| |

கொரோனா தோல்வி

Covid-19

கொரோனாவைக் கையாள்வதில் இந்திய அரசு முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது. இத்தோல்விக்கான முழுப்பொறுப்பும் பாரதிய ஜனதா அரசினையே சாரும். தேர்தல் ஆணையத்திற்கும், இந்தியக் கட்சிகளுக்கும் கணிசமான பங்கும் உண்டு.

முதலில் உலக நாடுகளில் முதலாம் கட்ட அலை ஏற்பட்ட போது வெறும் 34 வெளிநாட்டு விமான நிலையங்களைக் கட்டுப்படுத்த முடியாத நாம் 32 லட்சம் சதுர கிலோமீட்டர் கொண்ட நிலப்பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும் என நினைத்தது மகா முட்டாள்தனம். நம் அதிகாரிகள் அப்படித்தான் நினைத்தார்கள். அதுவும் மிகப்பிந்தியே நடவடிக்கையைத் தொடங்கினார்கள். முதல் தோல்வி. தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரிந்த பல நபர்கள், கொரோனா தீவிரமாக இருந்த பல நாடுகளிலிருந்து எளிதாக விமான நிலையத்தில் எந்த வித சோதனையுமின்றி வந்தார்கள். அரசோ தீவிரமாகக் கண்காணிக்கிறோம் என்ற வழக்கமான பல்லவியைப் பாடிக்கொண்டிருந்தது.

நம் பாரதப்பிரதமர் விளம்பரப்படுத்திக் கொள்வதில் காட்டும் அக்கரையில் சிறிதளவேனும் அதன் தீவிரத்தைக் கட்டுப்படுத்துவதில் காட்டியிருக்கலாம். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான விமான சேவைக்கு கூட வந்தே பாரத் மிஷன் எனப் பெயர் வைத்து விளம்பரம் தேடிக்கொண்ட அவலம் தான் நடந்தது. அதுதான் போன ஆட்சிக்காலம் முழுவதுமே பலப்பல பெயர்களில் விளம்பரம் செய்து கொண்டீர்களே? மேக் இன் இந்தியா, கிளீன் இந்தியா, ஸ்மார்ட் இந்தியா என, அது போதாதா?

இரண்டாவது அலையின் வீச்சிற்கு மிக முக்கியமான காரணம் தேர்தல் பரப்புரைகள்தான். மாநிலங்கள் தோறும் தலைவர்கள் பயணம் செய்து மக்களை ஒன்று கூடச் செய்து கொரானா பரவலுக்கு வித்திட்டார்கள். அனைத்து தொலைக்காட்சிகளிலும் கூடிய கூட்டத்தை நாம் பார்க்கத்தான் செய்தோம். முற்றிலும் கொரோனாவைக் கட்டுப்படுத்திவிட்ட சிங்கப்பூர் போன்ற நாடுகளே இன்னும் 8 பேருக்கு அதிகமாகக் கூட விடுவதில்லை. ஆனால் நம் அரசு? வெறுமனே வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு விட்டு தன்னுடைய கையைக் கழுவிக்கொண்டது தேர்தல் ஆணையம். அது பல்லில்லா பாம்பாக மாறி பல காலம் ஆகிவிட்டது. ஓட்டுக்கு காசு எந்தக் கட்சி கொடுக்கிறது என்பது தேர்தல் ஆணையத்திற்குத் தெரியுமா? தெரியாதா? யாரை ஏமாற்றுகிறீர்கள்? சராசரிக் குடிமகனுக்கு தெரிந்த உண்மை அத்தனை அதிகார வல்லமை கொண்ட உங்களுக்குத் தெரியாதா? இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை கட்டுமானங்களில் ஒன்று நீங்கள், அந்தப் பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள். இதன் மறுபக்க உண்மை அதற்கு மேல் அதனால் ஒன்றும் செய்ய முடியாது, செய்ய விடமாட்டார்கள்.

அடுத்தது நம்முடைய ஊடகங்கள். ஊரில் இருக்கும் அடி முட்டாள்களை மட்டுமே செய்தியாளர்களாகவும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாகவும் கொண்ட ஒரு ஊடகத்துறை உலகில் வேறு எந்த ஒரு நாட்டிலாவது இருக்குமா என்பது சந்தேகம்தான். முந்தைய மன்மோகன் சிங் அவர்கள் ஒருமுறை கூறினார் “History will be kinder to me than the Media”. அது நூறு விழுக்காடு உண்மை. நமது ஊடகங்கள் அவற்றின் முகத்தில் (ஒரு சில ஊடகங்களைத் தவிர்த்து) காறி உமிழும் நிலையில்தான் அவர்களின் தரத்தை வைத்திருக்கின்றன. அதில் வரும் செய்தியாளர்களையும், செய்திகளையும் பாருங்கள், எவ்வளவு தரமற்றவையாக‌ இருக்கின்றன‌ என்று. அவர்களுக்கு அவசியமானது என்பது முக்கியமல்ல, எது விற்பனையாகும் என்பதுதான் முக்கியமானது. இன்று கொரோனாவைப் பற்றி பேசுவதால் அவர்களை யோக்கியமாக நினைத்துவிடாதீர்கள், தேர்தல் அன்று வரை கொரோனாவைக் கண்டுகொள்ளாமல் முழுக்க முழுக்க தேர்தல் செய்திகளை மட்டுமே ஒளிபரப்பியவர்கள் இவர்கள். 24 மணி நேர செய்தி சேனல் என்று வைத்துக்கொண்டு இவர்கள் செய்திக்காக பிச்சை எடுத்து அலையும் நிலையினைப் பாருங்கள், இவர்களின் லட்சணம் இதுதான். அதிகம் பேர் பார்க்கிறார்கள் என்றால் போதும் அது எதுவாக இருந்தாலும் ஒளிபரப்புவார்கள்.

அடுத்து நம‌து பிரதமர். பிரசாந்த் கிஷோர் சொல்வது போல நமது பிரதமர் நல்லவை நடந்தால் அதற்கு முழு முதற்காரணம் தானே என்பது போல ஒரு கூட்டத்தினை வைத்து பிம்பத்தை உருவாக்குகிறார். ஏதேனும் குளறுபடிகள் நடந்தால் அடுத்தவரை நோக்கிக் கைகாட்டுகிறார். அல்லது பேச்சு மூச்சு இல்லாமல் இருந்து விடுகிறார். நல்ல பிரதமர். அரசின் செயல்பாடுதான் பல்லிளிக்கிறதே ஒவ்வொறு துறையிலும். ஆட்சியில் கவர்ச்சிகரமான பெயர்கள் வைத்ததோடு சரி மற்றபடி நிர்வாகத்தில் பூஜ்யம். மன்மோகனின் வார்த்தைகளில் மாற்றிக் கூறுவோமேயானால் “History will be cruel to you than than the current Media”

கொரோனாவை இந்திய அரசு கேவலமாகவே கையாள்கிறது. மாநில அரசுகளையே ஓரளவிற்கு நம்ப வேண்டியிருக்கிறது!

Similar Posts

  • |

    மெளனத்தூதன் – வத்ஸலா விஜயகுமார்

    ஜெர்மனியக் கவிதைகளின் அறிமுகமும், ஜெர்மனியக் கவிதைகளின் மொழி பெயர்ப்புமே இந்நூல். வெளியீடு சந்தியா பதிப்பகம். ஆக்கம் வத்ஸலா விஜயகுமார். இப்புத்தகம் இரண்டு பாகங்களால் ஆனது. முதல் பாகம் ஜெர்மனி கவிதைகளின் வரலாறு குறித்தும் அதன் வெவ்வேறு காலத்தைய கவிஞர்கள் குறித்தும் அறிமுகம் செய்கிறது. இரண்டாவது பாகம் அவற்றுள் குறிப்பிடத்தக்க கவிதகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அதனுடன் அக்கவிதைகளின் ஆசிரியர் பற்றிய சிறுகுறிப்பும் தரப்படுகிறது. இரண்டாவது பாகம் கவிதையின் மொழிபெயர்ப்பு ஆதலால் ஆர்வமுடன் வாசிக்க முடிகிறது. ஆனால் முதல் பாகம்…

  • இசையும் பாடலும்

    நம் மனநிலையை மாற்றும் சக்தி இசைக்கும் பாடலுக்கும் எப்போதுமே உண்டு. இசையும் பாடலும் ஆரம்ப காலம் தொட்டே நம்மோடு இணைந்து வருகிறது. முற்றிலும் படிப்பறிவில்லாத காலகட்டத்திலும் கூட நாட்டுப்புற பாடல்களை பாடியபடியே கிராம மக்கள் வேலை செய்ததை இலக்கியங்களில் காணலாம். இன்றும் சில கிராமங்களில் வேலை நேரங்களின் போது வேலையாட்கள் பாடுவதைக் கேட்கலாம். நன்கு உற்று கவனித்தால் அவர்கள் முதியவர்களாக இருப்பார்கள். ஆனால் இசை என்பது உயர்குடி மக்களுக்கு மட்டுமே என்ற நிலையை பிற்கால உயர்குடி மக்கள்…

  • |

    அர்த்தமுள்ள இந்து மதம் – கண்ணதாசன்

    கண்ணதாசன் அவர்களால் எழுதப்பெற்ற பத்து தனித்தனி பாகங்களின் மொத்த தொகுப்பு. தன் அனுபவத்தினைக் கொண்டு அதன் மூலம் இந்து மதத்தினை மனித வாழ்வின் செயல்களுக்கும், விளைவுகளுக்கும் விளக்கம் தருகிறார். ஒருவேளை இப்புத்தகத்தினை ஆரம்ப கால வாசகர்களும், ஆன்மீக வாசகர்களும் பெரிதும் விரும்பலாம். ஆனால் தீவிர இலக்கிய வாசிப்புக் கொண்டவர்கள் சலிப்படையவைக்கும் தட்டையான எழுத்து. சாதரணமாக வயதில் மூத்தவர்கள் கூறும் அறிவுரைகளின் தொகுப்பு எனக்கூறலாம், மற்றபடி இது இந்து மதத்தினை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும் என்றெல்லாம் கிடையாது….

  • |

    Home Deus – Yuval Noah Harari

    This books follows the popular book ‘The Sapiens’ from the same author Yuval Noah Harari. If you have not read the book ‘The Sapiens’ it should be read first. So that it will give better picture on understanding this book. The Sapiens talks on how the homo sapiens evolved as human being in detail. This…

  • |

    ஆரோக்ய நிகேதனம் – தாராசங்கர் பந்த்யோபாத்யாய

    1951 ஆம் ஆண்டில் தாராசங்கர் பந்த்யோபாத்யாய அவர்களால் வங்க மொழியில் எழுதப்பெற்ற நாவல். பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலை தமிழில் த.நா.குமாரசாமி அவர்கள் 1972 ல் மொழிபெயர்த்துள்ளார். இந்திய அரசின் சாகித்திய அகாதெமி மற்றும் மேற்கு வங்க அரசின் ரபீந்திர புரஷ்கார் விருதுகளை வென்ற நாவல். இந்நாவல் ஜீவன் மாஷாய் என்னும் வைத்தியரின் நினைவோட்டத்தின் வாயிலாக சொல்லப்படுகிறது. மூன்று தலைமுறைகளாக ஆயுர்வேத சிகிச்சை செய்துவரும் ஜீவன் மாஷாயின் வாழ்வு மற்றும் ஆயுர்வேத மருத்துவம் ஆங்கில மருத்துவ‌த்தின் வருகையினால்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.