அழிக்கப்பட‌ வேண்டியது சாதியா?

blog_post_4

கடந்த 10,20 ஆண்டுகளாகவே நாம் இதனை கேள்விப்பட்டிருக்கக்கூடும். “சாதிகள் அழிக்கப்பட வேண்டும்” என்று. அனைவரும் இதே கருத்தை மீண்டும் மீண்டும் கேட்பதனால் நாம் நம்மை சாதிக்கு எதிரானவராக காட்டிக்கொள்ள முயல்கிறோம். (எல்லோரும் அல்ல).

நாம் உயர் வகுப்பினராகவோ, நடுத்தர வகுப்பினராகவோ, பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவோ குறிப்பிடப் படலாம். முதலில் நாம் ஒன்றை தெளிவுபடுத்திக் கொள்வோம். நாம் சாதிக்கு எதிரானவரா அல்லது சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரானவரா?

ஒருவேளை இதன் பதில் சாதிக்கு எதிரானவர் எனில் நாம் நம்மை பிறருக்காக அவ்வாறு காட்டிக்கொள்கிறோம் என்பதுதான் உண்மை. மேலே விவாதிப்பதற்கு முன் ஒன்றை நாம் உறுதி செய்து கொள்வோம். சாதிய ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்பட வேண்டியவையே,சாதிகள் அல்ல.

சாதி என்பது என்ன? ஏதோ ஒரு செயல்பாட்டில் பொதுவாக செயல்படும் மக்களை குறிக்கும் சொல். அது தொழில், பழக்க வழக்கங்கள், தோற்றம், கலாச்சாரம், மொழி, நாடு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அதை ஒரு தீய வார்த்தையாக மாற்றியதுதான் தம்மை உயர்வாகவும் பிறரை தாழ்வாகவும் நினைத்த நமக்கு முன் வாழ்ந்த மக்கள், இப்போதைய ஊடகங்கள், லாபம் தேடிய, தேடும் தலைவர்களின் சாதனை.

ஒருவேளை நீங்கள் மீண்டும் சாதியை தவறு எனக் கூறினால் தமிழன் என்பதே சாதிதான் எனக் கூறுவேன் நான். தமிழ் மொழி எனும் பொதுவான செயல்பாட்டினால் ஒன்றிணைவதால் தான் தமிழர்கள். இதே போலத்தான் தெலுங்கு, கன்னடம்,மலையாளம் எல்லாம். சாதியே வேண்டாமென நாம் நினைத்தால் பிறகெதற்கு தமிழன், தெலுங்கன்,கன்னடன். எல்லாத்தையும் நீக்கிவிட்டு இந்தியன் என்று ஒரே அடையாளத்தை வைத்து விடுவோமே! அப்பொழுதும் எதற்கு இந்தியன் என்ற கேள்வி எழும்.

நாம் கூறலாம். நமக்கான அடையாளத்தையும், உரிமையையும் நிலை நிறுத்திக் கொள்ள நாம் ஓர் அணியாக இருக்க வேண்டியது அவசியமாகிறது, அதுதான் தமிழன், இந்தியன் என்று. இந்தியாவில் அடையாளமாக தமிழன். உலகில் அடையாளமாக இந்தியன். அதேதான் சாதி. அதிக நபர்கள் ஒன்றிணைந்து இந்தியா, தமிழ்நாடு, ஆந்திரா, மலையாளி எனப் பிரித்து சட்டமாக்கிக் கொள்ளலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட மக்கள் தங்களை விட்டுக் கொடுக்காமல் இருந்தால் அவர்களை சாதி வெறி பிடித்தவர்கள் என்கிறோம். ஆக பிரச்சினை சாதிகளில் இல்லை, அதைக்கொண்டு ஏற்றத்தாழ்வை உருவாக்கியவர்களிடமும், பின்பற்றுபவர்களிடமும் தான் இருக்கின்றது.

சாதிய ஏற்றத்தாழ்வுகள் களையப்பட வேண்டும்;அனைவரும் சமம் எனும் நிலையைக் கொண்டு வர வேண்டும் என்பதுதான் விருப்பம். ஆனால் அதை செய்ய முடியவில்லை. ஏனென்றால் சாதிக்கு எதிராக காட்டிக் கொண்டதோடு சரி, நடந்து கொள்ளவில்லை. சற்று கடினமான செயல்தான் அது. பெருச்சாளியைக் கொள்ள முடியவில்லை. வீட்டைக் கொளுத்துகிறோம்.

மீண்டும் மீண்டும் அவ்வாறு செய்வதால் சாதியை ஒழித்து விட முடியும் என நாம் நம்பினால் அது மடத்தனமாகவே முடியும். ஏனென்றால் அப்படி முடியும் என்றால் இந்நேரம் சாதி அழிந்திருக்க வேண்டும் அல்லது குன்றிப்போயிருக்க வேண்டும். சில சமயங்களில் அது குன்றிப்போனதாய் தெரிந்திருந்தாலும் மீண்டும் எர்மலையாய் வெடித்துச் சிதறியதைத்தான் கடந்த கால நிகழ்வுகளில் அறிகிறோம். இன்றைய நவீன உலகில் கூட சாதி அழியாதிருப்பதன் காரணம் ஒன்றுதான்.

நாம் அழிக்க முயல முயல அது தன்னை மக்கள் மனங்களில் வலுப்படுத்திக் கொள்கிறது. எவ்வளவு நபர்கள் என்பதல்ல சாதி, நபர்களின் எண்ணங்களில் எவ்வளவு வீரியமாய் இருக்கிறதென்பதே சாதி.

சமூக சிந்தனையாளர்கள் எனக் கூறிக்கொள்ளும் மனிதர்களின் கருத்துக்களை நாம் மடத்தனமாய் பிந்தொடர்ந்தது போதும். நாமே நமக்கான ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் படைப்போம். புறப்படுக!!!

Similar Posts

  • | |

    The Boss Baby – குழந்தை முதலாளி

    2017 ஆம் ஆண்டு வெளிவந்த அனிமேஷன் திரைப்படம். 2010 ஆம் ஆண்டு இதே பெயரில் வெளிவந்த The Boss Baby என்ற புத்தகத்தினை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. கதைச்சுருக்கம் இதுதான். கதை எதிர்காலத்தில் நடைபெறுகிறது. டிம் தன்னுடைய குழந்தைக்கு தன்னுடைய சிறு வயதுக்கதையைக் கூறுவதாகப் படம் தொடங்குகிறது. டிம் தன்னுடைய பெற்றோருக்கு ஒரே பையன். செல்லமாகவும் புத்திசாலித்தனமாகவும் வளர்ந்து வருகிறான். டிம்மின் பெற்றோர் பப்பிஸ் கார்ப் என்ற‌ நாய்க்குட்டிகளை விற்பனை செய்யும் கம்பெனியில் பணியாற்றுகின்றனர். பரபரப்பான வேலைக்கு மத்தியிலும்…

  • | |

    பேரும் புகழும் – எசு.எசு.அருணகிரிநாதர்

    எசு.எசு.அருணகிரி நாதர் என்பவரால் 2007 ல் எழுதப்பெற்ற அறிவுரை நூல். பெரும்பாலும் வெளிப்படையான அறிவுரைகளின் தொகுப்பு. ஆசிரியரைப்பற்றி எனக்கு தெரியவில்லை. ஆனால் தன்னுடைய வயதான காலகட்டத்தில் எழுதியிருப்பதாகவே நூல் அமைப்பு உள்ளது. பொறாமை, அன்பு,காமம் போன்ற பல்வேறு தலைப்புகளில் மனிதர்களுக்கு அறிவுறை கூறுகின்றார். பெரும்பாலான அறிவுரைகளில் ஓ மனிதனே! என ஒட்டுமொத்த மனிதகுலம் நோக்கி தன்னுடைய அனுபவத்தை அறிவுரையாகத் தருகிறார். இதனை நாம் வயது முதிர்ந்த பல்வேறு பெரியவர்களிடம் கேட்கலாம். அப்பெரியவர்களின் சொற்கள் நூலாகியிருக்கிறது. ஒட்டுமொத்தமும் வெளிப்படையான…

  • | |

    தற்கொலைக் குறுங்கதைகள் – அராத்து

    அராத்து அவ்வப்போது ஃபேஸ்புக்கில் எழுதிய குறுங்கதைகளை உயிர்மை பதிப்பகம் நூலாக வெளியிட்டிருக்கிறார்கள். எதேச்சையாக கண்ணில் பட்ட நூல், இந்நூலின் வெளியீட்டு விழாவில் சாருவும், ஜெயமோகனும் கலந்துகொண்ட நினைவு. அதனால் இப்புத்தகத்தை வாசிக்கலாம் என நினைத்து எடுத்து வந்தேன். ஒட்டுமொத்த நாவலின் பெரும்பான்மை பேசுபொருள் உடலுறவு. காமம் அல்ல. இதற்கு பாலுறவுக் கதைகளாகவே வெளியிடப்படும் கதைகள் எவ்வளவோ பரவாயில்லை. அவர்கள் அவர்களுடைய கதைகளை உலகத்தர நாவல் என்றோ அல்லது தமிழின் முதல் ஃபோர்னோ நாவல் என்றோ இன்ன பிற…

  • | | |

    நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கலாமா?

    சமீபத்திய நாட்களில் சீமான் மீதான ஆர்வத்தையும் ஆதரவையும் சில இடங்களில் காண முடிகிறது. சீமானின் நாம் தமிழர் கட்சி இன்றைய நிலையில் தமிழகத்திற்கு ஓர் மாற்றாக அமையுமா? சீமானுக்கு வாக்களிக்கலாமா? அவரின் இன்றைய இடம் எது? சீமான் நாம் தமிழர் கட்சியை 2010 ல் தொடங்கினார். சென்ற நாடாளுமன்றத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். தற்போது தனியாக நிற்பதாக அறிவித்து திராவிடக்கட்சிகள், மக்கள் நலக் கூட்டணி, காங்கிரஸ், பாஜக என அனைத்து கட்சிகளையும் விமர்சனம் செய்து வருகிறார்….

  • எங்கே இந்தியக் கல்வி?

    நான் கடைசியில் கூறப்போவதை இப்போதே சொல்லிவிடுகிறேன். “இந்தியக்கல்வி பில்கேட்ஸிடம் வேலை செய்ய 1000 பேரை உருவாக்கும். ஆனால் ஒரு பில்கேட்ஸை கூட உருவாக்காது” இந்தியா:—–>மனித சக்தியில் உலக அளவில் இரண்டாம் இடம். பரப்பளவில் ஏழாம் இடம். பொருளாதாரத்தில் பத்தாம் இடம். ஆனால் கல்வியில் வரிசைப்படித்தினால் உலகின் முதல் 200 பல்கலைக்கழகங்களில் ஒன்று கூட இந்தியாவில் இல்லை. ஆம் உண்மை அதுதான். இந்தியாவில் உள்ள 568 பல்கலைக்கழகங்களில் ஒன்று கூட உலகின் தலைசிறந்த 200 பல்கலைக் கழகங்களில் இல்லை.இதன்…

  • | | | |

    இந்தியாவில் முகலாயர்கள் ‍- 1

    16 ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டு வரையிலான‌ ஏறத்தாழ 350 ஆண்டுகள் இந்தியாவில் முகலாயர்களின் ஆட்சிக்காலம். அதுவரை இந்தியாவினை ஆண்டு வந்தவர்கள் ஆப்கானிய‌ வம்சத்தைச் சேர்ந்த சுல்தானியர்கள். சுல்தானியர்களும் இன்றைய இந்திய நிலப்பரப்பு முழுவதையும் ஆளவில்லை. இன்றைய வட இந்திய நிலப்பகுதி, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றை உள்ளடக்கிய ஓர் நிலப்பகுதியினை ஆண்டு வந்தார்கள். அவர்களைத் தோற்கடித்தே முகலாயப் பேரரசினை பாபர் தொடங்கி வைத்தார். மங்கோலிய இன‌ செங்கிஸ்கான் வழி வந்தவர் தைமூர். தைமூர் மங்கோலிய,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.