Who is a Common Man?

cmanநம‌து சமூகத்தின் இன்றைய அடுக்கில் இந்தச் சொற்றொடர் பலரிடமிருந்து வெளிப்படக்காணலாம்.

“நான் மற்றவரைப்போலல்ல”

இதன் சாரம்சம் என்பது. “நான் எண்ணத்திலும் சிந்தனையிலும் அறிவிலும்  ஒரு சாதாரண வெகுஜன பிரதிநிதி சிந்திப்பதைக்காட்டிலும் உயர்வாக சிந்திப்பவன்”. இதை புறவயமாக மறுத்தாலும் அதுதான் ஆழ்மன உண்மை.

சரி. அந்தச் சராசரி மனிதன் யார்? அவனுடைய செயல்பாடுகள் எத்தகையவை? எல்லோரும் தன்னை சராசரியிலிருந்து விடுபட்ட ஒன்றாகக் கருதினால் உண்மையில் அந்த சராசரி மனிதன் என்பவன் யார்? எங்கிருக்கிறான்?

உண்மையாதெனின் “நான் மற்றவரைப் போலில்லை” எனக் கூறும் ஒவ்வொருவருமே இன்றைய சராசரி மனிதன்தான். இந்த வசனம் நாற்பதாண்டுகளுக்கு முன்னால் அன்றைய மாற்றுச் சிந்தனையாளர்களால் மொழியப்பட்ட ஒன்று. இன்று அதனை நகல் எடுக்கும் ஒருவன் எப்படி மாற்றுச் சிந்தனையாளனாக இருக்க முடியும்?

ஆம், அன்றைய சராசரி மனிதனுக்கான வரையறை இன்று இல்லை. மாற்றங்கள் பல வந்துவிட்டன. அன்றைய காலக்கட்டத்தில் கருத்து தெரிவிக்கும் ஒருவரே பொது நீரோட்டத்திலிருந்து விலகியவராக இருப்பார். பொது சராசரி மனிதன் என்பவன் இந்தக் கருத்துக்களை கவனிப்பவனாகவும், அல்லது அதைப்பற்றியே அறியாதவனாகவும் இருப்பான்.

ஆனால் இன்று அவ்வாறு இல்லை. ஒருவன் கருத்து தெரிவிப்பதற்கான குறைந்தபட்ச தகவல்களை ஊடகங்கள் அளித்துவிடுகின்றன. சிரத்தை எடுத்து தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. ஒருவேளை எந்த செய்தியையும் படிக்காமல் இருந்தால் கூட முக்கிய நிகழ்வுகள் எப்படியாவது நண்பர்கள் வழியாகவோ ஃபேஸ்புக் போன்ற ஊடகங்கள் வழியாகவோ நம்மை வந்தடைந்துவிடும்.

நாம் செய்வதெல்லாம் அறிந்த தகவ‌ல்களைக் கொண்டு வாந்தி எடுப்பது மட்டுமே. கருத்து தெரிவிக்கும் முன்னோ, விவாதிக்கும் முன்னோ அது  தொடர்பாக எந்த ஆய்வும் செய்திருக்க மாட்டோம், அல்லது அதைப் பற்றி முழுமையாகப் படித்திருக்க மாட்டோம். ஆனால் பங்கேற்போம். 

ஏன் மூன்று பத்திக்குமேல் எந்த ஒரு கட்டுரையும் வாசிக்கும் திராணி கூட‌ இருக்காது. அங்கங்கே நுனிப்புல் மேய்ந்து விட்டு கருத்து தெரிவிக்கும் நாம் அனைவருமே சாதாரண மனிதன் தான். தலைப்புச் செய்தியை மட்டுமே விவாதிப்பவரெல்லாரும் சாதாரண மனிதன் தான். ஏனென்றால் அத‌னைப் பற்றி மட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாக நமக்குத் தகவல் கிடைக்கிறது. 

நாம் எதை விவாதிக்க வேண்டுமென்பதை ஊடகங்கள் தீர்மானிக்குமென்றால் நாம் சாதாரன மனிதன் தான். மாறுபட்ட சிந்தனையாளராக நம்மை நினைக்க வேண்டியதில்லை. இன்று நம்மை வந்தடையும் தகவல்களை வைத்து கருத்து தெரிவிக்கும் இந்த செயலை போன தலைமுறையிலேயே தேடிப்போய் அறிந்து தெரிவித்துவிட்டார்கள். அவர்கள்தான் சிந்தனையாளர்கள்.

அப்படியானால் இன்றைய மாற்றுச் சிந்தனையாளர்கள் யார்? அவர்களின் செயல்பாடு எப்படிப்பட்டது?

இதுதான் என வறையறுக்க முடியாதென்றாலும், அவர்களின் நிலை கண்டிப்பாக இதற்கு கீழ் இல்லை என சில செயல்பாடுகளைக் கூறலாம்.

1. மேற்கூறியது போல தன்னை வந்தடையும் தகவல்களைக் கொண்டு விவாதமோ, கருத்து வெளியிடுதலோ செய்ய மாட்டார்கள்.

2. வேண்டுமானால் அவர்கள் மேலும் அறிந்து கொள்ள அல்லது ஆய்வு செய்ய அவர்களை வந்தடைந்த தக‌வல்கள் பயனுறும்.

3. நுனிப்புல் மேய்ந்து கருத்து சொல்ல மாட்டார்கள். அடுத்த தகவல் வந்தவுடன் முதல் தகவலை கூண்டோடு மறந்து போக மாட்டார்கள்.

4. நான் மற்றவரைப்போல் அல்ல எனக் கூற மாட்டார்கள். அவர்கள் செயல்பாடு வழி அது வெளிப்படும்.

5. முழுமையான தரவுத்திரட்டுகள், ஆய்வுகள் இல்லாமல் கருத்தோ விவாதமோ செய்ய மாட்டார்கள்.

6. நடப்பு நிகழ்வுகளின் தலைப்புச் செய்திகளை பெரும்பாலும் விவாதிக்க மாட்டார்கள்.

ஒருவேளை நாம் இந்த வெகுஜன நீரோட்டத்தினின்று விலகி மாற்றுச் சிந்தனையாளராக வேண்டுமாயின் முதலில் இன்றைய நிலையில் சாதாரண மனிதனின் செயல்பாடுகள் என்ன என்பதனை வரையறை செய்து அதிலிருந்து விலகி பின்னர் மாற்றுச் சிந்தனை நீரோட்டத்தினில் கலக்க முயலலாம்.

நன்றி.

Similar Posts

  • | |

    ஒற்றைப்படையாகும் உலகம்

    நான் சில ஆசிய நாடுகளுக்கு சமீபத்தில் பயணம் செய்தேன். அப்பயணங்களின் போது நான் உணர்ந்த மிகப் பொதுவான ஒரு விஷயம் எல்லா நாடுகளும் தங்களுடைய சுயத்தை இழந்து ஒற்றைப்படையாக ஆகிக்கொண்டிக்கின்றன என்பதையே. ஒருவேளை நாம் இந்தியா தவிர்த்து வேறு எந்த ஆசிய நாட்டிற்கும் செல்லாதவராக இருப்போமேயானால் மற்ற நாடுகள் முற்றிலும் வேறானவையாக இருக்கும் என்று எண்ண வேண்டியதேயில்லை போலிருக்கிறது. காரணம் பெரும்பாலான நாடுகளில் அங்கிருக்கும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை மறந்துவிட்டுப் பார்த்தால் அது முற்றிலும் நம்முடைய இந்தியாவின்…

  • காந்தியும் காமமும்

    மகாத்மா காந்தி குறித்த பொதுவான பல தவறான‌ அபிப்ராயங்கள் நம்மில் பலருக்கு உண்டு. குறிப்பாக அவரது ஒழுக்கம் மற்றும் பெண்கள் தொடர்பான செயல்பாடுகள். அவற்றைப்பற்றி முழுமையான ஆய்வுகளோ, புரிதலோ இல்லாமல் அங்கொன்றும், இங்கொன்றுமாக நாம் கேட்ட, கண்ட, படித்த தகவல்களின் கழிவே அது. காந்தியின் காமம் குறித்த அணுகுமுறைகள் தொடர்பாக எழுத்தாளர் ஜெயமோகனின் கட்டுரைகள், தெளிவானதொரு புரிதலுக்கு தொடக்கமாக‌ இருக்குமென கருதுகிறேன். காந்தியும் காமமும் 1 காந்தியும் காமமும் 2 காந்தியும் காமமும் 3 காந்தியும் காமமும்…

  • |

    தரம் தாழும் செய்திகள்

      செய்திகளை செய்தி சானல்களின் வழியாக அறிந்து கொள்ள முயலக்கூடாது என்பது நான் 24 மணி நேர செய்தி சானல்கள் வந்த சில காலங்களிலேயே எடுத்த முடிவு. இருப்பினும் கலைஞர் மரணித்த நாளின் நேரலை நிகழ்வுகளைப் காண்பதற்காக‌ செய்தி சானல்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். காலை சில மணி நேரங்களுக்கு வெறும் பின்னணி இசையுடன் மட்டும் ராஜாஜி ஹாலில் நடைபெற்ற நிகழ்வுகள் ஒளிபரப்பப்பட்டன. சில மணி நேரங்களிலேயே அனைத்து செய்திச்சேனல்களிலும் நெறியாளரும், பத்திரிக்கையாள‌ர், அரசியல் செயல்பாட்டாளர், சமூக ஆர்வலர் என்ற…

  • |

    சுதந்திர தின‌ வாழ்த்துக்கள்

    70 ஆவது சுதந்திரதினத்தைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின‌ வாழ்த்துக்கள். முதலில் நம் அனைவரிடமும் ஓர் கேள்வி. நாம் உண்மையாகவே சுதந்திரதினத்தைக் கொண்டாடுகிறோமா, இல்லை அதனை ஓர் விடுமுறை நாளாக மட்டும் எடுத்துக்கொள்கிறோமா? உண்மையான பதில் நம்மில் பெரும்பாலானோர்க்கு உண்மையில் அது விடுமுறை தினம் மட்டுமே. நாம் மற்ற பண்டிகைகளான தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போலவா சுதந்திர தினத்தினைக் கொண்டாடுகிறோம்? இல்லவே இல்லை. நண்பர்களே! நாம் பெற்ற அந்த சுதந்திரத்தால்தான் இன்று நாம் நாம்…

  • | |

    பேரும் புகழும் – எசு.எசு.அருணகிரிநாதர்

    எசு.எசு.அருணகிரி நாதர் என்பவரால் 2007 ல் எழுதப்பெற்ற அறிவுரை நூல். பெரும்பாலும் வெளிப்படையான அறிவுரைகளின் தொகுப்பு. ஆசிரியரைப்பற்றி எனக்கு தெரியவில்லை. ஆனால் தன்னுடைய வயதான காலகட்டத்தில் எழுதியிருப்பதாகவே நூல் அமைப்பு உள்ளது. பொறாமை, அன்பு,காமம் போன்ற பல்வேறு தலைப்புகளில் மனிதர்களுக்கு அறிவுறை கூறுகின்றார். பெரும்பாலான அறிவுரைகளில் ஓ மனிதனே! என ஒட்டுமொத்த மனிதகுலம் நோக்கி தன்னுடைய அனுபவத்தை அறிவுரையாகத் தருகிறார். இதனை நாம் வயது முதிர்ந்த பல்வேறு பெரியவர்களிடம் கேட்கலாம். அப்பெரியவர்களின் சொற்கள் நூலாகியிருக்கிறது. ஒட்டுமொத்தமும் வெளிப்படையான…

  • |

    யானை வேட்டை

    ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு யானை தந்தத்திற்காக கொல்லப்படுவதை விவரிக்கும் இந்த ஆவணப்படம் இன்றைய நிலையில் மிக முக்கியமானது. மேலதிக தகவல்களுக்கு, http://www.lastdaysofivory.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.