Tag: book

Home Deus – Yuval Noah Harari

This books follows the popular book ‘The Sapiens’ from the same author Yuval Noah Harari. If you have not read the book ‘The Sapiens’ it should be read first. So that it will give better picture on understanding this book….

Continue Reading Home Deus – Yuval Noah Harari

ஊர்களில் அரவாணி – ம‌.தவசி

ம. தவசி அவர்களால் எழுதப்பெற்ற சிறுகதைத் தொகுப்பு. காவ்யா பதிப்பகம் வெளியீடு. மிகவும் வித்தியாசமான சிறுகதைகள். சராசரியான‌ வார இதழ் சிறுகதைகளை வாசிக்கும் ஒருவர் இக்கதைகளைக் கண்டிப்பாக வாசிக்க வேண்டும். சராசரி சிறுகதைகளில் காட்சிகளின் சித்தரிப்பு, உறவுகளின் சித்தரிப்பு இறுதியில் ஒரு திருப்பம் இப்படியாகத்தான் அமைப்பு இருக்கும். ஆனால் இதிலுள்ள ஒவ்வோர் கதையும் அத்தகைய எந்த…

Continue Reading ஊர்களில் அரவாணி – ம‌.தவசி

உன்னோடு ஒரு நிமிஷம் ‍ – வெ.இறையன்பு

வெ. இறையன்பு அவர்களால் சுட்டி விகடனில் எழுதப்பெற்று தொடராக வெளிவந்த சுயமுன்னேற்றத் தொடர். சுட்டி விகடனில் வெளிவந்த‌தால் முற்றிலும் குழந்தைகளை நோக்கி எழுதப்பட்ட கட்டுரைகள். பெரும்பாலும் நீதி போதனைக் கட்டுரைகள். அத்தோடு அந்தந்த காலகட்டத்தின் நிகழ்வுகளை ஒட்டி எழுதப்பட்டவை. உதாரணமாக தேர்வு சமயத்தில் வெளிவந்த இதழில் தேர்வு தொடர்பான சில அறிவுரைகள், விடுமுறைக்கால இதழில் விடுமுறை…

Continue Reading உன்னோடு ஒரு நிமிஷம் ‍ – வெ.இறையன்பு

Rich Dad Poor Dad – Robert Kiyosaki

Robert Kiyosaki ஆல் எழுதப்பெற்று 1997 ஆம் ஆண்டில் வெளிவந்தது. வாழ்வில் பொருளாதார தன்னிறைவு அடைவதற்கு தனி மனித நுண்ணறிவு எத்தகைய முக்கியமான ஒன்று என்பதனை விவரிக்கும் நூல். 50 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலகம் முழுவதும் 30 மில்லியனுக்கும் அதிகமாக விற்பனையான நூல். இந்நூல் வாசிப்பவர்கள் பொருளாதார தன்னிறைவினை அடைந்தார்கள் என்பதனை விட‌…

Continue Reading Rich Dad Poor Dad – Robert Kiyosaki

கன்னி நிலம் – ஜெயமோகன்

ஜெயமோகன் அவர்களால் எழுதப்பட்டது. மணிப்பூர் மாநில எல்லைப்பகுதியில் பணியாற்றும் ராணுவ அதிகாரி நெல்லையப்பனின் கதை, ஜெயமோகனுக்கே உரிய சொல்லாடல்களுடன். நெல்லையப்பன் மணிப்பூர் எல்லையில் பணியாற்றும் ராணுவத் தலைமை அதிகாரி. அவர்கள் ஒருநாள் தங்களுடைய வழக்கமான பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுது காட்டுப்பகுதியில் ஒரு போராளிப்பெண்ணை கைது செய்கிறார்கள். அப்பெண்ணை கைது செய்து ராணுவ முகாமுக்கு கொண்டு வரும்…

Continue Reading கன்னி நிலம் – ஜெயமோகன்

நெல்சன் மண்டேலா – தா.பாண்டியன்

தா பாண்டியன் அவர்களால் எழுதப்பட்டது. நெல்சன் மண்டேலா அவர்களின் சிறுவயது முதல் தென்னாப்ரிக்காவில் ஜனநாயகம் மலர்ந்தது வரையிலான காலகட்ட நிகழ்வுகளின் தொகுப்பு. 1918 ஆம் ஆண்டு ஜூலை 18ல் பிறந்த நெல்சன் மண்டேலாவிற்கு அவரது தந்தை இட்ட பெயர் ரோலிலாலா. அவரது பள்ளி ஆசிரியர் இட்டபெயரே நெல்சன். சோசோ இனக்குழுவில் பிறந்த மண்டேலாவின் தந்தை காட்லா…

Continue Reading நெல்சன் மண்டேலா – தா.பாண்டியன்

ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது – ஜெயகாந்தன்

ஜெயகாந்தன் அவர்களால் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பெற்ற சிறுகதைகளின் தொகுப்பு. பின்வரும் கதைகள் நூலில் உள்ளன. திரஸ்காரம்சாளரம்பிணக்குநந்தவனத்தில் ஓர் ஆண்டிதேவன் வருவாரா?சிலுவையுகசந்திஇருளைத் தேடிசுய தரிசனம்புதிய வார்ப்புகள்அக்கினிப்பிரவேசம்லட்சாதிபதிகள்ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறதுஅந்தரங்கம் புனிதமானதுகுருபீடம்புதுச் செருப்பு கடிக்கும் ஒவ்வொரு கதையும் மனித வாழ்வின் இக்கட்டான அல்லது முக்கிய‌ தருணங்களை விவரிப்பவை. அக்கினிப்பிரவேசம் சிறுகதை பின்னாளில் சில நேரங்களில் சில மனிதர்களாக உருமாறிய…

Continue Reading ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது – ஜெயகாந்தன்

சில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்

நீண்ட நாட்களாக கேள்விப்பட்டுக்கொண்டு இருந்த, ஆனால் வாசித்திராத ஒரு நாவல். ஜெயகாந்தன் அவர்களால் எழுதப்பெற்று தொடர்கதையாக வெளிவந்தது. கதை நாயகி கங்கா பாலியல் ரீதியாகப் எதிர்பாராமல் பாதிக்கப்படுகிறாள். அதன் காரணமாக அவள் வாழ்வில் எதிர்கொள்ளும் நிகழ்வுகளே நாவலின் சுருக்கம். கங்கா முற்போக்கிற்கும், பிற்போக்கிற்கும் இடையில் அல்லாடும் ஒரு பெண். இந்நாவல் வெளிவந்தது 1970. பெண் கல்வி,…

Continue Reading சில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்

தற்கொலைக் குறுங்கதைகள் – அராத்து

அராத்து அவ்வப்போது ஃபேஸ்புக்கில் எழுதிய குறுங்கதைகளை உயிர்மை பதிப்பகம் நூலாக வெளியிட்டிருக்கிறார்கள். எதேச்சையாக கண்ணில் பட்ட நூல், இந்நூலின் வெளியீட்டு விழாவில் சாருவும், ஜெயமோகனும் கலந்துகொண்ட நினைவு. அதனால் இப்புத்தகத்தை வாசிக்கலாம் என நினைத்து எடுத்து வந்தேன். ஒட்டுமொத்த நாவலின் பெரும்பான்மை பேசுபொருள் உடலுறவு. காமம் அல்ல. இதற்கு பாலுறவுக் கதைகளாகவே வெளியிடப்படும் கதைகள் எவ்வளவோ…

Continue Reading தற்கொலைக் குறுங்கதைகள் – அராத்து

ரஷ்யப்புரட்சி – என்.ராமகிருஷ்ணன்

ரஷ்யாவின் ஜார் மன்னர்களின் ஆட்சி புரட்சியின் மூலம் ஒடுக்கப்பட்டு கம்யூனிச அரசு புரட்சியின் வழியாக 1917 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நிகழ்வே ரஷ்யப்புரட்சி. ஒற்றை வரியில் கடந்து சென்றாலும் 1900 களின் ஆரம்பகால ஆண்டுகளிலேயே ஜார் மன்னர்களுக்கு எதிரான கலகங்கள் தொடங்கி அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்று வந்தன. குறிப்பாக பண்ணையடிமை முறைக்கு எதிரான கலகங்கள். இதற்கிடையில்…

Continue Reading ரஷ்யப்புரட்சி – என்.ராமகிருஷ்ணன்