|

Work Rules!: Insights from Inside Google

கூகுள் நிறுவனத்தின் மனித வள மேலாண்மை அதிகாரி லாஸ்லோ போக்கால் எழுதப்பட்ட ஓர் சுய முன்னேற்ற நாவல். பெரும்பாலும் இந்நாவல் மற்ற நிறுவனத்தின் மேலாண்மை அதிகாரிகளை நோக்கியே எழுதப்பட்டிருக்கிறது. ஒரு மேலாண்மை அதிகாரியின் பார்வையில் எப்படியெல்லாம் ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் நலனைப் பேணலாம் என விளக்குவதே இப்புத்தக்கத்தின் அடிப்படை. பணியாளர் விரும்பும் நிறுவனங்களில் முன்னணியில் இருக்க‌க்கூடிய நிறுவனங்களில் கூகுள் ஒன்று. லாஸ்லோ போக் தன்னுடைய அனுபவத்தின் வாயிலாக எப்படி கூகுளை அந்த நிலையை அடைய வைத்தோம் என்பதனை விளக்குவதே இந்த புத்தகத்தின் ஒட்டு மொத்த நோக்கம்.

ஒரு பணியாளர் கூகுளில் எப்படியெல்லாம் நடத்தப்படுகிறார் அல்லது அவருக்கு என்னென்ன விதமான சலுகைகள் தரப்படுகின்றன அல்லது எந்த விதமான சுதந்திரம் அனுமதிக்கப்படுகிறது போன்றவற்றை அறிந்துகொள்ள விரும்புபவர்களும் இந்நூலை வாசிக்கலாம். ஏனெனில் யாரோ ஒருவரின் பார்வையில் கூகுளை மதிப்பிடுவதை விட அந்நிறுவனத்தின தலைமை அதிகாரியின் சொற்களில் அறிவதற்கு நம்பகத்தன்மை அதிகம் தானே!

ஒட்டுமொத்தமாக இந்த புத்தகம் முன்னிறுத்தும் கருத்துக்கள் இவையே

  • Give your work meaning.
    • நம்முடைய நோக்கம் என்ன? எதற்காக இந்த வேலையை செய்கிறோம்? நிறுவத்தில் இதன் ஒட்டுமொத்த விளைவு  என்ன?  என்பதனை ஒவ்வொரு பணியாளரும் உணரச் செய்தல்.
  • Trust your people.
    • நம்முடைய பணியாளர்களை முழுவதுமாக நம்புதல், அல்ல‌து ஒளிவு மறைவின்றி இருத்தல் அல்லது முழுமையாக நம்புபவர்களை மட்டுமே வைத்திருத்தல்
  • Hire only people who are better than you.
    • நம்மை விட மேலானவர்களை மட்டும் பணிக்குத் தேர்வு செய்தல். இது சற்று காலம் பிடித்தாலும் இறுதியில் அது ஒரு சிறந்த ஓர் பணியாளர் குழுவாக இருக்கும்.
  • Don’t confuse development with managing performance.
    • தொடர் கலந்துரையாடல்கள் வழியாக நம்முடைய நோக்கத்தில் தெளிவாக இருத்தல். உள் வேலைகளில் தலையிடாது இருத்தல்.
  • Focus on the two tails.
    • ஆகச்சிறந்த அல்லது இருப்பவர்களிலேயே ஆகச்சிறந்த பணியாளர்களையும், ஆக மோசமான அல்லது இருப்பவர்களிலேயே மோசமான பணியாளர்களையும் அதிகமாக கவனித்தல் அல்லது உற்சாகப்படுத்துதல்
  • Be frugal and generous.
    • உயர்ந்த எண்ணம் கொண்டு பணியாள‌ர்களுக்கான சலுகைகளை செய்தல்
  • Pay unfairly.
    • எல்லாருக்கும் ஒரே ஊதியம் என்ற எண்ணமில்லாமல் அவரவர் திறமைக்கேற்ப, ஒரே நிலையில் இருந்தாலும் வெவ்வேறு ஊதியம் வழங்குதல்
  •  Nudge.
    • சின்னச் சின்ன மாற்றங்கள் மூலம் பெரிய விளைவுகளை ஏற்படுத்துதல்
  • Manage the rising expectations.
    • மாற்றமும் சலுகைகளும் மேலும் சலுகைகளையும், மாற்றங்களையும் ஏற்படுத்தும் அல்லது எதிர்பார்க்கும் என்பதனை உணர்ந்து அதற்கேற்ப திட்டமிடுதல்
  • Enjoy! And then go back to No. 1 and start again.
    • மேற்கூறிய அனைத்தையும் பின்பற்றுதல்

மேற்கூறிய கருத்துக்களை உதாரணங்களோடும், தகவல்களோடும் ஒவ்வொரு அத்தியாயத்திலும் விளக்கியிருக்கிறார் லாஸ்லோ போக்.

Similar Posts

  • |

    தவிப்பு – ஞானி

    ஞானி அவர்களால் எழுதப்பெற்று விகடனில் தொடராக வெளிவந்த தொடரின் நாவல் வடிவம். வெளியீடு விகடன் பிரசுரம். வெளியிட்ட ஆண்டு ஆகஸ்ட் 2007. டில்லியில் அரசு தொலைக்காட்சியில் பணிபுரியும் விஜயனுக்கு ஒரு தமிழ்த் தீவிரவாதக் கும்பலுடன் சமரசம் பேசுவதற்கான அழைப்பு அரசால் விடுக்கப்படுகிறது. அத்தீவிரவாதிகள் ஒருவரை பணயக்கைதியாக வைத்திருக்கின்றனர். அத்தோடு அத்தீவிரவாதிகளுள் ஒருத்தியான ஆனந்தி விஜயனின் கல்லூரிக் கால நெருங்கிய தோழி. விஜயன் அவர்களுடன் பேரம் பேசுவது, அவனுக்கும் ஆனந்திக்குமான முந்தைய நட்பின் நினைவுகள், விஜயன் தற்போதைய அலுவலகத்…

  • |

    என்றென்றும் வாழும் படைப்புகளும் படைப்பாளர்களும் – எம்.ஏ.அப்பாஸ்

    எம்.ஏ.அப்பாஸ் அவர்களால் எழுதப்பெற்றது. வெளிவந்த ஆண்டு 1960 களின் தொடக்கம். 2006 ஆல் மீண்டும் புதிய பதிப்பாக அம்ருதா பதிப்பகத்தினர் கொண்டு வந்திருக்கின்றனர்.சிறந்த பத்து எழுத்தாளர்களைப் பற்றிய சிறிய வாழ்க்கைக் குறிப்பும், அவர்களின் படைப்புகள் பற்றிய ஒரு எளிய அறிமுகத்தினையும் செய்யும் புத்தகம். அந்த பத்துப் படைப்பாளிகள் இவர்களே. தஸ்தயேவ்ஸ்கி – ரஷ்யா கார்க்கி – ரஷ்யா T.H. லாரன்ஸ் – இங்கிலாந்து ஹெமிங்வே – அமெரிக்கா ஜேம்ஸ் ஜாய்ஸ் – அயர்லாந்து அல்பட்டோ மொறாவியா –…

  • | |

    தூய்மை இந்தியா

    சமீபத்தில் நமது பிரதமர் அவர்களால் தூய்மை இந்தியா துவங்கப்பட்டதை விமர்சனம் செய்து பல்வேறு விதமான கட்டுரைகளும் பேச்சுக்களும் இணையத்தில் உலாவுகின்றன. ஒரு எளிய இணைய வாசகன் வாசிக்கும்பொழுது அவன் நம்பக்கூடிய வண்ணமே அப்பதிவுகள் இடப்படுகின்றன. எதற்காக அவர்கள் அதனை செய்கிறார்கள்? ஒன்று அவர்கள் மோடியை வெறுப்பவராகவோ, அல்லது எதிர்க் கட்சியை சேர்ந்தவராகவோ இருப்பார். ஆனால் அவர்களின் எண்ணங்களை இணையத்தில் முடிந்த அளவிற்கு பரப்பி அதனைப் பெருக்குகிறார்கள். உதாரணமாக ஒரு அமைச்சர் குப்பையை ஓரிடத்தில் பரப்பி வைத்துவிட்டு பின்னர்…

  • பார்த்திபன் கனவு ‍- அம‌ரர் கல்கி

    அமரர் கல்கி அவர்களால் 1941 ஆம் ஆண்டு எழுதப்பெற்ற நூல், காவியம். சோழ நாடும், பல்லவ நாடுமே கதைக்களங்கள். பார்த்திப மன்னனின் கனவான சுத‌ந்திர தேசத்தை அவரது மகனான விக்கிரமன் நனவாக்குவதே கதை. இது காதல் காவியமோ என்ற எண்ணம் அடிக்கடி எழுந்துகொண்டே இருக்கிறது. எளிய கதை.மிகச் சிறந்த வர்ணனை. அந்த வர்ணனைகளுக்காகவே மறுபடியும் படிக்கலாம். பல்லவ மன்னன் நரசிம்ம பல்லவனின் மகளாகிய குந்தவி தேவியின் அழகை விவரிக்கும் அழகே அழகு. அவ்வளவு வசீகரமானவள்,அழகானவள். அந்த குந்தவி…

  • |

    புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம்

    1960 களில் ப.சிங்காரம் அவர்களால் எழுதப்பெற்ற நாவல். இந்தோனேசியாவில் வாழும் தமிழ் மக்களுடைய வாழ்வியலே கதையின் கரு. அத்தோடு கதை மாந்தர்களின் நினைவின் வழியாக இந்திய கிராமங்களினுடைய வாழ்வியலும் விவரிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் சிவகங்கை மற்றும் அதன் சுற்று வட்டாரக் கிரானங்கள். நாவல் பாண்டியன் என்னும் இளைஞனைச் சுற்றியே நகருகின்றது. பாண்டியன் பிழைப்பிற்காக இந்தோனேசியா சென்று, பின்னர் இந்தோனேசியாவிலிருந்து மலேயாவிற்கு செல்வது, அங்கே நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்வது என கதை நீள்கிறது. நாவல் நடைபெறும் காலம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.