|

சூல் ‍- சோ.தர்மன்

Sool – So.Darman

2019 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல். சுதந்திரத்துக்கு முந்தைய காலத்தில் தொடங்கி சுதந்திரத்திற்குப் பிந்தைய ஜனநாயக அரசுகள் வரையிலான காலகட்டத்தினை ஒட்டிய ஒரு சுற்று வட்டார கிராமங்களின் கதை.

ஒட்டுமொத்த கதையும் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தினை ஒட்டி அமையும் கதை அல்ல இது. கிராமங்களில் ஆங்காங்கே நடைபெறும் சம்பவங்களும் அதற்கு முந்தைய பிந்தைய மனிதர்களின் வாழ்க்கை நிகழ்வுகளுமாக அமைந்த நாவல். ஒரு நீர்ப்பாய்ச்சியும், ஒரு கண்மாயுமே கதையின் மையம். கண்மாயின் நீரை அக்கண்மாய்க்குப் பாத்தியப்பட்ட வயல்களுக்கு பகிர்ந்தளிக்கும் பணியைச் செய்பவனே நீர்ப்பாய்ச்சி.

ஒரு கண்மாய் எப்படி ஒரு மிகப்பெரிய சூழியல் உருவாக்கத்தில் பங்காற்றுகிறது, அதனை சுதந்திர இந்தியா எப்படி ஒற்றைப்படையாக மாற்றி அழித்தது என்பதனை இந்நாவலை வாசிக்கும் பொழுது ஒருவர் உணரக்கூடும். கிராமத்தினையும் அதனைச் சுற்றிய பகுதிகளையும் மையமாகக் கொண்டதால் சில நபர்கள் பல இடங்களில் வருவதும் போவதும் உண்டு. இயல்பாக மக்களிடம் இருந்த அறவுணர்வு எப்படி இல்லாமலாகியது என்பதை ஒரு சரடாக நாவல் முன்வைத்துக்கொண்டே செல்கிறது. இந்திய சுதந்திரத்துக்கு முந்தைய கிராமங்களில் மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்த நேர்மை, எத்தகைய வறுமையிலும் அறம் தவறாமை பின்னர் வந்த காலங்களில் எப்படி இல்லாமலாகியது? எப்படி எல்லாவற்றையும் பணம் ஈடு செய்கிறது? போன்ற பல கேள்விகளை நம்மை நோக்கி வைக்கிறது இந்நாவல்.

இந்நாவலில் நான் மிக விரும்பிய இரண்டு விஷ‌யங்கள். ஒன்று கிராமத்து பேச்சு வழக்கு. கிராமத்து வாழ்வினை முற்றிலும் வாழ்ந்து அதனை உன்னிப்பாக நோக்கிய ஒருவராலேயே இத்தனை நுட்பமாக எழுத முடியும். அது இந்நாவலின் பலம். மற்றொன்று கிராமத்து எளிய மக்கள் பேசிக்கொள்ளும் இரட்டை அர்த்த வசனங்கள். வேலையின் அலுப்பு தெரியாமல் இருக்க, மகிழ்ச்சியாக இருக்க, மற்றொருவரோடு இன்னும் நெருக்கமாக எனப் பல காரணங்கள் உண்டென்றாலும் இந்நாவலில் உள்ள அவ்வரிகள் கிராமத்துப் பேச்சுக்கு மிக அருகிலேயே இருக்கிறது.

ஜனநாயக நாட்டில் ஊழல் பெருத்து, நேர்மை அற்றுப் போவதை மிக ஆழமாகப் படம்பிடிக்கும் நாவல், அதற்கு முந்தைய வெள்ளையர்களின் ஆட்சி பற்றியும் அவர்கள் செய்த கொள்ளைகளைப் பற்றியும் பேசாமலேயே கடந்து சென்று விடுகிறது. எழுத்தாளரின் தனிப்பட்ட விருப்பம் என்றாலும், எனக்குத்தோன்றும் ஐயப்பாடு என்பது பெரும்பாலும் நாவல் முழுவதும் வெள்ளையர்கள் வந்து போகிறார்கள். அவர்கள் வரும்பொழுதெல்லாம் அவர்களைப் பற்றிய மற்ற விசயங்கள்தான் பேசப்படுகின்றன. அவர்களின் ஊழல்களும், அவர்களின் கொள்ளைகளும், அடக்குமுறைகளும் முற்றிலுமாகப் பேசப்படாமலேயே கடந்துசெல்லப்படுகிறது. அதுவே இந்திய ஜனநாயக அமைப்பில் உள்ள ஏதேனும் ஒரு நபர் கதையில் வரும்பொழுது அவரின் அக்கிரமங்களும், அநியாயங்களும் அதிகமாகப் பேசப்படுகின்றன. இது எனக்கு முரண்பாடாகத் தெரிந்த ஒன்று.

சூல் என்பதற்கு கரு என்னும் பொருள். இநாவலின் நிறை கண்மாயே சூல். எல்லாவற்றையும் உருவாக்கி வளர்த்தெடுக்கும் சூல். நாவலின் பல்வேறு தருணங்களில் நம்மை மயிர் கூசச்செய்யும், கண்ணிர்த் துளியை வரவழைக்கும் ப‌ல‌ சம்பவங்கள் உண்டு. கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நாவல்.

Similar Posts

  • |

    கயம் – குமார செல்வா

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த குமாரசெல்வாவினால் எழுதப்பெற்ற ஆறு சிறுகதைகளின் தொகுப்பு. காலச்சுவடு பதிப்பகம். 2009 ஆம் ஆண்டு வெளிவந்தது. நாகமலைகுறுவெட்டிஉயிர்மரணம்கயம்கிணறுவிடாலு இவையே அந்த ஆறு சிறுகதைகள். இவற்றுள் என்னை மிகவும் கவர்ந்த கதை உயிர்மரணம். கடாட்சம் தன் தந்தை சொன்ன சொல்லுக்காக தன் இரண்டு வயது மகன் றாபியைத் தூக்கிக்கொண்டு வீட்டை விட்டு மனைவி அஞ்சம்மாளோடு வெளியேறுகிறார். ஒன்றுக்கும் உதவாது என ஊர் நினைக்கும் ஓர் நிலத்தில் உழைத்து முன்னேறுகிறார். அவர் அடையும் உச்சம் அவர்…

  • |

    ரஷ்யப் புரட்சி – மருதன்

    1917 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் ஜார் மன்னரின் ஆட்சி போராட்டத்தின் மூலம் கவிழ்க்கப்பட்டு, லெனின் தலைமையில் கம்யூனிச அரசு அமைந்ததை விவரிக்கும் சிறு புத்தகம். மருதன் அவர்களால் எழுதப்பெற்றது. ஜார் மன்னராட்சியில் தொழிலாளர்களின் வாழ்வு பேணப்படாமால் கீழ் நிலைக்கு சென்று கொண்டிருந்ததே போராட்டத்தின் ஆரம்பகாலக் காரணம். சரியான ஊதியமின்மை, முறைப்படுத்தப்படாத வேலை நேரங்கள் எனப் பல துன்புறல்களுக்கு ஆளான மக்கள் போராட்டத்தில் ஈடுபட அதன் ஒருபகுதியாக லெனினின் சகோதரனும் அரசாங்கத்தால் கொல்லப்படுகிறார். அதன் பின்னர் போராட்டத்தில் தன்னை…

  • |

    रॉकी और रानी की प्रेम कहानी – करण जौहर

    इस हफ़्ता मैंने टेका था मूवी का नाम रॉकी और रानी की प्रेम कहानी है| निर्देशक करण जौहर है| दिल्ली में रहने वाले दो परिवारों के बीच की कहानी। एक ओर रॉकी का पारंपरिक पंजाबी रंधावा परिवार है। दूसरी ओर रानी का पढ़ा-लिखा बंगाली चटर्जी परिवार है। रंधावा परिवार में, परिवार की परमबारिक को प्राथमिकत…

  • |

    மெளனத்தூதன் – வத்ஸலா விஜயகுமார்

    ஜெர்மனியக் கவிதைகளின் அறிமுகமும், ஜெர்மனியக் கவிதைகளின் மொழி பெயர்ப்புமே இந்நூல். வெளியீடு சந்தியா பதிப்பகம். ஆக்கம் வத்ஸலா விஜயகுமார். இப்புத்தகம் இரண்டு பாகங்களால் ஆனது. முதல் பாகம் ஜெர்மனி கவிதைகளின் வரலாறு குறித்தும் அதன் வெவ்வேறு காலத்தைய கவிஞர்கள் குறித்தும் அறிமுகம் செய்கிறது. இரண்டாவது பாகம் அவற்றுள் குறிப்பிடத்தக்க கவிதகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அதனுடன் அக்கவிதைகளின் ஆசிரியர் பற்றிய சிறுகுறிப்பும் தரப்படுகிறது. இரண்டாவது பாகம் கவிதையின் மொழிபெயர்ப்பு ஆதலால் ஆர்வமுடன் வாசிக்க முடிகிறது. ஆனால் முதல் பாகம்…

  • |

    காரல் மார்க்ஸ் – பட்டத்தி மைந்தன்

    2008 ஆம் ஆண்டு வெளிவந்த புத்தகம். கார்ல் மார்க்ஸின் வாழ்க்கை வரலாறு சுருக்கமாக விவரித்துள்ளார்கள். ராமையா பதிப்பகம் வெளியீடு. 1818 ஆம் ஆண்டில் ஜெர்மனியிலுள்ள ட்ரியர் என்னுமிடத்தில் பிறந்தார் மார்க்ஸ். யூத இனத்தைச் சேர்ந்தவர். மார்க்ஸின் தந்தை ஒரு வக்கீல். யூதர்கள் ஜெர்மனியில் அடக்குமுறைகளுக்கு ஆளாகி வந்ததால் யூத மதத்திலிருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறிக்கொண்டார். அவர் மார்க்ஸ் படிக்கும் காலத்தில் தொடர்ச்சியாக கடிதம் எழுதும் வழக்கம் வைத்திருந்தார். மார்க்ஸ் தன் குடும்ப நண்பரின் மகளாக ஜென்னியைக் காதலித்து…

  • |

    இன்னும் மீதமிருக்கிறது

    சிங்கப்பூரில் வாழும் சத்திக்கண்ணனால் எழுதப்பட்ட கவிதைப் புத்தகம். பெரும்பாலானவை வசனக்கவிதைகள். ஒரு சில முத்தாய்ப்பான கவிதைகளும் உண்டு. உதாரணமாக மனைவியைப்பற்றிய கவிடையொன்றில் எல்லாவற்றையும் தூரமாகத்தெரிந்தால் அழகென்றிருந்த எனக்கு அருகில் மலர் நீ இருக்கும் போது என்ன செய்ய?  என்னும் கவிதை அழகு. வானவில், கனவு போன்றவை நான் ரசித்த கவிதைகள். நான் ரசிக்காதது முன்னுரை எழுதியிருப்பவர் பாடியிருக்கும் துதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.