. அங்கு வரும் அனாதை எவரையும் தன்னோடு வைத்துக்கொள்கிறாள். அவர்கள் சில நாட்கள் இருந்த பின்னர் ஏதேதோ காரணங்களுக்காக சென்று விடுகின்றர். அவர்கள் சென்ற பின்னர் வெறோர் அனாதை வந்து சேர்கிறார்கள். பிராமணக்குடும்பத்தைச் சேர்ந்தவளாக இருப்பதாலும், ஆச்சாரங்களை தவறாது கடைபிடிப்பதாலும்…

  • | |

    உதிரிப்பூக்கள் – மகேந்திரன்

    இயக்குநர் மகேந்திரன் அவர்களின் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த உதிரிப்பூக்கள் திரைப்படத்தின் ஒட்டுமொத்த திரைக்கதை வடிவம். 2004 ஆம் ஆண்டு மகேந்திரன் அவர்களாலேயே எழுதப்பெற்றது. அவரே நூலின் தொடக்கத்தில் கூறியது போல இந்தப்புத்தகத்தினை அத்திரைப்படத்தைப் பார்த்துப் பார்த்து எழுதியிருக்கிறார். அதனால் படத்தின் ஒவ்வொரு காட்சியும் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த புத்தகமும் உரையாடல் வடிவிலேயே உள்ளது. இடையிடையில் கதைசொல்லியாக வெளியில் வந்து காட்சியினை விளக்குகிறார் மகேந்திரன். இத்திரைப்படம், புதுமைப்பித்தனின் சிற்றன்னை குறுநாவலினைத் தழுவி எடுக்கப்பட்டது. இத்திரைப்படம்…

  • Captain Phillips (film)

    Paul Greengrass ன் இயக்கத்தில் 2013 ல் வெளிவந்த திரைப்படம். 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற அலாபாமா சரக்குக் கப்பல் கடத்தல் சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். Captain Richard Phillips ஆக நடித்திருப்பவர்  Tom Hanks. கொள்ளையர்களின் தலைவனான‌ Abduwali Muse ன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர்  Barkhad Abdi. தனக்கு இட்ட வேலைப்படி ஆயுதங்களில்லாத சரக்குக் கப்பலை ஓமனின் சாலாலா துறைமுகத்திலிருந்து கென்யாவின் மொம்பாசா துறைமுகத்திற்கு கொண்டு செல்ல பணியாளர்களுடன் புறப்படுகிறார் பிலிப்ஸ். சோமாலியக்…

  • முத்துக்கள் பத்து – தி.ஜானகிராமன்

    ஜானகிராமன் அவர்களின் ப‌த்துக் கதைகளின் தொகுப்பு. அம்ருதா பதிப்பகம் வெளியீடு. கங்கா ஸ்நானம் சிலிர்ப்பு பரதேசி வந்தான் பிடி கருணை முள்முடி மேரியின் ஆட்டுக்குட்டி கோதாவரிக்குண்டு பசி ஆறிற்று சத்தியபாமா செய்தி இவையே அந்த பத்து சிறுகதைகள். வாசிக்க வேண்டிய சிறுகதைகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.