மான்களுக்கும் கோபம் வரும் – மரபின் மைந்தன் முத்தையா

மரபின் மைந்தன் முத்தையா அவர்களால் எழுதப்பெற்ற மற்றும் கவிதையரங்குகளில் வாசிக்கப்பெற்ற கவிதைகளின் தொகுப்பு. 2005 ஆம் ஆண்டு வெளிவந்தது. கற்பகம் புத்தகாலயம் வெளியீடு.

இத்தொகுப்பில் என்னை ஈர்த்த கவிதை ‘புகார்கள் மற்றும் ஆலோசனைகள்’.

எந்தப்புகாரும் இல்லையென்றில்லை
எழுதும் தரமாய் இல்லையெம் புகார்கள்

ஏதேனும் நடைபெறுமிடத்திலேயே புகார் அளிக்க இயலும். ஆனால் இங்கே புகாரளிக்கும் அளவிற்கூ கூட செயல்கள் நடைபெறவில்லை என்பதன் அங்கதம் வெளிப்படும் தொணி என்னைக்கவர்ந்தது.

அதே கவிதையில்

ஆனால் நண்பரே உம்மிடம் சொல்ல‌
ஆலோசனைகள் உள்ளன எம்மிடம்
கண்துடைப்புக்காக இங்கே இருக்கும்
இந்தப் பெட்டியை அகற்றலாமென்று…

என்றும்

‘இந்தக் கவிதை படித்ததும் வருகிற‌
வேகத்தை வேலையில் காட்டலாமென்று…’

என்றும் வரும் வரிகளும் என்னைக் கவர்ந்தவை.

இந்நூலின் இறுதியில் சில ஆங்கில கவிதைகள் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் முத்தையா. அதில்

The Child’s first grief என்னும் கவிதையின் மொழிபெயர்ப்பில்

Oh! while my brother played with me
Would I have loved him more?

என்பதனை

ஆடி மகிழ என் தம்பி இல்லையே,
யாரிடம் அன்பைச் செலுத்தட்டும்

என்று மொழிபெயர்த்திருக்கிறார். ‘என் தம்பியோடு விளையாடிய காலங்களில் நான் இன்னும் அவனை நேசித்திருக்கலாமோ?‘ என்று தானே வரவேண்டும். வரிக்கு வரி மொழி பெயர்க்க வேண்டியதில்லை என்றாலும் மொழி பெயர்ப்பிற்கும் உண்மையான அர்த்தத்திற்கும் பெரிய வேறுபாடாக இருக்கிறது அந்த மொழிபெயர்ப்பு.

வாசிக்கலாம்.

Similar Posts

  • | |

    உதிரிப்பூக்கள் – மகேந்திரன்

    இயக்குநர் மகேந்திரன் அவர்களின் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த உதிரிப்பூக்கள் திரைப்படத்தின் ஒட்டுமொத்த திரைக்கதை வடிவம். 2004 ஆம் ஆண்டு மகேந்திரன் அவர்களாலேயே எழுதப்பெற்றது. அவரே நூலின் தொடக்கத்தில் கூறியது போல இந்தப்புத்தகத்தினை அத்திரைப்படத்தைப் பார்த்துப் பார்த்து எழுதியிருக்கிறார். அதனால் படத்தின் ஒவ்வொரு காட்சியும் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த புத்தகமும் உரையாடல் வடிவிலேயே உள்ளது. இடையிடையில் கதைசொல்லியாக வெளியில் வந்து காட்சியினை விளக்குகிறார் மகேந்திரன். இத்திரைப்படம், புதுமைப்பித்தனின் சிற்றன்னை குறுநாவலினைத் தழுவி எடுக்கப்பட்டது. இத்திரைப்படம்…

  • |

    ரகுவம்சம் – அ.வெ.சுப்பிரமணியன்

    ராமன் பிறந்த ரகுவம்சத்தின் வரலாறு, சுருக்கமான வடிவில். அ.வெ.சுப்பிரமணியன் அவர்களால் காளிதாசனின் மூலவடிவில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது. எளிய பிழையற்ற மொழிநடை. திலீபனின் தொடங்கி, ரகு, அஜன், தசரதன் வழியாக ராமனின் வரலாறைக் கூறும் நூல். சூர்ய குலம் எனப்படும் ரகுவம்ச வரலாறை அறிந்துகொள்ள ஒரு தொடக்கமாக இந்நூலை வாசிக்கலாம். ஒட்டுமொத்த அரசகுலத்தின் தோற்றம் கிடைக்கும். ரகுவம்ச மன்னர்களின் பெருமையைப் பற்றிக் கூறும் நூல். ஆதலால் ஒரு வரலாற்று நூல்போலக் கொள்ள இயலாது. ஆழ்ந்த மத நம்பிக்கையாளர்களுக்கான ஆரம்பப்…

  • How to book Freedom251 easily?

    If anyone wants to book the freedom 251 mobile phone please follow the steps below to do all the typo works like filling address, filling quantity, clicking the submit button etc., automatically till we get the payment page. You no need to reload and type details every time. Till it get success the browser will try again and again…

  • |

    பாவம் இவள் ஒரு பாப்பாத்தி – ஜெயகாந்தன்

    ஜெயகாந்தன் அவர்களால் 1979 ஆம் ஆண்டில் எழுதப்பெற்ற குறு நாவல். ஊருக்கு வெளியேயுள்ள கரும்பு ஆலைக்கு அருகில் பல‌காரக்கடை நடத்தி வரும் பாப்பாத்தியம்மாளின் பார்வையில் கதை சொல்லப்படுகிறது. அவள் ஓர் அனாதை. அவளுக்கென்ற இப்போது யாரும் இல்லை. அங்கு வரும் அனாதை எவரையும் தன்னோடு வைத்துக்கொள்கிறாள். அவர்கள் சில நாட்கள் இருந்த பின்னர் ஏதேதோ காரணங்களுக்காக சென்று விடுகின்றர். அவர்கள் சென்ற பின்னர் வெறோர் அனாதை வந்து சேர்கிறார்கள். பிராமணக்குடும்பத்தைச் சேர்ந்தவளாக இருப்பதாலும், ஆச்சாரங்களை தவறாது கடைபிடிப்பதாலும்…

  • மலையாளம் செய்வது எப்படி?

    மலையாளம் செய்வது எப்படி? தேவையான பொருட்கள். தமிழ் தேன் ‍ நான்கு தேக்கரண்டிகள் செய்முறை:ஒரு பாத்திரத்தில் தமிழை விட்டு அதனுடன் நான்கு தேக்கரண்டி தேனை விட்டு நன்கு கலக்கவும். மலையாளம் தயார். தமிழ் செய்வது எப்படி? தேவையான பொருட்கள். மலையாளம் தேன் ‍ நான்கு தேக்கரண்டிகள் செய்முறை:ஒரு பாத்திரத்தில் மலையாளத்தை விட்டு அதனுடன் நான்கு தேக்கரண்டி தேனை விட்டு நன்கு கலக்கவும். தமிழ் தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.