|

கேள்வி பதில்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

மிகப்பெரிய திட்டமிடலுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள். அதனால் தங்களை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யாமல் தூரத்து நிலவாகவே வைத்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். இருந்தாலும் இந்த கேள்வி சமீபத்திய நாட்களில் மிக அதிகமான முறை நினைவில் எழும்புவதால் இக்கடிதம்.

என்னுடைய வேலையும் என்னுடைய புத்தக வாசிப்பும் வேறு வேறு வழிகள். ஆனால் நான் வாசிக்கத் தொடங்கிய பின்னர் என் வேலையினை மிக எளிதாகமாற்றிக்கொண்டேன். வேலையின் அளவு ஐந்து மடங்கிற்கும் அதிகமாகி இருக்கிறது. மிக முக்கியமாக மகிழ்ச்சியாக இருக்கிறேன். எளிமையாக இருக்கிறேன். மகிழ்சியை அருகில் சென்று பார்த்து பெரிதுபடுத்தி மகிழ்கிறேன். துன்பங்களை தூரமாய்ப் பார்த்து சிறியதாய் ஆக்கிக்கொள்கிறேன். நீங்கள் கூறுவது போல சின்னச் சின்ன வாசகங்களை மனதில் அசைபோட்டு அசைபோட்டு ஒரு மிகப்பெரிய மன உலகை சமைத்து வைத்து வாழ்கிறேன். வாசிப்பைத் நாள்தோறும் தீவிரப்படுத்திக் கொண்டே இருக்கிறேன். எனக்கான வேலையையே தள்ளிப்போடும் நான் இன்று எந்நிலையிலும் தினமும் என்னால் சில மணி நேரங்களை ஒதுக்க முடியும் என்ற நிலைக்கு மாறியிருக்கிறேன். இதெல்லாம் என்னால் உறுதியாகக் கூற முடியும் வாசிப்பால் தான் என்று. ஆனால் எப்படி என் வேலையை மாற்றியது எனக்கேட்டால் கண்டிப்பாக என்னால் சொல்லத் தெரியாது.

என்னுடைய தற்போதைய நிலையை விளக்கவே மேற்கூறிய வரிகள் எல்லாம். என்னுடைய கேள்வியெதுவென்றால் தீவிர வாசகர்கள், எழுத்தாளர்கள் தமது படைப்புகள் தாண்டிய உரையாடல்களின் போது மிகவும் அவமதிப்பையோ, அல்லது துன்பங்களை தங்கள் வாழ்வில் சந்தித்ததாக கூறுகின்றனர். அதிக பட்ச அவமதிப்பையோ, துன்பங்களையோ சந்தித்தால் மட்டுமே ஒரு தீவிர வாசகராகவோ, எழுத்தாளராகவோ ஆக முடியுமா? இல்லை, அதிகபட்ச வாசிப்பு துன்பங்களை மிகைப்படுத்தச் செய்யுமா? மகிழ்ச்சியாக எளிமையாக வாசித்துக்கொண்டே இருக்க முடியாதா? [ நான் முழுக்க முழுக்க மகிழ்ச்சியான புத்தகங்களையே வாசிக்கிறேன் என்று கூறவில்லை. எல்லாவற்றையும் வாசிக்கிறேன். ஆனாலும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்நிலை மாறிவிடுமோ என தோன்றுவதாலேயே இக்கேள்வி]

அன்புள்ள ராஜேஷ்

நீங்கள் கேட்ட கேள்விக்கான பதில் 3000 வருடம் முன்னரே அரிஸ்டாடிலால் சொல்லப்பட்டுவிட்டது. இப்படி யோசியுங்கள், உங்களுக்கு உண்மையிலேயே துயரம் தரும் ஒருவிஷயத்தை நீங்கள் நாடுவீர்களா? ஆனால் துயரம் நிறைந்த ஒரு நூலை, திரைப்படத்தை விரும்பி வாசிக்கிறீர்கள், பார்க்கிறீர்கள் அல்லவா? ஏனென்றால் அந்தத் துயரம் உண்மையானது அல்ல. அது மனதில் தலைகீழாகவே நிகழ்கிறது. துயரத்தை நடிப்பதன் மூலம் மனம் மகிழ்ச்சி அடைகிறது. சுந்தர ராமசாமியின் மொழியில் சொல்லப்போனால் திருப்பிப்போடப்பட்ட சட்டை, பை உள்ளே இருக்கும்.

இதை catharsis  என்கிறார் அரிஸ்டாடில். துயரத்தை புனைவுகளில் அனுபவிப்பது வழியாக மானுடமனம் தன்னை தூய்மைப்படுத்திக்கொள்கிறது. ஓர் உன்னதமாக்கல் நிகழ்கிறது. அது ஓர் இனிய அனுபவம். ஆகவேதான் உயர்ந்த படைப்புகள் பெரும்பாலும் துயரச்சுவை மிக்கவையாக இருக்கின்றன. அதுவும் இனிய அனுபவமே. மகிழ்ச்சியான மனநிலை என்பது நேர்நிலை. அதில் மனிதன் அதிகநேரம் நிற்க முடியாது. ஆகவேதன துயரம் கலந்த மகிழ்ச்சியை melancholy யை அடைகிறான். அந்த இனியதுயரமே இயற்கையை, இசையை, கலைகளை அழகாக ஆக்குகிறதுய். அது இல்லாவிட்டால் உலகில் இன்பமே இல்லை

ஜெ

Similar Posts

  • |

    யானை வேட்டை

    ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு யானை தந்தத்திற்காக கொல்லப்படுவதை விவரிக்கும் இந்த ஆவணப்படம் இன்றைய நிலையில் மிக முக்கியமானது. மேலதிக தகவல்களுக்கு, http://www.lastdaysofivory.com/

  • |

    Rise of the Planet of the Apes

    2011 ஆம் ஆண்டு Rupert Wyatt இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம். நடிப்பு James Franco. இவர்தான் சமீபத்தில் வெளிவந்த Interview மற்றும் 127 Hours திரைப்படங்களில் நடித்தவர். நாயகி Freida Pinto. இவர் இந்தியப் பெண் . Slumdog Millionaire படத்தில் நடித்த அதே பெண். கதைப்படி வில் ரோட்மென் ஒரு ஆய்வாளர். அல்சமீர் ( Alzheimer) போன்ற மறதி நோய்களுக்கான‌ மருந்தினைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு ALZ-112 என்னும் மருந்தைக் கண்டறிகிறார். பின்னர் அதனை சோதனைக்காக…

  • ஆசானிடமிருந்து

    இது ஏன் நிகழ்கிறது? இச்செயலை இச்சமூகம் sanction செய்கிறது. இல்லை என்றால் இவர்கள் பதறுவார்கள் இல்லையா? ஊழலை ஒழுங்கின்மையை ஒவ்வொரு கணுவிலும் அங்கீகரிக்கும் மக்களாக நாம் ஆகிவிட்டோம். அந்த மனநிலையைத்தானே அத்தனை அமைப்புகளும் செய்கின்றன அன்ணா ஹசாரே ஊழலுக்கு எதிராகக் கிளர்ந்தபோது இங்கே கிண்டல் செய்தவர்கள் தானே அதிகம்? அவர்கள் உருவாக்கி நிலைநிறுத்தும் மனநிலை அல்லவா ஜெயலலிதாவும் கருணாநிதியும் உருவாகி நீடிக்கக் காரணம் அந்த மனநிலைக்கு எதிரான நம்பிக்கை தளரான கருத்துப்போர்தான் ஒரெ வழி ஜெ

  • உலகின் நிலைப்புள்ளி

    பெரும்பாலும் அதீத கேளிக்கைகள் நடைபெறும் நிகழ்வுகளுக்கு செல்லும் வழக்கம் இல்லாத நான் சமீபத்திய‌ காலங்களில் அத்தகைய‌ நிகழ்வுகளுக்குச் செல்கிறேன். அங்கே நான் கண்ட சில கேளிக்கை நிகழ்வுகள் சென்று வந்த சில நாட்களுக்குப் பின்னரும் என் மனதில் நீடித்துக்கொண்டே இருந்தது, முற்றிலும் கேளிக்கைக்காகவே இத்தனை வளம் வீணடிக்கப்படுகிறதே என. உதாரணமாக ஓர் மிகப்பிரமாண்டமான செயற்கை நீரூற்று. அங்கே அது கண்டிப்பாக தேவையில்லைதான். அதனைக் காண்பதனைத்தவிர வேறொன்றும் எவரும் எதுவும் செய்யவில்லை.மிக மோசமான நிலையில் வாழும் மக்களின் வாழ்க்கையினை…

  • |

    மனதை நெருடும் ஒரு காணொளி

    எத்தனையோ குறைகளைக் கூறிக்கொண்டும், மற்றவர்கள் மீது வெறுப்பை உமிழ்ந்துகொண்டு வாழும் இவ்வுலகில் இத்துனை குறைகள் இருந்தாலும் மற்றவர்களுக்காக வாழும் உயர்ந்த உள்ளம் கொண்ட சகோதரிகள். மனதை நெருடும் ஒரு காணொளி.  

One Comment

  1. நல்லா எழுதுறீங்க, நல்ல ரசனையும் உள்ளவர் தான். ஆனால் அதுக்காக எல்லாம் இந்த கடிதம் அல்ல. தீர்ப்பு பற்றிய உங்கள் ஆதங்கம் தான் இந்தப் பதிவை அனுப்பத் தூண்டியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.