| |

அமரர் கல்கியின் பெண்குலத்தின் வெற்றி

kalki

கல்கி இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களால் கல்கி இதழில் எழுதப்பெற்று வெளிவந்த ஆசிரியர் கட்டுரைகளின் தொகுப்பு. பெரும்பாலும் 1947 ஆம் ஆண்டுகளின் வாக்கில் எழுதப்பெற்றவை. பெரும்பாலான கட்டுரைகள் அக்காலத்தில் புகழ்பெற்றிருந்தவர்களைப் பற்றியும், இசைத்துறை சார்ந்தவர்கள் பற்றியுமாக இருக்கிறது. உதாரணமாக அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த இசை வல்லுநர்கள், கதா கலாட்சேபம் செய்பவர்கள், கர்நாடக இசைக் கலைஞர்கள் போன்றவர்களைப்பற்றி.

அனேகக் கட்டுரைகள் பிராமணர்களைப் பற்றியவையே. இதனை அவர் திட்டமிட்டு செய்ததாக நினைக்கவேண்டியதில்லை. அக்காலகட்டத்தின் சமூகப்பார்வையின் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்ளலாம். அல்லது கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவராகையால் அவர் சார்ந்த ஒரு சமூகத்தில் அவருடைய புரிதலகளும் அறிதல்களும் அதிகமாக இருந்திருக்கலாம். ஆனால் சமூகத்தில் உள்ள மற்ற நிலை மக்களைப் பற்றியோ அல்லது அவர்களின் சிக்கல்கள் பற்றியோ ஒரு கட்டுரை கூட எழுத ஒரு எழுத்தாளருக்குத் தோன்ற‌வில்லை என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. அல்லது அக்காலகட்டத்தின் குரல்கள் எல்லாம் மேல்தட்டு வர்க்கத்தினரிடமிருந்தே குறிப்பாக பிராமணர்களிடமிருந்தே வந்ததன் காரணமாக கல்கி அவர்களும் தன்னுடைய அனைத்துக் கட்டுரைகளிலும் அவர்களின் பெருமைகளையும் சாதனைகளையுமே கட்டுரைகளாக்கியிருக்கலாம்.

இந்திய சுதந்திர வரலாற்றின் ஆரம்பக் காலங்களில் இந்திய மக்கள் உணவுக்காகவும், குறைந்த பட்ச தேவைகளுக்காகவும், வேலைகளுக்காகவும் அல்லாடிய காலங்கள் முதல் சில பத்தாண்டுகள். இந்திய வரலாற்றினை சற்றேனும் அறிந்த ஒருவருக்கு இது எளிதில் புரியும். (வாசிக்க: இந்திய வரலாறு, காந்திக்குப் பிறகு ‍ராமச்சந்திர குஹா) இக்கட்டுரைகள் வெளிவந்த ஆண்டுகள் அவை. அப்படியென்றால் ஒரே காலகட்டத்தில் ஒரே இடத்தில் ஒரு சமூகம் அனைத்து வசதிகளோடும் சவுகரியங்களோடும் வாழ மற்றோர் சமூகம் தனது அடிப்படைத் தேவைகளுக்காக அல்லல்படும் நிலையும் ஒரு சேரவே நடந்திருக்கிறது. இந்திய மேல்தட்டு சமூகம் எக்காலகட்டத்திலும் இந்திய மக்களுக்காக போராடியதில்லை. பங்கேற்றவர்கள் வெகு சிலர் மற்றுமே. அதிலும் இந்தியா சுதந்திரம் அடையும் நிலையை நோக்கி நகரத்தொடங்கியதும் தேசிய போராட்டங்களில் பங்கு கொண்டு அதிகாரத்தினை அடைந்தவர்கள் அவர்கள். முகலாயர்கள் காலத்திலும், அதன் பின்னர் வெள்ளையர்கள் காலத்திலும் அதிகாரத்தின் நெருக்கமாகச் செல்வதற்கான வழிகளை அறிந்தவர்கள். இன்றும் அவர்கள் அதையே செய்கிறார்கள். இதுபோன்ற கட்டுரைத் தொகுப்புகள் அத்தகைய உண்மைகளை நாம் அறிந்துகொள்ளவும், நம் மக்களை இன்னும் மேலும் விழிப்பு கொண்டவர்களாக ஆக்கவும் மறைமுகமாக முக்கியமானவை.

வாசிக்க வேண்டிய கட்டுரைத் தொகுப்பு.

Similar Posts

  • | |

    காஷ்மீரும் ராணுவமும்

    காஷ்மீர் ராணுவத்தின் செயல்பாடுகள் பற்றிய விவாதங்கள் பற்றிய நேரத்தில் வாசித்த சிறந்ததொரு கட்டுரை. திருச்சி வே விஜயகிருஷ்ணன் அவர்களால். எனக்கு சாதாரணமாகவே ஒரு கட்டுகோப்பான இயக்கங்கள் மீது ஒரு தனி மரியாதை உண்டு. அது கம்யூனிசமானாலும் ஆர்எஸ்எஸ் ஆனாலும் சரி. அதுவே இராணுவம் என்றால் சற்று அதிக்கப்படியான மரியாதைதான். அவற்றின் அங்கத்தினர்கள் சாமான்ய மனிதர்களின் உந்துதள்களை மீறிய வாழ்வை வாழ்வதனாலேயே அவர்களுக்கு சற்று சலுகைகள் தேவை என்பதே என் எண்ணம். அதிலும் இராணுவம் போன்ற தன உயிரை…

  • | |

    மறைக்கப்பட்ட இந்தியா – எஸ்.ராமகிருஷ்ணன்

    எழுத்தாளர் ராமகிருஷ்ணனால் எழுதப்பெற்றது. ஆனந்த விகடனில் தொடர்ச்சியாக‌ வெளிவந்த க‌ட்டுரைகளின் தொகுப்பு. இந்திய வரலாற்றில் நிகழ்ந்த சம்பவங்களின் அடிப்படையிலான கட்டுரைகள். இதுவே சாராம்சம். தனித்தனியாக வெளிவந்ததால் ஒட்டுமொத்த புத்தகத்திற்கு என்று ஒரு கச்சித வடிவம் கிடையாது. ஓர் ஆரம்பகால அல்லது இதுவரை வாசிப்பு பழக்கம் இல்லாத ஒருவருக்கான புத்தகம். ஏனெனில் வெறுமனே தட்டையான எழுத்து நடை. ஏற்கனவே வாசிக்கும் பழக்கம் உள்ளவருக்கு சலிப்பையே தரும். அதிலுள்ள தகவல்களும் அப்படியே. எந்த தகவலும் தினசரி செய்தித்தாள்களில் வரக்கூடிய அளவிற்கானவையே….

  • |

    Design of Web APIs – Arnaud Lauret

    Written by Arnaud Lauret. This book is for API designers, who involves in designing the API as well for those who develop APIs. It mostly talks about the best practices of designing APIs including best naming practices, documentation practices, security approaches. As I have already involved in few API developments already after reading this book…

  • |

    ஆயிரம் ஜன்னல் ‍‍- ஜக்கி வாசுதேவ்

    ஆனந்த விகடனில் தொடர்ச்சியாக வெளிவந்த ஜக்கி வாசுதேவ் அவர்கள் எழுதிய‌ கட்டுரைகளின் தொகுப்பு. எழுத்தாக்கம் சுபா. வாராந்திரக் கட்டுரை வடிவில் வெளிவந்ததனால் ஒட்டு மொத்த தொடர்ச்சி கிடையாது. ஒரு எளிய கட்டுரை அதனுள் ஒரு சிறு அறம். இப்படித்தான் பெரும்பாலானவை. இத்தொடர் வெளிவந்த காலகட்டத்திலேயே ஜக்கி வாசுதேவ் ஒரு புகழ்பெற்ற நபராக இருந்தமையால் அவர் சாதாரணமாகச் சொல்வதைக்கூட பிரமாண்டமாகவே எடுத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு வாசிப்பவர்கள் சென்றே ஆக வேண்டும். அப்படிப்பட்டவையே இக்கட்டுரைகள். வாராந்திர சஞ்சரிகைகளையும், தினசரி செய்திகளையும்…

  • மாற்றத்தின் மாற்றம்

    எத்தகைய மாற்றத்தின் மீதும் மீண்டும் மாற்றம் ஏற்படும் என்பது மீண்டும் நிருபணம் ஆகியிருக்கின்றது. Facebook ஒட்டுமொத்த இணைய உலகை ஆட்சி செய்துகொண்டிருக்கும் வேளையில் அதனுடைய ஒரு பகுதி சேவையை மட்டுமே தன் முழு சேவையாகக் கொண்டு கோலோச்சுகின்றது WhatsApp. See the slides below for details.

  • புது வருடம் ‍- 2020

    இந்த ஆண்டில் 1. 52 புத்தகங்களை வாசிப்பது2. வாசித்த புத்தகங்களுக்கான அறிமுகத்தை தமிழில் காணொளியாக இணையத்தில் பதிவேற்றுவது3. தெலுங்கு மொழியினை சரளமாக பேசவும்,எழுதவும்,வாசிக்கவும் கற்றுக்கொள்வது என மூன்று செயல்களைத் திட்டமிடுகிறேன். சென்ற ஆண்டில் 50 புத்தகங்களை வாசிக்கத்திட்டமிட்டு 7 புத்தகங்களை மட்டுமே முழுமையாக வாசித்தேன். எந்த விதமான காரணம் கூறிக்கொண்டாலும் திட்டமிட்டதனை அடய முடியவில்லை என்பதே உண்மை. அதிலுள்ள குறைபாடுகளை திருத்திக்கொண்டு மீண்டும் முன் செல்லத் திட்டமிடுகிறேன். இரண்டாவதாக, வாசித்த புத்தகங்களைப்பற்றி இணையத்தில் பதிவேற்றம் செய்வதற்கான காரணம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.