அதிக பணம் அச்சடித்தால் என்ன?

inr_currencyபொருளாதாரம் பற்றி அறியத்துவங்கிய காலத்தின் ஆரம்பகாலக் கேள்விகளுள் ஒன்று. இந்தக் கேள்வியோடிருப்பவர் நீங்களென்றால் உங்களுக்கே இந்தப் பதிவு.

இந்தியாவின் கடன் தொகை பல லட்சம் கோடிகளில். ரூபாய் மதிப்பு சரிவு. இதைச் சரிசெய்ய அதிக பணம் அச்சடித்தால் என்ன? அடிப்படைக்கேள்வி.

அடிக்கலாம். என்ன நடக்கும்? அரசாங்கம் அதிக பணம் அச்சடிக்கும். அதை புழக்கத்தில் விடும். புழக்கத்தில் விட வேண்டுமென்றால் அரசு திட்டங்களுக்காக செலவிடலாம், அரசு ஊழியர்களுக்கு சம்பளமாக தரலாம் அல்லது மக்களுக்கு  மணியார்டர் செய்யலாம். எப்படியோ மக்களிடம் சேர்ந்துவிடும். நினைவில் கொள்ளுங்கள். அரசு திடீரென்று பணத்தை அச்சடித்திருக்கிறது. ஆனால உற்பத்தி எப்போதும்போல்தான் இருக்கிறது.

 சரி பணத்தை புழக்கத்தில் விட்டாயிற்று. அடுத்தென்ன நடக்கும்? ஒட்டு மொத்த மக்களிடம் முன்பு 50000 ரூபாய் இருப்பதாக வைத்துக்கொள்வோம். இப்போது அரசு ஒரு 50000 ரூபாய் அச்சடிப்பதாகவும் வைத்துக்கொள்வோம். புழக்கத்தில் விட்டபின் மக்களிடம் மொத்தம் 1 லட்சம் ரூபாய் இருக்கும்.

மக்கள் முன்பு 50 ஆயிரம் ரூபாய் இருந்தபோது வாங்க முயற்சித்த பொருள்களை இப்போது 1 லட்சம் ரூபாயைக்கொண்டு வாங்க முயற்சிப்பர். பொருள்களின் விலை தானாக உயரும். ஏனென்றால் பொருள்களின் உற்பத்தி திடீரென்று உயரவில்லை. ஆக‌ முன்பு 50 ரூபாய் கொடுத்து வாங்கிய ஒரு பொருளை இப்பொழுது 100 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். 

இப்படியாக‌ பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்துவிடும். முன்னைய 50 ரூபாயின் மதிப்பை இப்பழுதுள்ள 100 ரூபாயால் தான் அடைய முடியும். 

மேலும் நாம் இறக்குமதி செய்த பொருளுக்கு கொடுக்க வேண்டிய தொகையும் அதிகரித்திருக்கும். ஏனென்றால் மேற்கூறிய தகவல்தான், 50 ரூபாய் கொடுக்க வேண்டிய ஒருவருக்கு இனி 100 ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கும். ஏனென்றால் முந்தைய 50 ரூபாயின் மதிப்பும், இப்போதைய 100 ரூபாயின் மதிப்பும் சமம்.

அதனால்தான் பணமதிப்பு வீழ்ச்சி ஏற்றுமதிக்கு இலாபமெனவும், இறக்குமதிக்கு நட்டமெனவும் கூறுகின்றனர்.

Similar Posts

  • கழுதையும் உருளைக்கிழங்கும்

    ஒரு சமயம் பெர்னாட்ஷா ஒரு தட்டு நிறைய அவித்த உருளைக்கிழங்குகளை வைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.அப்போது அவருடைய நண்பர் ஒருவர் அவரைப் பார்க்க வந்தார். பெர்னாட்ஷா அவரை வரவேற்று “வாருங்கள்! உருளைக்கிழங்கு சாப்பிடுங்கள்” என்றார்.அதற்கு நண்பர் “உருளைக்கிழங்குகளா? நோ! நோ! எனக்கு அறவே பிடிக்காது. அதை எப்படித்தான் ரசித்து ருசித்து சாப்பிடுகிறீர்களோ தெரியவில்லை?” என்றார். பெர்னாட்ஷா சிரித்தபடி ஒரு உருளைக்கிழங்கை எடுத்தார். அப்போது அது தவறி கீழே விழுந்து தோட்டத்தின் பக்கம் உருண்டு ஓடியது.அப்போது அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஓர்…

  • |

    யானை வேட்டை

    ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு யானை தந்தத்திற்காக கொல்லப்படுவதை விவரிக்கும் இந்த ஆவணப்படம் இன்றைய நிலையில் மிக முக்கியமானது. மேலதிக தகவல்களுக்கு, http://www.lastdaysofivory.com/

  • உலகத்தொழிலாளர்களே! (ஆசானிடமிருந்து)

    உலகத்தொழிலாளர்களே என்ற தலைப்பில் மே தினத்தினையொட்டி ஆசான் 2011 ல் எழுதிய கட்டுரை. எத்துனை அடர்த்தியான கட்டுரை. அவர் ஆசானாக இருப்பதில் வியப்பேதுமில்லை. நன்றி: ஜெயமோகன் http://www.jeyamohan.in/16732#.VUbd7_mqqko மே மாதம் ஒன்றாம் தேதி, ஒலிபரப்புவதற்காக ஒரு பண்பலை வானொலியில் இருந்து தொலைபேசிப் பேட்டி எடுத்தார்கள். ஓரிரு சொற்கள், அதில் பாட்டுகளில் ஊடாக ஒலிக்கும் என நினைக்கிறேன்! அப்போது மனதில் பட்டதைச் சொன்னாலும் அதன்பின் அச்சிந்தனைகளை தொகுத்துக் கொள்ளலாம் என்று தோன்றியது. இன்று உழைப்பாளிகளின் நிலைமை எப்படி இருக்கிறது,…

  • தமிழ் மலாய் சொல் அரங்கம்

    மலேசிய ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் க.கந்தசாமி அவர்களால் எழுதப்பெற்றுள்ள நூல். மலாய் மொழியில் வழங்கப்படும் தமிழ்ச் சொற்களைப் பற்றிய ஆய்வு நூல் இது. மொத்தம் 164 தமிழ்சொற்கள் நேரடியாகவும், 500 க்கும் மேலான‌ சொற்கள் 5 முதல் 10 விழுக்காடு திரிதலோடு மலாய் மொழியில் இன்றும் நடைமுறையில் இருப்பதை விளக்கியிருக்கின்றார். அதற்காகவே வணக்கங்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்னே வணிகத்தின் பொருட்டு கடல் கடந்து சென்ற தமிழர்களால் மலாய் மொழியின் இயல்பிலே கலந்துவிட்ட பல வார்த்தைகளுள்…

  • முதல்வருக்கு ஒரு கடிதம்

    மதிப்பிற்குறிய தமிழக முதல்வர் அவர்களுக்கு இவன் புதிய தொழில்நுட்பங்களையும், மென்பொருட்களையும் கற்றுக்கொள்ள விழையும் தமிழன். தமிழின்பால் கொண்ட அன்பால் தன்னால் முடிந்தவரை தொழில்நுட்ப நூல்களையும், மென்பொருள்களையும் தமிழில் மொழி மாற்றம் செய்ய விழைபவன். சிங்கப்பூரிலும் சரி, உலகின் மற்ற நாடுகளிலும் சரி மிகப்பெரிய நிறுவனங்கள் அனைத்திலும் தமிழர்கள் இருக்கிறார்கள் என்பது தாங்கள் அறிந்ததே. அதோடு உலகம் சுருங்கி வருவதன் விளைவாக இன்று அனைத்து தொழில்நுட்பங்களும், மென்பொருள்களும் அனைத்து மொழிகளையும் தாங்கி வருகின்றன. உதாரணமாக IBM போன்ற பெரிய…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.