|

Get To The Top – Suhel Seth (புத்தகம் – 1)

Get To The Top – Suhel Seth

இந்திய தொழிலதிபர் சுஹெல் சேத் அவர்களால் எழுதப்பெற்ற சுயமுன்னேற்ற‌ நூல். இந்தப்புத்தகம் பெரும்பாலும் நண்பர்களைப் பெறுவது எவ்வாறு, அவர்களை பேணுவது எவ்வாறு என்பதனை விளக்கும் ஒரு புத்தகம். சுஹெல் தொழிலதிபர் மட்டுமல்லாமல், பத்திரிக்கைகளில் தலையங்கம் எழுதக்கூடியவரும், தொலைக்காட்சித் தொகுப்பாளரும், பேச்சாளரும் கூட. ஆதலால் அவருக்கு இருக்கும் தொடர்புகள் மேல்மட்டத்திலானவையாக இருக்கின்றன. உதாரணமாக அருண் ஜேட்லி, விஜய் மல்லையா, மம்தா பானர்ஜி என. அத்தகைய அவருடைய மேல்தட்டு அனுபவங்களின் நிகழ்வுகளை விவரித்து அவற்றிலிருந்து இப்புத்தகத்திற்கான கருத்துக்களை ஒருங்கிணைத்துள்ளார். ஒரு இந்தியர் அல்லாத வாசகருக்கு இந்த உதாரணங்களில் குறிப்பிடப்படும் நபர்களைப் பற்றிய அறிமுகம் இல்லையெனில் இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள உதாரணங்களின் தீவிரத்தை உள்வாங்கிக்கொள்வது கடினமே.

SUHEL SETH

ஆகச்சிறந்த புத்தகம் என்றெல்லாம் இந்தப் புத்தகம் அல்ல. எளிமையான அனுபவக் கருத்துக்கள். அவருடைய நண்பர்களின் தொடர்புகளை இன்னும் உறுதியாக்கிக்கொள்ள அவருக்கு இந்த நூல் உதவலாம். ஏனெனில் ஆங்காங்கே புகழ் வசனங்கள். எளிய மனிதர்களின் உதாரணங்கள் இந்தபுத்தகத்தில் இல்லையென்றே கூறலாம். இந்தப்புத்தகத்தில் குறிப்பிடப்படும் என்னைக் கவர்ந்த ஒரு கருத்து இதுதான்.

நாம் நம்முடைய கருத்தினை உறுதியாக வெளிப்படுத்த வேண்டும் என்பதே. மற்றவர்கள் எவ்வாறு கருத்து கொண்டிருக்கிறார்கள் என எண்ணி நம்முடைய கருத்தினை மாற்றுவதோ, அல்லது வெளிப்படுத்த வேண்டிய தருணத்தில் மழுப்பலாக வெளிப்படுத்துவதோ நம் ஆளுமையைக் குறைவாகக் காட்டக்கூடும். நாம் நம்முடைய கருத்துக்களை பிற்பாடு மாற்றிக்கொள்ளக் கூடும் என எண்ணி வெளிப்படுத்தாமல் இருப்பதும் நம்முடைய ஆளுமையில் எதிர்மறைத் தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடும். இங்கே கவனிக்க வேண்டியது உறுதியாக கருத்தினை வெளிப்படுத்தலாம் என்பதே, கடுமையாக என்பதல்ல. அக்கருத்தினை நாம் பின்னாளில் மாற்றிக்கொள்ளக் கூடும் என் எண்ண வேண்டியதில்லை. ஏனெனில் அறிவார்ந்தவர்களுக்குத் தெரியும், நாம் நமக்குக் கிடைக்கும் அனுபவங்களிலிருந்தும், பெறும் அறிவிலிருந்துமே நம்முடைய கருத்துக்களை உருவாக்கிக்கொள்கிறோம். அனுபவங்களும், அறிவும் இன்னும் விரிவடையும் பொழுது நம்முடைய கருத்துக்கள் மேலும் உறுதியாகலாம் அல்லது சற்றேனும் மாறலாம் அல்லது முற்றிலுமாக மாறலாம். அதுதானே பரிமாணம். அதனால் தானே குரங்கிலிருந்து மனிதானயிருக்கிறோம். ஒரே கருத்தோடு இருந்திருந்தால் இன்னும் மரத்தில்தான் இருந்திருப்பொம் இல்லையா?

வாசிக்கலாம்.

Similar Posts

  • |

    Work Rules!: Insights from Inside Google

    கூகுள் நிறுவனத்தின் மனித வள மேலாண்மை அதிகாரி லாஸ்லோ போக்கால் எழுதப்பட்ட ஓர் சுய முன்னேற்ற நாவல். பெரும்பாலும் இந்நாவல் மற்ற நிறுவனத்தின் மேலாண்மை அதிகாரிகளை நோக்கியே எழுதப்பட்டிருக்கிறது. ஒரு மேலாண்மை அதிகாரியின் பார்வையில் எப்படியெல்லாம் ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் நலனைப் பேணலாம் என விளக்குவதே இப்புத்தக்கத்தின் அடிப்படை. பணியாளர் விரும்பும் நிறுவனங்களில் முன்னணியில் இருக்க‌க்கூடிய நிறுவனங்களில் கூகுள் ஒன்று. லாஸ்லோ போக் தன்னுடைய அனுபவத்தின் வாயிலாக எப்படி கூகுளை அந்த நிலையை அடைய…

  • | | | | |

    புதிய தலைமுறை வார இதழில்

    நான் எழுதிய இந்திய உளவுத்துறை எவ்வாறு செயல்படுகிறது புத்தக விமர்சனம் புதிய தலைமுறை 31 டிசம்பர் தேதியிட்ட வார இதழில் வெளிவந்துள்ளது. அக்கட்டுரை. ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண் என்பது வள்ளுவர் வாக்கு. அதாவது நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்திலேயே ஓர் அரசு சிறப்பாகச் செயல்பட முடியும். ஆம் இன்றும் அதுதான் நிலை. கடந்த 50 ஆண்டுகால வரலாற்றை…

  • | |

    தேர்வு முடிவுகள்

    பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் வெளிவந்திருக்கின்றன. இந்த வருடம் வழக்கத்தைவிட அதிகமாக தேர்ச்சி விகிதம், மதிப்பெண்கள் பெற்றுள்ளதை தேர்வு முடிவுகள் காட்டுகின்றன. அனைவரையும் வாழ்த்தும் அதே வேளையில் இந்த தேர்வு முடிவுகளின் உண்மை நிலையை நாம் விவாதிக்க வேண்டியுள்ளது. முதலாவது தமிழகத்தைப் பொறுத்த வரையில் தேர்ச்சி விழுக்காடு என்பதனை பெரும்பாலும் கடந்த ஆண்டின் தேர்ச்சி விழுக்காட்டிலிருந்து அதிகபட்சம் ஐந்து விழுக்காட்டிற்குள் அதிகமாகவோ குறைவாகவோ இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்கள். கடந்த ஆண்டுகளின் தேர்ச்சி விகிதத்தை…

  • |

    உப்பு வேலி – ராய் மாக்சிம் (தமிழில் சிறில் அலெக்ஸ்)

    இந்தியாவின் குறுக்கே உப்பின்மீது சுங்கம் வசூலிப்பதற்காக ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட வேலியைப் பற்றி அறிந்துகொள்ளும் ஓர் ஆய்வாளர் அதனைத் தேடி தன்னுடைய பயணத்தை தொடங்குகிறார். ஆரம்ப ஆண்டுகளில் கண்டறிய முடியாமல் தன்னுடைய மூன்றாவது பயணத்தின் போது அதனைக் கண்டடைகிறார். அவருடைய அந்த ஒட்டு மொத்த பயணமும், அந்த வேலிக்குப் பின்னர் இருந்த ஆங்கிலேய வரலாற்று நிகழ்வுகளுமே இந்த உப்பு வேலி. இது ஓர் வரலாற்று நிகழ்வினை ஆவணப்படுத்தும் நாவல். கண்டிப்பாக இது வரை இது பற்றிய நாவலோ, ஆவணமோ…

  • |

    ப்ளீஸ் இந்த புத்தகத்த வாங்காதீங்க – கோபிநாத்

    நீயா நானா கோபிநாத் அவர்களால் எழுதப்பெற்று 2008ல் வெளிவந்த சுயமுன்னேற்ற நூல். இந்தப் புத்தகத்தின் ஆரம்பத்திலேயே இதில் எதையும் தான் புதிதாக சொல்லிவிடவில்லை என்றும் தனக்கு சொல்லப்பட்டதை தான் சொல்வதாகவும் சொல்லி ஆரம்பிக்கிறார் கோபிநாத். எளிமையான கருத்துக்கள். நமக்கு நன்கு தெரிந்த பரீச்சயமான ஒருவர் கூறுவது போல்தான் ஒட்டு மொத்த புத்தகமுமே இருக்கிறது. எப்பொழுது வேண்டுமானாலும் எந்தப் பக்கத்திலிருந்து வேண்டுமானாலும் படிக்கலாம். இப்புத்தக வாசிப்பு கண்டிப்பாக வாசிப்பவருக்கு ஒரு புத்துணர்ச்சியை அளிக்கும், அவர் எத்துனை ஆழமான புத்தகங்களை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.