|

ஆயிரம் ஜன்னல் ‍‍- ஜக்கி வாசுதேவ்

ஆனந்த விகடனில் தொடர்ச்சியாக வெளிவந்த ஜக்கி வாசுதேவ் அவர்கள் எழுதிய‌ கட்டுரைகளின் தொகுப்பு. எழுத்தாக்கம் சுபா. வாராந்திரக் கட்டுரை வடிவில் வெளிவந்ததனால் ஒட்டு மொத்த தொடர்ச்சி கிடையாது. ஒரு எளிய கட்டுரை அதனுள் ஒரு சிறு அறம். இப்படித்தான் பெரும்பாலானவை. இத்தொடர் வெளிவந்த காலகட்டத்திலேயே ஜக்கி வாசுதேவ் ஒரு புகழ்பெற்ற நபராக இருந்தமையால் அவர் சாதாரணமாகச் சொல்வதைக்கூட பிரமாண்டமாகவே எடுத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு வாசிப்பவர்கள் சென்றே ஆக வேண்டும். அப்படிப்பட்டவையே இக்கட்டுரைகள். வாராந்திர சஞ்சரிகைகளையும், தினசரி செய்திகளையும் மட்டுமே பார்க்கும் ஒருவர் இக்கட்டுரைகளையும், அவருக்கு இருக்கும் பிறவி ஞானத்தையும் விதந்தோதலாம். உலக, இந்திய, தமிழ் எழுத்தாளர்களை குறைந்த அளவிலேனும் வாசித்தவர்களுக்குத் தெரியும் இவையெல்லாம் வியாபாரக் குப்பைகள் என்று. இந்தக் கட்டுரைகளின் மற்றோர் பொதுத்தன்மை பெரும்பாலான கட்டுரைகளில் அவர் தன்னைத்தானே உயர்த்திக்கொள்கிறார். தனக்கு சிறு வயதிலேயே எல்லா விதமான ஞானம் ஏற்பட்டதாகவும், எல்லாவற்றையும் ஆராய்ந்து பகுத்து மூலத்தினைக் கண்டுபிடிக்கும் வல்லமை இருந்ததாகவும், இன்னும் பிற. இவர் இக்காலப் பொருளியல் வெற்றியடையலாம், ஆனால் எதிர்காலம் இவரை உதரித்தள்ளும். மிகச் சாதாரணமான புத்தகம். வாசிக்கலாம்.

Similar Posts

  • | | |

    ஜெயலலிதா கைதும், மக்களின் மனநிலையும்

    ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் ஜாமின் பெற்று வெளியே வந்துவிட்டார். அதனைப் பற்றிய பேச்சு முற்றிலுமாக அடங்கிவிட்டது. அது தொடர்பான நிகழ்வுகளின் போதே இப்பதிவை இட வேண்டுமெனத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் அப்போது ஏற்பட்ட இரைச்சலுக்கு மத்தியில் இதற்கு இடமில்லாது போகுமென்பதால் அவ்விவாதங்கள் முற்றிலுமாக அடங்கும் வரைக் காத்திருந்து இப்பதிவை இடுகின்றேன். ஜெயலலிதா கைது ஆன பின்னர் அதனைப் பற்றி அளவுக்கு அதிகமாக விவாதித்து கட்டுரைகளை எழுதியவர்களோ, அதனைப்பற்றி செய்திகளைப் படித்துவிட்டு அப்போதைய நாட்களில் மட்டும் நண்பர்கள் மத்தியில் தனக்கு…

  • |

    When Breath Becomes Air – Paul Kalanithi

    You had become a popular neurosurgeon and suddenly one day you came to know that you have stage 4 cancer and your days are numbered. How will you feel? How your days will be from that moment? If your wife is pregnant and going to give birth to your first baby how you feel? It…

  • 200 பிரபலங்கள் 200 மறக்க முடியாத நிகழ்ச்சிகள்

    அப்பாஸ் மந்திரியால் தொகுக்கப்பட்டது. நர்மதா பதிப்பகம் வெளியீடு. மிக எளிய புத்தகம். ஆரம்பகால வாசகர்கள் மற்றும் குழ‌ந்தைகளுக்கான சிறந்த தொடக்கமாக இந்நூலைக் கொள்ளலாம். எளிய மொழிநடை. அறம் பேணும் நிகழ்வுகள். தமிழக, இந்திய, உலக வரலாற்றின் உயர்ந்த மனிதர்களுடைய‌ வாழ்வியல் நிகழ்வுகளை மிக அழகாகவும், எளிமையாகவும் விளக்கும் புத்தகம். வாழ்வியல் நெறிகளைப் போதிக்கும் ஆசிரியர்கள் மிகச் சிறந்த உதாரணங்களைக் கூற‌ இந்நூலை உபயோகிக்கலாம்.

  • |

    ப்ளீஸ் இந்த புத்தகத்த வாங்காதீங்க – கோபிநாத்

    நீயா நானா கோபிநாத் அவர்களால் எழுதப்பெற்று 2008ல் வெளிவந்த சுயமுன்னேற்ற நூல். இந்தப் புத்தகத்தின் ஆரம்பத்திலேயே இதில் எதையும் தான் புதிதாக சொல்லிவிடவில்லை என்றும் தனக்கு சொல்லப்பட்டதை தான் சொல்வதாகவும் சொல்லி ஆரம்பிக்கிறார் கோபிநாத். எளிமையான கருத்துக்கள். நமக்கு நன்கு தெரிந்த பரீச்சயமான ஒருவர் கூறுவது போல்தான் ஒட்டு மொத்த புத்தகமுமே இருக்கிறது. எப்பொழுது வேண்டுமானாலும் எந்தப் பக்கத்திலிருந்து வேண்டுமானாலும் படிக்கலாம். இப்புத்தக வாசிப்பு கண்டிப்பாக வாசிப்பவருக்கு ஒரு புத்துணர்ச்சியை அளிக்கும், அவர் எத்துனை ஆழமான புத்தகங்களை…

  • தேவை பஜ்ரங்கி பைஜான்கள்

    சமீபத்தில் மீண்டும் ஒருமுறை பஜ்ரங்கி பைஜான் திரைப்படத்தை பார்த்தேன். ஒட்டுமொத்த சமுதாயத்திற்கு இந்திய சினிமா ஆற்றிய பயன் என்று பார்த்தால் அதிகபட்சம் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவே என்பது என் எண்ணம். 95 விழுக்காடு சீர்கேடே. இது இல்லையென்றால் செழிப்போடு இருந்திருப்போம் என்ற பொருளிலல்ல, இல்லாமலிருந்திருந்தால் இத்தனை விரைவாக இத்தனை மோசமாக ஆகியிருக்க மாட்டோம் என்ற பொருளில். சமூகத்தின் பெரும்பகுதி சீரழிந்து விட்டது என்ற பொருளில‌ல்ல, சீரழிவின் பெரும்பகுதி சினிமாவால் என்ற பொருளில். நூற்றில் ஐந்து திரைப்ப‌டங்கள் சமூகத்தின்…

  • | |

    உதிரிப்பூக்கள் – மகேந்திரன்

    இயக்குநர் மகேந்திரன் அவர்களின் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த உதிரிப்பூக்கள் திரைப்படத்தின் ஒட்டுமொத்த திரைக்கதை வடிவம். 2004 ஆம் ஆண்டு மகேந்திரன் அவர்களாலேயே எழுதப்பெற்றது. அவரே நூலின் தொடக்கத்தில் கூறியது போல இந்தப்புத்தகத்தினை அத்திரைப்படத்தைப் பார்த்துப் பார்த்து எழுதியிருக்கிறார். அதனால் படத்தின் ஒவ்வொரு காட்சியும் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த புத்தகமும் உரையாடல் வடிவிலேயே உள்ளது. இடையிடையில் கதைசொல்லியாக வெளியில் வந்து காட்சியினை விளக்குகிறார் மகேந்திரன். இத்திரைப்படம், புதுமைப்பித்தனின் சிற்றன்னை குறுநாவலினைத் தழுவி எடுக்கப்பட்டது. இத்திரைப்படம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.