|

FACTFULNESS – Hans Rosling

ஸ்வீடன் நாட்டினைச் சேர்ந்த மருத்துவர் Hans Rosling ஆல் எழுதப்பெற்ற புத்தகம். அவருடைய பணி பல்வேறு நாடுகளில் ஏற்படக்கூடிய நோய்த்தொற்றுக்களை ஆராய்ந்து அதனை ஆரம்பத்திலேயே தடுப்பது மற்றும் மருத்துவ, சுகாதார படிநிலைகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும் நாடுகளில் உலக சுகாதார நிறுவனம் போன்ற நிறுவனங்களின் சார்பாக பணியாற்றுவது. அத்தகைய பணிகளின் போதும் தன்னுடைய மற்ற அனுபவங்களின் வாயிலாகவும் கற்ற, அறிந்த தகவல்களை பல்வேறு அறிஞர்கள் கூடும் நிகழ்வுகளில் எடுத்துரைப்பதினையும் தன்னுடைய பணியாக செய்து வந்தார்.

பெரும்பாலும் நாம் ந‌ம்முடைய மனதின் முன்முடிவின் காரணமாக பல்வேறு விஷயங்களில் இவ்வுலகின் நிலை பற்றி ஒரு எதிர்மறைப்பண்பைக் கொண்டிருப்பதை பல்வேறு ஆய்வுகளின் மூலமும் தான் மேற்கொள்ளும் கருத்துக்களின் மூலமும் தெரிந்து கொள்ளும் ஹான்ஸ் இவ்வுலகம் அவ்வாறு இல்லை, இவ்வுலகம் அனைத்து விஷயங்களிலும் அல்லது பெரும்பாலான விஷயங்களில் நாம் மேம்பட்டுக்கொண்டே வருகிறது என்பதனை தரவுகளின் அடிப்படையில் தன்னுடைய மேடைப்பேச்சுக்களில் தரவுகளுடன் விவரிக்கிறார். தன்னுடைய வாழ்வின் பெரும்பகுதியை அத்தகைய மேடைகளில் செலவழித்த ஹான்ஸ் அதனை நூலாக வெளியட எண்ணம் கொண்டு வெளியிட்டதே இந்நூல். அதற்கு அவருடைய மகன் Ola Rosling – ம், மருமகள் Anna Rosling Ronnlund ம் உதவியிருக்கிறார்கள்.

இந்நூலின் தொடக்கத்தில் இவ்வுலகம் பற்றிய நம்முடைய புரிதலுக்காக 13 கேள்விகளைக் கேட்கிறார். மூன்று விடைகளையும் தருகிறார். நாம் நம்முடைய அறிதலைக்கொண்டு அவற்றில் சரியான ஒன்றைத் தேர்வு செய்ய‌ வேண்டும்.

உதாரணமாக இன்றைய நிலையில் குறைந்த வருமானமுள்ள உலக நாடுகளில் எத்தனை விழுக்காடு பெண்கள் ஆரம்பக்கல்வியை பூர்த்தி செய்கின்றனர்?

அ. 20 விழுக்காடு
ஆ. 40 விழுக்காடு
இ. 60 விழுக்காடு

நீங்கள் ஒருவேளை 20 அல்லது 40 என்று நினைத்தால் அது தவறு. 60 விழுக்காடு என்பதுதான் சரி. அதனால் நாம் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த‌ பொருளாதார வல்லுனர்கள் கூடியிருக்கும் சபைகளிலேயே மிக மிகக் சொற்பமான நபர்களே இதற்கான சரியான பதிலை சொல்லியிருக்கிறார்கள். இத்தனைக்கும் அவர்கள் ஒவ்வொரு நாடுகளிலும் உயர் பதவிகளில் இருக்கக்கூடியவர்கள். அவர்களுக்கு இத்தகைய தகவல்கள் கைக்கெட்டும் தூரத்தில் உண்டு. இருப்பினும் அவர்களுடைய பதில் பல் பத்தாண்டுகளுக்கு முந்தைய தகவல்களைக் கொண்டே இருந்திருக்கிறது. அத்தோடு இதே கேள்வி ஒவ்வொரு நாடுகளைச் சேர்ந்தவர்களிடமும் கேட்கப்பட்டிருக்கிறது. நார்வே, சுவீடன் இரு நாட்டில் மட்டும் 25% பேர் சரியான பதிலைக் கூறியிருக்கிறார்கள். அமெரிக்காவில் சரியான பதிலைக் கூறியவர்கள் 5%. பிரான்ஸில் 4%, ஹங்கேரியில் 2%.

இதுபோல அனைத்துக்கேள்விகளுக்கும் கிடைத்த பதில் அவரை வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது. காரணம் அவையெல்லாம் தவறாக இருப்பதோடல்லாமல் அவையெல்லாம் எதிர்மறையின் பக்கமாக இருந்திருக்கின்றன. நாம் நமக்கு வந்தடையும் எதிர்மறை செய்திகளாலும், நம்முடைய தொன்றுதொட்டு வரும் உள்ளுணர்வுகளினாலும் எதிர்மறையாகவே காணும் கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கின்றோம். இன்றைய தகவல் உலகில் அனைத்து தகவல்களும் முழுமையாகக் கிடைக்கின்றன. ஆகவே நமக்கு வரும் செய்திகளையும், எண்களையும் மட்டும் வைத்துக்கொண்டு நம் உள்ளுணர்வினை செயல்படவிடாமல் ஒட்டுமொத்த தகவல்களையும் பார்த்து அதன் பின்னர் நம் தர்க்க புத்தியை செயல்பட வைப்பதே நலம் பயக்கக்கூடியது நமக்கும் இவ்வுலகிற்கும் என்கிறார் ஹான்ஸ்.

மேலே கூறியது போன்ற பல்வேறு தகவல்களை நம்முடைய முன்முடிவு புத்தியினால் எவ்வாறு அறியாமல் விட்டுவிடுகிறோம், ஒரு அரசின் கொள்கை முடிவு எடுக்கும் நிலையில் இருக்கும் ஒருவர் இது போன்ற நிலையில் இருப்பின் அது அந்நாட்டின் வளர்ச்சியினை எப்படியெல்லாம் பாதிக்கும்? அரசின் திட்ட நிதி தேவையானவற்றிற்குச் செல்லாமல் முக்கியத்துவம் இல்லாத ஒன்றிற்கு செல்லும் வாய்ப்புகள் எப்படியெல்லாம் உருவாகும் போன்றவற்றை இந்நூலில் எடுத்துரைக்கிறார்.

பத்திரிக்கையாளர்கள் வாசிக்க வேண்டும். பத்திரிக்கையாளர் அல்லாதவர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டும்.

Similar Posts

  • |

    மணலின் கதை – மனுஷ்யபுத்திரன்

    மனுஷ்ய புத்திரன் அவர்களால் 2002, 2003 ஆம் ஆண்டுகளின் வெவ்வேறு நாட்களில் எழுதப்பெற்ற 37 கவிதைகளின் தொகுப்பு. 2004 ல் வெளிவந்த நூல். உயிர்மை பதிப்பகம் வெளியீடு. அவற்றுள் என்னைக் கவர்ந்த ஒரு கவிதை ‘இந்தக் காயங்கள்’. இந்தக் காயங்கள்இன்று வெய்யில் நோக்கி திறந்திருக்கின்றன‌நாளை மழை நோக்கி திறந்து கிடக்கும் வெட்ட வெளியில் கிடத்தப்பட்ட‌ஒரு காயம்மருந்திட இயலாததல்ல‌மருந்திடப்படாமல் புறக்கணிக்கப்பட்டதுமல்ல‌ இந்தக் காயங்கள்காயங்களாக இருப்பதற்காகவேகசிந்துகொண்டிருக்கின்றன‌ பிடிவாதமாய் தன்னை மூடிக்கொண்டிருக்கும்ஒரு கருணையின் ஊற்றுக்கண் திறக்க வாசிக்கலாம்.

  • |

    காரல் மார்க்ஸ் – பட்டத்தி மைந்தன்

    2008 ஆம் ஆண்டு வெளிவந்த புத்தகம். கார்ல் மார்க்ஸின் வாழ்க்கை வரலாறு சுருக்கமாக விவரித்துள்ளார்கள். ராமையா பதிப்பகம் வெளியீடு. 1818 ஆம் ஆண்டில் ஜெர்மனியிலுள்ள ட்ரியர் என்னுமிடத்தில் பிறந்தார் மார்க்ஸ். யூத இனத்தைச் சேர்ந்தவர். மார்க்ஸின் தந்தை ஒரு வக்கீல். யூதர்கள் ஜெர்மனியில் அடக்குமுறைகளுக்கு ஆளாகி வந்ததால் யூத மதத்திலிருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறிக்கொண்டார். அவர் மார்க்ஸ் படிக்கும் காலத்தில் தொடர்ச்சியாக கடிதம் எழுதும் வழக்கம் வைத்திருந்தார். மார்க்ஸ் தன் குடும்ப நண்பரின் மகளாக ஜென்னியைக் காதலித்து…

  • |

    ரகுவம்சம் – அ.வெ.சுப்பிரமணியன்

    ராமன் பிறந்த ரகுவம்சத்தின் வரலாறு, சுருக்கமான வடிவில். அ.வெ.சுப்பிரமணியன் அவர்களால் காளிதாசனின் மூலவடிவில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது. எளிய பிழையற்ற மொழிநடை. திலீபனின் தொடங்கி, ரகு, அஜன், தசரதன் வழியாக ராமனின் வரலாறைக் கூறும் நூல். சூர்ய குலம் எனப்படும் ரகுவம்ச வரலாறை அறிந்துகொள்ள ஒரு தொடக்கமாக இந்நூலை வாசிக்கலாம். ஒட்டுமொத்த அரசகுலத்தின் தோற்றம் கிடைக்கும். ரகுவம்ச மன்னர்களின் பெருமையைப் பற்றிக் கூறும் நூல். ஆதலால் ஒரு வரலாற்று நூல்போலக் கொள்ள இயலாது. ஆழ்ந்த மத நம்பிக்கையாளர்களுக்கான ஆரம்பப்…

  • |

    வாசிப்பில்

    தற்போது இந்த மூன்று புத்தகங்களையும் ஒரு சேர வாசித்து வருகிறேன். 1. இந்துத்துவத்தின் பன்முகங்கள் 2. Adolf Hitler: A Life From Beginning to End 3. Pride and Prejudice மூன்று விதமான புத்தகங்கள் ஒருசேர…

  • இன்றைய காந்தி ‍- ஜெயமோகன்

    மகாத்மா காந்தி அவர்களைப் பற்றி உண்மையாக அறியத் தொடங்க விரும்புபவர்களுக்கான சிறந்த தொடக்க நூல். ஜெயமோகன் அவர்களால் அவரது இணைய தளத்தில் தொடர்ச்சியாக வெளிவந்த கேள்வி பதில் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். அஹிம்சைப் போராட்டம் எவ்வளவு தூரம் சாத்தியமானது? இந்திய நிலப்பகுதி அல்லாமல் பிற தேசங்களுக்கு இது சாத்தியமா? காந்தியை ஏன் மகாத்மா என அழைக்க வேண்டும்? காந்தி இந்திய சுதந்திரத்தினை தனது அஹிம்சைப்போராட்டத்தினால் மேலும் தாமதிப்படுத்தினார். இல்லையேல் இன்னும் முன்னதாகவே நம‌க்கு சுதந்திரம் கிடைத்திருக்கும் என்ற…

  • |

    இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு பாகம் 1

    ராமச்சந்திர குஹாவால் எழுதப்பட்டது. ஆங்கிலத்தில் எழுதப்பெற்ற நூல் ஆர்.பி.சாரதியால் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிறந்த மொழியாக்கம். புத்தகம் இரு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. சரி, ஏற்கனவே இந்திய வரலாற்றினைப்பற்றி ஏராளமான புத்தகங்கள் வெளிவந்துள்ளனவே, அவற்றில் இல்லாத அப்படி என்ன சிறப்பு இந்தப்புத்தகத்திற்கு? இரண்டு முக்கியமான காரணங்கள். முதலாவது, இதுவரையான இந்திய வரலாற்று நூல்கள் இந்தியப் போராட்ட நிகழ்வுகளை அதிகமாக விவரித்து சுதந்திரத்தோடு நின்று விடும், அல்ல‌து இந்திய மன்னர்களது காலங்களில் அதீத கவனம் செலுத்துவதாய் இருக்கும். இந்த நூல்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.