Rich Dad Poor Dad
|

Rich Dad Poor Dad – Robert Kiyosaki

Rich Dad Poor Dad

Robert Kiyosaki ஆல் எழுதப்பெற்று 1997 ஆம் ஆண்டில் வெளிவந்தது. வாழ்வில் பொருளாதார தன்னிறைவு அடைவதற்கு தனி மனித நுண்ணறிவு எத்தகைய முக்கியமான ஒன்று என்பதனை விவரிக்கும் நூல். 50 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலகம் முழுவதும் 30 மில்லியனுக்கும் அதிகமாக விற்பனையான நூல்.

இந்நூல் வாசிப்பவர்கள் பொருளாதார தன்னிறைவினை அடைந்தார்கள் என்பதனை விட‌ Robert Kiyosaki கண்டிப்பாக இப்புத்தகத்தினால் பொருளாதார நிறைவினை அடைந்திருப்பார் என்பது நிதர்சனம். இப்புத்தகத்தினை பத்து தனி அத்தியாயங்களாக‌ Robert Kiyosaki பிரித்து விளக்கியுள்ளார். தான் தன்னுடைய தந்தை மற்றும் தன்னுடய நண்பனின் தந்தை இருவரிடம் கற்றுக்கொண்ட விஷயங்கள் எவ்வாறு தன்னுடைய வாழ்வில் உதவியது என்பதனை இந்த பத்து அத்தியாயங்களில் விளக்கியுள்ளார். அந்தப் பத்து விஷயங்கள் இவையே.

  1. The Rich Don’t Work for Money
  2. Why Teach Financial Literacy?
  3. Mind Your Own Business
  4. The History of Taxes and the Power of Corporations
  5. The Rich Invent Money
  6. Work to Learn – Don’t work for Money
  7. Overcoming Obstacles
  8. Getting Started
  9. Still Want More? Here Are some To Do’s
  10. Final Thoughts

ஒட்டுமொத்தமாக படிக்கும் பொழுது இந்த புத்தகத்தில் திரும்பத்திரும்ப சில விஷயங்கள் சொல்லப்படுகிறது. நீங்கள் பணத்திற்காக வேலை செய்யக்கூடாது. பணம் உங்களுக்காக வேலை செய்ய வேண்டும். அதற்கு ஏற்ற முதலீடுகளை ரியல் எஸ்டேட், பங்குகள் போன்றவற்றில் செய்யுங்கள். இழப்பு என்பது இல்லாமல் எந்த லாபத்தினையும் அடைய முடியாது. இழப்பிலிருந்து எப்படிக் கற்றுக்கொண்டு மேலே செல்வது என தெரிந்து கொள்ளுங்கள். இவைதான் திரும்பத்திரும்ப வருகிறது பெரும்பாலான அத்தியாயங்களில்.

அத்தோடு ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் அவ்வத்தியாயம் மீண்டும் சுருக்கமாக சொல்லப்படுகிறது. உண்மையாகவே திரும்ப சொல்லப்படுகிறது. அத்தியாயம் 30 பக்கமெனில், இது 5 முதல் 10 பக்கம் வரை இருக்கும். இது படிப்பதனில் ஒரு சோர்வை உண்டாக்குகிறது. தனிப்பட்ட முறையில் இந்த புத்தகம் என்னளவில் பெரிய ஆச்சரியத்தை உண்டு பண்ணவில்லை எனினும் எந்த வாசிப்பும் நல்ல வாசிப்பே என்பதனால் இப்புத்தகத்தினை வாசிக்கலாம்.

Similar Posts

  • மனுஷ்யபுத்திரனின் பசித்த பொழுது

    மனுஷ்யபுத்திரனின் கவிதைத்தொகுப்பு – பசித்த பொழுது. படிக்கும் பொழுது “இதெல்லாம் கவிதைதானா? வெற்று வசனங்கள்தானே ?” என கேட்கத்தூண்டும் வண்ணம் பல கவிதைகள் இருக்கிறது. ஒருவேளை அவைதான் சரியான கவிதைகளோ? நமக்குத்தான் அதற்கான ஞானம் வரவில்லையோ என்ற எண்ணமும் இப்போது வரை உண்டு. உங்களுக்கும் தோன்றினால் நீங்களும் என் இனமே.  பெரும்பாலும் தன் வாழ்வின் நிகழ்வுகளைத்தான் கவிதைகளாக வடித்திருக்கிறார். சமூக பொருளாதார சித்தாந்தங்களெல்லாம் ஒன்றுமில்லை. ஒன்றுமேயில்லை எனலாம். மொத்தம் உள்ள 236 கவிதைகளில் 99% கவிதைகளை காமம், மழை,…

  • தாயம் – ரங்கராஜன்

    சுயமுன்னேற்ற நூல் என இந்நூலை வகைப்படுத்தினால் மற்ற சுய முன்னேற்ற நூல்களுக்கான இடமே மனதில் இதற்கும் கிடைக்குமென்றால் இது சுய முன்னேற்ற‌ நூலன்று. எப்பொழுதெல்லாம் தன்னம்பிக்கை, ஒழுக்கத்தில் பிழை ஏற்படுவதாக எண்ணினாலும் உடனே வாசிக்க வேண்டிய‌ நூல் இது.  எத்தனை முறை வாசித்தாலும் ஒவ்வொரு முறையும் புதியதொரு புத்துணர்ச்சியைத் தரும் நூல். எப்பொழுது வேண்டுமானலும் எந்த அதிகாரத்தை வேண்டுமானாலும் படிக்கக்கூடிய வடிவமைப்பு. மிக எளிய மொழிநடை. எக்காலத்திற்கும் மனதில் நிற்கும் சிறந்த நூல்களில் ஒன்று. நன்றி.

  • | |

    மாதொருபாகன்

    மாதொருபாகன் நாவலை முன்வைத்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று அதன் விளைவாக எழுத்தாளர் பெருமாள் முருகன் தன் எழுத்துக்களை திரும்பப் பெற்று விட்டார். இனிமேல் தான் எழுத‌ப்போவதில்லை எனவும் தான் எழுதிய அனைத்து நாவல்களையும் திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும் அறிவித்து விட்டார். எதிர்ப்பாளர்கள் மறுப்பை வெளிப்படுத்திய விதம் முற்றிலும் தவறு. இதில் மாற்றுக்கருத்து கிடையாது. எதிர்ப்பாளர்கள், மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் சொன்னபடி பதிலுக்கு ஒரு மறு நாவலையோ அல்லது விளக்கவுரையோ எழுதி கடுமையாக எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கலாம். அதனைவிடுத்து மூன்றாம்…

  • |

    FACTFULNESS – Hans Rosling

    ஸ்வீடன் நாட்டினைச் சேர்ந்த மருத்துவர் Hans Rosling ஆல் எழுதப்பெற்ற புத்தகம். அவருடைய பணி பல்வேறு நாடுகளில் ஏற்படக்கூடிய நோய்த்தொற்றுக்களை ஆராய்ந்து அதனை ஆரம்பத்திலேயே தடுப்பது மற்றும் மருத்துவ, சுகாதார படிநிலைகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும் நாடுகளில் உலக சுகாதார நிறுவனம் போன்ற நிறுவனங்களின் சார்பாக பணியாற்றுவது. அத்தகைய பணிகளின் போதும் தன்னுடைய மற்ற அனுபவங்களின் வாயிலாகவும் கற்ற, அறிந்த தகவல்களை பல்வேறு அறிஞர்கள் கூடும் நிகழ்வுகளில் எடுத்துரைப்பதினையும் தன்னுடைய பணியாக செய்து வந்தார். பெரும்பாலும்…

  • |

    गैंग्स ऑफ वासेपुर – Gangs Of Wasseypur

    English Version: I watched a Hindi movie named ‘Gangs of Wasseypur’ today. The movie tells the story of a fight between two groups in the districts of Dhanbad and Wasseypur in the state of Jharkhand for power. Shahid Khan works under Ramadhir, who owns a few coal mines. Shahid wants to become the owner of…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.