நுகர்வு எனும் நோய்

இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் குறித்த சுதந்திரத்திற்கு முந்தைய பிந்தைய நிகழ்வுகள், வனத்தைக் காத்தல் என்ற பெயரில் காட்டுவாசிகளை விரட்டி காட்டை வணிக நோக்கில் பயன்படுத்திய‌ செயல்பாடுகள்,அமெரிக்க வாழ்வினை போல வாழ முயலும் நம்முடைய நுகர்வு என‌ ஒட்டுமொத்த சூழலியல் பார்வையே how much a person should consume?.
nuharvenum_perumbasi

ராமச்சந்திர குஹா அவர்களால் ஆங்கிலத்தில்ல் எழுதப்பெற்ற‌ இந்நூல் தமிழில் போப்பு அவர்களால் நுகர்வெனும் பெரும்பசி எனும் பெய‌ரில் வெளிவந்துள்ளது. 

  • தனிமனிதன் செய்யும் மனித குல அழிவிற்கான செயல் நுகர்வு. காட்டுவாசி என்னும் வார்த்தையையே நாகரிமற்ற சொல்லாக மாற்றிய அவலம் நம் நாட்டில்தான்.
  • இன்றும் காட்டுவாசி என்ற நாகரிகம் என்பதன் எதிர்ப்பதமாகவே உருவகம் செய்கிறோம். இயற்கையை அழிக்காமல் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை நடத்தும் அவர்கள் நாகரீகமற்ற மனிதர்கள். சுய நலத்துக்காக இயற்கையை அழித்து, நம் இடத்தை நாசப்படுத்தி பல் உயிர்கள் வாழ இயலாத இடமாக மாற்றிவிட்டு அவர்களுடைய வளங்களையும் உறிஞ்சும் நாம் நாகரிக மனிதர்கள். 
  • நாம் உரக்க ஒலிப்பதால் நம் குரல் ஓங்கி ஒலிக்கிறது. உரக்கக் கேட்கிறது. அவர்கள் உரக்க ஒலிப்பதில்லை. ஒலிக்க முடிவதில்லை.
  • இந்தியாவை பிரிட்டீஷ் ஆண்ட காலத்தில் அரசின் காடுகள் மீதான உரிமையை நிலைநாட்டுவதற்காக அங்கு வாழ்ந்த ப‌ல்லாயிரம் மக்கள் வேறு இடங்களுக்கு கட்டாயமாக அனுப்பப்பட்டார்க்ள். அதற்கு முக்கிய காரணம் காட்டின் வளம் முழுமையாக அப்போதையா அரசுக்குத் தேவைப்பட்டது. வணிக ஏற்றுமதி செய்யவும், ரயில் தண்டவாளங்கள் அமைக்கவும் இன்னும் பல தேவைகளுக்கும் மரம் தேவைப்பட்டது.
  • பிரிட்டீஷ் நிர்வாகத்தின் ஆரம்ப 40 ஆண்டுகளில் மட்டும் 80000 மைல்கள் ரயில் பாதைகள் போடப்பட்டன. இதற்காக பல லட்சம் மரங்கள் அழிக்கப்பட்டன. அங்கு வாழ்ந்த காட்டுவாசி மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.ரயில் பாதைகளும் துறைமுகங்களை நோக்கியே வணிக நோக்கிற்காக போடப்பட்டன.
  • பின்னர் வந்த இந்திய சுதந்திர அரசும் காட்டின் மீதான பாதுகாப்பு என்ற பெயரில் மலைவாழ்மக்களின் காடுகள் மீதிருந்த உரிமைகளையும், அவர்களின் வாழ்வாதாரத்தையும் அழித்தது.
  • காட்டை வணிக நோக்கில் அழித்தவர்கள் தப்பிப்பதற்காக மலைவாழ் மக்கள் பலியாக்கப்பட்டனர்.
  • மலைவாழ் மக்கள் காட்டினை தங்கள் வாழ்வாதாரத்திற்காக பயன்படுத்தினார்களேயன்றி வணிகத்திற்காக அன்று.
  • மேலும் வணிக நோக்கிற்காக ஓக் மரங்கள் அழிக்கப்பட்டு பைன் மரங்கள் நடப்பட்டன. இம்மரங்கள் புல் மற்றும் வேறு பல செடிகள் வளரவிடாமல் காட்டின் பல்லுயிர் அமைப்பைக் கெடுத்தன. இதனால் தங்களுடைய கால்நடைகளுக்கான தீவனம் போன்றவை கிடைக்காமல் காட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
  • இன்றும் கூட இயற்கை பாதுகாக்கப்பட வேண்டுமென்று கூறுபவர்களின் வாதப் பின்னணி என்பது மரங்களும் உயிர், விடுமுறை நாட்களில் நுகர்தல் என்ற நிலையிலேயே பார்கப்படுகின்றது. காடு என்பது அம்மக்களின் வாழ்வாதாரம் என்ற எண்ணத்தில் பார்க்கப்படுவ‌தில்லை. 
  • தன் தேவைக்கு அதிகமாகவே நுகரும் வாழ்க்கைக்கு பழகிவிட்டோம் நாம். அதுவே நமக்கும் இயல்பாகவே தெரிகின்றது. எல்லா பொருளையும் மறு உபயோகமோ, நீண்ட கால உபயோகமோ செய்வதில்லை.
  • நாம் அமெரிக்க இங்கிலாந்து வாழக்கை முறையை நோக்கி பயணிக்கிறோம். 100 இந்தியர்களினால் ஏற்படும் சுற்றுச் சூழல் சீர்கேட்டை ஒரு அமெரிக்கன் ஏற்படுத்தி விடுகிறான். ஒட்டுமொத்த உலக மக்கள் தொகையில் 4 விழுக்காடு இருக்கும் அமெரிக்கா உலக உற்பத்தி வளத்தில் 30 விழுக்காட்டை நுகர்கின்றது. 
  • அந்த நிலையை நோக்கி பயணிக்கும் நாமும், சீனர்களும் அதனை அடையும் பட்சத்தில் உலகில் நுகர்வதற்கு இயற்கை இல்லாத நிலையே உருவாகும். 
  • இன்று நுகர்வில் கட்டுப்பாடு விதிப்பதனையோ, சுய அளவில் தேவைக்கு மேல் நுகராத நிலையையோ ஏற்கத் தயங்கும் நாம் ஒரு நாள் கண்டிப்பான நுகர்விற்காக தள்ளப்படுவோம்.

இப்படியாக‌ பல சூழலியல் கருத்துக்களின் தொகுப்பு நூல் how much a person should consume? .சுற்றுச்சூழல் குறித்த புரிதலுக்கான் சிறந்த நூல்.

Similar Posts

  • அதிகார மனப்பான்மையும் இட ஒதுக்கீடும்

    முன்பொருமுறை இந்தியாவின் முன்னாள் திட்டக்கமிஷன் துணைத்தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா அவர்களிடம் ஒரு பேட்டியின் போது ஒரு கேள்வி கேட்கப்பட்டது. மத்திய கிழக்கு நாடுகளால் உலகின் ஆதிக்கசக்தியாக மாற இயலுமா? அதற்கு அவர் அளித்த பதில் இப்போதைய‌ காலகட்டத்தில் தன் மக்கள் தொகையில் பாதி மக்களின் உழைப்பை உபயோகப்படுத்தாத ஒரு நாட்டிற்கு அது சாத்தியமில்லை என்பது. சாத்தியமுள்ள மக்களின் உழைப்பாற்றலை உபயோகிக்காமல் இருப்பது ஒரு தேசத்திற்கு இழப்பு என்பது அவரது கருத்து. அக்கண்ணோட்டத்தில் பார்க்கும்பொழுது இந்தியாவில் பெண்களின்…

  • கேள்வியும் பதிலும்

    நம்மிடம் கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் நம்மிடம் பதில் இருக்கிறது. அது சரியானதா இல்லையா என்பதை விட என்னால் பதிலளிக்க முடிகிறது என்பதனையே நம் திறமையாக எண்ணுகிறோம். நமக்குத் தெரிந்த தகவல்களின் அடிப்படையிலோ, கேள்வி ஞானத்தின் அடிப்படையிலோ இப்போதைய கேள்விக்கான பதிலை உருவாக்குகிறோம். பின்னர் அதை மெய்ப்பிப்பதற்கான ஆதாரங்களை திரட்டும் முயற்சியில் நம் மனம் இறங்கி விடுகிறது. கற்றலின் முதல் நிலையென்பதே நமக்குத் தெரியாத ஒன்றை தெரியாது என ஒப்புக் கொள்வதிலிருந்தே தொடங்குகிறது. நாம் ஒருவருடைய கேள்விக்கு பதிலளிக்கும்போதே…

  • பண‌ம் அச்சடிப்பதை நிறுத்தினால் என்ன?

    இந்த பதிவைப் படிப்பதற்கு முன் இந்த பதிவைப் படித்திருத்தல் சிறந்தது. அதிக பணம் அச்சடித்தால் என்ன? அதிக பணம் அச்சடித்தால் பணத்தின் மதிப்பு சரியுமென்றால் பணம் அச்சடிப்பதை நிறுத்தினால் பண மதிப்பு உயரத்தானே வேண்டும்? கேள்வி சரிதான். என்ன நடக்கும்? பணத்தின் புழக்கம் குறைவதால் மக்களிடம் அதிக பணம் புழங்காது. ஆனால் பொருள்களின் உற்பத்தி, மனித வளம் போன்றவை அதிகரித்துக்கொண்டே வரும். இதனால் குறைவான பணம். அதிக பொருள் சந்தையில் நிலவும். பொருள்களின் விலை குறையும். அதோடு குறைவான…

  • கற்போம்

    கல்வி என்பது என்ன? இன்றைய நிலையில் கல்வி என்பது தனிமனித பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்யும் ஒரு கருவி என்பதாகிவிட்டது.அதாவது ஒருவன் தனது கல்வியினால் தன்னுடைய பொருளாதாரத்தேவைகளை நிறைவு செய்து கொள்ள முடியாமல் போனால் அவன் கற்ற கல்வி தவறானது என்றே பொருள் கொள்ளப்படும். அது கல்வி அல்ல. பயிற்சி. ஒரு குறிப்பிட்ட எதிபார்ப்போடு செய்யப்படக்கூடிய ஒரு செய்முறை என்பது பயிற்சியே. கல்வி என்பது அதுவல்ல.  கல்வி என்பது கற்றல். அது நாம் பள்ளி, கல்லூரிகளில் மட்டுமே…

  • நாம் சுரண்டப்படுகிறோம்

    சமீபத்தில் இந்த காணொளியை இணையத்தில் காண நேரிட்டது. அதிலிருந்து மீண்டும் நாம் தாரளமயமாக்கல், உலகமயமாக்கல் என்ற நவீன சித்தாந்தங்களின் வழியே சுரண்டப்படுகிறோம் என்ற எண்ணம் மேலும் வலுப்படுகிறது. காணொளி இங்கே.

  • | |

    மாங்கொட்ட சாமி – புகழ்

    எழுத்தாளர் புகழால் எழுதப்பெற்ற சிறுகதைகளின் தொகுப்பு. மொத்தம் 13 சிறுகதைகள். செட்டிக்குளம் என்னும் கிராமத்திலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் நடைபெறும் சம்பவங்களே ஒவ்வொரு சிறுகதையும். இந்தக் கதைகளின் சிறப்பம்சம் என நான் கருதும் ஒன்று இதில் கையாளப்பட்டிருக்கக்கூடிய மொழி வழக்கு. புகழ் இயல்பிலேயே கிராமத்து வாழ்விலிருந்தமையால் அவருக்கு மிக எளிதாக இந்நடை கூடி வந்திருக்கிறது. அத்தகைய கிராம சூழ்நிலைகளிலிருந்து வளர்ந்து வந்த எவர் ஒருவரும் தன்னை மிக நெருக்கமாக இந்தக் கதைக்களத்திற்குள் இணைத்துக்கொள்ள முடியும். அத்தனை இயல்பான…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.