அதிக பணம் அச்சடித்தால் என்ன?

inr_currencyபொருளாதாரம் பற்றி அறியத்துவங்கிய காலத்தின் ஆரம்பகாலக் கேள்விகளுள் ஒன்று. இந்தக் கேள்வியோடிருப்பவர் நீங்களென்றால் உங்களுக்கே இந்தப் பதிவு.

இந்தியாவின் கடன் தொகை பல லட்சம் கோடிகளில். ரூபாய் மதிப்பு சரிவு. இதைச் சரிசெய்ய அதிக பணம் அச்சடித்தால் என்ன? அடிப்படைக்கேள்வி.

அடிக்கலாம். என்ன நடக்கும்? அரசாங்கம் அதிக பணம் அச்சடிக்கும். அதை புழக்கத்தில் விடும். புழக்கத்தில் விட வேண்டுமென்றால் அரசு திட்டங்களுக்காக செலவிடலாம், அரசு ஊழியர்களுக்கு சம்பளமாக தரலாம் அல்லது மக்களுக்கு  மணியார்டர் செய்யலாம். எப்படியோ மக்களிடம் சேர்ந்துவிடும். நினைவில் கொள்ளுங்கள். அரசு திடீரென்று பணத்தை அச்சடித்திருக்கிறது. ஆனால உற்பத்தி எப்போதும்போல்தான் இருக்கிறது.

 சரி பணத்தை புழக்கத்தில் விட்டாயிற்று. அடுத்தென்ன நடக்கும்? ஒட்டு மொத்த மக்களிடம் முன்பு 50000 ரூபாய் இருப்பதாக வைத்துக்கொள்வோம். இப்போது அரசு ஒரு 50000 ரூபாய் அச்சடிப்பதாகவும் வைத்துக்கொள்வோம். புழக்கத்தில் விட்டபின் மக்களிடம் மொத்தம் 1 லட்சம் ரூபாய் இருக்கும்.

மக்கள் முன்பு 50 ஆயிரம் ரூபாய் இருந்தபோது வாங்க முயற்சித்த பொருள்களை இப்போது 1 லட்சம் ரூபாயைக்கொண்டு வாங்க முயற்சிப்பர். பொருள்களின் விலை தானாக உயரும். ஏனென்றால் பொருள்களின் உற்பத்தி திடீரென்று உயரவில்லை. ஆக‌ முன்பு 50 ரூபாய் கொடுத்து வாங்கிய ஒரு பொருளை இப்பொழுது 100 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். 

இப்படியாக‌ பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்துவிடும். முன்னைய 50 ரூபாயின் மதிப்பை இப்பழுதுள்ள 100 ரூபாயால் தான் அடைய முடியும். 

மேலும் நாம் இறக்குமதி செய்த பொருளுக்கு கொடுக்க வேண்டிய தொகையும் அதிகரித்திருக்கும். ஏனென்றால் மேற்கூறிய தகவல்தான், 50 ரூபாய் கொடுக்க வேண்டிய ஒருவருக்கு இனி 100 ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கும். ஏனென்றால் முந்தைய 50 ரூபாயின் மதிப்பும், இப்போதைய 100 ரூபாயின் மதிப்பும் சமம்.

அதனால்தான் பணமதிப்பு வீழ்ச்சி ஏற்றுமதிக்கு இலாபமெனவும், இறக்குமதிக்கு நட்டமெனவும் கூறுகின்றனர்.

Similar Posts

  • இந்தியக் கண்டுபிடிப்புகள்

    கடந்த நூறாண்டுகளில் உலகில் கண்டுபிடிக்கப்பட்ட எத்தனை தொழில்நுட்பங்கள் இந்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது? இந்தக் கேள்விக்கான விடை பெரும்பாலும் பூஜ்யமே. ஒரு சில விதி விலக்குகள் இருக்கலாம். ஆனால் அதன் விகிதாச்சாரம் ஒட்டுமொத்தமாக பார்க்கையில் புறந்தள்ளக்கூடியதே. சரி 700 கோடி மக்கள் தொகை கொண்ட உலகில் நாம் மட்டுமே 120 கோடி. சராசரியாக 6 விழுக்காடு உலக மக்கள் இந்தியர்கள். ஆனால் கண்டுபிடிப்புகள்? ஏன் இந்த நிலை? உலகின் தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் இந்தியர்கள் இருக்கிறார்கள். ஆனால் தலைசிறந்த தொழில்நுட்ப…

  • தொடர்பெனும் சிக்கல்

    மனித குலத்தின் கடந்த கால வரலாற்றினை ஓரளவிற்கு வாசித்தால் நாம் ஒரு மிகப்பெரிய‌ மாற்றத்தினை உணரலாம். முன் காலங்களில் மிகப்பெரும் விஷயமாக இருந்த ஒன்று இன்று முற்றிலும் மாறிவிட்டிருக்கிறது. அது தொடர்பு. பழைய காலங்களில் ஒரு நாட்டிலிருந்து புதியதோர் நாட்டிற்குச் செல்வதென்பது மிகப்பெரிய‌ செயல்பாடாக இருந்திருக்கிறது, ஆறு மாத காலப்பயணம், 1 வருடப்பயணம் ஏன் திரும்பி வருவதென்பதே சாத்தியமில்லாத பயணம் என . ஆனால் இன்று ஒட்டுமொத்த உலகத்தினையும் சில மணி நேரங்களில் கடந்துவிட முடியும். காரணம்…

  • அதென்ன நடப்பு கணக்கு பற்றாக்குறை?

    சமீபத்திய நாட்களில் ஊடகத்தின் உச்சத்தை தொட்ட செய்தி இதுதான். “அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி” இதற்கு நமது அரசு கூறும் காரணம்,நடப்புக் கணக்குப் பற்றாக்குறையும், அளவுக்கதிகமான தங்க இறக்குமதியும் என்று.அதென்ன நடப்பு கணக்கு பற்றாக்குறை(Current Account Deficit)? அது எப்படி இந்திய ரூபாயின் மதிப்பை நிர்ணயம் செய்கிறது? கீழே படியுங்கள், விளங்கும்.

  • குப்பை தேசம்

    இந்தியாவேதான். 1990 வரை கிராம நகர வாழ்க்கை முறைகளுக்கான இடைவெளி மிக அதிகம். அதனால் நகர மக்களை அடையக்கூடிய ஒரு வசதியோ, தொழில்நுட்பமோ கிராம மக்களை அடைய ஆண்டுகள் பிடிக்கும். ஆனால் பின் வந்த ஆண்டுகளில் நிலைமை அவ்வாறாக இல்லை. ஒரு வசதி, ஒரு தொழில்நுட்பம் நகர மக்களை வந்தடையும் அதே வேகத்தில் கிராம மக்களையும் வந்தடைகின்றது.

  • உன்னதத்தின் பக்கம் ஒரு அங்குலம்

    ஒரு அரசு அதனுடைய பெரும்பான்மை மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமா என்று கேட்டால் அதற்கான பதிலாக நம்மில் பெரும்பாலானோர் மனதில் உதிப்பது ஆம் என்பதுதான். ஏனென்றால் இன்றைய நிலையில் பெரும்பாலான ஜனநாயக நாடுகளில் ஒரு அரசு என்பது அதன் மக்களாலேயே தேர்வு செய்யப்படுகிறது. அதனால் பெரும்பான்மை மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவது ஒரு அரசின் கடமை என நினைக்கலாம். ஆனால்,எப்பொழுதும் பெரும்பான்மையின் விருப்பத்தினை மட்டும் நடைமுறைப்படுத்தும் ஒரு அரசு அதன் வளர்ச்சியின் சாத்தியத்தை இழக்கிறது. அச்சமூகத்திற்கு தீங்கினையே இழைக்கிறது….

  • |

    யானை வேட்டை

    ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு யானை தந்தத்திற்காக கொல்லப்படுவதை விவரிக்கும் இந்த ஆவணப்படம் இன்றைய நிலையில் மிக முக்கியமானது. மேலதிக தகவல்களுக்கு, http://www.lastdaysofivory.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.