ஞானகுரு – எஸ்.கே.முருகன்

தனியனாய், பரதேசியாய் சுற்றித்திரியும் ஞானகுரு எனக்கூறப்படுபவரின் பதில்களின் தொகுப்பு. பெயரை வைத்து அவரை ஏதோ புனிதர், மானுட அவதாரம் தரித்த மகான் என்றெல்லாம் எண்ண வேண்டியதில்லை. நம் ஊரிலே தெருவிலே இதைவிட அருமையாகத் தத்துவங்கள் கூறும் பல சாமியார்கள் உண்டு. குடித்துவிட்டு, கஞ்சா அடித்துவிட்டு உளரும் ஒருவருடைய சொற்கள் புத்தகமாயிருக்கின்றன. வேறு ஒன்றும் இல்லை. தன்னுடைய செயல்பாடுகளை யே(கஞ்சா, குடி, மாமிசம், சுருட்டு) அறமாய்க் கொண்டு அதையே நியாயப்படுத்தும் தகவல்களை அறிவுரைகளாக ஒட்டுமொத்த நூலும் விளம்புகிறது. இந்த அறிய தகவல்களை கூற ஞானகுரு வேண்டாம், நம் தெருவில் குடித்துவிட்டு இரவில் அலையும் ஒருவனே போதும் என நினைக்கிறேன்.njanaguru

ஏற்கனவே ஒரு 10 புத்தகங்களாவது ஒருவ‌ர் வாசித்திருப்பாரானால் அவருக்கு இப்புத்தகம் மீது ஒரு மிகப்பெரிய வருத்தம் கண்டிப்பாக ஏற்படும். நானும் அந்நிலையிலேயே நிற்கிறேன். இந்தப் புத்தகம் ஒரு கடைநிலைக் கட்சிப் பிரமுகரின் மேடைப் பேச்சு என்ற அளவில்தான் இருக்கிறது. ஏனென்றால் அவர்களுக்குத்தான் அந்த வசதி உண்டு. அதிகம் ஆய்வு செய்ய வேண்டியதில்லை. ஏதாவது சற்றே உணர்ச்சிப்பூர்வமாக, அறைகுறைத்தகவல்களை வைத்துக் கொண்டு பேசி விட்டுப் போய் விடலாம். ஏனென்றால் அது ஆவணப்படுத்தப்பட மாட்டாது. 

ஆனால் புத்தகங்கள் அப்படியில்லை. ஒரு புத்தகம் என்பது பலமுறை திருத்தப்பட்டு, தகவல்கள் சரி பார்க்கப்பட்டு வெளிவரக்கூடிய ஒன்று. எழுதப்பட்ட காலத்தை தன்னுள்ளே தாங்கி நிற்கும் பெட்டகம். அதானேலேயே புத்தகங்கள் படிப்பதற்கு தலையாய முன்னுரிமை கொடுக்கும் ஒருவன் நான். புத்தகங்கள் எல்லாமே உயர்வானவையாய் ஏதோ ஒரு விதத்திலாவது இருக்குமென எண்ணி வாசிக்கும் எனக்கு இது ஒரு சம்மட்டி அடி, இங்கும் விதி விலக்குகள் உண்டு என. ஒரு நூல் என்பதற்கான குறைந்த பட்ச வரையறை கூட இல்லாத நூல். சிறப்பாய் இருப்பது அட்டைப்படமும் தலைப்பும் மட்டுமே. நான் வேண்டுவதெல்லாம் தயவு செய்து இது போன்றவற்றையெல்லாம் ஆவணப்படுத்தாதீர்கள்.

Similar Posts

  • |

    Rich Dad Poor Dad – Robert Kiyosaki

    Robert Kiyosaki ஆல் எழுதப்பெற்று 1997 ஆம் ஆண்டில் வெளிவந்தது. வாழ்வில் பொருளாதார தன்னிறைவு அடைவதற்கு தனி மனித நுண்ணறிவு எத்தகைய முக்கியமான ஒன்று என்பதனை விவரிக்கும் நூல். 50 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலகம் முழுவதும் 30 மில்லியனுக்கும் அதிகமாக விற்பனையான நூல். இந்நூல் வாசிப்பவர்கள் பொருளாதார தன்னிறைவினை அடைந்தார்கள் என்பதனை விட‌ Robert Kiyosaki கண்டிப்பாக இப்புத்தகத்தினால் பொருளாதார நிறைவினை அடைந்திருப்பார் என்பது நிதர்சனம். இப்புத்தகத்தினை பத்து தனி அத்தியாயங்களாக‌ Robert Kiyosaki…

  • |

    அம்மா வந்தாள் – தி.ஜானகிராமன்

    தி ஜானகிராமன் அவர்களால் எழுதப்பெற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் 1966ல் வெளிவந்த ஒர் நாவல். அப்பு வேதம் படிப்பதற்காக திருச்சிக்கு அனுப்பபடுகிறான். அங்கே பதினாறு வருடங்கள் வேதம் படித்தபின்னர் தன்னுடைய சொந்த ஊருக்குப் புறப்படத்தயாராகிறான். இன்னும் சில நாட்களில் கிளம்ப வேண்டும் என்ற நிலையில், அம்மடத்தினை நிர்வகிக்கும் பவானியம்மாளின் தம்பி மகள் இந்து தான் அப்புவை விரும்புவதாகக் கூறுகிறாள். இந்து ஏற்கனவே திருமணமாகி கணவனை இழந்தவள். தன் அத்தை பவானியம்மாளோடு வசிக்கிறாள். அவள் சிறுவயதிலிருந்தே அப்புவுடன் வளர்ந்தவள்….

  • |

    திருப்பம் – கேசவதேவ்

    மலையாளத்தில் வெளிவந்த கேசவதேவின் ஒரு குறுநாவலையும், மாதவிக்குட்டியின் ஒரு சிறுகதையையும் தமிழில் சுரா அவர்கள் மொழி பெயர்த்து வெளியிட்டிருக்கிறார். அவ்விரண்டுமே இப்புத்தகம். முதல் குறுநாவல் திருப்பம், அப்போதைய சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டத்தினை ஒட்டிய நாவல். கேரள ஈழவ சாதிகளுக்குள் நிகழும் ஏற்றத்தாழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது. மாலேத்து சாணார் வீட்டில் வேலை செய்கிறார் கண்டப்பன். அவர்கள் இடத்தில்தான் இவன் வீடு கட்டிக்குடியிருந்தான். அவர்கள் தரும் கூலியோடு அவர்கள் தரும் எச்சில் சாப்பாடும் அவர்களுக்கு கிடைக்கும். அவரோடு அவர் மகன்…

One Comment

  1. நான் படித்த புத்தகங்களில், மிகச் சிறந்த புத்தகம் இது என்பேன்… விட்டேத்தியாக திரியும் சாமியாரிடம் இவ்வளவு இயல்பான, தெளிவான, உண்மையான கருத்துக்களா, என்று ஆச்சர்யப்பட வைக்கும்… என் வாழ்க்கையில் , பெரிய திருப்பத்தை ஏற்ப்படுத்திவிட்டார் எழுத்தாளர் முருகன்.. நன்றி .. வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.