|

FACTFULNESS – Hans Rosling

ஸ்வீடன் நாட்டினைச் சேர்ந்த மருத்துவர் Hans Rosling ஆல் எழுதப்பெற்ற புத்தகம். அவருடைய பணி பல்வேறு நாடுகளில் ஏற்படக்கூடிய நோய்த்தொற்றுக்களை ஆராய்ந்து அதனை ஆரம்பத்திலேயே தடுப்பது மற்றும் மருத்துவ, சுகாதார படிநிலைகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும் நாடுகளில் உலக சுகாதார நிறுவனம் போன்ற நிறுவனங்களின் சார்பாக பணியாற்றுவது. அத்தகைய பணிகளின் போதும் தன்னுடைய மற்ற அனுபவங்களின் வாயிலாகவும் கற்ற, அறிந்த தகவல்களை பல்வேறு அறிஞர்கள் கூடும் நிகழ்வுகளில் எடுத்துரைப்பதினையும் தன்னுடைய பணியாக செய்து வந்தார்.

பெரும்பாலும் நாம் ந‌ம்முடைய மனதின் முன்முடிவின் காரணமாக பல்வேறு விஷயங்களில் இவ்வுலகின் நிலை பற்றி ஒரு எதிர்மறைப்பண்பைக் கொண்டிருப்பதை பல்வேறு ஆய்வுகளின் மூலமும் தான் மேற்கொள்ளும் கருத்துக்களின் மூலமும் தெரிந்து கொள்ளும் ஹான்ஸ் இவ்வுலகம் அவ்வாறு இல்லை, இவ்வுலகம் அனைத்து விஷயங்களிலும் அல்லது பெரும்பாலான விஷயங்களில் நாம் மேம்பட்டுக்கொண்டே வருகிறது என்பதனை தரவுகளின் அடிப்படையில் தன்னுடைய மேடைப்பேச்சுக்களில் தரவுகளுடன் விவரிக்கிறார். தன்னுடைய வாழ்வின் பெரும்பகுதியை அத்தகைய மேடைகளில் செலவழித்த ஹான்ஸ் அதனை நூலாக வெளியட எண்ணம் கொண்டு வெளியிட்டதே இந்நூல். அதற்கு அவருடைய மகன் Ola Rosling – ம், மருமகள் Anna Rosling Ronnlund ம் உதவியிருக்கிறார்கள்.

இந்நூலின் தொடக்கத்தில் இவ்வுலகம் பற்றிய நம்முடைய புரிதலுக்காக 13 கேள்விகளைக் கேட்கிறார். மூன்று விடைகளையும் தருகிறார். நாம் நம்முடைய அறிதலைக்கொண்டு அவற்றில் சரியான ஒன்றைத் தேர்வு செய்ய‌ வேண்டும்.

உதாரணமாக இன்றைய நிலையில் குறைந்த வருமானமுள்ள உலக நாடுகளில் எத்தனை விழுக்காடு பெண்கள் ஆரம்பக்கல்வியை பூர்த்தி செய்கின்றனர்?

அ. 20 விழுக்காடு
ஆ. 40 விழுக்காடு
இ. 60 விழுக்காடு

நீங்கள் ஒருவேளை 20 அல்லது 40 என்று நினைத்தால் அது தவறு. 60 விழுக்காடு என்பதுதான் சரி. அதனால் நாம் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த‌ பொருளாதார வல்லுனர்கள் கூடியிருக்கும் சபைகளிலேயே மிக மிகக் சொற்பமான நபர்களே இதற்கான சரியான பதிலை சொல்லியிருக்கிறார்கள். இத்தனைக்கும் அவர்கள் ஒவ்வொரு நாடுகளிலும் உயர் பதவிகளில் இருக்கக்கூடியவர்கள். அவர்களுக்கு இத்தகைய தகவல்கள் கைக்கெட்டும் தூரத்தில் உண்டு. இருப்பினும் அவர்களுடைய பதில் பல் பத்தாண்டுகளுக்கு முந்தைய தகவல்களைக் கொண்டே இருந்திருக்கிறது. அத்தோடு இதே கேள்வி ஒவ்வொரு நாடுகளைச் சேர்ந்தவர்களிடமும் கேட்கப்பட்டிருக்கிறது. நார்வே, சுவீடன் இரு நாட்டில் மட்டும் 25% பேர் சரியான பதிலைக் கூறியிருக்கிறார்கள். அமெரிக்காவில் சரியான பதிலைக் கூறியவர்கள் 5%. பிரான்ஸில் 4%, ஹங்கேரியில் 2%.

இதுபோல அனைத்துக்கேள்விகளுக்கும் கிடைத்த பதில் அவரை வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது. காரணம் அவையெல்லாம் தவறாக இருப்பதோடல்லாமல் அவையெல்லாம் எதிர்மறையின் பக்கமாக இருந்திருக்கின்றன. நாம் நமக்கு வந்தடையும் எதிர்மறை செய்திகளாலும், நம்முடைய தொன்றுதொட்டு வரும் உள்ளுணர்வுகளினாலும் எதிர்மறையாகவே காணும் கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கின்றோம். இன்றைய தகவல் உலகில் அனைத்து தகவல்களும் முழுமையாகக் கிடைக்கின்றன. ஆகவே நமக்கு வரும் செய்திகளையும், எண்களையும் மட்டும் வைத்துக்கொண்டு நம் உள்ளுணர்வினை செயல்படவிடாமல் ஒட்டுமொத்த தகவல்களையும் பார்த்து அதன் பின்னர் நம் தர்க்க புத்தியை செயல்பட வைப்பதே நலம் பயக்கக்கூடியது நமக்கும் இவ்வுலகிற்கும் என்கிறார் ஹான்ஸ்.

மேலே கூறியது போன்ற பல்வேறு தகவல்களை நம்முடைய முன்முடிவு புத்தியினால் எவ்வாறு அறியாமல் விட்டுவிடுகிறோம், ஒரு அரசின் கொள்கை முடிவு எடுக்கும் நிலையில் இருக்கும் ஒருவர் இது போன்ற நிலையில் இருப்பின் அது அந்நாட்டின் வளர்ச்சியினை எப்படியெல்லாம் பாதிக்கும்? அரசின் திட்ட நிதி தேவையானவற்றிற்குச் செல்லாமல் முக்கியத்துவம் இல்லாத ஒன்றிற்கு செல்லும் வாய்ப்புகள் எப்படியெல்லாம் உருவாகும் போன்றவற்றை இந்நூலில் எடுத்துரைக்கிறார்.

பத்திரிக்கையாளர்கள் வாசிக்க வேண்டும். பத்திரிக்கையாளர் அல்லாதவர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டும்.

Similar Posts

  • Adolf Hitler: A Life From Beginning to End

    ஹிட்லரின் இளமைக்காலம், முதலாம் உலகப்போரில் அவருடைய பங்கு, இரண்டாம் உலகப்போர் மற்றும் அதன் தொடக்கத்திற்கான‌ காரணங்கள், முடிவு போன்ற நிகழ்வுகளின் தொகுப்பே இந்நூல். ஹிட்லரின் மனதில் சிறுவயதிலேயே எப்படி யூதர்கள் மீதான வெறுப்பு உண்டானது என்பது ஆச்சரியமான ஒன்று. முதலாம் உலகப்போரின் போது இருந்த மற்ற ஜெர்மானியக் கட்சிகள் யூதர்களே ஜெர்மனியின் தோல்விக்கும், ஜெர்மனியின் வளர்ச்சிக்குத் தடையெனவும் முழங்கினர். அது அவர்களின் கட்சி வளர்ச்சிக்கு அவசியமான ஒன்றாக இருந்தது. அது ஹிட்லரின் மனதில் ஆழப்பதிந்ததன் தாக்கத்தினை பின்னாளில்…

  • மகாபாரதம்:அறத்தின் குரல் – நா.பார்த்தசாரதி

    நா.பார்த்தசாரதி அவர்களால் 1964 ஆம் ஆண்டு தமிழில் எழுதப்பெற்ற காவியம். அரைகுறையாகத் தெரிந்த மகாபாரதத்தினை முழுமையாகத் தெரிந்து கொள்ள விரும்பி வாசித்த நூல். வாசிப்பின் முடிவில் புலப்படுவதென்னவோ முழு மகாபாரதத்தையும் புரிந்து கொள்வதென்பது இயலாத ஒன்று என்பதையே.  எந்த ஒரு மகாபாரதப் பதிப்பினையும் எழுதப்பெற்ற ஆசிரியரின் பார்வையில் மகாபாரதம் எனப் பொருள் கொள்வதே சரி எனலாம். அத்துணை பெரிய காவியம். எண்ணிலடங்கா கதாபாத்திரங்கள். படிக்க படிக்க திகட்டாத, தீராத காவியம். இந்து மரபின் உயரிய கருத்தான அறத்தை…

  • |

    புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம்

    1960 களில் ப.சிங்காரம் அவர்களால் எழுதப்பெற்ற நாவல். இந்தோனேசியாவில் வாழும் தமிழ் மக்களுடைய வாழ்வியலே கதையின் கரு. அத்தோடு கதை மாந்தர்களின் நினைவின் வழியாக இந்திய கிராமங்களினுடைய வாழ்வியலும் விவரிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் சிவகங்கை மற்றும் அதன் சுற்று வட்டாரக் கிரானங்கள். நாவல் பாண்டியன் என்னும் இளைஞனைச் சுற்றியே நகருகின்றது. பாண்டியன் பிழைப்பிற்காக இந்தோனேசியா சென்று, பின்னர் இந்தோனேசியாவிலிருந்து மலேயாவிற்கு செல்வது, அங்கே நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்வது என கதை நீள்கிறது. நாவல் நடைபெறும் காலம்…

  • |

    THE ANTHROPOCENE REVIEWED – JOHN GREEN (புத்தகம் – 2)

    John Green என்பவரால் எழுதப்பெற்ற புத்தகம். வலையொளியில் podcast ஆக வெளிவந்த ஒலித் தொகுப்புகள் புத்தமாக வெளிவந்துள்ளது. இப்புத்தகத்தின் தலைப்பு THE ANTHROPOCENE REVIEWED. அது நிகழ் யுகத்தினைக் குறிக்கக்கூடிய ஒரு சொல். ஏறத்தாழ மனிதனின் செயல்பாடுகள் பூமியின் மீது தாக்கத்தை ஏற்படுத்தத்தொடங்கிய காலத்திலிருந்து தொடங்கும் காலம் அது. இக்காலக்கட்டத்தில் இப்பூமியில் உள்ள, மனிதனால் உருவாக்கப்பட்ட பலதரப்பட்டவற்றைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சினிமா,உணவகம்,இடம் என‌ எல்லாவற்றையும் நட்சத்திர குறியீட்டு அளவினால் அளவிடும் காலகட்டதிற்கு நாம் வந்துவிட்டதால்,…

  • |

    ஆசானுக்கு

    தனி மனித வாழ்வில் ஒழுக்கமாய் வாழும், வாழ நினைக்கும் நாமெல்லாம் வெறுமனே பார்த்துக்கொண்டே செல்லவேண்டியதுதானா? இல்லை அவர்கள் நம் பிரதிபலிப்புகளே (நீங்கள் சொன்னது) என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதானா?

  • | |

    பேரும் புகழும் – எசு.எசு.அருணகிரிநாதர்

    எசு.எசு.அருணகிரி நாதர் என்பவரால் 2007 ல் எழுதப்பெற்ற அறிவுரை நூல். பெரும்பாலும் வெளிப்படையான அறிவுரைகளின் தொகுப்பு. ஆசிரியரைப்பற்றி எனக்கு தெரியவில்லை. ஆனால் தன்னுடைய வயதான காலகட்டத்தில் எழுதியிருப்பதாகவே நூல் அமைப்பு உள்ளது. பொறாமை, அன்பு,காமம் போன்ற பல்வேறு தலைப்புகளில் மனிதர்களுக்கு அறிவுறை கூறுகின்றார். பெரும்பாலான அறிவுரைகளில் ஓ மனிதனே! என ஒட்டுமொத்த மனிதகுலம் நோக்கி தன்னுடைய அனுபவத்தை அறிவுரையாகத் தருகிறார். இதனை நாம் வயது முதிர்ந்த பல்வேறு பெரியவர்களிடம் கேட்கலாம். அப்பெரியவர்களின் சொற்கள் நூலாகியிருக்கிறது. ஒட்டுமொத்தமும் வெளிப்படையான…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.